கரை சேர்ந்த ஓடங்கள் – 15 இரும்பாக்கிக் கொண்டாலும்.. மனம் என்னவோ!! உன்னை நோக்கியே இழுக்கிறது.. காந்தமோ? காதலின் சக்தியோ? சூரனை வதம் செய்த திருச்செந்தூர் தான் அவர்களின் முதல் ஷூட்டிங்க் ஸ்பாட். ஷஸ்டி கவசம் முதல் முருகப் பெருமானின் அனைத்துப் பாடல்களையும் சாருகேஷி பாட, சிவகுரு அந்தக் குரலில் மயங்கித்தான் போனார். அடுத்த பதினைந்து நாட்களும், முருகக் கடவுள் வாசம் செய்யும், அறுபடை வீடுகளுக்குப் பயணித்து, ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடிக்க, சாரு சென்னை வந்தப்பின் […]
ஒடங்கள் – 14 வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பல விதம் என்றாலும் இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும் ஒரு விதமான அதிசய உணர்வு. சென்னை வந்த பிறகு சாருவின் வாழ்க்கை எந்த மாற்றமும் இல்லாமல் பயணித்தது. செல்வமும், ரெஜினாவும் இரண்டு வாரங்கள் இருந்துவிட்டு நான்குநேரி கிளம்பியிருந்தனர். சாருவும் வழக்கம்போல் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு பெங்களூர் பற்றிய ஞாபகங்கள் துளியும் இருக்கவில்லை. செல்வத்தின் திருமணம் அதையெல்லாம் மறக்க வைத்திருந்தது. அவர் […]
கரை சேர்ந்த ஓடங்கள் – 13 ஆண்டுகள் எல்லாம் கடந்து விட்டது அன்பெல்லாம் கறைந்து விட்டது..! ஆனாலும் அடிக்கடி அந்த நாள்கள் எல்லாம் அழகாய் தந்து போகிறது உன் நினைவுகள்..! செல்வம் போட்டச் சத்தத்தில் மூவரும் அதிர்ந்து அவர் அறைப் பக்கம் பார்க்க, அவர் முகம் முழுவதும் கோபம் ஆத்திரம் இயலாமை என ஒவ்வொரு உணர்வுகளூம் பிரதிபலிக்க, கதவோரத்தைப் பிடித்தபடி நின்றிருந்தார். இப்போது ரெஜியின் அழுகை மேலும் அதிகமானது. அவர் அழுதுகொண்டே இருக்க, […]
ஓடங்கள் – 12 ரயில் போனபின்னும் இணைந்தே இருக்கின்ற தண்டவாளங்கள் போலவே இணைந்தே வருகின்றது பயணத்தின் ஞாபகங்கள் அந்த மருத்துவமனையின் ஐசியு பகுதியின் முன்னே பயமும், பதட்டமாக அம்ர்ந்திருந்தாள் சாரு. அவள் அருகே பெரியவர் விஸ்வம். ஆனால் அவளுக்கு குறையாத பதட்டம் அவருக்கும் இருந்தது. அவரது வயதிற்கு எத்தனையோ சம்பவங்களை பார்த்து கடந்து வந்து விட்டார் தான். உடலில் சோர்வில்லை. மனதில் தான் சோர்வு. அதனால் சோர்ந்து தெரிந்தார். அறைக்கு உள்ளே மருத்துவ […]
ஓடங்கள் – 11 பரபரப்பான சென்னை வாழ்க்கை ஓரளவுக்கு பழகியிருந்தது சாருவிற்கு. முதல் வருடம் மட்டும் ஹாஸ்டலில் இருக்க, அடுத்தடுத்த வருடங்களில் அவளைத் தனியே விட பயந்தும், அவள் இல்லாமல் இருக்க முடியாமலும் விஸ்வம் சென்னை போகிறேன் என்று சொல்லிவிட்டார். செல்வத்திற்கும் அதுவே சரியெனப்பட சென்னையில் தனியாக ஒரு வீடு பார்த்து இருவரையும் விட்டுவிட்டு கிளம்பினார். அவருக்கும் சாருவைத் தனியே விட பயம். தன் குடும்பத்தின் ஒற்றை வாரிசு, அவளை கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டிய […]
கரை சேர்ந்த ஓடங்கள் – 10 முடிந்தது.! எல்லாம் எல்லாம் முடிந்திருந்தது..! முரளியின் குடும்பத்திற்கு அழகாய் விடிந்த அவ்விடியல் அபஸ்வர லயமாய் முடிந்திருந்தது விதியின் செயல் அல்ல. கொடூர மனம் கொண்ட பகைவர்களின் சதியின் வலை பின்னல். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் முரளியும் மனோகரியும் திருச்சியில் இருந்து நாங்குனேரி வந்திருந்தனர். சாருவைப் பார்ப்பதே பெரியவர்களுக்கு பெரிய வேலை. இதில் கோவில் சம்மந்தமாக அலைவதென்றால் சிரமம் என்பதால் தான் இந்த முன்னேற்பாடான இவர்களின் வருகை. […]