அத்தியாயம்.. 27
‘அப்பாவும் மகனும் எங்கடா போய்ட்டு வரிங்க..?” என்று திலகவதி மகனை மிரட்டி கேட்க.. மூர்த்தி வீட்டிற்க்கு போகும்போதெல்லாம் பிரசாத்தின் படத்தை மகனை வணங்க பழக்கியிருந்தான் சூர்யா.
‘ம்மா..” என்று தன்னிரு கைகூப்பி கோவிலுக்கு போய் வந்தவன் போல் பிரகாஷ் சைகை செய்ய..
‘இவன் பிறந்ததுக்கப்புறம் ரொம்பத்தான் உங்களுக்கு பக்தி முத்திடுச்சி..” என்று நொடித்தாள். ஒரு சில நேரம் தானும் வருகிறேன் என்று கிளம்புவாள் திலகவதி. அப்போது அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு அழைத்து செல்வான் சூர்யா.
பிரகாஷிற்க்கு மூன்று வயதாகவே வாய் பேச ஆரம்பித்திருந்தான்..
இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் கோவிலுக்கு போய் வருகிறேன் என்று வழக்கம்போல் தன் மகனோடு மூர்த்தி வீட்டிற்கு சென்று வர.. மகனின் வாயினில் மிட்டாய் மணம்வீச.. ‘நீங்கள்லாம் ஒரு டாக்டரா..? போனவாரம்தான் இருமல் நின்னுச்சி.. இப்போ திரும்பவும் சாக்லேட் வாங்கி குடுத்திருக்கிங்க..” என்று திலகவதி சூர்யாவிடம் சண்டைக்கு கிளம்ப..
‘ம்மா.. அப்பா இல்ல.. தாத்தா குத்தாங்க..” என்று மகன் சொல்ல.. சூர்யாவின் முகம் தத்தளிக்க.. சட்டென புரிந்தது திலகவதிக்கு.. இருப்பினும் முகத்தில் எதுவும் காட்டாமல் கிச்சனுக்கு சென்று வந்தவள்.. ‘சாக்லேட் சாப்ட்டல்ல..? இந்த கசாயத்தை குடி..” என்று மகனுக்கு புகட்டி.. ‘காபி குடிங்க..” என்று மென்மையான குரலில் கணவனிடம் நீட்ட..
‘திலகா..” என்று சூர்யா பரிதவிக்க.. குழந்தையை கமலத்திடம் ஒப்படைத்து கணவனிடம் வந்தவள்..
‘எனக்கும் அப்பா இல்ல.. உங்களுக்கும் அப்பா இல்ல.. மூர்த்திப்பா நம்ம ரெண்டு பேருக்குமே அப்பாமாதிரி.. அங்கதான் போறேன்னு என்கிட்ட ஏன் சொல்லல..? அப்போ இன்னும் உங்களுக்கு என்மேல..” எனும்போதே..
‘ஏய்.. அப்படியில்லடா..” என அவசரமாய் இடைமறித்து மனைவியை ஆதரவாய் அணைத்துக்கொள்ள.. ‘அவங்க நியாபகம் வரதில்லன்னு என்னால பொய் சொல்லமுடியாது.. ஒருவருசம் அவங்க உப்பை திண்ணு வளர்ந்துட்டேன்ல..? அப்பப்போ நியாபகம் வரும்தான்.. சாகும்போது கூட என்னோட சந்தோசத்தைப் பத்தி நினைச்ச உங்க நண்பனும் அவங்கப்பாம்மாவும் எனக்கு தெய்வம் மாதிரி..” என்று சூர்யாவின் முகம் பார்த்து சொன்னவள்..
கணவனை தானும் அணைத்துக்கொண்டு.. ‘என்னைப் பொருத்தவரை.. என் புருசன் அந்த தெய்வத்துக்கும் மேல.. உங்களை மாதிரி ஒரு புருசனை நாடகம் சினிமான்னு எதுலயும் நான் பார்த்ததில்ல.. இந்த உலகத்தில நீங்க மட்டும்தான் எனக்கு எல்லாரை விடவும் உசத்தி.. நம்ம குழந்தைகூட உங்களுக்கு அடுத்ததுதான்..” என்று கண்ணீரோடும் காதலோடும் பேச..
‘ஏய்.. எனக்கு தெரியாதா..?” என்று அதட்டியவன்.. சூழலை இலகுவாக்க..
‘ம்ம்..” என்று தன் உதட்டை குவித்து காட்ட.. சூர்யா முத்தம் கேட்கும் போதெல்லாம் பட்டும் படாமலும் இதழொற்றி எடுப்பவள்.. இன்று கணவனை சிறை செய்தாள் வன்மையாக.. நான்கு வருடமாக கற்றறிந்த பாடத்தில் முதல் பரிட்ச்சையை எழுதினாள். இதற்க்கு முன் தாபத்தோடும் ஏக்கத்தோடும் கணவன் கேட்டதெல்லாம் இன்று நிறைவேற்றிடும் வேட்கை எழ.. அதை செயலிலும் காட்ட முயன்றாள்தான்.. இந்த பாழாய் போன நாணம் பாடாய் படுத்த.. ஒரு கட்டத்திற்க்கு மேல் முன்னேற முடியாமல் திலகவதி திண்டாட.. செயலை தனதாக்கிய சூர்யா திலகவதியினுள் கரைய.. மொத்தமாய் உள்வாங்கினாள் கணவனை.
சூர்யா விலகியபின்.. சற்று முன்பு தெரியாத பகல் வெளிச்சம் தற்போது கண்ணோடு சேர்த்து உடலும் கூச.. கூடல் முடிந்த பின்னும் குப்பென சிவந்தது திலகவதியின் முகம். திலகவதியின் மனமறிந்தவன்.. வழக்கம்போல் மனைவிக்கு உடை அணிவித்து..
‘திலகா..” என்றான் மென்மையாக.
வெட்கம் பெரிதாய் ஆட்கொள்ள.. பேச வார்த்தையின்றி கணவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுக்க.. பின்னிருந்து சேர்த்தணைத்து கழுத்தில் அழுந்த முத்தமிட்டு..
‘லவ். யு டா…” என்றான் அதீத காதலலோடு.
‘நானும்தான்..” என்றாள் சன்னக்குரலில்.
‘ப்பா.. ம்மா…” என்று பிரகாஷ் வெளியிலிருந்து கதவை தட்ட.. ‘அச்சோ…” என்று வழக்கம்போல் கணவன் அணிவித்த சாட்ஸ் டிசர்ட்டோடு பாத்ரூமிற்க்குள் ஓட..
சிரிப்போடு தன்னை சரிசெய்த சூர்யா கதவைத்திறக்க.. ‘ப்பா.. ஆதுப்பா..” என்று தகப்பன் கைப்பிடித்து பாட்டியிடம் அழைத்து வர.. ‘ஆதவன் கால் செய்தானாம்மா..?” என்று சூர்யா கேட்க..
‘சூர்யா..” என்று பெருகிய சந்தோசத்தோடு கமலம் தன்னிரு கையை ஆசையாய் விரிக்க.. தன் அன்னைக்குள் அடைக்கலமானவன்.. ‘என்னம்மா..?” என்றான் வாஞ்சையாக.
‘சொல்ல மாட்டனே..” என்றார் அத்தனை சந்தோசமாக.
‘ம்மா..” என்று செல்லமாய் கோபிக்க..
‘இன்னும் கொஞ்ச நேரத்தில ஆதவன் கால் செய்வான்.. அப்போ நீயே தெரிஞ்சிக்குவ..” என்றார் சிரிப்போடு.
சூர்யாவின் போன் அடிக்க.. ‘ப்பா.. நானு..” என்று போனை எடுக்க பிரகாஷ் ஓட.. ‘ராசுக்குட்டி மெல்லப் போ..” என்று சொன்னவன்.. ஐந்து நிமிடத்திற்க்கு மேலாகியும் பிரகாஷ் வராமல் போக.. சூர்யா எழவும்.. ‘ஆத்துப்பா.. கீத்திம்மா.. சோனுக்கா.. டியாக்கா..” என்று அழகான மழலையில் பிரகாசின் குரல் கேட்க..
‘டேய்.. நீயே அட்டன் செய்துட்டியா..?” என்று சந்தோசத்தோடு சூர்யா பார்க்க. சூர்யாவின் கைப்பட்டு மொபைல் ஆ‡ப் ஆக.. ‘ப்ச்.. ப்பா.. கட்டு..” என்று உதட்டை பிதுக்கி பிரகாஷ் சொல்ல..
‘இங்க கொடு.. அப்பா கால் பண்றேன்..” என்று சூர்யா மொபைலை கேட்க..
‘நா.. ப்பா.. நா.. ப்பா..” என்று சரியான பாஸ்வேர்டை போட்டு குழந்தை ஆதவனுக்கு அழைக்க.. கண்களை அகல விரித்தான் சூர்யா.
ஆதவன் அட்டன் செய்ய.. ‘ஆது.. ராசுக்குட்டியே கால் செய்துட்டாண்டா..” என்று சூர்யா ஆச்சர்யத்தோடு சொல்ல..
‘இது ஒரு பெருமையா..? இரண்டு நாள் முன்ன பிரகாஷ் பேசினான்.. அப்பா எங்கன்னு கேட்டேன்.. தோ.. ன்னு பாத்ரூமை காட்டி குளிச்சின்றான்.. உன் ‡போனோட பாஸ்வேர்ட் அவனுக்கு தெரிஞ்சிருக்கு.. இப்படித்தான் அஜாக்கிரதையா இருப்பியா..?” என்று ஆதவன் கோபப்பட..
‘சாரிண்ணா…” என்று சூர்யா வருத்தப்பட..
‘ம்ம்.. இதெல்லாம் சரிவராது.. ஒரு ஆறுமாசம் போகட்டும்.. அதுக்கப்புறம் பிரகாசை நானே பார்த்துக்கறேன்..” என்று ஆதவன் சொல்ல..
‘அச்சோ.. இவனையும் அங்க கூட்டிட்டு போறியா..? போ ஆது..” என்று சூர்யா மறுக்க.. கமலம் சிரிக்க.. சூர்யாவின் முகம் குழப்பத்தை காட்ட..
‘நீ அனுப்பலனா போ.. நான் என் மகனோட வந்துடறேன்..” என்று ஆதவன் சிரிப்போடு சொல்ல.. கீர்த்தியும் சிரிக்க..
‘ஆஆஆதூதூ.. நிஜமாவா சொல்ற..?” என்று சூர்யாவின் முகம் ஜொலிக்க..
‘ம்ம்.. ஆமாம் சூர்யா.. இன்னும் கொஞ்ச நாள்ல சோனுவும் பெரிய பொண்ணாகிடுவா… இனி இந்தியாதான் நமக்கு செட் ஆகும்..” என்று ஆதவன் சொல்ல..
‘ஹேய்.. சூப்பர் ஆதவா..” என்று குதூகலிக்க..
‘இன்னுமொரு குட்நியூஸ் இருக்கு.. திலகா எங்கடா..?” என்று கேட்க..
இன்னுமா குளிக்கிறா.. எப்படியும் மானத்தை வாங்கப்போறா.. என நினைத்தவன்..
‘இரு கூப்பிடறேன்..” என்று சொல்ல.. தலைக்கு குளித்து இரட்டை பின்னலைப்போல் கேசத்தை இரண்டாக பிரித்து கூந்தலின் நுனியில் முடிச்சி போட்டு ஒருபுறம் முன்னேயும் மறுபுறம் பின்னே போட்டபடியும் திலகா வரவும்.. ‘அண்ணியும் ஆதுவும் லைன்ல இருக்காங்க..” என்று சற்று விலகிய சூர்யா திலகவதியை முன்னிருத்த..
திலகாவைப் பார்த்ததும் கீர்த்தி.. ‘ஏய்…” என்று தன் ஆட்காட்டி விரலை சிரிப்போடு ஆட்டிக்காட்ட.. முகம் சிவந்தவள்.. ‘நீங்க பேசுங்க..“ என்று சூர்யாவின் பின்னே போக..
கீர்த்தியை முறைத்த ஆதவன்.. ‘திலகா உனக்கொரு குட்நியூஸ் இருக்கு..” என்று சொல்ல.. சூர்யாவின் பின்புறமிருந்து தன் முகத்தை காட்ட.. ‘பாலாக்கு இங்க வேலை ரெடியாய்டுச்சி.. அவன் நினைச்ச மாதிரியே நிறைய சம்பாதிச்சி ஒரே வருசத்தில உங்கம்மாக்கு பெரிய வீடு கட்டப்போறான்..” என்று சொல்ல..
சூர்யாவை பின்னுக்கு தள்ளி முன்னே வந்தவள்.. ‘நிஜமாவா மாமா..?” என்று சந்தோசத்தோடு கேட்க.. ‘ஆமாம் திலகா.. இன்னும் இரண்டு மாசம்தான் பாலா அங்க இருப்பான்.. அதுக்கப்புறம் அமெரிக்கா வந்திடுவான்..” என்றான் பெருமையாக.
‘நன்றி மாமா..” என்று திலகா உளமாற சொல்ல..
‘எனக்கெதுக்கு நன்றி..? பாலா நல்ல பர்சன்ட்டேஜ்ல வெளில வந்திருக்கான்.. தகுதி இருக்கிறதாலதான் பெரிய கம்பெனியில அவனுக்கு வேலை கிடைச்சிருக்கு.. “ என்று சொல்லி பிறகு சூர்யாவிடம் நிறைய பேசி இணைப்பை துண்டித்தான்.
‘ப்பா.. மில்க்கி..” என்று பாலாவின் பைக் சத்தத்தில் பிரகாஷ் சொல்ல..
‘மாமா சொல்லனும் ராசுக்குட்டி..” என்று சூர்யா சொல்லிக்கொடுக்க.. சூர்யாவின் பேச்சை காதில் வாங்காதவனாய் வாசலை நோக்கி ஓடினான் பிரகாஷ்.
‘எல்லாம் இந்த சோனு பண்ற வேலை.. பாலான்னா குடிக்கிற பாலாம்.. அதனால மில்க்கின்னு கலாட்டா செய்யவும்.. தியாவும் பிரகாசும் அப்படியே கூப்பிடறாங்க சூர்யா..” என்று கமலம் சொல்ல..
‘பாலாவை கலாட்ட செய்ற அளவுக்கு பொண்ணுமா வளர்ந்திட்டாளா..?” என்று ஆச்சர்யமாய் கேட்க..
‘பிரகாஷ் பிறந்ததுக்கப்புறம் காலேஜ் முடிஞ்சி வீட்டுக்கு போகும்போது தினமும் பாலா வருவான்.. போனமுறை மாமா வந்தப்ப ஒருமாசம் இங்கயிருக்கவும் சோனு தியா இரண்டுபேரும் பாலாவோட நல்லா ஒட்டிக்கிட்டாங்க..” என்றாள் திலகவதி.
தன் மருமகனை மேலே தூக்கிப்போட்டு பிடித்தபடி பாலா உள்ளே வர.. ‘மில்க்கி சாக்கி..” என்று தன் கையிலிருந்த இரண்டு பெரிய சாக்லேட்டை திலகாவிடம் காண்பிக்க.. ‘டேய்.. ஒழுங்கா ஒன்னை என்கிட்ட கொடுத்திடு..” என்று திலகா விரட்ட..
அம்மாவின் கைக்கு சிக்காமல் வண்டாக ஓட்டம் பிடித்தான் வெளியே.
‘ராசுக்குட்டி.. ஒழுங்கா வந்திடு..” என்று திலகவதி மிரட்ட..
‘மாத்தேன்.. நீ அதிப்ப..” என்று தலையை வேகமாய் ஆட்ட..
‘அடிக்கமாட்டேன் வாடா..” என்று சொல்ல..
‘ப்பாமிஸ்..?” என்று தன் பிஞ்சு கையை குழந்தை நீட்ட.. பாலாவும் சூர்யாவும் பெரும் சத்தமெடுத்து சிரிக்க..
‘என்னங்க சொல்றான்..?” என்று திலகவதி முறைக்க..
‘அவனை நீ அடிக்கமாட்டன்னு சத்தியம் செய்ய சொல்றான்க்கா..” என்று பாலா சிரிப்போடு சொல்ல..
‘அடிங்க.. சத்தியம் செய்யனுமா..?” என்று திலகவதி மகனை நோக்கி போக..
‘விடுடி.. உங்கம்மாவை ஐயானரப்பன் மேல சத்தியம் செய்ய சொன்ன உன்னை மாதிரித்தான உன் பையனும் இருப்பான்..” என்று சூர்யா சிரிப்போடு தடுக்க..
‘இவன் வயசுக்கு சத்தியம் செய்ய சொல்றான்.. நீங்க சிரிக்கிறிங்க.. போங்க..” என்று கோபமாய் சொல்ல..
‘இது என் அக்காக்கு..” என்று இன்னொரு சாக்லேட்டைப் பிரித்து தன் அக்காவின் வாயில் பாலா திணிக்க.. திலகவதியின் முகத்தினில் கோபம் குறைய..
‘ம்மா..” என்று கொஞ்சும் குரலில் அன்னையிடம் இருந்த பெரிய சாக்லேட்டிற்க்காக பிரகாஷ் வர.. ‘குடுக்கமாட்டேன் போடா..” என்று திலகவதி சொல்ல..
‘உன் பொண்டாட்டிக்கும் என் பேரனுக்கும் எதாவது வித்யாசம் இருக்கா..?” என்று கமலமும் சிரிக்க.. தன்னிடமிருந்த சாக்லேட்டில் சிறிதாய் மகனுக்கு கொடுத்து மீதமிருந்ததை மொத்தமாய் தன் வாயில் போட்டபடி..
‘இதுக்கு மேல சாக்லேட் சாப்பிட்டா உங்க பேரனுக்கு பல்லு சொத்தையாய்டும் அத்தை…” என்று சொல்லி பாலாவிற்க்கு டீ போட கிச்சனுக்குள் நுழைந்தாள்.
‘அப்புறம் பாலா.. அமெரிக்கா போறது பத்தி அம்மா என்ன சொன்னாங்க..?”என்று சூர்யா விசாரிக்க..
‘நிறைய பணமெல்லாம் வேணாம்.. இங்கையே இருந்து கொஞ்சம் சம்பாதிச்சாலே போதும்னு சொன்னாங்க மாமா.. என்னை நம்பி பெரியமாமா ஏற்பாடு செய்திருக்காங்க.. போகலன்னா அவருக்கு கெட்ட பேராய்டும்ன்னு சொல்லி சமாளிச்சிருக்கேன்..” என்று பாலாஜி சொல்ல..
‘நீதான் கேம்ப்பஸ்ல செலக்ட் ஆகிட்டியே பாலா.. அதுவும் நல்ல கம்ப்பெனிதான..? அம்மாக்கு விருப்பம் இல்லன்னா அந்த வேலையையே பார்க்கலாமே..” என்று சூர்யா சொல்ல..
‘அம்மா அவங்களை விட்டு எங்கயும் போக வேணாங்குறாங்க மாமா.. நானும் ரொம்ப வருசம் அங்க இருக்கமாட்டேன்.. நாலஞ்சி வருசம் கழிச்சி வந்திடுவேன்.” என்று சொhல்ல..
‘ஆது மாதிரி நீயும் போறதுன்னு முடிவு செய்திட்ட.. எங்கம்மாக்காவது ஆது போனாலும் நானிருந்தேன்.. உங்கம்மாக்கு நீயும் இல்லாம ரொம்ப லோன்லியா பீல் பண்ணுவாங்க.. வருசத்துக்கு ஒரு முறையாவது வந்து போ..” என்று சொன்னான்.
‘கண்டிப்பா மாமா..” என்று சொல்ல.. திலகா டீயோடு வர..
‘எப்பவும் டீ தானா..? சாப்பிட எதாவது கொடு திலகா..” என்று சூர்யா சொல்ல..
‘அவனுக்கு எங்கம்மா சமையல்தான் பிடிக்குது.. வேணாம்னு சொல்றவனுக்கு ஊட்டவா முடியும்..?” என்றாள் கோபமாக.
‘ஐய்யே.. உனக்கே ஒழுங்கா சாப்பிட தெரியல.. வாயை சுத்தி சாக்லேட்.. இதுல நீ எனக்கு ஊட்டுவியா..?” என்று சிரிப்போடு டீயை வாங்கியவன்.. சற்று நேரம் பிரகாசோடு விளையாடி மகிழ்வோடு கிளம்பினான்.
மதியம் சாப்பிட்டதும் வழக்கம்போல் பிரகாசும் கமலமும் பகல் தூக்கத்தில் இருக்க.. ‘வாடி இங்க..” என்று கைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான் ரூமிற்க்குள்.
நல்லாதான இருந்தான்..? எதுக்கு இத்தனை கோபமென திலகவதி யோசித்திருக்க.. ‘கல்யாணமாகி மூனு வயசில குழந்தையிருக்கான்.. இன்னமும் நம்ம விசயத்தை மத்தவங்களுக்கு காட்டி கொடுப்பியா..?” என்று முறைக்க..
‘நானென்ன செய்தேன்..?” என்று புரியாத பார்வை பார்க்க..
‘புருசன் பொண்டாட்டி சந்தோசமா இருக்கிறது எல்லார் வீட்லயும் நடக்கிறதுதான்.. உன்னை மாதிரியா எல்லாரும் நாங்க அப்படி இருந்தோம்னு வெளிச்சம் போட்டு காட்றாங்க..?” என்று வசைபாட..
‘நான் ஒன்னுமே சொல்லலைன்னாலும் கீர்த்தியக்கா கண்டுபிடிச்சிடறாங்க.. நான் என்ன பண்ணட்டும்..?” என்று முனுமுனுக்க..
‘அண்ணின்னு இல்ல.. எங்கம்மாவும்தான் கண்டு பிடிச்சிடறாங்க.. எதோ அந்த நேரம் வெக்கம் வரது சரிதான்.. அதுக்காக ரூமைவிட்டு வெளில வந்தாலும் ரோஸ் பவுடரை பூசினமாதிரி வந்து நிப்பியா..? முட்டாள்..” என்று கடுகடுக்க..
‘என் முகம் அப்படியா ஆகிடுது..? அதுலதான் கண்டு பிடிச்சிடறாங்களா..? சரிவிடுங்க.. இனி அந்தமாதிரி நடக்காது..” என்று உறுதி கொடுக்க..
வேறு ஏதோனும் இழுத்துவிடுவாள் என பதறியவன்.. ‘என்ன செய்வ..?” என்று கேட்க..
‘நாளைக்கு காலைல பாருங்க..” என்று கெத்தாக சொன்னாள்.
‘இப்பவே சொல்லு..” என்று பிடிவாதமாய் கேட்க..
‘அதுக்கு வெக்கம் வரனுமில்ல..?” என்று சொல்ல..
‘நீ சொல்லு.. நான் வரவைக்கிறேன்..” என்று சூர்யா சொல்ல..
‘அம்மாடி.. இன்னைக்கே மறுபடியும் வெக்கம் வரவப்பிங்களா..? வேணாம் வேணாம்… நான் காலைல செய்து காட்றேன்..” என்று பதற..
கோபம் போய் சிரித்தவன்… ‘பார்க்கலாம்.. பார்க்கலாம்..” என்றான் இலகுவாக.