Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 16

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…

பகுதி 16

மாலை நெருங்கும் வேளையில், செழியனின் இல்லத்திற்கு வந்து சேர்ந்த பதுமணத் தம்பதியரை, அங்கிருந்த மூத்த பெண்மணி ஆலம் சுற்றி வரவேற்க,

தன் வாழ்வை வசந்தமாய் மாற்ற வந்த, தன் கணவன் செழியனுடன் மனதில் நிறைவுடனும், அளவில்லா சந்தோஷத்தோடும், தனது வலது கால் பதித்து, அவனின் கரம் பற்றி இல்லத்தில் நுழைந்தாள் செழியனின் இதழினி.

இதழினியை, செழியனோடு பூஜை அறைக்கு அழைத்து சென்ற சந்திரா, விளக்கை ஏற்ற சொல்ல, அதன் படி செய்தவள், அடுத்ததாக அங்கிருந்த செழியனின் தந்தையையும், அவனின் பெரிய தந்தையையும் வணங்கிவிட்டு, வரவேற்பரைக்கு அழைத்து வரப்பட்டாள்.

அடுத்த சடங்காய், மணமக்களுக்கு பால், பழம் கொடுத்து முடிக்க, 'அப்பாடா, ஒரு வழியா எல்லாம் ஓவர். இப்பவாச்சும் என் பொண்டாட்டி கூட தனியா நாலு வார்த்தை ப்ரீ யா பேச விட்டா சரி..!' என்று நினைத்து முடிக்கும் முன்..

சந்திரா, "அம்மாடி இதழினி, நீ போய் கீழ இருக்கற, என்னோட ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா. காலைல நேரமே எழுந்து, இதுவரைக்கும் சடங்கு, சம்பிரதாயமுன்னு உனக்கு உக்கார கூட டைம் கிடைக்கல. போடாம்மா…" என்றதும்,

சரியென தலையாட்டி அவர் சொன்ன அறைக்கு இதழினி செல்ல, கடுப்போடு தனது தாயை மறைமுகமாய் முறைத்துக் கொண்டிருந்தான் செழியன்.
'செழியன் உனக்கு முதல் வில்லியே, உன் மூன் தான். உன்னோட ப்ளான் எல்லாத்தையும், எப்படியோ தெரிஞ்சு கரெக்ட்டா ஆப்பு வச்சிடுச்சு.

மொதல்ல ஹனிமூன் போயிட்டு வந்ததும், மூனுக்கு டிக்கெட் புக் பண்ணி, ஆல் இண்டியா டூர் அனுப்பிடனும். காசில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் சுத்திட்டு வர்றதுக்குள்ள, ஒரு புள்ளைய பெத்து கையில கொடுத்திட்டா, நம்ம சைடே வராது.

இல்லாட்டி, மருமகள கைக்குள்ள போட்டுக்கிட்டு என்னைய கவுத்திடும். மாமியார், மருமக கூட்டணி சேர்ந்தா, ரொம்ப டேன்ஜர். செழியா பீ அலார்ட்!' என தீவிர யோசனையில் இருந்தவனிடம் வந்த சந்திரா,

"செழியா, நீ என்னடா இப்படி உக்காந்திருக்க. போ, போய் நீயும் உன் ரூம்ல ரெஸ்ட் எடு. இல்ல சந்துரு வெளிய இருக்கான் பாரு. அவன் கூட போய் வேலைய பாரு" என்றபடியே உறவுகளை கவனிக்க சந்திரா செல்ல, தனது விதியை நொந்த படி, சந்துருவை தேடி சென்றான் செழியன்.

சந்துருவை நாடி வந்தவன், பேச்சு தொழில் பற்றி செல்ல, செழியனின் மனமும் அதனுள் சென்று நின்றது. அதோடு, இன்னும் இரு வாரங்கள், சந்துரு மட்டுமே எல்லா இடத்திலும் பார்க்க வேண்டிய நிலை என்பதால், எல்லாமே சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும், அடுத்து எந்த எந்த வேலைகளை முதலில் முடிப்பது என்பது தொடர்பான விசயங்களில் மூழ்கி போக, நேரமும் விரைந்திருந்தது.

வந்திருந்த சில உறவுகளும் இரவு உணவோடு விடை பெற, சந்துருவும் கிளம்பிய பின், செழியனுக்கும் இதழினிக்கும் உணவை கொடுத்த சந்திரா, மீண்டும் தனது அறைக்கு இதழினியை அழைத்து செல்ல,
"என்னடா செழியா, இந்த மூன் இப்படி வச்சு செய்யுது உன்னை… கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா சுத்த விட்டும் போலவே…" என வாய்விட்டே புலம்பிட படியே, மேலே தனது அறைக்கு சென்றவனுக்கு, தனது அறையின் அலங்காரமே, 'அப்பாடா.. நம்ம நினைச்ச மாதிரி இல்ல..' என்ற ஆசுவாசத்தை தர.. தன் நினைப்பை எண்ணி, தனது பின்னந்தலையை கோதியவன், துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றான்.. இதழினி வருவதற்குள் தயாராகிட எண்ணி…..

சந்திராவும், மதியும் தந்த புடவை, நகையை அணிந்து, எளிமையாய் தயாரானவளுக்கு தலையில் மல்லிகை பூச்சூடி, நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பினர் கையில் பாலோடு…

இதழினிக்கோ, செழியன் மதியம் பார்த்த பார்வையே மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி இம்சித்தது.

எவ்வளவு தான் மெதுவாக சென்ற போதும், அவனின் அறை வந்து விட, மனதில் இருந்த பதட்டம், பயம் கலந்த தவிப்போடு உள்ளே செல்வதற்கு தயங்கி நின்றாள் இதழினி.

அவளின் தயக்கம் உணர்ந்தவன் போன்று சரியாக அதே நேரம், தனது அறையின் கதவை திறந்து, சிறு புன்னகையோடு எதிர் கொண்டான் இதழினியின் மணவாளன்.

அவனின் முகம் பார்க்க நாணி, தலை கவிழ, அது கூட அவனின் மோகத்தை கூட்டவே செய்தது. ஆனாலும் அவளின் நிலை உணர்ந்து, "என்ன மேடம் இப்படியே பாலை கொடுத்திட்டு, எஸ் ஆகிடலாமின்னு யோசனையா?!" என குறும்பாக, கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்று கேட்க..

அவனின் பேச்சில், தான் நிற்கும் இடம் உணர்ந்து, உள்ளே செல்ல பார்த்தால், செழியன் நகர்ந்தால் மட்டுமே, அவளால் உரசாமல் செல்ல முடியும் என்பதை போல அவன் நிற்க, பெண்ணவள் தவிப்பு தான் அதிகரித்தது.

இதற்கு மேலும் சீண்டிக் கொண்டிருந்தால், 'அவள் வந்த வழியே ஓடிவிடுவாளோ?! அல்லது மயங்கி விழுந்து தனது ஆசைக்கு வேட்டு வைத்திடுவாளோ?!' என்ற அச்சம் தோன்ற,
 
"வெல்கம், அவர் ரூம் மை டார்லிங் லிப்ஸ்" என இடைவரை குனிந்து வரவேற்று, கதவை நன்கு திறந்து அவன் விலகி நிற்க, அவனின் செய்கையில் சிறு புன்னகையோடு, கொஞ்சம் மனதில் திடத்தை வரவழைத்துக் கொண்டு, அவனுடன் தங்கள் அறைக்கு சென்றாள்.

அந்த அறையின் மத்தியில், அழகாய் அலங்கரிக்கப்பட்ட கட்டில், அதன் அருகே ஒய்யாரமாக, ஒரு ட்ரஸ்ஸிங் டேபிள், வாட்ரோப், அதை ஒட்டியே அவனின் அலுவலக அறை இருக்க,, அனைத்தும் மிக மிக நேர்த்தியாய், அழகாய், சுத்தமாய் வைத்திருப்பதை பார்த்ததும், தன்னவனின் ரசனையும், பொறுப்பும் விளங்கியது பெண்ணவளுக்கு….

அதே அறையில், மற்றொரு மூலையில் இருக்கும் கதவை பார்த்தவள், 'ஓ, அது பாத்ரூம் போல!', என்ற எண்ணத்துடன், கண்களை சுழற்றியவளை கவர்ந்தது, அங்கிருந்த பால்கனியில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல்.

வந்தது முதல் அவளின் பதட்டமும், அதன் பின்பான அறையை பற்றிய ஆராய்ச்சியையும், அவளின் கண்கள் ஒவ்வொரு இடத்தையும் கணித்து, அதனை ரசித்ததையும் பார்த்தவன், இறுதியாக அவளின் பார்வை சென்ற இடத்தை கவனித்தவன், அவளை கொஞ்சம் இளகுவாக்கும் பொருட்டு,

"ஏய், லிப்ஸ் உனக்கு தூக்கம் வருதா?!" என கேட்டதும்,

அவனின் கேள்வியில், என்ன பதில் சொல்ல என புரியாது விழிக்க,

"இல்லடா, தூக்கம் வரலைன்னா, வா, அந்த ஊஞ்சல்ல கொஞ்ச நேரம் உக்காரலாம்" என்றதும், ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டு, அவசரமாக அங்கே செல்ல,

அவள் விட்ட பெருமூச்சில், அவனுக்கு அனல் பறந்தது என்றால், அவனிடமிருந்து விலகி சென்ற வேகத்தில், 'செழியா ரொம்ப கஷ்டம் போலடா… எப்படி இவள சரி செய்ய போறேனோ?!. LKG ஏ தெரியாது போலவே... விடு எவ்வளவோ பார்த்திட்டோம், இத பார்க்கமாட்டமா!' என தனக்கு தானே, தைரியத்தை கூறி, இதழினியின் பின்னே பால்கனியை நோக்கி சென்றான்.

அந்த ஊஞ்சலில் அமர்ந்து பார்த்தால், இரவு வெளிச்சத்தில் கீழிருக்கும் தோட்டம் மிகவும் அழகாய் தெரிய, அதை ரசித்தவள், "இந்த ப்ளேஷ் ரொம்ப நல்லா இருக்குங்க. என்னை இங்கையே நாள் கணக்குல இருக்க சொன்னா கூட, தாராளமா இருந்திடுவேன். நீங்க?" என்றதும்,

'கிளிஞ்சுது.. இங்கையே நாள் பூராவும் இருந்தா… காலத்துக்கும் பிரம்மச்சாரி தானோ' என்று தோன்ற.. 'செழியா, நாளைக்கி முதல் வேலையா, இந்த ஊஞ்சல கழட்டி, ஸ்டோர் ரூம்ல போடனும்' என்ற முடிவு செய்தவன்,

அவள் பதிலுக்காக தன் முகம் பார்த்ததும், ஆமாம் என்பதாய் தலையை ஆட்ட, சிறு புன்னகையோடு மீண்டும் இயற்கை அழகை ரசிக்க துவங்கினாள், அருகே அமர்ந்திருப்பவனின் மனம் உணராது.

நேரம் நத்தையாய் நகர, மேலே முழு நிலவும், இதமான தென்றல் காற்றும் தந்த தாக்கத்தில், ஓரக்கண்ணால் செழியனை பாராமல் பார்த்தாள் இதழினி.

தான் முன்பு கல்லூரியில் பார்த்தவன், சாக்லெட் பாய் போல தாடியும், பரட்டை தலையுடனும், யூத் லுக்கில் இருந்தானெனில்,

இப்போதோ, அளவாய் ட்ரிம் செய்த மீசை, மொழு மொழுவென கன்னம், எப்போதும் குறும்போடு சிரிக்கும் கண்கள், திரண்ட தோள்கள், அழகான சிகை என ஆணழகனாய் நின்றிருந்தவனின் மாற்றத்தில் வியந்தவள், இவன் இனி தன்னவன் என்ற எண்ணம் மனதில், உயரந்தோங்க, பாராமல் பார்த்த விதம் மாறி, அவனையே விழி வழி உள்வாங்கி நின்றாள் மெல்லிய மயக்கத்தோடு…

அவனின், 'அடங்க மாட்டேன்' என்பது போன்று, வீசும் காற்று ஏற்றவாறு அவனின் அகன்ற நெற்றியில் புரண்ட சிகையை, 'தன் கரம் கொண்டு, கோதி சரி செய்ய நினைத்தவளின் கரங்கள், மெல்ல அவன் புறம் நீட்டிய போது தான், தான் செய்த செயலில் அர்த்தம் விளங்க, கையை மடக்கி, வெக்கத்தோடு, தடுமாறி, சட்டென எழுந்து வேறு புறம் திரும்ப..
பின்னிருந்து அவளை அணைத்திருந்தான், அவளின் காதல் கள்வன்.

அவள் தன்னை பார்க்க துவங்கியதுமே, அவளின் எண்ணத்தை ஊகித்தவன், அவளின் செய்கையை ரசித்திருக்க, அவளின் கரம் நீட்டு, மீண்டும் அவள் எண்ணியதை செய்யாது, வெக்கம் கொண்டு விலகிய நிலை, அவனை பித்தாக்க, நொடியும் தாமதிக்காது, அவளை அணைத்தவன், அவளின் காதோரம்,

"லிப்ஸ் எனக்கு உன்னை என்ன செய்ய தோணுதோ, அதை அப்படியே செய்ய, எவ்வளவு உரிமை இருக்கோ, அதே அளவு உனக்கும், என்மேல உரிமை இருக்கு. சோ…" என்றதும்,

புரியாமல், அவள் முகத்தை லேசாக திரும்பி, அவன் முகம் பார்க்க..
அவளின் கன்னம், அவனின் வாயருகே வந்திட, தனது முதல் முத்திரையை அதில் பதித்துவிட்டு, அவளின் விரிந்த விழிகளை நோக்கியவாரே…

"என்ன புரியலையா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, மேடத்துக்கு என்னை என்னமோ செய்யணும் போல தோணுச்சே, அதை செஞ்சா தான், உன்ன ரிலீஸ் பண்ணுவேன். இல்லை, இப்படியே என்னோட கைக்குள்ள, நீ இருக்கறதுன்னாலும் எனக்கு ஓகே தான்" என்றதும்,

முகம் சிவக்க, அவனின் கைகளில் இருக்கவும் முடியாது, அதே நேரம் தன்னை கண்டு கொண்டவனிடம் தான் செய்ய நினைத்ததை செய்ய தடுக்கும் நாணத்தையும், விட முடியாது தவித்தாள்.
 
அவனிடமிருந்து விடுபடும் மார்க்கத்தை யோசித்தவளுக்கு, வழியேதும் புலப்படாமல் போக, அவனையே தவிப்போடு ஏறிட்டாள்.
அவளின் தவிப்பும், முக சிவப்பும் செழியனுக்கு குஷியாகிட, மெல்ல அவளின் பின் புற முதுகில் தனது இதழால் கோலம் போட, ஏற்கனவே அவனின் அணைப்பிலும், அவன் உடலின் கதகதப்பிலும், சற்று முன்பே குளித்திருந்ததால் அவன் பயன்படுத்திய சோப்பின் வாசனையிலும், மெல்ல மயங்க துவங்கியிந்த மனம், அவனின் இதழ் செய்த மாயத்தில், அவளின் மேனியும், மெல்ல மெல்ல இளக துவங்கியது.

அவளின் உடல் மொழி புரிந்தவன், அவளை விடுவித்து, தன்னை நோக்கி திருப்பி, அவளின் இதழினில் தனது இதழ் பூட்டினான்.
மென்மையாய் ஆரம்பித்த முத்தம், எப்போது அவளின் உயிர் உருஞ்சும் வண்ணம் ஆழமாய் மூழ்கி போனது என்பதும், எப்போது அவளை தன் கைகளில் அள்ளி கட்டிலில் சேர்த்தான் என்பதும் இருவருமே அறியவில்லை.

அவர்கள் சஞ்சரித்த, புது உலகில், புது வகை உணர்வில், அடி ஆழம் வரை சென்று, இறுதியாக அவர்கள் தங்களை மீட்கும் போது, இருவரும் அடுத்தவருக்கு ஆடையாகி போயினர்.

நிறைவான மனதோடு, இதழினி அவன் மார்பில் விரலால் கோலம் போட்டவாறே, "ஏங்க.." என்றிட,

"லிப்ஸ், நீ ஏங்க... ஏங்க… ன்னு சொல்லறதுலயே, நான் ஏங்கி போயிடுவேன் போலவே…!" என்ற படியே, அவளை தன்னோடு சேர்த்து இறுக்க,

"அச்சோ, என் டவுட்டை க்ளீயர் பண்ணுங்க!" என்றதும்,

"அதானே செய்யறேன்" என்றவனின் கரங்கள் தனது எல்லை மீறலை அவள் மேனியில், துவங்க,

அவன் கரத்தில் மெல்ல அடித்தவள், "நான் கேட்டது வேற, இதுல இல்ல.." என்றவளிடம்,

"என்னடீ, அடிக்கற. ஹும்… பொண்டாட்டி வந்ததுமே, அடி வாங்க தயாராகிக்கணுமுன்னு, ப்ரண்ட்ஸ் சொன்னது சரியா தான் இருக்கு. சரி கேளு, என்ன டவுட்.." என்றதும்,

"இல்ல, என் பேர் இதழினி ங்கறதால நீங்க லிப்ஸ் சொல்றீங்களா?!" என்றிட..

சிறு புன்னகையோடு, அவளை பார்த்தவன், தன் விரலால் அவளின் இதழை வருடியவாரே, "அதுவும் காரணம், அதோட நான் நிறைய தடவை யோசிப்பேன். நீ லிப் க்ளாஸ் போட்டதால தான், உன் லிப்ஸ் எப்பவும் இப்படி ஜூஸியா தெரியுதோன்னு… பட், நா பண்ண வேலைக்கு பின்னாடி, இப்பவும் அதே மாதிரி இருக்கே.. அதனாலையும் தான்…" என்றபடி, அதனை தன் வசம் கொண்டு வந்தவனின், செயலை தடுக்க முடியாது விருப்பத்தோடு, உடன்பட்டாள் இதழினி..

அடுத்து அவர்கள் எப்போது கண்ணயர்ந்தார்கள் என்பது, அந்த அறையின் திரை சீலைக்கே வெளிச்சம்.

சூரிய வெளிச்சம் கண்களை கூச, அப்போது தான், லேசாக தூக்கம் கலைந்த இதழினிக்கு, அவளின் உடலின் வலியையும் மீறிய புத்துணர்வு, இரவு வந்தது முதல் சற்று நேரத்திற்கு முன்பு வரை, நடந்த அனைத்தும் நியாபகத்திற்கு கொண்டுவர, செழியனின் மார்பிலிருந்து, தன் தலையை உயர்த்தி பார்த்தாள்.

அவன் இன்னுமும் நல்ல தூக்கத்தில் ஆழ்திருக்க, அவனின் சிகையோ, நேற்றைய இரவின் போது, எப்படி அடங்காது அவன் நெற்றியில் புரண்டதோ, அதே போன்று ஏ சி காற்றில் இப்போதும் புரல, அவன் உறக்கம் தந்த தைரியத்தில், இரவு செய்ய நினைத்தை, செய்திட கரம் கொண்டு செல்லும் போது, சரியாக அவளின் கரம் பற்றி, அவளை மீண்டும், தனக்கு கீழே கொண்டு வந்து, அவள் மேல் படர்ந்த வண்ணம்,

"ப்ராடு, நான் முழிச்சிருக்கும் போது செய்ய சொன்னதை, நான் தூங்கும் போது செய்ய பார்க்கற இல்ல, இதுக்கு எதாவது தண்டனை கொடுக்கனுமே, என்ன செய்யலாம்?!" என்ற அவனின் கேள்வியில்,

"ஏங்க ப்ளீஸ் ங்க. ஏற்கனவே லேட் ஆச்சு. அம்மா வேற கீழ இருப்பாங்க. விடுங்க. நான், குளிச்சிட்டு போகணும்" என கெஞ்ச,

"நோ ச்சான்ஸ், நீ ஏன் நான் பார்க்கும் போது, செய்ய மாட்டிங்கற. இப்பவே நீ செய்யற, இல்ல இன்னைக்கு புல்லா, இங்க தான்.. அதும் இதே பொசிஷன் தான்.. எப்படி வசதி…?!" என கண்களால் தங்கள் நிலையை காட்ட,

அவளால், தன் முகத்தை அவனின் மார்பில் மட்டுமே மறைக்க முடிந்தது. கெஞ்சல், கொஞ்சலோடு தன் தேவையையும் நிறைவேற்றிக் கொண்டான் செழியன்.

இருவரும் கீழே வரும் போது, மதிய உணவு தயாராக இருக்க, சந்திரா இருவருக்கும் தேவையானதை எடுத்து வைத்து விட்டு, அவரின் அறைக்குள் சென்றதால், தேவையில்ல மன சஞ்சலம் இல்லாது, நிம்மதியாக கழிந்தது உணவு வேளை…
 
Top