அத்தியாயம் – 32 “தி பெஸ்ட் சினிமாட்டோகிராபர் ஆவார்ட் கோஸ் டூ…. ஹே என்னோட ஸ்டூடன்ட், மாயசித்ரா!” ரவீந்திரன் கூறியதை கேட்டு, அரங்கம் முழுவதும் கரவோஷம் எழும்ப, சிறிய புன்னகையுடன் தன் அருகில் அமர்ந்திருந்த கார்த்திக்கை பார்த்து கண்களால் பேசி, எழுந்து மேடை சென்றாள் மாயா. வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து பல நிறங்களை பொழிந்த இடத்தில், வெள்ளை கருப்பு நிறத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த சுடிதாரை அணிந்துக் கொண்டு மாயா […]
அத்தியாயம் – 31 குழந்தைகள் பிறந்த பதினொராம் நாள் தொட்டிலிட்டு, பெண்ணிற்கு ‘அகிரா’ என்றும் பையனிற்கு, ‘அகிலன்’ என்றும் பெயர் சூட்டினர். பத்து நாட்கள் அவர்களுடன் நேரம் செல்வழித்துவிட்டு, கார்த்திக் சென்னை திரும்பினான், எல்லா வாரவிடுமுறையும் அங்கே வருவதாக கூறி. சுப்பிரமணியம் பேரப்பிள்ளைகள் இல்லாமல், அங்கே தனக்கு வேலை இல்லை என கூறி, கோயம்பத்தூரிலேயே தங்கிவிட, கார்த்திக் மட்டுமே ஊருக்கு சென்றான். மீனம்மாவும் அபிராமியின் வீட்டிலேயே குழந்தைகளை கவனித்துக் கொண்டு தங்கினார். இதன் […]
அத்தியாயம் – 30 மாயாவிற்கு வெகு நாட்கள் கழித்து வீட்டில் ஒன்றும் செய்யாமல் இருப்பது கடினமாக இருந்தாலும், அவளாலும் வெளியே செல்ல முடியவில்லை…. மசக்கையின் அறிகுறிகள் தலை தூக்க, அவளால் முன் போல் கார்த்திக்குடன் வாரத்திற்கு ஒரு படம் கூட செல்ல இயலாமல் போனது. ஆனால், வீட்டில் இருந்த நேரத்தில் மாமனாருடன் செலவழித்து கார்த்திக்கின் சிறு வயது ஞாபகங்களை நினைவுக் கூற வைப்பாள். அவரும் அசராமல் மருமகளுடன் பேசவும், கார்த்திக் தான் இவர்களின் நடுவில் […]
“என்னடா என்னை அனுப்பிட்டு ஒரு மாசம் ஜாலியா இருக்கலாம்னு பார்க்கறியா? போன் பண்ணி டார்ச்சர் பண்ணுவேன் நானு….” “பாவி ஊருக்கு போனா கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா??” ஆம், இன்னும் மூன்று நாட்களில் படப்பிடிப்புக்காக தன் குழுவினருடன் மாயா ஒரு மாதம் ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும், ரோம், இத்தாலி நாடுகளுக்கு பயணமாகிறாள். அத்துடன் இந்த இரண்டாம் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைவதால், அதன் பின் சில நாட்கள் வீட்டிலேயே இருக்கலாம் என மனதை […]
அத்தியாயம் – 29 சுப்பிரமணியமும் இவர்களுடன் தங்க வந்ததும், நேரம் பறப்பது போல் தோற்றமளித்தது. இப்போது தான் தன் குருவிடம் சென்று சேர்ந்தது போல் இருந்தது, அதற்குள் ஒரு படம் முடிவடைந்து அடுத்த படத்திலும் பாதிக்கும் மேல் முடிவடைந்திருந்தது. இந்த இரண்டாவது படத்தில் தான் மாயா பிரித்வியை சந்தித்தாள். இந்த சை-பை படத்தை இயக்குபவரும் பெரிதாக போற்றப்படுபவரே. அவரிடம் தான் பிரித்வி உதவி இயக்குனராக பணியாற்றினான். ஒரு நாள் பிரசாத் ஸ்டியோஸில் படப்பிடிப்பு முடிந்து […]
அத்தியாயம் – 28 சந்தோஷத்தில் கணவனின் தோள்களில் ஊஞ்சலாடிய மாயாவை, கார்த்திக்கும் சற்று நேரம் கழித்தே கீழேயிறக்கினான். இருவரும் ஒவரை ஒருவர் பார்த்து வாயெல்லாம் முத்துப் பற்கள் தெரிய இளித்துக் கொண்டே இருக்க, மாயா தான் செல்லமாக அவன் மார்பில் அடித்து அந்த மௌன பரிபாஷயை கலைத்தாள். “வர மாட்டேன், வேலை இருக்குன்னு பொய் சொல்லிட்டு கரக்டா வந்திருக்க??” அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டே தன் மனக் குமுறலைக் கொட்டினான், கார்த்திக். […]
அத்தியாயம் – 27 காலை கணேஷனிடம் பேசி முடித்தவுடன் அன்றே மாலையில் நான்கு மணி அளவில், ரவீந்திரன் சாரை பார்க்கப் போனார்கள் கார்த்திக்கும் மாயாவும். இவர்களை கண்டவுடன், “என்ன சந்தோஷமா??” என கேட்டு புன்னகைத்தார் அவர். “ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்….” மாயா கூறியதை கேட்டு, தலையசைத்து அடுத்து வரும் நாட்களுக்கான திட்டங்களை அவளிடம் பகிர்ந்தார். “இந்த படத்தோட பிரமோஷன் முடிய இன்னும் ஒரு வாரம் ஆகும். அதுக்கப்புறம் இரண்டு தமிழ் படம் தான் […]
பெரிய கூட்டம் எல்லாம் இல்லை. இவர்கள் இருந்த அறையில், இவர்களுடன் சேர்த்து இரண்டு பேரே இருந்தனர். மாயாவின் இதய துடிப்பை ஏற்றவே இவர்களை வழி நடத்தியவர் வந்து, “சார் கூப்பிடறார், வாங்க.” என்று அழைத்து முன் நடந்தார். கடைசி முறையாக கார்த்திக்கை நோக்கிவிட்டு, மாயா மட்டும் உள்ளறையினுள் சென்றாள். இவளை கண்டதும் புன்னகைத்து, தன் எதிரே இருந்த இருக்கையில் அமரச் சொன்னார் ரவீந்திரன். “தாங்க்ஸ் சார்.” மாயா இருக்கையில் அமர்ந்து கஷ்டப்பட்டு தரையில் வீசிய […]
அத்தியாயம் – 26 மாயா தான் போட்டியில் வெற்றிப் பெற்றதை தன் குடும்பத்தினருக்கு பகிர்ந்தாள். எல்லோருக்கும் மகிழ்ச்சியே! விநாயகமும் ரித்தியாவும் ஒரே குரலில், “எனக்கு தெரியாது அடுத்த வாட்டி கோயம்பத்தூர் வரப்போ எனக்கு ட்ரீட் வேணும்!” என்று கூறினர். கார்த்திக் அதன் பிறகு மாயாவிடம், ரவீந்திரனிடம் உதவியாளராக சேருவது பற்றிப் பேச்சே எடுக்கவில்லை. ஆனால், வேலையும் நிற்கவில்லை! மாயாவின் பெயரில் புதிதாக, ஒரு மின்னஞ்சலை தொடங்கிவிட்டு, அதிலிருந்து ரவீந்திரனுக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தான். […]
அத்தியாயம் – 25 பட்டுச்சேலையின் மேல் வழுக்கிக் கொண்டு செல்லும் கைகளை போல, கார்த்திக்கின் கைகளில் அவன் தந்தையின் கார் அந்த தார் ரோட்டில் வெண்ணையாய் வழுக்கிக் கொண்டு சென்றது. சாலையில் தூரத்தில் கண்களுக்கு புலப்படும் கானல் நீர், அதன் அருகில் சென்றவுடன் மறைந்து போவது என்ன சித்தமோ?? கார்த்திக்கின் மனதில் இந்த கானல் நீர் எல்லாம் பதியவே இல்லை. அவன் படப்படக்கும் இதயம் அருகில் இருக்கும் மனைவிக்கு செவிக்கு எட்டாமல் இருக்கவே […]