அத்தியாயம் 40 (2) “தேஜா, இப்படி அங்கயும் இங்கையும் ஓடாத. ஒழுங்கா சாப்பாடு வாங்கிக்கோ!!” என்ற படி அந்த அதிகாலை வேளை தேஜாவின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள் மிருதுளா. அதற்குள் அங்கே வந்த கெளதம் தேஜாவை பிடித்துத் தூக்கிக்கொள்ள, மூச்சு வாங்க இவர்கள் அருகில் வந்தவள், “நல்லா ஓட கத்துகிட்டா உங்க பொண்ணு. ஷப்பா என்ன ஓட்டம்.” என்றவாறு குழந்தைக்கு ஊட்டிவிட, திடீரென்று குமட்டிக்கொண்டு வருவது போல இருந்தது அவளுக்கு. இருந்தும், பொறுத்துக்கொண்டு குழந்தைக்கு உணவை பிசைந்து […]
Readmoreஅத்தியாயம் 40 (1) கடவுளிடம் வேண்டிவிட்டு நிமிர்ந்த மிருதுளா எதிரில் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம், ‘என்ன?!’ என்று பார்வையாலே கேட்க, அவனோ ஒன்னும் இல்லை என்று பதில் பார்வை பார்த்தவன், அவளை நோக்கி கைகளை விரிக்க, கலங்கிய கண்களில் லேசான சிரிப்பை காட்டியவள், கௌதம் அருகில் சென்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள். சந்துரு இறந்த செய்தி, இவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்த அதே நேரம் ஒருவித நிம்மதியை கொடுத்தது என்பதும் உண்மை. இதுநாள் வரை, போராட்ட வாழ்கையை […]
Readmoreஅத்தியாயம் 39 (2) “என்ன வேலு!! வேனுக்குப் போன் செஞ்சாச்சா!! எப்போ வரும்??” என்று மூத்தவர் தன் தம்பியை பார்த்துக் கேள்வி கேட்க, “பேசிட்டேன் அக்கா. இன்னும் அஞ்சு நிமிஷத்தில வந்துடும். ஆமா, மாப்பிளையை இன்னும் காணோம். எங்க போனான்?!!” என்று பதிலுக்கு அவர் கேள்வி கேட்க, “அப்போவே வந்துட்டான் வேலு!! குளிச்சிட்டு இருக்கான். இதோ வந்துடுவான்.” என்றவரோ, வரமுடியாது என்று அந்த நிமிடம் வரை சொல்லிக் கொண்டிருந்த மகனை எப்படியோ பேசி குலதெய்வ கோவிலுக்குச் செல்ல […]
Readmoreஅத்தியாயம் 39 (1) ஆட்டோ சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பின் இருக்கையில் கெளதம் அமர்ந்திருக்க, அவனது தோளில் தலை சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொத்தி வைத்திருந்தான் கெளதம். கண்களை மூடி சாய்ந்திருக்கும் அவள் அழவில்லை. ஆனால் உள்ளுக்குள் எல்லா உணர்வுகளையும் அடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள் என்று இவன் அறிவான். அவளை அமைதிபடுத்தும் பொருட்டே, தன் கைகளுக்குள் இருக்கும் அவளது கைகளை அவ்வபொழுது, தட்டி கொடுத்துக்கொண்டே இருந்தான். சிறிது […]
Readmoreஅத்தியாயம் 38 அடுத்த நாள் காலை விடிந்ததும், முதல் ஆளாக எழுந்துகொண்ட மிருதுளாவிற்கு, மறந்திருந்த கவலைகள் எல்லாம் நியாபகம் வர, மனதுக்குள் மீண்டும் ஒரு பாரமும், பயமும் சூழ்ந்துகொண்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கவலை ஏற்பட, பக்கத்தில் படுத்திருக்கும் தன் கணவனின் முகத்தைப் பார்த்தவளுக்கோ, சொல்ல முடியாத ஒரு திடீர் குழப்பம். ஏதாவது நடந்து இவரைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம். கெளதம் முகத்தை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் அலாரம் அடிக்கவும், தன் […]
Readmoreஅத்தியாயம் 37 (2) அடுத்த ஒரு மணி நேரத்தில் பரத் போன் செய்து, “ஆமாம் மச்சான். அத்தை தான் உனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சந்துருன்னு மதுரைல இருந்து யாரோ வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்களாம்.” என்று விவரத்தை சொல்ல, “ரொம்ப நன்றி டா மச்சான். அப்புறம் இது சம்பந்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசவேண்டி இருக்குடா. நீ எப்போ ப்ரீயா இருப்ப??” “இன்னைக்கு மதியம் லஞ்ச டைம்ல மீட் பண்ணலாம், பிரெஷ் ஜூஸ் கேபேக்கு […]
Readmoreஅத்தியாயம் 37 (1) “அம்மு!! லஞ்ச எடுத்து வச்சுட்டியா?? ஆபிஸ் டைம் ஆச்சு.” என்று தங்கள் அறையில் இருந்து குரல் கொடுத்தபடி, ஹால் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் கெளதம். அப்பொழுது வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்கவும், சோபாவில் அமர்ந்து ஷூ போட்டுக் கொண்டிருந்த ஜெய், எழுந்து வாசலுக்குச் சென்று பார்க்க, தபால்காரர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று இவன் கேட்க, “கெளதம் இருக்காங்களா?? அவருக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு.” என்று கன்னடத்தில் […]
Readmoreஅத்தியாயம் 36 (2) தன் தாய் மீனாட்சியிடம் எதுவோ கேட்க அவர் அறைக்குச் சந்துரு வந்தபொழுது, சரண்யா இவனின் பெயரை சொல்லி மெதுவான குரலில் பேசிக் கொண்டிருக்க, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன், என்ன விஷயம் என்று கேட்க, மீனாட்சியோ ஒன்றும் இல்லை என்று மறுக்க, அப்பொழுதுதான் சரண்யாவின் கையில் மிருதுளாவின் பெயர் போட்ட பைல் இருப்பதைப் பார்த்து, அது என்னவென்று கேட்க, அவளோ ஒன்றும் இல்லை என்று மறுக்க, சந்த்ருவோ மருத்துவமனைக்குச் சென்று தானே […]
Readmoreஅத்தியாயம் 36 (1) தன் கன்னத்தில் விழுந்த அறையில், அக்காவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆராவிற்கு, மிருதுளாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் மனதுக்குள் என்ன உணர்கிறார்கள் என்றும் புரிந்தது. என்ன இருந்தாலும் இருபத்தைந்து ஆண்டுகள் ஒன்றாக வளர்ந்தவர்கள் ஆகிற்றே. இதுகூடத் தெரியவில்லை என்றால்?? ஆனால் இதுவரை கோபப்பட்டுப் பார்த்திராத அக்கா, இன்று அறைந்தது, அதுவும் தன் கணவன், அத்தான் முன்பு அறைந்தது, அவளுக்கு உள்ளுக்குள் மிகவும் வருத்தமாக இருந்தது. கூடவே ஒரு மாதிரி கஷ்டமாக […]
Readmoreஅத்தியாயம் 35 தேஜாவை மடியில் வைத்துக்கொண்டு மிருதுளா அமர்ந்திருக்க, அவளைச் சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டு கெளதம் அவள் அருகில் அமர்ந்திருக்க, மெல்ல குழந்தையின் கேசத்தைத் தடவி கொடுத்தவன், “உண்மையா சொல்லனும்னா, நம்ம கல்யாணத்துக்கு முன்னமே சில தடவை தோணியிருக்கு அம்மு, ஒருவேளை நீ தேஜாக்கு சொந்தாமா இருக்குமோன்னு. ஒரு மூணாம் மனுஷியா நீ தேஜா மேல வச்சிருந்த பாசம் பார்க்கும்பொழுது எனக்குள்ள அந்தச் சந்தேகம் சில சமயம் தோணியிருக்கு. அப்புறம் ஆரா வந்து உண்மையைச் சொன்னதும் தான், […]
Readmore