வெளியே மேளச்சத்தம் காதை பிளக்க அதற்கு மேல் பாட்டுச்சத்தம் வேறு மண்டபத்தை அதிர வைத்துக்கொண்டு இருந்தது. வீட்டு மாப்பிள்ளையாய் மூத்த மாப்பிள்ளையாய் அனைவரையும் அதிகாரம் செய்ய முடியாமல் ஸ்ரீநிவாஸ் பம்பரமென சுழன்றுகொண்டு தான் இருந்தான். இதில் பெரும் சோதனையாக, “என் நம்பிக்கையை காப்பாத்திரு ஸ்ரீநி…” என பார்க்கும் இடமெல்லாம் அடைக்கலம் வார்த்தைக்கு வார்த்தை சொல்லி அவனை கலவரமூட்டினார். “இவர் ரோதனை தாங்க முடியலையே” என உள்ளுக்குள் பொருமத்தான் முடிந்தது. முன்பே இத்திருமண பேச்சில் தன்னை அதிகமாய் இழுத்துவிடுவது […]