Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காளிதாசன் காதல் காண

காளிதாசன் காதல் காண 10

காதல் 10 கார்த்தி முடிவைத் தேடிக்கொள்கிறேன் என்று கண்ணீருடன் சென்று விட, காளிதாஸனுக்கு சட்டென்று ஒரு பதட்டம் ஒட்டிக்கொள்ள “கார்த்தி! நில்லுங்க” என்று குரல் கொடுத்தபடியே பின்னால் செல்ல, அவளோ நேற்றிரவு இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். அவன் சத்தம் கேட்டு, சிவகாமி, நித்தி, கவின், வாலி எல்லாம்  ஓடிவந்தனர். “கண்ணா, என்னாச்சு?” என்று சிவகாமி கேட்க “ம்மா, பேசிட்டு இருந்தோம். நான் முடியாதுன்னு சொல்லவும் இவங்க..முடிவு தேடிக்கிறேன்.. அப்படி” என்று டென்ஷனாகப் பேசியவன் […]


காளிதாசன் காதல் காண 9

காதல் 9 கார்த்தியின் பதிலால் காளிதாஸன் அதிர்ந்து போனான்.  கார்த்தி காதலிக்கிறோம் என்று சொல்லிவிட, அடுத்தடுத்து அதனைக் குறித்த கேள்விகள் வரவும் இதனின் பின்விளைவுகளை யோசித்தவன் கோபத்துடன் அவளை இழுத்துக் கொண்டு போனான். அவனின் வீட்டில் அலுவலக அறை,  கீழ்த்தளத்தில் இடப்பக்கம் இருந்தது. அங்குதான் ப்ரஸ் மீட் ஏற்பாடு செய்திருந்தான். அங்கிருந்தும் வீட்டிற்குள் நுழைய ஒரு கதவுண்டு. இரண்டு கதவுகள் தாண்டினால் ஹால் உண்டு, அங்கேயே ஒரு பக்கம் sliding door கண்ணாடியால் போட்டப்பட்ட அறைக்குள்   கார்த்தியை […]


காளிதாசன் காதல் காண – 8

காதல் 8 ‘காதலுக்கு எதிரா ஆளுங்கட்சி??’ ‘எதிர்க்கட்சி எம்.எல்.ஏவின் காதல் ஆளுங்கட்சி ப்ரமுகரின் மகளுடனா?’ ‘கட்சி மோதலினால் கட்டாயக் கல்யாணம். ஆளுங்கட்சியின் அராஜகம்!’ ‘காதலியைக் கரம் பிடிப்பாரா காளிதாஸ்?’ ஒவ்வொரு செய்தித்தாளிலும் செய்தி சேனல்களிலும் மற்ற செய்திகளுடன் இதுவும் கூட முக்கிய செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது. வேறு முக்கிய செய்திகள் இல்லாமல் போக, கிடைத்ததை திரித்து திரித்து ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த வண்ணம் செய்திகளைக் காட்டிக்கொண்டிருந்தனர். இதில் கார்த்தியாயினி அழுகையுடன் காளிதாஸனைக் கட்டி அணைத்தக் காட்சி வேறு அடிக்கடி […]


காளிதாசன் காதல் காண – 7

காதல் 7 கார்த்தி திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து அதனை வீட்டிலும் சொல்ல, “உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்ன அப்புறம்தானே கனிம்மா நான் பேசினேன். இப்போ என்ன ஆச்சு, ஏன் மாப்பிள்ளைகிட்ட போய் கல்யாணம் வேண்டாம் சொன்ன?” என்றார் ராஜரத்னம் ஆற்றாமையுடன். கார்த்தியோ ராஜரத்னத்திடம் “எனக்கு இஷ்டமில்லன்னா விடுங்க” என்றாள் பட்டென்று. “என்ன இஷ்டமில்ல? அப்பா உன்னைக் கேட்டுதானே முடிவெடுத்தாங்க?” என்று எகிறினான் செல்வரத்னம். அண்ணனை நேர்க்கொண்டு பார்த்தவள் “என்னோட வாழ்க்கை, என் இஷ்டம்! என்னைக் கேள்விக் […]


காளிதாசன் காதல் காண – 5

காதல் 5 யாரும் எதிர்ப்பார்க்கவில்லை சிவகாமி அப்படி கை நீட்டுவார் என. நித்தி உடனே “அத்த, என்ன செய்றீங்க?” என்று அவரை அதட்ட “நீ பேசாத நித்தி” என்று அவளை அடக்கியவர் அழுத்தமாய் நின்ற மகனைப் பார்த்தார். “அவங்க எப்படிப்பட்டவங்களா இருக்கட்டுமே, அவங்க அளவுக்கு நீயும் இறங்கினா அப்போ நம்ம அவங்களை மாதிரி ஆகிட மாட்டோமா? இதுதானா கண்ணா எங்க வளர்ப்பு?” என்றார் கோபமாக, அதனைவிட என் மகன் இப்படி செய்திருக்கக் கூடாதே என்ற எண்ணம் மட்டும் […]


காளிதாசன் காதல் காண – 6

காதல் 6 “சொல்லு நித்தி? எப்படி இருக்க?” “நான் நல்லா இருக்கேன் தாஸ், உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று நித்தி தயங்கினாள். “கம் ஆன் நித்தி! சொல்லு” என்று அவன் சொல்ல “அது அன்னிக்கு நீ கடத்தி வைச்சிருந்த பொண்ணை  என் ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன்” என்றதும் “அவங்க கூட என்னைக் கடத்தல் பண்ணினனு சொல்ல மாட்டாங்க, ஆனா நீ இருக்கியே” என்று தோழியைத் திட்டினான். “டேய்! சொல்றது கேளு. அந்த பொண்ணு செம டிப்ரஷன்ல […]


காளிதாசன் காதல் காண – 4

காதல் 4 ஹாலுக்குள் வேகமாய்  நுழைந்த செல்வா காளிதாஸனை நெருங்கி கையை ஓங்கிக்கொண்டு, “டேய்! எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை தூக்குவ, எங்க இருக்கா அவ சொல்லு?” என்று சட்டையைப் பிடிக்க காளிதாஸன் அசையாமல் அழுத்தமாக நின்றான். அந்த பார்வை அவனின் அப்பா அழகிரியை நினைவூட்டியது ராஜரத்னத்திற்கு. அழகிரி, மகாதேவன், ராஜரத்னம் எல்லாம் நண்பர்கள். அப்படித்தான் மற்ற இருவரும் நினைத்தார்கள். மூவரும் கட்சியில் தொண்டர்களாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறினார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை மகாதேவன் பயன்படுத்த, […]


காளிதாசன் காதல் காண – 3

காதல் 3 சில மணி நேரங்களுக்கு முன் மாலில்…. தன்னைக் கடத்துவேன் என்று காளிதாஸன் பேச “உங்களை  மதிச்சுப் பேசுறேன்றதுக்காக இப்படி பேச வேண்டாம் மிஸ்டர்.  ஹவ் சீப்?” என்று கார்த்தி முகம் சுழிக்க அந்த செய்கை காளிதாஸனை நிதானம் கொள்ள வைத்தது. “மேம்! ஐ அம் ஸாரி! இங்க பாருங்க. உங்ககிட்ட இப்படி பேசணும் நான் நினைக்கல. நீங்க அப்படி என்னைத் தள்ளிடாதீங்க. உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுத்தான் வந்திருக்கேன். இது ரொம்ப சீரியஸ்” என்றான் […]


காளிதாசன் காதல் காண – 2

காதல் 2 “என்னத்த, இன்னும் காதுவைக் காணும்..? போன் பண்ணினாலும் எடுக்கல” என்று கயல்விழி கவலையுடன் சொல்ல “வந்துடுவா கயல். இந்த மேக் அப் போட்டா எல்லாம் நேரமெடுக்கத்தானே செய்யுது” என்று விசாலாட்சி சமாதானம் செய்தார். சிறிது நேரத்தில் பரபரப்பாக வீட்டுக்குள் நுழைந்தான் ராஜீவ். “ம்மா, அக்கா வந்துட்டாளா?” என்றவனின் குரலில் டென்ஷன் கூடியிருந்தது. “இல்லை ராஜா, ஏண்டா என்னாச்சு?” என்று விசாலாட்சியும் மகனின் குரலில் பதட்டமாகிக் கேட்க “அவ மால் போய்ட்டு உங்களுக்குப் பேசினாளா அண்ணி?” […]


காளிதாசன் காதல் காண – 1

காதல் 1 “காதும்மா, சீக்கிரமே வந்துடு. கண்டதையும் பூசி முகத்தைக் கெடுத்துக்காத” என்றார் விசாலாட்சி. “ம்மா, அதெல்லாம்  நல்ல ப்ராக்டக்ட்ஸ்தான். நம்ம அண்ணிக்குப் பண்ணின அதே இடம்தான். டெஸ்ட் மேக் அப் ஓகேன்னா அதை ஃபைனல் பண்ணிடுவேன். நீ டென்ஷன் ஆகாத” என்றாள் புன்னகை முகமாய்க் கார்த்தியாயினி. “காது, நீ இப்படியே பேசிட்டு இருக்காம, சீக்கிரம் முடிச்சிட்டு வா. உங்கண்ணா வந்தா உன்னை தனியா அனுப்பினதுக்குத் திட்டுவார் என்னை” என்றாள் அவளின் அண்ணி கயல்விழி. “அண்ணி, அண்ணாக்கு  […]