Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமைதாண்டா கனவுகள் 2

Advertisement

TNWContestwriter067

Member
Member
"மே ஐ கம்மின் மேம்" என்று விதுனா கேட்க..,திரும்பி பார்த்த மேம், இதுதான் கிளாஸ்க்கு வர டைம்மா..?

மேம் அதுவந்து ..என்று கூறுவதற்கும் பெல் அடிபதற்கும் சரியாய் இருந்தது…

"ஒகே காய்ஸ் நெக்ஸ்ட் க்ளாஸ்ல பார்க்கலாம், என்று கூறிவிட்டு கிளம்ப,விதுனா நிகிதாவை முறைத்து கொண்டே வந்தாள்..

இவ எதுக்கு இப்படி முறைக்கிறா..?

அடியேய் முட்டகண்ணி எதுக்குடி பொய் சொன்ன‌ என்று தனது பேக்கை தூக்கி அவள் மீது வீச..,

பொய்யா..?நானா..?கண்களை உருட்டி கேட்டாள்..

த்தூ...உன் நடிப்பு கேவலமா இருக்கு…

ஹாஹாஹா...அப்போ நேரா அந்த சோடாபுட்டிய பார்த்துட்டு தான் இங்க வரீயோ..?

ம்ம்ம்…

நல்லா வாங்கி கட்டிகிட்டியா..?நிகிதா சிரித்தாள்..

உன்னை என்று அவளை அடிக்க கை ஓங்க,நிகிதா விழுந்தடித்து ஓடினாள்..

ஏய் நில்லு டி ஓடாத..நில்லு என்று கத்திகொண்டே விது அவளை துரத்த,நிகிதா ஓடிய வேகத்தில் எதிரே வந்தவன் மீது மோதினாள்..

ஸ்ஆஆஆ என்றவள்,ச..சாரி என்று கூறிவிட்டு அவனை பார்க்கவும்,அவன் தொப்பென்று கீழே விழவும் சரியாய் இருந்தது…

"ஏய் ஏய் என்னாச்சு" என்று பதட்டமான நிகிதா அவனது கன்னத்தை தட்ட,அவன் கண்ணை திறக்கவே இல்லை…

"ஏய் முட்டகண்ணி என்னாச்சு" என்று கேட்டுக் கொண்டே வந்தாள் விதுனா..

தெரியாம மேல மோதிட்டேன்.மயங்கி கீழே விழுந்துடான்..

ஏய் முட்டகண்ணி எனக்கு தெரியாம ஜிம்க்கு எதுவும் போறீயா..?

என்ன..?அவள் புரியாமல் கேட்க..

இல்ல நீ மோதி ஒருத்தன் மயக்கம் போட்டு கீழே விழுந்துருக்கானே..

சும்மா விளையாடாத விது எனக்கு பயமா இருக்கு..

இதுக்கெல்லாம் எதுக்கு பயப்படுற,இவனெல்லாம் பொண்ணுங்களை கண்டாலே நடிப்பானுங்க..இப்போ பாரு தானா எழுந்திரிப்பான் என்றவள்,அவனை நெருங்கி அவனது வயிற்றில் ஒரு உதை விட்டாள்..

அவன் வலியில் ம்ஆஆ என்று முணகினான்..நிகிதா பயத்தில் தனது பையில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவனது முகத்தில் அடிக்க,அவன் லேசாய் கண்ணை திறந்தான்..இந்தா தண்ணி குடி என்றவள் அவனிடம் பாட்டிலை கொடுக்க,சட்டென்று அதனை வாங்கி கடகடவென குடித்தான்..

ச..ச.சாரி தெரியாம மோதிட்டேன் என்று அவள் மன்னிப்பு கேட்க..,அவன் எதுவும் கூறாமல் எழுந்து விதுனாவை பார்தான்…

ஏய் என்ன பாக்குற..இன்னொரு உதை வேணுமா..?என்று நக்கலாய் கேட்க,அவன் வயிற்றை பிடித்து கொண்டே சென்றான்..போகும் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் நிகிதா..

பாத்தியா டி..நான் சொன்னேன்ல எல்லாம் நடிப்பு..ஒரு உதை தான் எப்படி எழுந்தான் பார்த்தியா..

ச்ச பாவம் விது..யாரையும் இதுபோல் ட்ரீட் பண்ணாத என்று கூறியவள் விதுனாவை பார்க்க,அவள் எதையோ பார்த்து முறைத்து கொண்டிருந்தாள்..

"என்னத்த பார்த்து இப்படி மொறைக்கிறா" என்று நினைத்தவள்,அவள் பார்வை இருந்த திசையை பார்க்க,அங்கே மித்ரனுடன் ஒரு பெண் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தாள்…

அதை பார்த்துவிட்டு விதுனாவை பார்த்த நிகிதா,கடவுளே அந்த பொண்ணை நீ தான் காப்பாத்தனும்..! என்று மனதிற்குள் வேண்டி கொண்டவள்,

ஏய் விது அந்த பொண்ணு எதாவது டவுட் கேட்பாளா இருக்கும்டி..

டவுட் கேட்குறவ இப்படி தான் இளிச்சிட்டு கேட்பாளா..?

அது...வந்து…

நீ போய் அவளை லாக்கர் ரூம் கூட்டிட்டு வா..

விது வேண்டாம்டி..

நீ போறியா..?இல்ல நான் போகவா..?முகத்தை கோபமாய் வைத்து கொண்டு கேட்டாள்..

ந..நானே போறேன் என்றவள் அந்த பெண்ணை நோக்கி சென்றாள்..

விதுனா கோபத்துடன் நின்றிருந்தாள்..அப்போது அங்கு அந்த பெண் வர,அடுத்த நிமிடம் அவளது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள் விதுனா..

அவள் ஒன்றும் புரியாமல் கன்னத்தை தடவிக் கொண்டே,எ..எதுக்காக அடிச்ச..இரு நான் பிரின்ஸ்பல் கிட்ட சொல்றேன்..

நீ யார்கிட்ட வேணாலும் போய் சொல்லு..யாராலையும் என்ன எதுவும் பண்ண முடியாது..ஏன்னா இது என்னோட காலேஜ்..இந்த காலேஜ் சேர்மனோட பொண்ணு நான்..

சேர்மனோட பொண்ணுனா யார வேணா அடிப்பியா..?

அடிப்பேன்..இன்னொரு முறை மித்ரன் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறதை பார்த்தேன் நீ இந்த காலேஜில் படிக்கவே முடியாது புரியுதா..! என்று எச்சரிக்கை விடுத்தாள்..

அவளோ கன்னத்தை தடவிக் கொண்டே அவளை முறைத்து பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்ப,நிகிதா அவசர அவசரமாய் ஓடி வந்தாள்..

ஏய் பொண்ணு நில்லு.இந்தா இதை வஞ்சிக்கோ யூஸ் ஆகும் என்று அவளது கையில் ஒரு பேண்டைட் கொடுத்தாள்..அவள் அதை அவளது முகத்தில் தூக்கி எறிந்துவிட்டு சென்றாள்…

இவளுக்கு எவ்வளவு திமிர் பாரேன் என்று விதுனா அவளை அடிக்க போக,நிகிதா அவளை தடுத்தாள்…

விது நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல..நீ இப்படி பண்றதால மித்ரனுக்கு தான் கெட்ட பெயர்..

இதோ பார்.நீ எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை..உன் வேலையை நீ பாரு என்று கோபமாய் கூறிவிட்டு சென்றாள்…

அடுத்த பத்து நிமிடத்தில் நால்வரும் பிரின்ஸ்பல் அறையில் நின்றனர்..

அடிவாங்கிய பெண்ணோ கன்னத்தை தடவிக் கொண்டே நிற்க,மித்ரனோ விதுனா,நிகிதா இருவரையும் முறைத்து கொண்டு நின்றான்..

வாட்ஸ் கோயிங் ஆன் மித்ரன்.. பிரின்சிபால் கேட்க..,

ச..சார் அது வந்து….என்னும் போதே..

மித்ரனுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை..அவளை அடித்தது நான் தான் என்று தெனவெட்டாய் கூறும்போதே,இங்கே என்ன‌ நடக்குது என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் ரத்னபிரகாஷ்..


பிரின்சிபால் சற்று பதட்டத்துடன் எழுந்து வ..வாங்க சேர்மன் சார் என்றார்…

விதுனாவோ அவரை பார்த்து கண்கள் மின்ன பாசமாய் "ப்ஆஆ" என்று அழைக்க,அதை சிறிதும் கண்டு கொள்ளாது..,

என்ன பிரச்சினை என்று கேட்டுக் கொண்டே தன் பார்வையை விதுனாவின் மீது செலுத்தினார் பிரகாஷ்.

வெகு நாட்கள் கழித்து பார்க்கும் தன் தந்தையின் இந்த ஒதுக்கம் அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது..கண்களை முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை அடக்கி கொண்டு நின்றாள்..

சர்..சார்..அது வந்து என்று பிரின்ஸ்பால் இழுக்க..,

சார் இந்த விதுனா சம்மந்தமே இல்லாம என்ன லாக்கர் ரூமில் வச்சி அடிச்சிட்டா சார்..ஏன் அடிச்சேன்னு கேட்டா அப்படி தான் அடிப்பேன்.இது என்னோட காலேஜ்..நான் நினைச்சா உன் சீட்டை கிழிச்சிடுவேனு சொல்றா..

ஏய் கொஞ்சம் அமைதியா இரு..பிரின்ஸ்பால் அவளை அடக்க முயல,

நான் ஏன் சார் அமைதியா இருக்கனும்.நான் என்ன இங்க ஓசிலயா படிக்க வந்துருக்கேன்..நானும் லட்சம் லட்சமா கட்டி தான் சார் படிக்கிறேன் என்று கோபமாய் கூறினாள்..

அவள் கூறியதை பொறுமையாய் கேட்ட பிரகாஷ்,விதுனா அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேளு..!

என்ன..?

மன்னிப்பு கேளுனு சொன்னேன்..சற்று அழுத்தமாய் கூறினார்..

என்னால மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று பட்டென்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியவள் பார்க்கிங் ஏரியாவிற்கு வந்து தனது காரை எடுத்துக் கொண்டு வேகமாய் ஓட்டினாள்..மன்னிப்பு கேட்கனுமாமே மன்னிப்பு..அவ பெரிய இவ, அவகிட்ட போய் நான் மன்னிப்பு கேட்கனுமாம் என்று கோபமாய் கூறியவள் ஸ்டேரிங்கில் குத்தினாள்..விதுனா கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதிரே வந்த லாரியை கவனிக்காமல் வேகத்தை கூட்ட,அடுத்த நிமிடம் எதிரே வந்த லாரி அவளது காரை மோத பயத்தில் அம்மாஆஆஆஆஆ….
என்று கத்தினாள்..

அவள் போடும் சத்தத்தை கேட்டு பதறி துடித்து அவளிடம் ஓடி வந்தாள் அங்கே இருந்த நர்ஸ்…

விதுனா கண்களை திறவாமலே தலையை அங்கும் இங்கும் ஆட்ட,அவளது உடல் பயத்தில் வியர்த்து கொட்டியது..

மேடம்,மேடம் என்று அந்த நர்ஸ் இவளை உசுப்ப,அவள் மெதுவாய் தனது கண்களை திறந்தாள்‌.

ந...நான் எங்க இருக்கேன்.எனக்கு என்னாச்சு என்று திக்கி திணறி கேட்க..,

மேடம்,மேடம் நீங்க கண் முழிச்சிட்டீங்க என்று சந்தோஷபட்ட அந்த நர்ஸ் உடனே தனது போனை எடுத்து டாக்டருக்கு அழைத்தாள்…

அடுத்த பத்து நிமிடத்தில் டாக்டர் அவளின் முன்பு நின்றார்…

நீ.. நீங்க யாரு..?

என் பேரு விக்கேஷ்..நான் ஒரு டாக்டர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள..

டாக்டர் என்று நெற்றியை சுருங்கியவள் அப்போது தான் தன்னுடைய கோலத்தை பார்த்தாள்..

எ..எனக்கு என்னாச்சு டாக்டர்..நான் எப்படி இங்க…?

பதட்டபடாதீங்க விதுனா.. உங்களுக்கு இனிமே ஒன்றுமில்லை..நீங்க நல்லபடியா கோமாவிலிருந்து மீண்டு வந்துட்டீங்க…

கோ..கோமாவா….?

ஆமா மேடம் நீங்க ஐந்து வருஷமா கோமால இருந்தீங்க…

என்னது ஐந்து வருஷமா..?என்று கேட்டவளுக்கு தலை சுல்லென்று வலித்தது..ஸ்ஆஆஆ என்று தலையில் கை வைக்க,

விதுனா நீங்க டென்ஷன் ஆகாதீங்க...கொஞ்சம் அமைதியா இருங்க என்று டாக்டர் அவளது உடலை பரிசோதனை செய்தார்…

இனி பயப்பட ஒன்றுமில்லை..நீங்க கண் முழிச்சிட்டீங்க என்று கூறும்போதே அவர்களை நோக்கி ஓடி வந்தனர் இரண்டு பேர்…

விது..விதுனாம்மா கண் முழிச்சிட்டியா..? என்று கேட்டுக் கொண்டே அவளது தலையை வருடிவிட்டார் பிரகாஷ்…

விதுனா நடப்பதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள்..தன் தந்தை தன்னை தொட்டு தலையை வருடி விடுவதை அவளால் நம்ப முடியவில்லை.‌அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து இதுவரை இப்படி நடந்ததில்லை…

விது நீ கோமால இருந்து மீண்டு வந்துட்ட என்று கூறியவன் அவளது கையை எடுத்து தனது கைக்குள் புகுத்தி கொண்டான்…

அவனையும் அவனது கையையும் மாரி மாரி பார்த்தவள்,நீ நீ மித்ரன் தானே..?

ம்ம் நான் உன் மித்ரன் தான்..

என் மித்ரனா..?என்ன சொல்ற..

என்ன விது எல்லாம் மறந்துட்டியா..?நீயும் நானும் லவ் பண்ணோமே..?

லவ்வா…?

ஆமா விது.உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா..?

இ..இல்லையே..?

ட..டாக்டர் என்று பிரகாஷும்,மித்ரனும் அவரை பார்க்க..

அவர் விதுனாவை நெருங்கி,மிஸ் விதுனா உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடி நடந்த எதுவும் ஞாபகம் இல்லையா..?

இ..இருக்கு டாக்டர்..அ. ஆனா இவர் சொல்ற மாதிரி நாங்க லவ் பண்ண எந்த ஞாபகமும் இல்ல….

அப்படியா..?அப்போ உங்களுக்கு என்ன ஞாபகம் இருக்கு…

அ..அது வந்து என்று கூறுவதற்குள் தலை சுல்லென்று வலியெடுக்க,ஸ்ஆஆஆ என்று தலையில் கை வைத்தாள்..

ஒகே ஒகே நீங்க ரொம்ப யோசிக்காதீங்க..இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்று கூறிவிட்டு,மிஸ்டர் பிரகாஷ்,உங்க பொண்ணுக்கு பழைய விசயங்கள் எதுவும் ஞாபகம் இல்லை…

டாக்டர்…

நீங்க பயப்படாதீங்க.. அவுங்களுக்கு பழைய ஞாபகம் எப்போ வேணா வரலாம்...அதுக்காக நீங்க வெயிட் பண்ணி தான் ஆகனும் என்று கூறினார்..

என் பொண்ணு கண் விழிச்சதே போதும் டாக்டர்.. அவளுக்கு பழைய நியாபகம் வரலைனா கூட பரவாயில்லை என்று கூறி கண்ணீர் வடித்தார்…

அப்போது வீணா என்று கத்திகொண்டே உள்ளே நுழைந்தான் அவன்.. சட்டென்று அனைவரும் திரும்பி பார்க்க,அங்கே முகமெல்லாம் கிரீஸ் அப்பியிருக்க,ஒரு கிழிந்த சட்டையையும்,தொலதொலவென ஒரு பேண்ட்டும் அணிந்து கொண்டு ஒருவன் நின்றான்…

பிரகாஷ் மித்ரனை பார்த்து இவன் எப்படி இங்க..?என்று பல்லை கடிக்க..

தெ..தெரியல அங்கிள்…என்று அவனது காதில் முணுமுணுத்தான்..

அந்த புதியவனோ விதுனாவை நெருங்கி விதுனாம்மா என்று கூறி அவளை அணைத்து கொண்டான்..அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவளது தோள்பட்டையை நனைத்தது…

சட்டென்று அவனிடம் இருந்து விலகியவள்,ய..யார் நீ..?என்றாள்..

வீணா எ..என்ன தெரியலையா..?நா நான் உன்னோட நிலவன்..பரிதி நிலவன்.. நீயும் நானும் உயிருக்கு உயிரா காதலித்தோமே..? என்று கூறி அவளது தலையில் இடியை இறக்கினாள்...
 
என்னாங்கடா நடக்குது. ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடறீங்க
 
Adei apprentice kalaa thirumbavum komaavukku poira poraa..aalaalukku varinju kattikkittu vaareenga....
 
Top