அவர்கள் செல்வதை பார்த்த சொக்கலிங்கம், “நரசிம்மா”!! சொல்லுங்கப்பா…, திருவிழா கணக்கு வழக்கு பாக்க கோயில்ல ஆளுங்க எல்லாம் கூடியிருப்பாங்க ஒரு எட்டு போய் நீ என்னனு பாத்துட்டு வந்துரு, நம்ம பூ தோட்டத்துக்கு ஆளுங்க வேலைக்கு வந்திருப்பாங்க நா அங்க பாத்துகிறேன், நீ கோயிலுக்கு போயிட்டு வந்துரு…, சரிங்கய்யா என்றவன் இரு பெண்களிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிட அவன் பின் சொக்கலிங்கம்மும் சென்றுவிட்டார். அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட லக்ஷ்மி பிச்சையை அழைத்தார், ” அத்த..,” […]
Readmoreஅத்தியாயம் 3 ஆஆஆஆ…………ஆஆ…………..ஆஆஆஆ என்று காட்டு கத்து கத்தியவனின் கத்தலில் பதறிப் போன பவ்யா அவன் வாயை தனது கைகளால் மூடியவள் அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க, ஏற்கனவே வலியில் இருந்தவன் அவள் கொட்டியதும் தனது வாயில் இருந்த பவ்யாவின் கைகளை தட்டி விட்டு தனது தலையை தடவிக் கொண்டு அவளை முறைத்து பார்த்தவன், “ஏண்டி இப்ப கொட்டுன…………,??? நீ ஏண்டா இந்த கத்து கத்துறா…., காது ஜவ்வு கிழிச்சிரும் போல இருக்கு இவள் பதிலுக்கு எகிற, ஏண்டி……, வலிச்சா கத்தாமா பாட்டா பாடுவாங்க எரும மாடே……, யாரப் பாத்துட எரும மாடுன்னு சொன்ன நீ தாண்டா தடிமாடு என்றவள் […]
Readmoreதன்னை நினைத்தே கோபம் பெருகியது விக்கிற்கு.அவனின் கோபம் முழுவதும் ஈஷ்வரின் மீது திரும்பியது. அவரால் தான எல்லாமே?? போக இஷ்டமில்ளை என்றவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்ததால் தானே இவ்வளவு பிரச்சனையும், அவனையும் மீறி மனம் அன்று அலுவலகத்தில் நடந்தவற்றை அசைப் போட்டது.தேவாவும் ்அதை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். நோ…ஓஓஓ…….!!! என்று அலறியவர்களை சிறிது கண்டுக் கொள்ளாது தனது சீட்டில் அவர்கள் கத்தி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்து இருந்தவர், ஓகே…, நாளைக்கு மறுநாள் நீண்க அங்க இருக்கணும், இப்ப […]
Readmore” மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்……. அந்தி மாலைக் காத்து வழியா………….. வந்துச்சா……வந்துச்சா….. சொல்லு…….சொல்லு” என்ற பாடல் வரிகளோடு சேர்ந்து “மே……மே……..” கொக்ரக்கோ…….கோ….” என ஆடு மாடு மனிதன் என்ற வித்தியாசம் இல்லாது அனைத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு புழுதியை கிளப்பியவாறு வந்து நின்றது அந்த அரசுப் பேருந்து. அதிலிருந்து முதலாவதாக குதித்து கீழிறங்கினான் விக்கி(எ)விக்னேஷ்வரன்.அவனை தொடர்ந்து பெண்கள் இருவரும் இறங்க முற்பட, படிகள் சற்றே உயரமாய் இருப்பதை கண்டு திகைத்தனர். ஏனெனில் இறங்க வேண்டும் […]
Readmoreஉள்ளே வந்த மாட்டு வண்டி அதற்குரிய இடத்தில் நிற்கவும், அடுத்த நொடி அதிலிருந்து கை இல்லாத பனியனும், வேலைக்கு தோதாக தூக்கி மடக்கி கட்டியிருந்த வேட்டியும், வெயிலுக்கு ஏற்ப தலையில் கட்டிய துண்டுடன் குதித்து இறங்கியவன், ஏலேய், பாண்டியா வண்டியில இருக்குற அரிசி மூட்டைய எல்லாம் இறக்கி நம்ம குடோன்ல வச்சிடு என்று தனதருகில் நின்றிருந்தவனுக்கு கட்டளையிட்டவன். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தேகம் எங்கும் வழிந்தோடிய வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டே, உள் நுழைந்தவனின் கண்ணில் […]
Readmore