சிறைமீட்டு உனைக் காக்கவா? – 2 “சிவன்பாண்டியன் மகளிர் தையலகம்” என பெயரிடப்பட்டிருந்த அந்தக் கடையின் ஷட்டரைத் தூக்க முற்படுகையில், “கார்த்தி.. யாராவது பொம்பளைங்க ட்ரெஸ் தைக்கிற கடைக்கு சிவன்பாண்டியன்னு வைப்பாங்களா? பெயரை மாத்தேன்… இன்னும் நிறைய பேர் வருவாங்கள்லா…” என அவ்வவ்போது தனது தோழிகள் குறைபட்டுக் கொள்வது நினைவில் வந்துபோனது கார்த்திகாவிற்கு. புன்னகையுடனே திறந்தவள், “பெயரைப் பார்த்துத்தான் கடைக்கு வரணும்ன்னு இல்ல… நாம நம்மோட வேலையை சரியா செஞ்சா அதுவே ஒருவகையில் விளம்பரம்தான்… பொம்பளைங்களுக்கு ட்ரெஸ் […]
சிறைமீட்டு உனைக் காக்கவா? – 1 “கார்த்தி… ஏப்ள கார்த்தி…” என அழைத்தவாறே வந்து நின்ற சுந்தரி, “சரசக்கா… கார்த்தி இருக்காளா?” என வினவ, “ஆங்… இருக்கா… இப்பதான் எந்திரிச்சு பாத்ரூம் போயிருக்கா…” என ஒன்றுக்குப் பாதியாக பதிலுரைத்தார் பல்துலக்கிக் கொண்டிருந்த கார்த்திகாவின் அன்னை சரஸ்வதி. “லீவுன்னதும் லேட்டா எந்திரிச்சியளோ?” எனப் பேசியவாறே முற்றத்தில் அமைந்திருந்த திண்ணையில் அமர்ந்த அந்தப் பெண் நம் நாயகி கார்த்திகாவின் பக்கத்து தெருவில் குடியிருக்கும் சுந்தரி. “என்னத்த லீவு… அதுக்கும் சேர்த்துத்தான் […]