Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலா?!அப்படின்னா?? – 8

காதல் – 8  பெண்கள் இருவரையும் பாலாஜியுடன் கல்லூரியின் பின் வாசலில் காத்திருக்குமாறு சொன்னவன், பாலாஜியிடம் கார் சாவியை வாங்கிகொண்டு காரை எடுத்து வருகிறேன் என்று கிளாம்பிவிட்டான்..  வென்முகிலின் அருகில் அவனால் எதுவும் காட்டிகொள்ளாமல் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எங்கே தன்னை மீறி தன செய்கை எதேனும் வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்தே பாலாஜியிடம் தான் வண்டியை எடுத்துவருவதாய் சொல்லி வந்திருந்தான். அதுவும் விதுனா வேறு அவ்வப்பொழுது கண்களில் சிறு யோசனையுடன் பார்ப்பது போல் இருந்தது.  அவள் […]

Readmore

காதலா??அப்படின்னா?! – 7

காதல் – 7 பெண்ணவளை கண்டதும் உடலும் உள்ளமும் பரபரக்க அவளிடம் சென்று பேச துடித்த மனதை சுற்றுபுறம் கருதி அடக்கியவன் அவளிடம் பேசும் சந்தர்ப்பதிற்காக மனதை அடக்கி காத்திருந்தான்.  அவளின் நடணம் முடிந்து மேடையில் இருந்து மேடையின் பின்புறம் சென்றவள் அதன் பிறகு கண்களில் படவில்லை.  அவனின் அலைபுருதலை ரசித்துக்கொண்டிருந்த பாலாஜி மேடையில் ஒரு கண்ணும் நண்பனின் சுழலும் விழிகளில் ஒரு கண்ணுமாய் இருந்தவன் முகத்தில் நண்பனை அறிந்த மென்முறுவல். வென்முகிலுக்கோ அடுத்து அடுத்து வரும் […]

Readmore

காதலா?! அப்படின்னா?? – 6

காதல் – 6  அடுத்து வந்த மூன்று வாரம் வெகு வேகமாக ஓடியிருந்தது. இதற்கிடையில் ஜெர்மனி பிராஜக்ட் வீரேஷின் நிறுவனதிற்கே கிடைத்திருந்தது. அதன் வேலைகள் அவனை முழுமையாக இழுத்துக்கொண்டது. ஒர் அளவிற்கு முதலில் இருந்தே திட்டமிடல் இருந்ததாலும் எல்லா நிலையிலும் செய்யவேண்டிய அனுசரிப்புகள் வந்து கொண்டே இருந்தது. அதனால் வேறு எந்த சிந்தனைகளும் இன்றி ஒரு முகமாய் அவனின் மொத்த கவனமும் இந்த பிராஜக்டில் மட்டுமே. வீட்டுக்கு வருவது போவது எல்லாம் நேர கணக்கே இல்லாமல் ஒடிக்கொண்டிருந்தான்.  […]

Readmore

காதலா?? அப்படின்னா?! – 5

காதல் – 5 மதுரையில் கல்லூரி விடுதியில் கோவிலில் இருந்து வந்ததில் இருந்து அந்த உணவகத்தில் இவள் செய்த வேலைக்கு அனைவரும் மாற்றி மாற்றி அவளை வறுத்துக்கொண்டிருந்தனர்.  “உனக்கு எதுக்குடி தேவையில்லாத வேலை. அவனுங்களுக்கு இது உன் வேலைன்னு தெரிஞ்சதுன்னா எதாவது பிரச்சனை பன்னாலும் பன்னுவானுங்கடீ.”  “இங்கே தனியாய் இருக்கும் பொழுது எதற்க்கு உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் எல்லாம் தலையிடுற.”  “அட்லீஸ்ட், அவனுங்க உனக்கு எதுவும் தொல்லை கொடுத்து அதற்கு நீ இப்படி ரியாக்ட் ஆகியிருந்தால் […]

Readmore

காதலா??அப்படின்னா?!-4

காதல் – 4    அதிகாலை புள்ளினங்கள் கதிரவனை வரவேற்று இன்னிசை இசைக்க,  இரவின் மிச்சங்கள் இன்னும் முழுதாய் முடியாத காலை. 8 மணி நேர பயணத்தை 7 மணி நேரத்தில் முடித்து சென்னையின் உள்ளே நுளைந்திருந்தான் வீரேஷ். விக்ரமிடம் சொன்ன நேரத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்க நேராக அலுவலகத்திற்கு சென்றான். ஏதேனும் அவசர நேரத்தில் உதவும் என்று ஒரு செட் மாற்றுடை அவன் அறையில் எப்பொழுதும் இருக்கும் அதனால் தைரியமாய் அலுவலகத்துக்கு வந்தவன் […]

Readmore

காதலா?? அப்படின்னா?! – 3

பெண்கள் அனைவரும் கிளம்பியதும், என்ன தான் ‘ஸ்விட்டி ’ என்று நாமகரணம் சூட்டிக்கொண்டாலும், அவளின் இயற்பெயர் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமல் விட மனசற்றவனாய் நண்பனிடம் கண்ணசைக்க, பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கு இனங்க பாலாஜி, “உங்க பெயர் தெரிஞ்சுக்கலாமா? If you don’t mind!” வென்முகிலின் அருகில் நின்ற விதுனா, “yes I mind”ன்னு சொன்னால் என்ன செய்வான் இந்த கடோத்கஜன்” என்று அவள் காதில் முனுமுனுக்க கடோத்கஜன் என்ற பெயரில் சட்டென சிரிப்பு வர, முயன்று […]

Readmore

காதலா?? அப்படின்னா?! -2

  மதுரையின் மாசி மாத வெயிலின் உக்கிரத்தை தனித்து A/C யின் குளுமையுடன் வீரேஷின் வெள்ளை Bentley Bantayga சீறி பாய்ந்து பறந்து கொண்டிருந்தது. காரின் வேகத்துக்கு இடு கொடுக்கும் படி காரில் ஒடும் பாடல்களும் என வீரேஷும், சுதர்ஷனும் கோவிலில் இருந்து கிளம்பியிருந்தனர். கோவில் தரிசனம் முடித்து வீரேஷும், சுதர்ஷனும் நேராய் வீரேஷ் தங்கிருக்கும் ஹோட்டல் மரியாட்டிற்கு (Hotel Marriot) சென்று கொண்டிருந்தனர்.    மதியம் அவர்கள் கல்லூரியில் உடன் படித்த நண்பன் ஆரம்பித்திருக்கும் உணவகத்திற்கு […]

Readmore

காதலா?? அப்படின்னா?! – 1

காதலா?! அப்படின்னா??     காதல் பகுதி 1. சஷ்டியை நோக்க சரவணா பவனார் சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி ஆட மையல் நடனஞ்செய்யும் மயில்வாகனனார்…. என்று மதுரை ஹாஸ்டலில் அதிகாலை 6 மணிக்கு தன் மொபைல் spotify-யில் இருந்து பக்தி மணம் பரப்பி கொண்டிருந்தது நம் நாயகி வென்முகில். காலையை வழக்கம் போல் தன்னுடைய சூரியநமஸ்க்காரத்துடன் ஆரம்பித்து இருந்தாள். அவள் அவளின் உடற்பயிர்ச்சியை முடித்து வருவதற்குள் நாம் வென்முகில் பற்றி […]

Readmore