அடுத்த நாள் காலை எழுந்த சூர்யா பகபகவென சிரிக்க.. ‘எதுக்கு சிரிக்கிறிங்க..?” என்று திலகா கோபிக்க.. ‘அதுக்காகத்தான் மஞ்சள் போட்டன்ற மாதிரியே வந்து நிக்கிறயே.. இப்போ இன்னும் ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க..” என்று சொல்ல.. தன் முயற்ச்சி தோல்வியாகவே.. ‘என் புருசன்.. நான் சந்தோசமா இருக்கேன்.. யார் கண்டுபிடிச்சாலும் எனக்கு கவலையில்ல போங்க..” என்று முறுக்கிக்கொள்ள.. மனைவியை அணைத்தவன்.. ‘இன்னைக்கு திங்கக்கிழமை.. நான் ஹாஸ்பிட்டல் போகனும்.. இப்படியெல்லாம் பேசி சூர்யாவை சூடாக்கக்கூடாது..” என்று இறங்கிய […]
அத்தியாயம்.. 27 ‘அப்பாவும் மகனும் எங்கடா போய்ட்டு வரிங்க..?” என்று திலகவதி மகனை மிரட்டி கேட்க.. மூர்த்தி வீட்டிற்க்கு போகும்போதெல்லாம் பிரசாத்தின் படத்தை மகனை வணங்க பழக்கியிருந்தான் சூர்யா. ‘ம்மா..” என்று தன்னிரு கைகூப்பி கோவிலுக்கு போய் வந்தவன் போல் பிரகாஷ் சைகை செய்ய.. ‘இவன் பிறந்ததுக்கப்புறம் ரொம்பத்தான் உங்களுக்கு பக்தி முத்திடுச்சி..” என்று நொடித்தாள். ஒரு சில நேரம் தானும் வருகிறேன் என்று கிளம்புவாள் திலகவதி. அப்போது அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு அழைத்து செல்வான் […]
ஒரு மணிநேரம் வரை பே வென பார்த்திருந்து.. டாக்டர் வேலை எத்தனை சுலபமான வேலை என முன்பு நினைத்திருந்தவள்.. இன்றுதான் கணவன் படும் கஷ்டம் புரிய.. பாவமாய் பார்த்திருந்தாள் டாக்டர் சூர்யாவை. நர்சிடம் ஐந்து நிமிட இடைவெளி சொல்லி வெளியே அனுப்பியவன்.. மனைவியிடம்.. ‘டையர்டா இருக்கும்போது இதை குடிக்க சொன்னேன்தான..?” என்று மிரட்ட.. ‘பாதி ஜூஸ் உன்னிடம்.. மீதி ஜூஸ் என்னிடம்..” என்று பாட்டு பாட.. ‘ப்ச்.. இந்த இம்சைக்குத்தான் உன்னை போக சொன்னேன்..” என்று திட்ட.. […]
அத்தியாயம் — 26 ‘அன்னைக்கு மாதிரி எல்லாமும் நீங்களே எல்லாம் செக் செய்துக்கோங்க.. நான் ஹாஸ்பிட்டல்க்கு வரமாட்டேன்..” என்று சொல்ல.. ‘ஏய் லூசு.. அன்னைக்கு யூரின் டெஸ்ட் மட்டும்தான் செய்தேன்..” எனும்போதே.. ‘என்னென்ன பார்க்கனுமோ எல்லாமும் நீங்களே பாருங்களே..” என்று கெஞ்ச.. ‘லூசு.. நான் பிரசவம் பார்க்கிற டாக்டர் இல்ல.. ஆப்ரேசன் பண்றவன்.. இப்போ கிளம்பப்போறியா இல்லையா..?” என்று மிரட்ட.. ‘போங்க.. இந்த டாக்டருங்களே ரொம்ப மோசம்.. கண்ட இடத்தில கை வைப்பாங்க.. ஒருமுறை […]
அத்தியாயம் — 25 காலை வழக்கம்போல் சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிகொண்டிருந்தான். திலகவதியை நினைக்கும்போதெல்லாம் அவளை ஆளும் எண்ணமே சூர்யாவை ஆட்டிப்படைக்க.. கடந்த ஒரு வாரமாக அவளின் முகம் பார்ப்பதையும் கூட தவிர்த்திருந்தான். ‘ஊருக்கு போனதில இருந்து மாமா இன்னும் ‡போனே பண்ணல.. அத்தைக்கு அங்க சௌகரியமா இருக்கான்னு ஒரு ‡போன் பண்ணி கேக்கலாமா..?” என்றாள். ‘நான் கேட்டுட்டேன்… உனக்கு தெரிஞ்சிக்கனும்னா நீயே கேட்டுக்கோ..” என்றான். ‘எப்ப பேசுனிங்க..? ஏன் என்கிட்ட சொல்லவேயில்ல..?” என்று கோபித்தாள். ‘எல்லாத்தையும் […]
‘முழு கை வச்ச மாதிரியும் தைச்சி வச்சிருக்கேன்.. அதை போட்டுக்கட்டுமா..?” என்றாள் ஆர்வமாக. முறைத்தவன்.. ‘ஏற்கனவே டைம் ஆய்டுச்சி.. இனி டிரெஸ் மாத்தினா ரொம்ப லேட்டாகிடும்.. வா..” என்றான். காரில் போகும்போது.. ‘என்கிட்ட யாராவது இங்லீசுல பேசினா நான் என்ன பண்ணட்டும்..?” என பதட்டத்தோடு கேட்க.. ‘எனக்கு இங்லீஸ் புரியாது.. தமிழ்ல கேளுங்கன்னு சொல்லு..” என்று தைரியம் கொடுக்க.. ‘உங்களை தப்பா நினைக்க மாட்டாங்க..?” என்று கேட்க.. ‘நினைக்க மாட்டாங்க.. அப்படியே நினைச்சாலும் அதைப்பத்தி எனக்கு கவலையில்ல.. […]
அத்தியாயம் ..24 ஆதவன் வந்து இருபது நாட்கள் முடிந்திருக்க… ‘அத்தை.. ப்ளீஸ் போகாதிங்கத்தை.. என்னால இங்க இவ்ளோ பெரிய வீட்ல தனியா இருக்கமுடியாது..” என்று கமலத்திடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் திலகா. கடந்த மூன்று நாட்களாக இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாள். ‘உனக்கு துணையாத்தான் சூர்யா இருக்கானில்ல.. அதுவுமில்லாம நீதான் நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டயில்ல.. உன் மாமன் வேற உனக்கு மிஷின் வாங்கி கொடுத்திருக்கான்.. நல்லா சம்பாதிச்சி உன் புருசன்கிட்ட கொடு.. இங்க பணம்தான பெரிய பிரச்சனை..? மத்தபடி என் மகன் […]
‘சூர்யா..” என்று உணர்வுப்பூர்வமாய் அவனை கட்டியணைத்தவன்.. ‘நீ எப்படிடா இவ்ளோ நல்லவனா இருக்க..? உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா..” என்று சந்தோசமாய் சொல்ல.. ‘இதுல நல்லவனெல்லாம் ஒன்னும் இல்ல ஆதவா.. நான் அவளை ரொம்ப லவ் பண்றேன்.. இந்த விசயத்தில அவ மனசு கஷ்ட்டப்படும்படி என்னால நடந்துக்கவே முடியாது..” என்றான் சிறு வெக்கத்தோடு. சூர்யாவை மீண்டும் பெருமையாய் பார்த்தவன்.. ‘ஆனாலும் இந்த விசயத்தில.. அதுவும் தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட.. ரொம்ப நல்லவனா இருக்கனும்னு அவசியமில்ல.. […]
. அத்தியாயம்.. 23 அடுத்து வந்த நாட்களிலிருந்து மருத்துவமணை போகும்முன் மனைவியை அணைத்து நெற்றிமுத்தம் வைக்காமல் கிளம்புவதில்லை சூர்யா.. அதேபோல் இரவுகளில் திலகாவை அணைத்தவாறுதான் தினமும் தூங்குவது என்று வழக்கப்படுத்தியிருந்தான். ஹாஸ்பிட்டலில் நடக்கும் சம்பவங்கள்.. ஹோம் ஆரம்பித்ததுப் பற்றி என சிலதை பகிர ஆரம்பித்தான்.. இவளும் ஆர்வமாக கேட்ப்பாள்.. வெளியில் எங்காவது அழைத்து செல்லவேண்டும் என நினைப்பான்.. அவனின் கடமை அவனுக்கு நேரம் கொடுக்காமல் போகவே வெளியில் செல்ல […]
சந்தோசத்தோடும் நிம்மதியோடும் சரி என்பதாய் தலையசைத்து கிளம்பினான். நேற்றிலிருந்து இருந்த பயம் போய்.. மனது லேசானது.. முத்துவின் மனைவி மருத்துவமணையில் இருப்பதால் முத்துவை வேலைக்கு வரவேணாம் என்று முன்னமே சொல்லயிருக்க.. தானே அனைத்து வேலையும் உற்ச்சாகமாக செய்தாள்.. சந்தோசத்தோடு துணி தைத்தாள். அன்றிரவு ஒன்பது மணியாகியும் சூர்யா வராமல் போகவே.. முதன் முறையாக கணவனுக்கு ‡போன் செய்யும் எண்ணம் தோன்ற.. கமலத்திடம் சென்றாள்.. மாத்திரையின் உபயத்தால் கமலம் தூங்கியிருக்க.. செய்வதறியாது தவித்தவள்.. கதவைத்திறந்து வைத்து […]