Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

முதலில் வனமாலி திறக்கவேயில்லை. அவனுக்கு ஒரு தனிமை தேவைப்பட்டது.. யாரோடும் பேசும் நிலையிலும் அவனில்லை.

ஆனால் திரும்ப திரும்ப வந்தனா கதவு தட்ட “ம்ம்ச் என்ன வந்தனா??!!” என்றான் உள்ளிருந்தபடியே..

“டோர் ஒப்பன் செய் ண்ணா..”

“நான் தூங்கறேன்..”

“சாப்பிட்டு வந்து தூங்கு..” என்றவள் திரும்ப கதவு தட்ட,

“ம்ம்ச்...” என்ற சலிப்போடு வந்து கதவு திறந்தவன் “எனக்கு பசி எல்லாம் இல்லை..” என்றுசொல்ல,

“அப்போ இந்த பால் குடி..” என்று கையில் தயாராய் வைத்திருந்த டம்ப்ளரை அவனிடம் நீட்டியபடி வந்தனா உள்ளே வர,

“ஹ்ம்ம் ரெடியா தான் வந்தியோ..” என்று கேட்டபடி அவனும் டம்ப்ளரை வாங்கிக்கொண்டான்.

“பின்ன..” என்றவள் வெறுமெனே அங்கே இங்கே பார்த்துவிட்டு “ஏன் இவ்வளோ டென்சன் ண்ணா??” என்று கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்றான் வேகமாய்

“உன்ன பார்த்தாலே தெரியுது...”

“ஹா ஹா பால் கொண்டு வந்துட்டு பதில் சொல்ல வச்சிட்டு இருக்க நீ..” என்றவன் “ஆமா முரளி கூட பேசாம இப்போ என்ன இங்க??” என்று அவளை விரட்ட,

“தோடா.. எங்கண்ணன் கூட பேச எனக்கு யார் என்ன சொல்லணும்..” என்று அவளும் கிண்டலாய் சொன்னவள் “சொல்லுண்ணா கமலிக்கும் உனக்கும் என்ன?” என்று நேரடியாய் விசயத்திற்கு போனாள்.

‘இவளுக்கு எப்படி தெரியும்???!!!’ என்று வனமாலி யோசிக்க,

“அண்ணா.. கமலி பண்றது சரியோ தப்போ எனக்குத் தெரியாது, பட் நீ எப்பவும் தப்பா எதுவும் யோசிக்கக் கூடாது..” என்று வந்தனா சொல்லும் போதே, வனமாலியின் அலைப்பேசி அங்கே இருப்பதாய் காட்ட,

‘இந்த நேரத்துல யாரு...’ என்று சொல்லிக்கொண்டே தான் போனை எடுத்தான்.

பார்த்தாலோ, அழைத்தது கமலி. கண்களை லேசாய் விரிந்து ‘இப்போ ஏன் கால் பண்றா?? கான்சப்ட் ரெடி பண்ணி சண்டை போடப் போறாளோ..’ என்றேண்ணியவன், கொஞ்சம் அலட்சியாமகவே “ஹலோ...” என்றான்..

ஆனால் அடுத்த நொடி, அப்படியே அவனின் முகமும் குரலும் மாறி விட்டது..

“நீ.. நீ எதுவும் டென்சன் ஆகாத கமலி.. இ.. இதோ வர்றேன்..” என்றவன் அப்படியே போனை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அவன் மறுகரத்தில் இருந்த பால் டம்ப்ளரை வந்தனாவிடம் திணித்துவிட்டு,

“நான் கிளம்புறேன்.. சிவகாமி அத்தைக்கு ரொம்ப முடியலையாம்..” என்று சொல்லியபடி பீரோவில் இருந்து இரண்டு ஐநூறு ருபாய் கட்டுகளை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தவன் அறையின் வாசல் வரைக்கும் வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.

“அண்ணா...” என்று வந்தனாவும் அவனை நோக்கி வர,

“இப்போ வீட்ல எதுவும் சொல்லவேணாம்.. காலைல யாரும் கேட்டா, எனக்கு போன் பண்ணு நான் பேசிக்கிறேன்..” என்றுவிட்டு அவள் பதில் சொல்லும் முன்னே கிளம்பியவன் காரை எடுத்துக்கொண்டு சிவகாமி வீடு செல்ல,

அங்கேயோ கமலி கண்ணீர் விழிகளோடு இவன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள்..

“என்னாச்சு கமலி..” என்று கேட்டுகொண்டே வனமாலி உள்ளே நுழைய,

“தெரியலை.. ரொம்ப ரொம்ப ஒருமாதிரி என்மேல சாஞ்சிட்டாங்க...” என்று சொல்லும்போதே அவளின் குரலும் உடலும் நடுங்கியது.

அவளின் இந்த நடுக்கம் வனமாலியை எதுவோ செய்ய, வேகமாய் தன்னை சுதாரித்தவன் “அத்தைனால நடக்க முடியுமா??” என்று கேட்டுக்கொண்டே சிவகாமியின் அறைக்குள் செல்ல,

“தெரியலை..” என்று சொல்லியபடி கமலியும் பின்னேயே வந்தாள்.

அம்மாவிற்கு இப்படி ஆனது என்ற அதிர்ச்சியில் கமலிக்கு வேறெதுவும் நினைக்கத் தோன்றவில்லை. வேறு யாரையும் அழைக்கவும் தோன்றவில்லை. நொடிப் பொழுதும் யோசிக்காது வனமாலிக்கு அழைத்துவிட்டாள்.. இப்போதும் கூட அப்படித்தான் அவளுக்கு என்ன செய்வது என்று விளங்காது அவன் பின்னோடு சென்றுகொண்டு இருந்தாள்.

ஆனால் வனமாலியோ, சிவகாமியின் முகம் பார்க்க, அவரோ அரை மயக்கத்தில் இருப்பது புரிந்து, கார் சாவியை கமலியின் கையில் திணித்து “சீக்கிரம் போய் கார் கதவை திற..” என்று அவளை தோளைப் பிடித்து திருப்பியவன், அப்படியே சிவகாமியை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு வந்தான்..

கமலியின் கண்களில் நீர் வழிந்தாலும், அவள் வேறெதுவும் பேசாது, வீட்டினை பூட்டி, அப்படியே காரிலும் ஏறி அம்மாவினை தன் மடி மீது ஏந்திக்கொள்ள அடுத்த கால் மணி நேரத்தில் சிவகாசியின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிவகாமி அனுமதிக்கப் பட்டிருந்தார்.

சிவகாமியை பரிசோதனைக்கு உள்ளே அனுப்பிய பின்னரும் கூட இருவருக்கும் மனதில் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம்.. இந்நேரத்தில் யாருக்கும் அழைத்து சொல்லவும் முடியாது.. மிஞ்சிப் போனால் சங்கிலிநாதனுக்குத் தான் சொல்ல முடியும்.

பாவம் அவரும் வயதானவர்.. இந்த நேரத்தில் சொல்லவேண்டும் என்று வனமாலியும் சொல்ல,

“ம்ம்..” என்ற தலையசைப்போடு கமலி போய் அங்கிருந்த வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டாள்.

ஜன்னலை ஒட்டி அந்த பெஞ்ச் போடப்பட்டிருக்க, ஜன்னல் கம்பியில் தலையை சாய்த்துகொண்டவளின் பார்வையோ வெளியே தெரியும் இருளை வெறித்து.. கண்களில் மௌனமாய் கண்ணீர் வழிய, அவள் மனதில் அப்படியொரு அழுத்தம்.. வேதனை.. பயம்...

‘அம்மா...’ அவளுக்கு இருக்கும் முதலும் கடைசியுமான ஓர் உறவு.. சிவகாமி மட்டுமே அவளுக்கு எல்லாம்.. அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் பின் கமலி என்னாவாள்??

‘ம்மா..’ என்று கமலியின் இதழ்கள் உச்சரிக்க, சட்டென்று ஒரு பெரிய கண்ணீர் துளி அவளின் கண்ணில் இருந்து விழுந்தது..

வனமாலி இவளின் அமைதி கண்டு திரும்பிப் பார்க்க, கமலி அமர்ந்திருந்த விதமும், அவளின் தோற்றமும், அவளின் கண்ணீரும் எல்லாமே புதிதாய் ஒரு கமலியை அவன் கண்ணுக்குக் காட்ட,

“கமலி...” என்றபடி அவளருகே சென்றான்.

அவளின் மனவுணர்வுகள் அவனுக்குப் புரிந்ததுவோ என்னவோ “நீ எதுவும் கவலைப் படாத கமலி.. அத்தைக்கு எதுவுமில்லை..” என்று ஆறுதல் சொல்ல,

“எதுவும் இருக்கக் கூடாது...” என்று அவனுக்குப் பதில் சொல்ல முயன்றவளுக்கு ஒரு கேவல் பிறக்க, அழுகையை அடக்க முயன்றாள்..

“ஷ்... கமலி...” என்று அவளின் கரம் பிடித்தவன்,

“அழணும்னா அழுதுடு.. அடக்கி வைக்காத...” என்று சொல்ல, “ம்ம்ஹும்..” என்று தலையை இட வலமாய் ஆட்டி மறுத்தாள்..

“ஏன்.. என் முன்னாடி அழ உனக்கு கஷ்டமோ???!!!” பட்டென்று அவனின் குரலில் ஒரு கோபம் வெளிப்பட

அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “அழுகை கூட நம்மை புரிஞ்சுக்கிறவங்க முன்னாடி தான் அழனும்..” என்றாள் அழுத்தம் திருத்தமாய்..

‘என்ன சொல்ற நீ??!!’ என்று பார்த்தவனுக்கு எதுவும் புரியவில்லை.. நான் என்ன இவளை புரிந்துகொள்ளவில்லை.. இவள் அழைத்தாள் என்றதும் அப்படியே வந்தேனே என்று தோன்ற,

“நான் என்ன உன்னை புரிஞ்சுக்கலை..” என்றான் அடுத்து..

“ம்ம்ச் லீவ் இட்.. அப்போ இருந்த டென்சன்.. எதுவும் யோசிக்காம உங்களை கூப்பிட்டேன்.. சாரி அந்த தேங்க்ஸ்.. நீங்க கிளம்புங்க... நான் பாத்துக்கிறேன்..” என்று கண்களை துடைத்து சொல்லவும்,

“ஹே... என்ன?? என்னை என்னனு நினைச்ச...?? இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேணாம் பிச்சிருவேன்..” என்று விரல் நீட்டி மிரட்டினான் வனமாலி.

அவனின் செயலில் கமலிக்கு ஒரு வெற்று புன்னகை தோன்ற “இதுவே காட்டுதே உங்களுக்கு எதுவும் புரியாதுன்னு..” என்றுசொல்லி முகம் திருப்ப,

“ஏன் ஏன் ஏன் எனக்கு ஏன் புரியாது??” என்றான் வேகமாய்..

“ஏன்னா.. நீங்க வேற... நாங்க வேற..” என்று கமலி சொல்லி முடிக்குமுன்னே,

“அப்போ வேற வேற இல்லன்னு ஆனா?? கமலி, வனா வேற வேறயில்லன்னு ஆனா அப்போ நம்புவியா எனக்கு உன்னை புரியும்னு..” என்று சொல்லி வனமாலி கேட்ட கேள்வியில் வெகுவாய் திகைத்துத்தான் போனாள் கமலி..

திருமணம் பற்றி பேசியபோது வராத திகைப்பு இப்போது இந்த நொடி பிறந்தது.

Nice Ep
 
Top