Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 12

Advertisement

“கோகிலா, சொன்னா கேட்கணும், வா!” அவனது சிறு அதட்டலில், “நீ குப்ட்டா நா வனும்மா? ம்ம்? வனும்மா??” என அவள் கத்த,



“ஷ்..ஷ்... கத்தாதடி!! இந்த நேரத்துல பேசுனா மைக் இல்லாம ஊருக்கே கேக்கும்.. இதுல நீ ஸ்பீக்கரை முழுங்குன மாறி கத்துற?”



“நான் எங்க கத்துனே.....!!!!!” கோகிலா மீண்டும் சத்தம் போட, பதறி அவள் வாயை அடைத்தான் இன்பன்.



“கத்தாதடி லூசு”



அவன் கை எடுத்ததும், “ஷ்.. ஷ்.... சத்தம் போவக்கூவாது” என்றாள் உதட்டின் மீது விரல் வைத்துக்கொண்டு.

நெத்தியில் அடித்துக்கொண்டு நின்றான் இன்பன்.



“ஒழுங்கா வந்து படுடி!!”



“எனக்கு தூக்கம் வல்லடா லூசுபையா”



“என்னடி ‘டா’ங்குற, லூசுங்குற? ஒரு லார்ஜ் அடிச்சுட்டு நீ பண்றதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா! மரியாதையா வா!!” என்றான் அவள் கையை பிடித்து இழுத்தபடி!



“நா ஏன் வர்னும்? நா குப்ட்டப்போ நீ வந்தியாடா இடியட்!”



“எப்போடி கூப்பிட்ட?”



“அன்ன்ன்ன்னைக்கு!!!! நீ வர்வ வர்வன்னு இந்தேன்! ஆனா நீ.....!! உன் தொம்பியை பாக்க ஓடிஈஈஈஈ போய்ட்ட!!” என்றாள் சிந்த குழந்தை ரைம்ஸ் சொல்வதை போல.



“யூ க்நோ ஹொவ் ஐ வொரீட் ஆன் தட் டே! ஐ வாஸ் ப்ரோகென் டெரிப்லி! டெரிப்லி...!!!” என்றாள் அவன் மேலே விழுந்தபடியே.



அவளை அடக்க வேண்டும் என அதன்பின் அவனுக்கு தோன்றவில்லை. மனதில் இருப்பதெல்லாம் வரட்டும் என எண்ணிவிட்டான்.



“என்னை விட்டுட்டு நீ போறன்னா, ஆம் ஐ நாட் யுவர் ப்ரையாரிட்டி? தட் குவஸ்ஷின் கில்டு மீ!!” என்றவள் உடனே முகத்தை ‘ஈஈஈஈ’ என மாற்றிக்கொண்டு, “ஆனா, எனக்காக ஃபைட் பண்ணி வீட்டை விட்டு வந்த பாத்தியா......!!!!!! மாமா.....!!! நான் அங்க அப்பியே பிளாட்டு...! கவுந்துட்டேன் மாமா!!” என்றவள், பட்டென அவன் கன்னத்தில் முத்தம் வைக்க,

‘அவனுக்கும் வெட்கம் வரும்’ என அன்று தான் உண்மையில் அறிந்துக்கொண்டிருப்பான்!



“ம்ம்ம்... அப்புறம்...” என்றான் வெட்கம் தந்த சிரிப்போடு!



“எனக்குதா உம்மேல கொஞ்சம் டவுத்!” என்றாள் இரு விரல்களை சுருக்கிக்காட்டி!



“இதுவேறையா? என்னம்மா டவுட்டு?”



அவனை விட்டு இரண்டடி தள்ளாடி பின்னே போனவள், “நா அலகா இர்க்கேனா?” என்றாள்.



‘இதென்ன கேள்வி!’ என்பது போல அவளை பார்க்க, “சொல்லுடா ஸ்டுபிட்” என்றாள் அங்கிருந்த ஒரு டம்ளரை அவன் மீது தூக்கி வீசியபடி.

அதை அலேக்காய் கேட்ச் பிடித்தவன், “அழகா தான்டி இருக்க!! உனக்கென்ன கொறச்சல்” என்றான் ரசனையாய், அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்துக்கொண்டே.



“அப்போ கன்பார்ம்! உனக்குதான் ப்ராப்ளம்”



இன்பன், “எனக்கென்ன ப்ராப்ளம்?”



“அலகான பொண்ணு, யுவர் வைப் டூ! மேரேஜ் ஆகி...” என இழுத்தவள் தன் பத்து விரல்களையும் மாற்றி மாற்றி நீட்டி பார்த்து, “ம்ச்! டோன்ட் க்நொவ் த கவுன்டிங்! பட் ரொம்ப நாள் ஆச்சு! அப்பரம் ஏன்டா என்ன வச்சு பூஜை பண்ணிட்டு இருக்க? லூசு!!!” என்றாள் கோவம் கொண்டதை போல.



“பூஜை பண்ணுறேனா?” அவன் திகைத்து வாயை பிளக்க, “பின்ன, வேற என்னடா செஞ்ச நீ!!?” என்றாள் தள்ளாடிக்கொண்டே.



“அடிப்பாவி!!”



“சும்மா வேலை வேலைன்னு எப்பபாரு சுத்திக்கிட்டு! என்னை கவனிக்கணும்ன்னு தோணுச்சாடா உனக்கு!!” என்றாள் தெளிவாய்.



“பெய்ய தியாகின்னு நினைப்பு! எல்லாருக்கும் நல்லது பண்றேன்னு சுத்துறது! இதெல்லாம் பண்ணா நீ ஹீரோ ஆகிட்வியா?” என்றாள் கூடுதலாய்.



“முதல்ல உன்னை பாருடா! உன் லைஃப பாரு! ரொம்ப நல்லவனா இக்காத!!” அந்த வரியை அவள் முடிக்கக்கூட இல்லை. அதற்க்குள் குமட்டல் எடுக்க, உண்ட அத்தனையும் வெளியே வந்துவிட்டது. மூன்று வேளை உண்டதையும் சேர்த்து வெளியே தள்ளியவள் அப்படியே மயங்கிப்போக, அவளை சுத்தப்படுத்தி படுக்க வைத்தவனுக்கு அடுத்து வீட்டை சுத்தம் செய்வதற்குள் நடு சாமம் கடந்து போனது.



சிறு குழந்தை போல அயர்ந்து தூங்கும் மனைவியை பார்க்கையில், ‘ஒரு லார்ஜ உள்ள தள்ளிட்டு இந்த ஆட்டம் ஆவாதுடி! உன்னை வச்சு நான் பூஜை பண்றேனா? பொழுது விடியட்டும், வச்சுக்குறேன் கச்சேரியை!’ என்றான் செல்லமாய்.



பொழுதும் நன்முறையில் விடிய, கண் விழித்த கோகிலாவுக்கு தலை அத்தனை பாரமாய் கனத்தது. தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவளிடம், “இதை குடி!!” என்றான் இன்பன் ஒரு குவளையை நீட்டி.



அவள் மெல்ல நிமிர, “மோர் தான்! குடி, சரியாகிடும்” என சொல்ல மறுக்காமல் வாங்கி பருகியவளுக்கு மீண்டும் கரித்துக்கொண்டு வர, குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள்.



மீண்டும் அவள் வருகையில் சூடான இட்லிகளை வைத்துக்கொண்டு காத்திருந்தான் இன்பன். அவள் மெதுவாய் உண்ண, “இதெல்லாம் எனக்கு பழக்கம் தான்னு சொன்ன? இப்போ இப்படி மட்டையாகிட்டியே!? ஒரு வேளை டச் விட்டு போச்சோ?” என்றான் சீண்டலாய்.



அவள் முறைத்தாலே தவிர ஒன்றும் சொல்லவில்லை. இரவு பேசியதெல்லாம் அரையும் குறையுமாய் நினைவில் இருக்க, உடலின் உபாதை வேறு படுத்த அமைதியாகிவிட்டாள் கோகிலா.



“மதியம் சாப்பாடு இருக்கு, சாப்பிட்டுட்டு நீ நல்லா தூங்கி எழுந்திரி! நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்”



இன்பன் சென்றதும் படுத்து உறங்கியவளுக்கு மதியம் கடந்த பின்னரே விழிப்பு தட்டியது. இருந்த உணவை உண்டுவிட்டு அலுப்பு போக வெந்நீரில் குளித்து ஒரு புடவையை கட்டிக்கொண்டு காத்திருந்தாள்.



வேலைக்கு வந்தவர்கள் கூட சொல்லிக்கொண்டு கிளம்பிருக்க, இன்பனை மட்டும் காணவில்லை.



மாலை மங்கி இருள் சூழ ஆரம்பிக்க, அவன் வண்டி சத்தம் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு கேட்டது. விரைந்து அவள் வாசலுக்கு ஓடி, “எங்க போனீங்க மாமா? போன் பண்ணாலும் எடுக்கல” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.



மர்ம சிரிப்புடன் உள்ளே வந்தவன், “உள்ள வா! நமக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு” என்றான் கண்ணடித்து.



“என்ன வேலை?” அவள் குரலே எழும்பவில்லை.



“ம்ம்... உன்னை பூஜை பண்ற வேலை!” என சொன்னவன் ஒரே இழுப்பில் அவளை தன் மீது போட்டுக்கொள்ள, அங்கே அவளது போலி சிணுங்கல்கள் எல்லாம் பொய்த்து போயின அவனிடத்தில்.



“ம்ச்.... மாமா.... போதும் மாமா!!!”

“சொன்னா கேளுங்க மாமா....”

“வேண்டாஆஆஆம்ம்ம்....”

“ம்ஹும்...ம்ஹும்...”

“முடில மாமா... ப்ளீஸ்....”

“மாமா.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”




-வருவான்...

இன்பன் கோக்கிக்கு சோறு ஊட்டி விடுரான்னு சொல்லியா கிண்டல் பண்றீங்க!!! ? ?
Nice
 
? ? ? ? ? super Super Super pa.... Semma semma episode.... Inban kudubasthan aaitaan.... Ore velai velai பொண்டாட்டி ah கவனிக்க mudiyaatha அளவுக்கு.... Kaantaaita.... அவன வெறுப்பு ஏத்த வாங்கிகிட்டு வர sollitu ? ? ? ? ? இப்போ என்ன scene ah podra பாருங்க ava ethir paakaatha நேரமா பாத்து avala குடிக்க vechitaan அந்த சரக்கை... Ava manasula இருந்ததது எல்லாம் வெளிய வந்துடுச்சி ? ? ? ? பூஜை பண்றியா enna vechi ? ? ? ? ? super Super Super maa... Eagerly waiting for next episode
 
Top