இதயம் கேட்கும் காதல்...
பகுதி 5
காலை கதிரவன் யாரின் உத்தரவிற்கும் காத்திருக்காமல் தனது வேலையை செவ்வனே செய்ய,
தனது தலையெழுத்தின் படி, சந்திக்க வேண்டிய நபரை சந்திக்கும் நேரத்திற்காகவும், இது சரி வருமா என்ற குழப்பத்தோடும் நடப்பதை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்தாள் இதழினி.
அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதை அறிந்து முதல் அபியும், வினியும் சேர்ந்து இதழினியை ஒருவழியாக்கி கொண்டிருந்தனர், தங்களின் கிண்டலாலும், கேலியாலும்...
பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் கிண்டலும், கேலியும் ஒரு அங்கம் போல… அவர்களிடம் சிக்கும் நபரின் நிலை தான் பரிதாபமாய் ஆகும். இங்கோ இதழினியும் அப்படியான நிலையில் தான் தவித்து கொண்டிருந்தாள்.
தீடீரென செய்யப்பட்ட ஏற்பாடு என்பதால், அவர்களின் சிறு வீடு எப்போதும் சுத்தமாய் பராமரிக்கப்பட்டு வந்தாலும், இன்னும் அதை சீர் செய்வதோடு, அக்காவை கிண்டலால் முகம் சிவக்க வைப்பதையும்.. காலையிலேயே தொடங்கி விட்ட தங்கைகளிடமிருந்து தப்பும் மார்க்கமாய், கோபமாய் இருப்பது போன்ற முகத்துடன்..
"அபி, வினி நிறுத்துங்க, ரெண்டு பேரும். நானும் பார்த்துட்டே இருக்கேன். இதெல்லாம் கத்துக்க தான் ரெண்டு பேரும் போறீங்களா?! படிக்கறதுக்காக இல்லையா?!" என கேட்க..
பிறந்தது முதல் பார்க்கும் அக்காவின் வார்த்தைக்கு பின் இருக்கும் அவளின் மனநிலை நன்கு தெரிந்திருக்கும் அவ்விருவரும், அவளின் கோபத்திற்கு பயம் கொள்ளாமல், மேலும் சிரிக்க, நிஜமாகவே முறைக்கும் நிலைக்கு போனாள் இதழினி…
"அக்கா! அக்கா! நீ கோபமா பேசற மாதிரி நடுச்சா, விட்டுடுவோமா நாங்க! நீ, எப்ப எங்ககிட்ட கோவமா நடந்திருக்க.?? ஏதோ புதுசா ட்ரை பண்ற?ஹா..ஹா.." என வினி சிரிக்க,
அபியோ, "ஏய் வினி, இதெல்லாம் எதுக்குன்னு தெரியுமா, மாமாகிட்ட கோபத்த காட்ட இப்பவே ஒத்திகை. அப்ப தானே மாமா சமாதான படுத்தறேன்னு வந்து கொஞ்சவாறு… அப்படி தானே க்கா" என, சிரித்தபடியே அதற்கும் தன்னை கலாய்க்கும் தங்கைகளிடம், 'இனி பேசி முடியாது' என்ற நிலையில் ..
அவர்களின் வார்த்தையால், 'அப்படி நடந்தால்..!' என்ற சிந்தனை கொடுத்த வெக்கத்தில், முகம் சிவக்க சமையலறைக்குள் ஓடி ஒழியும், தன் மூத்த மகளின் முகத்தை பார்த்தபடியே வந்த மாரியப்பன், 'எப்பாடு பட்டாவது இந்த கல்யாணத்தை நடத்தி விடுவது' என்ற முடிவுக்கு வந்திருந்தார். அவரின் எண்ணம் ஈடேறுமா?!
ஹரிஹரனின் சித்தப்பா, முன்தினம் இரவே வந்து மாரியப்பனிடம் பெண் பார்க்க, மாலையில் வருவதாய் சொல்லி சென்றிருந்தார்.
அதனால் இதழினியோ, "அப்பா அவங்க எப்படியும் வர்றதுக்கு 5 க்கு மேல ஆகிடும். இதுக்காக நா லீவ் போடனுமா?! நா போய் வேலைய முடுச்சிட்டு 3.½ க்கு வந்திடுறேன் ப்பா" என்று கேட்டிட,
மாரியப்பனும், அபிக்கும், வினிக்கும் படிப்பதற்காய், விடுமுறை விட்டிருப்பதால், 'சரி' என சம்மதித்தார். மாரியப்பனை பொறுத்த வரையில் அவர் வேலைக்கு செல்ல அனுமதிக்க இரு காரணம், ஒன்று தன் மற்ற மகள்கள் இதழினியை காலை முதல் படுத்தும் பாட்டை பார்த்தாரே...
மற்றொன்று, அவள் இங்கு இருந்தால், ஓயாமல் எதையாவது வேலை பார்த்து கொண்டு தான் இருப்பாள். அதனால் அவள் ஓய்ந்து தெரியக்கூடும். அதற்கு அங்கு வேலைக்கு போனால், ஏசி அறையில் இருந்துவிட்டு வரும் போது மகள், இன்னும் அழகாய் தெரியக்கூடும் என்பது அவரின் எண்ணம்.
ஆனால் அதை கொண்டே அவரை சிக்கலில் சிக்க வைக்க விதி தீர்மானித்திருப்பது அவருக்கு தெரியாமல் போனதே!!!
பகுதி 5
காலை கதிரவன் யாரின் உத்தரவிற்கும் காத்திருக்காமல் தனது வேலையை செவ்வனே செய்ய,
தனது தலையெழுத்தின் படி, சந்திக்க வேண்டிய நபரை சந்திக்கும் நேரத்திற்காகவும், இது சரி வருமா என்ற குழப்பத்தோடும் நடப்பதை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்தாள் இதழினி.
அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதை அறிந்து முதல் அபியும், வினியும் சேர்ந்து இதழினியை ஒருவழியாக்கி கொண்டிருந்தனர், தங்களின் கிண்டலாலும், கேலியாலும்...
பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் கிண்டலும், கேலியும் ஒரு அங்கம் போல… அவர்களிடம் சிக்கும் நபரின் நிலை தான் பரிதாபமாய் ஆகும். இங்கோ இதழினியும் அப்படியான நிலையில் தான் தவித்து கொண்டிருந்தாள்.
தீடீரென செய்யப்பட்ட ஏற்பாடு என்பதால், அவர்களின் சிறு வீடு எப்போதும் சுத்தமாய் பராமரிக்கப்பட்டு வந்தாலும், இன்னும் அதை சீர் செய்வதோடு, அக்காவை கிண்டலால் முகம் சிவக்க வைப்பதையும்.. காலையிலேயே தொடங்கி விட்ட தங்கைகளிடமிருந்து தப்பும் மார்க்கமாய், கோபமாய் இருப்பது போன்ற முகத்துடன்..
"அபி, வினி நிறுத்துங்க, ரெண்டு பேரும். நானும் பார்த்துட்டே இருக்கேன். இதெல்லாம் கத்துக்க தான் ரெண்டு பேரும் போறீங்களா?! படிக்கறதுக்காக இல்லையா?!" என கேட்க..
பிறந்தது முதல் பார்க்கும் அக்காவின் வார்த்தைக்கு பின் இருக்கும் அவளின் மனநிலை நன்கு தெரிந்திருக்கும் அவ்விருவரும், அவளின் கோபத்திற்கு பயம் கொள்ளாமல், மேலும் சிரிக்க, நிஜமாகவே முறைக்கும் நிலைக்கு போனாள் இதழினி…
"அக்கா! அக்கா! நீ கோபமா பேசற மாதிரி நடுச்சா, விட்டுடுவோமா நாங்க! நீ, எப்ப எங்ககிட்ட கோவமா நடந்திருக்க.?? ஏதோ புதுசா ட்ரை பண்ற?ஹா..ஹா.." என வினி சிரிக்க,
அபியோ, "ஏய் வினி, இதெல்லாம் எதுக்குன்னு தெரியுமா, மாமாகிட்ட கோபத்த காட்ட இப்பவே ஒத்திகை. அப்ப தானே மாமா சமாதான படுத்தறேன்னு வந்து கொஞ்சவாறு… அப்படி தானே க்கா" என, சிரித்தபடியே அதற்கும் தன்னை கலாய்க்கும் தங்கைகளிடம், 'இனி பேசி முடியாது' என்ற நிலையில் ..
அவர்களின் வார்த்தையால், 'அப்படி நடந்தால்..!' என்ற சிந்தனை கொடுத்த வெக்கத்தில், முகம் சிவக்க சமையலறைக்குள் ஓடி ஒழியும், தன் மூத்த மகளின் முகத்தை பார்த்தபடியே வந்த மாரியப்பன், 'எப்பாடு பட்டாவது இந்த கல்யாணத்தை நடத்தி விடுவது' என்ற முடிவுக்கு வந்திருந்தார். அவரின் எண்ணம் ஈடேறுமா?!
ஹரிஹரனின் சித்தப்பா, முன்தினம் இரவே வந்து மாரியப்பனிடம் பெண் பார்க்க, மாலையில் வருவதாய் சொல்லி சென்றிருந்தார்.
அதனால் இதழினியோ, "அப்பா அவங்க எப்படியும் வர்றதுக்கு 5 க்கு மேல ஆகிடும். இதுக்காக நா லீவ் போடனுமா?! நா போய் வேலைய முடுச்சிட்டு 3.½ க்கு வந்திடுறேன் ப்பா" என்று கேட்டிட,
மாரியப்பனும், அபிக்கும், வினிக்கும் படிப்பதற்காய், விடுமுறை விட்டிருப்பதால், 'சரி' என சம்மதித்தார். மாரியப்பனை பொறுத்த வரையில் அவர் வேலைக்கு செல்ல அனுமதிக்க இரு காரணம், ஒன்று தன் மற்ற மகள்கள் இதழினியை காலை முதல் படுத்தும் பாட்டை பார்த்தாரே...
மற்றொன்று, அவள் இங்கு இருந்தால், ஓயாமல் எதையாவது வேலை பார்த்து கொண்டு தான் இருப்பாள். அதனால் அவள் ஓய்ந்து தெரியக்கூடும். அதற்கு அங்கு வேலைக்கு போனால், ஏசி அறையில் இருந்துவிட்டு வரும் போது மகள், இன்னும் அழகாய் தெரியக்கூடும் என்பது அவரின் எண்ணம்.
ஆனால் அதை கொண்டே அவரை சிக்கலில் சிக்க வைக்க விதி தீர்மானித்திருப்பது அவருக்கு தெரியாமல் போனதே!!!