முல்லை வன குளிரே
எதற்காய் உழைக்கிறோம் என்றே புரியாமல் உழைக்க உழைப்பவனும் அனுபவிக்கவில்லை அவன் உடனிருப்பவனும் அதை முழுமையாய் பெற்றிட வில்லை.
தன் அன்னை தந்தையின் வாழ்வை பார்த்து தனக்கமைபவன் தனக்காய் எல்லாமுமாய் இருந்திட வேண்டுமென்றே நினைக்க.
தன் சுற்றம் உணர்ந்து, தனிமை போக்க,தனிமையாய் வாழுமிடத்தில் தைரியமாய் துணிவாய், இருப்பதாய்க் கட்டிக்கொள்ள வாயாடி, பட பட பட்டாஸ்,பேசத்தெரியாதவள் எனும் பெயர் கேட்டும் விடுகிறாள் நாயகி...
நாயகன் Mr.Perfect என்று விளித்தல் பொருந்தும். ஆனால் உள்ளுக்குள் , அதை கட்டிய நேரம் நாயகியின் நிலை... அவர்கள் திருமணம் இடையே ஏற்படும் எதிர்பாரா குழறுபடிகள்... அதைக்கொண்டு அவர்களின் வாழ்வில் மலர்ச்சி, முல்லைவன மலர்ச்சோலையின் குளிராய்...
அருமை.
வாழ்த்துக்கள்...