Loading...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 27 (நிறைவுப் பகுதி)

“அபி. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” “இனி பேசறதுக்கு என்ன இருக்கு?” அவனிடம் பேசினாலும் கை வேலை செய்து கொண்டிருந்தது. “எப்படி சொன்னால் என்னோட காதலை ஏத்துக்குவே அபி?” “ஒரு கட்டாயத்துல உருவாறதுக்குப் பேரு காதல் இல்லை.” “உன்னைக் கட்டாயத்தினால்தான் நான் காதலிக்கிறேன்னு யார் சொன்னா?” கோபமாய் கேட்டான். “யாரும் சொல்லத் தேவையில்லை. எனக்கேப் புரியுது. தாலி கட்டிவிட்ட கடமைக்காகத்தான் நீங்க என்னை காதலிக்கிறதா சொல்றீங்க?” “இப்ப நீ டாக்டர்னு தெரிஞ்ச பிறகு உன்கிட்ட காதலைச் சொல்றேன்னு […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 26

தேவேந்திரனை பரிசோதித்த அபர்ணா, “சித்து உடனே மாமாவை ஹாஸ்பிட்டல் கொண்டு போகனும்.” என்றாள். “என்னாச்சு?” என்றான் பதட்டமாக. “ஹார்ட் அட்டாக்.” அதிர்ந்தவன் உடனே அவரைத் தூக்கினான். அபர்ணா கார் சாவியை எடுத்துக்கொண்டு ஓடினாள். “மனோ. நீ உடனே கிருஷ்ணாவுக்கும், ஜெயச்சந்திரன் அங்கிளுக்கும் சொல்லு.” என்று ஓடியவாறே அவனிடம் கூறினாள். காரின் பின்னிருக்கையில் சகுந்தலாவை அமர்ந்து கொள்ள, அவர் மடியில் தேவேந்திரனின் தலையை வைத்தான் சித்தரஞ்சன். அவன் ஓட்டுநர் இருக்கைக்கு வரும் முன்னரே அவள் இயக்க ஆரம்பிக்க, சித்தரஞ்சன் […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 25

“அப்புவுக்கு விசம் வைத்துவிட்டார்கள். எங்களுக்கு உங்கம்மா மீதுதான் சந்தேகம். அப்படியிருக்க அதை எப்படி உங்ககிட்ட வெளிப்படையா சொல்ல முடியும்?” என்று கூறிய கிருஷ்ணாவை கோபத்தோடு பார்த்தான் சித்தரஞ்சன். “என்ன பேத்தல் இது?” “ப்ளீஸ் அண்ணா. எங்களுக்கும் இது சந்தேகம்தான். அவங்களுக்கு அப்புவை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கலை. உங்க வீட்டில் சமையலையும் அப்புதான் பார்த்துக்கிட்டாள். வீட்டில் வெளியாட்கள் யாருமில்லை. அப்புறம் யார் மீது சந்தேகப்பட?” “அவர்கள் என் அம்மா கிருஷ்ணா? உனக்கு இப்படிப் பேச என்ன தைரியம்? அவங்க […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 24

“அப்புவுக்கு தொண்டையில் கேன்சர். அது எத்தனாவது ஸ்டேஜ்னு இனிதான் டெஸ்ட் செய்து பார்க்கனும்.” “என்ன சொல்றே கிருஷ்ணா?” அவன் குரல் நடுங்கியது. “ஆமாண்ணா. இனி நீங்க அவளைக் கவனமா பார்த்துக்கனும்.” அவனிடம் சலனமே இல்லை. “அண்ணா. மனசைத் தேத்திக்குங்க. அவளுக்கு சாப்பாடு இறங்காது. நீர் ஆகாரம்தான் கொடுக்கலாம். ஜூஸ் கொடுங்க. அதுவும் சாப்பிடும்போது கையோட செஞ்சு கொடுங்க. முடிஞ்சா உங்க கைப்பட செஞ்சு கொடுங்க. எதையும் செஞ்சு வச்சுட்டுக் கொடுக்க வேண்டாம். பேச்சு கூட சரியா வருமா வராதான்னு தெரியலை. […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 23

சித்தரஞ்சன் அவளுக்குக் கொடுத்திருந்த ஏடிஎம் கார்டை, திருமண சமயத்தில் அவனிடமே கொடுத்தாள் அபர்ணா. “என்ன இது?” “நீங்கள் கொடுத்த ஏடிஎம் கார்டு.” “என்ன கிண்டலா? இதை எதுக்கு என்கிட்ட தர்றேன்னுதான் கேட்டேன்?” “திருமண செலவில் பெண் வீட்டிற்கும் பங்கு உண்டுதானே? அதுக்கு இதை எடுத்துக்குங்க.” “நான் உனக்கு கொடுத்த பணத்தில் இதுவரை நீ ஒரு பைசா கூட எடுத்துக்கலை.” என்றான் கோபமாய். “இப்ப தேவைப்படும்னுதான் நான் எடுத்துக்கலை.” என்றாள் பொறுமையாய். “நீ செலவுக்குப் பணம் தந்தால்தான் கல்யாணம் […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 22

“அ..ப்…பூ…” என்ற கூவலுடன் ஓடிவந்த நவீன் பிரசாத் அபர்ணாவைத் தூக்கிச் சுற்றினான். திருமணம் முடிவான உடனே அவர்கள் குடும்பத்துடன் இதோ வந்துவிட்டனர். பெரியவர்கள் பின்னே வர, நவீன் பிரசாத் மட்டும் ஓடி வந்திருந்தான். “அவளை விடு நவீன்.” என்றான் அருண்பிரசாத். அபர்ணாவின் அருகில் வந்தவன் பாசத்துடன் அவள் தலையைத் தடவினான். அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சித்தரஞ்சன் அவர்களை வரவேற்கும் விதமாய் முன்னே வந்தான். “வாங்க.” வரவேற்ற அவனைக் கண்ட அருண்பிரசாத்தின் […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 21

அபர்ணா ராஜலட்சுமியிடம் பேசுவதற்காக தோட்டத்துப் பக்கம் சென்றாள். ‘என்ன பேசுவது? எப்படி சொல்வது?’ ஒரே தயக்கம். சரண்யாவின் திருமணம் என்று வந்துவிட்டு, இப்போது தனக்குத் திருமணம் என்றால் நிச்சயம் மகிழத்தான் செய்வர். ‘ஆனால் இத்தனை நாட்களும் திருமணமே வேண்டாம் என்று மறுத்துவிட்டு, இப்போது சொல்லும் போது அவர்கள் அதை நம்புவார்களா?’ ‘அதுவும் அருண் பிரசாத் நிச்சயம் சந்தேகம் கொள்வான்.’ ‘வேறு வழியில்லை. பேசித்தான் ஆகவேண்டும். அவர்கள் அறியாமல் என்னுடைய வாழ்க்கையில் எந்த முக்கியமான முடிவையும் எடுக்க மாட்டேன்.’ […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 20

சித்தரஞ்சன் சொன்ன படியே காலையில் சரண்யாவை அழைப்பதற்கு கார் வந்துவிட்டது. “கார் எங்கு போகிறது?” என்று எதுவும் கேட்காமல் ஏறி அமர்ந்தாள். அவள் நினைவு முழுவதும் அபர்ணா, மதன்ராஜ் பற்றியே இருந்தது. தன்னைக் காணாமல் நிச்சயம் தவிப்பார்கள். எந்த உரிமையில் அவர்களை எதிர் கொள்வாள் அவள்? ‘அக்கா அக்கா’ என்று காலைச் சுற்றி வந்தவனை அவள் கண்டு கொண்டதே இல்லை. அச்சு அசலாக சித்தி மாதிரியே அபர்ணாவைக் காணவும், அப்படியே அவள் காலடியில் விழுந்து கதறி மன்னிப்புக் […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 19

அபர்ணா தன்னைக் காண வந்திருக்கிறாள் என்று முன்கூட்டியே தெரிந்ததினால் அவளால் நடிக்க முடிந்தது. இப்போது திடீரென்று சித்தரஞ்சனை இங்கே காணவும், அவள் தன் நிலையை மறந்து அதிர்ச்சியை வெளிக்காட்டினாள். “என்னை இங்கே எதிர்பார்க்கவில்லைதானே?” என்றான் கிண்டல் குரலில். “நிச்சயமாய்.” என்றாள் அமைதியாய். “உன் அக்காவையும், தம்பியையும் என் வீட்டிற்கு அனுப்பி வைத்தது உன் கைங்கர்யம்தானே? என்ன திட்டம் போட்டிருக்கிறீர்கள்?” என்றான் அவளைக் கூர்ந்து கொண்டே. “என்ன அவர்கள் உங்கள் வீட்டில் இருக்கிறார்களா?” “என்னிடம் நடிக்க வேண்டாம்? என்ன […]


என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 18

அத்தியாயம் – 18 அபர்ணா தன்னை எப்படி ஏமாற்றியிருக்கிறாள் என்று சித்தரஞ்சனுக்குத் தெரிய வரவும் அவளது கெட்டிக்கார சமர்த்தை அவன் மெச்சவே செய்தான். அவள் எதற்காக, யாருக்காக வந்திருக்கிறாள்? என்று அவன் மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருக்க, இப்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது. அவள் திட்டம் போட்டு வந்திருக்கிறாளா? இல்லை எதார்த்தமாக வந்தவளை சந்தேகப்படறோமோ? என்று குழம்பியவனுக்கு இப்போது ஒரு தெளிவு கிடைத்தது. மனோரஞ்சன் அவளை ‘அண்ணி’ என்று அழைத்தது ஏன் என்று அவனுக்குப் புரிந்தது. அந்தப் […]


error: Content is protected !!