பாடலில் பின்னிசை அழகு தான்
எனினும்
ஆர்வம் தூண்டி நொடிகள் திருடும்
முன்னிசை பேரழகு ......
இருதுருவங்கள் ....
இணைகையில் சிதறும்..
ஒளிப்பேழை போல்.....
இரு பெயர்கள்.....
இணைகையில் தோன்றும்
மெல்லிசை ஒலிநயம் போல்..
புதுபரிமாணம் .. காணும்
நாளின் ஒவ்வொரு நொடியும்
புரியா புதிர் போல
இவ்வாழ்வும்...
மீண்டும் உன் முன் நிற்கிறேன்...
பல இரவுகள் கடந்து....
பதின்பருவம் கடந்து.....
நிசப்த இரவில்....
என் முதல் நிலாத்தோழியுடன்.....
அறியாமை அழகுதான்....
இன்று என் துணையாய்
உன் ஒளி நிழல் கைகோர்த்து
எனை தேற்றுவதாய் எண்ணுகையில்......
ஒரு நாள் ....
சூரியன் மறைவோடு.....
பறவை கூட்டம் கூட்டை
அடைந்து என்னையும் அழைத்தாயிற்று.....
செயற்கை வெளிச்சத்தில்
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்....
எனக்கான நட்சத்திர விடியலை...
கருந்திறல் மேகங்களுக்குள்.......
மழைச்சரமாய் உதிருமென.......
உன் விரிந்த சிறைகரங்களில்
கண்விழித்தபோது.....
உன் ஒற்றைவிரல் பற்றி இருபாதம்
சிறுநடை பழகும்போது.....
பாதுகாப்பாய் உன் அரவணைப்பில்
நகரும் நாட்களோடு நானும் உன் தோள் உயரம் வளர்ந்துவிட்டேன்...
இருப்பினும்....
அப்பா என்றழைக்கும் ஒவ்வொரு நொடியும் உன் விரல் தேடும்
சிறுமழலை தான் நான்.....
உன்...
நிலா இரவும்
நிசப்தம் மீட்டும் காற்று வீச்சும்
நீந்தி செல்லும் மேகத்திறல்களும்
நீங்காமல் இடம்பெறும் மெல்லிசையும்
நுரையீரல் நிறையும் உயிர்வளியோடு....
அசைபோடும் அந்நினைவும் இனிமைதான்
ஏகாந்த இரவில்....
பரபரப்பாய் எட்டி பிடிக்க முயன்று
கரையும் நொடிகளில் என்னையும்
இணைத்திட விரையும் வேளையில்.....
சூழல் மறந்து குறுநகையோடு
நகர்கிறேன் உன் குயிலிசை கேட்டு......