Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mullai Vana Kulirae

முல்லை வன குளிரே – 14 (2)

“என்ன குறிஞ்சி?…” என்று அவளை பார்த்ததும் போனை வைத்துவிட்டு அழைக்க அவனை திரும்பி முறைத்தவள், “நல்லா காமிச்சாச்சா? இதான் டெய்லி நடக்குதா?…” என்று இவனை பார்த்தும் மூச்சிரைக்க பேசியவள் மீண்டும் ஐஸ்வர்யாவை பார்த்தாள். அவள் இதற்கெல்லாம் அசரமாட்டேன் என்பதை போல ஐஸ்வர்யாவும் திண்ணக்கமாய் நின்றாள். “கொழுப்பை பாருங்க. எப்படி நிக்கறான்னு…” என்று குறிஞ்சி பொறுமினாள். “இப்ப நீ எதுக்கு இங்க வந்த?…” என்றவன் பெட்ஷீட்டை பார்த்துவிட்டு, “இதை ஏன் இங்க காயவைக்கிற? அதான் கீழே இடம் இருக்கே?…” […]


முல்லை வன குளிரே – 14 (1)

குளிர் – 14 நிரஞ்சனாவை பார்த்ததும் முகம் சுளித்தவள் இவள் ஏன் தங்களிடம் வருகிறாள் என்று பார்த்தான். “ஹாய் அமர். உங்களை இங்க மீட் பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை. அதுவும் ஜோடியா?..” என சொல்லியவள் குறிஞ்சியை நோட்டமிட, “கால் மீ அமர்நாத்…” என்றான் அமர் அழுத்தமாய். “நான் உங்ககிட்ட பேசும் போது அப்படித்தானே பேசிருக்கேன். அப்போ எல்லாம் அப்ஜெக்ஷன் எதுவும் நீங்க சொன்னதில்லையே…” என்றதும் குறிஞ்சி அமரின் பக்கம் திரும்பவே இல்லை. அவனுமே குறிஞ்சியின் முகத்தை […]


முல்லை வன குளிரே – 13 (2)

“அதான பார்த்தேன். உங்க ரூல் புக் எங்கையோ தொலைஞ்சு போச்சோன்னு நினைச்சேன்…” என்று கிண்டல் பேசியவள் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து போனை எடுக்க, “யாருக்கு…” என்றான். “சுபாக்காவுக்கு…” என சொல்ல போனை பறித்தவன், “தலை வலிக்குதுன்னு சொன்ன தான? போய் படு…” என சொல்லி, “உனக்கு எதாச்சும் கேட்கனும்னா என்கிட்டே கேளு, சுபாக்கான்னு போனை தூக்காத. அப்பறம் போன் இருக்காது…” என்று மிரட்ட, “அமரபுஜங்கன் பேக்…” என்று அவனை பார்த்து சொல்லிவிட்டு படுக்க சென்றாள். “இவ […]


முல்லை வன குளிரே – 13 (1)

குளிர் – 13 அத்தனை நேரம் யாரிடமும் பேசாமல், பேசமுடியாமல் வார்த்தைகள் மறந்துவிடுமோ என பயந்திருந்தவளுக்கு அமரின் வருகையும் அவனின் ஆறுதலான அருகாமையும் நிம்மதியை தந்திருக்க பேசிக்கொண்டே இருந்தாள். “எங்களுக்கு விவரம் தெரிஞ்சு அப்பா கூட இருந்ததே இல்லை. எப்பவும் வேலை வேலைன்னு ஓடுவார். எதுவா இருந்தாலும் அம்மா தான். எல்லாமே அம்மா. இப்ப அளவுக்கு கூட அம்மா பேசமாட்டாங்க. யாராவது எதாச்சும் சொன்னாலே உடைஞ்சு போயிட கூடிய ஆள்….” “எங்களுக்காக நிறைய தாங்கி வாழ்ந்திருக்காங்க. நிம்மதியான்னா […]


முல்லை வன குளிரே – 12 (2)

“அம்மாட்ட சொல்லிட்டு போ குறிஞ்சி…” என்றவன் கிளம்பிவிட, “நீ தான் கேட்டியா? எங்களோட வரேன்னு?…” என வனஜா அவளை கடிந்தார். “ம்மா, நான் கேட்கமாட்டேன். உங்களுக்கு தெரியும்ல கேட்க கூடாதுன்னா கேட்கவே மாட்டேன்னு…” என்று சொல்லவும் மகளுக்காக சரி என்றுவிட்டார். சாரதாவும் வர நாராயணனும் சாப்பிட வந்துவிட்டார். அவருமே அனைவரோடும் கீழேயே சேர்ந்து சாப்பிடுவதாக சொல்லிவிட குறிஞ்சி புதுவீட்டிற்கு செல்வதை பற்றி சொல்லவும் சாரதாவும் உடன் உதவிக்கு வருகிறேன் என்றார். “அதெல்லாம் இல்லைங்க அண்ணி. எல்லாம் கிளீன் […]


முல்லை வன குளிரே – 12 (1)

குளிர் – 12 அன்று முதல்நாள் இரவில் இருந்தே முகம் அத்தனை சோர்வுடன் இருந்தது குறிஞ்சிக்கு. அமர் என்ன செய்கிறான் என்று பார்க்க தான் வந்திருந்தாள் மாடிக்கு. இரவு கீழே தாயுடன் தாங்கிக்கொள்ள அவளை ஒன்றும் சொல்லவும் முடியாமல் வனஜா தான் தவித்து போனார். “உங்களுக்கு உதவியா இருக்கட்டும் அத்தை…” என்று சொல்லிவிட்டான் அமர்நாத். அதனால் அவர்களால் மறுக்கவும் முடியவில்லை. குறிஞ்சி வேறு அழுதுகொண்டே இருக்க மகளை சமாதானம் செய்யவே சரியாக இருந்தது. “அவங்க தான் இருக்க […]


முல்லை வன குளிரே – 11 (2)

“இப்ப என்ன? உனக்கு ரெண்டு வார்த்தை சொல்லித்தரவா?…” “எங்கம்மா என் நாக்கை அறுத்து அடுப்புல போடவா? இதுக்கு நான் ஆளில்லை…” என்று சொல்ல, “உன் அம்மாவை சொல்லியே உன்னை வழிக்கு கொண்டு வந்திடலாம் இல்ல…” என்றான். “இதுவரைக்கும் கொண்டு வராத மாதிரி தான்…” என சொல்லியபின்பே தான் சொல்லியதன் அர்த்தம் விளங்க, “ஐயோ…” என்று அவனை பார்த்தாள். “ஹ்ம்ம்ம்…” என இதழ்களுக்குள் அதக்கிய புன்னகையுடன் அவளை பார்த்தவன், “பேசு, ஆனா பேசிட்டே வேலையை பாரு…” என சொன்னான். […]


முல்லை வன குளிரே – 11 (1)

குளிர் – 11 காலை எப்பொழுதும் போல முதலில் எழுந்துகொண்டவன் தண்ணீர் குடிக்க வெளியே வர சோபாவின் ஓரத்தில் இருந்த கேரியரை பார்த்தான். எடுத்ததுமே உள்ளே உணவும் இருப்பதை பார்த்து கிட்சனுக்கு சென்று திறந்து பார்க்க அதில் முதல்நாள் இரவு உணவு இருந்தது கெட்டுப்போய். “குறிஞ்சி நேத்து டின்னர் சாப்பிடலையோ?…” என யோசனையுடன் அதனை வைத்துவிட்டு அறைக்கு வந்து அவளை எழுப்பினான். “தூங்கனும், விடுங்க…” என்று அவனின் கையை தட்டிவிட, “நீ நைட் சாப்பிடலையா குறிஞ்சி?…” என்றவனின் […]


முல்லை வன குளிரே – 10 (2)

“தூக்கம் வரும் போது உள்ள வரேன். இப்ப நோ…” என அவன் அழைக்க அழைக்க பிடிவாதமானாள். “அழுதியா குறிஞ்சி?…” என்றான் அவளின் முகம் சிவந்து இருப்பதை கண்டு. “ஆமா, நீங்க ஏன் கடைக்கு போனீங்க?…” “சொன்னேன்ல வேலை இருந்ததுன்னு…” என்றவன் அவளருகே வந்து அமர்ந்தான். எதிரே இருந்த டீப்பாயில் காலை நீட்டி வைத்தவன் நன்றாக தளர்ந்து பின்னால் தலை சாய்ந்துகொண்டான். “வேலை இருந்தா போவாங்களா? அதுவும் கல்யாணம் ஆனா மறுநாளே? எனக்கு தெரியும் உங்களுக்கு கோவம் என் […]


முல்லை வன குளிரே – 10 (1)

குளிர் – 10 இரவு உணவு நேரம் தாண்டியும் அமர்நாத் வராமல் இருக்க பரமேஸ்வரன் கடைக்கே சென்றுவிட்டான். “என்னாச்சு அமர்? வீட்டுல சொந்தங்காரங்க எல்லாருமே இருக்காங்க. போன் பண்ணாலும் வேலை இருக்குன்னு சொல்லிட்டு வரலையே. ஒன்னும் பிரச்சனை இல்லையே?…” என கேட்க, “ச்சே ச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு முக்கியமான ஆடர். இங்க நானும் இருக்கனும். அதான் அவசரமா கிளம்பி வந்துட்டேன்…” என்றான். “இல்லை எல்லாரும் கிளம்பறாங்க. அதான் உங்கட்டையும் சொல்லிட்டு போகலாம்னு வெய்ட் பன்றாங்க…” “ஓஹ், […]