Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்.. - முன்னோட்டம்

Advertisement

கதையின் தலைப்பு...
உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

கதையின் கரு...
கவிதை வடிவில்...

யார் என்று தெரியாமல்....
உன் பெயர் கூட அறியாமல்...
என் தேகம் உயிருக்குப்
போராடும் பொழுதினில்....
உன் உயிரை கொடுத்து...
என் மனதினை பறித்தாய்...
காலனிடம் போராடி...
என் பிராணனை மீட்டுக் கொடுத்தாய்...
இவை அனைத்தையும் செய்த மாயவனே...
உம்மை யாரென்று சொல்லாமல்...
நான் கண்திறக்கும் முன்னரே...
மாயமாய் மறைந்தது ஏனோ???

***********

முன்னோட்டம்.....

"சைரா குட்டி..."

"....."

"சைரா..."

"...."

"அடியேய் சைரந்தரி...."

"என்ன ஜோதி ம்மா..."

"ஒரு டூர் போக எவ்வளவு அலப்பறை பண்ணுற டி நீ..."

"ஹான்.‌‌... நீயும் டூர் போயி பாரு எவ்வளவு கன்பியுஷன் (confusion) வரும்னு... அப்ப தெரியும் ம்மா உனக்கு..."

"ஆமாடி... நான் பெத்த ரத்தினமே... எனக்கு ஒன்னுமே தெரியாது பாரு..."

"போ ம்மா அங்குட்டு... எனக்கு வேலை இருக்கு..."

"ஹ்ம்ம்... ரொம்ப தான்... போடி நான் போய் என் வேலையை பார்க்குறேன்..."

"அதை செய் செல்லக் குட்டி..."

**********

"டேடி..."

"என்ன சைரா மா..."

"நான் போறேன்..."

"....**...."

"லவ் யூ விஜய் ப்பா..."

"லவ் யூ டூ சைரா குட்டி..."

************

"ராகி..."

"அடிங்க... ராகி... கேழ்வரகு ன்னு சொன்ன... அக்கான்னு கூட பார்க்க மாட்டேன் டி..‌"

"ஹாஹா... விட்றா விட்றா..."

"எதுக்கு... என்ன கூப்பிட்ட விளக்கு திரி..."

"டேய்...."

"சரி சொல்லு... திங்க என்ன வேணும் உனக்கு..."

"ஹிஹி.... பிரியாணி வேணும் டா என் செல்ல ராஹித்யா தம்பி..."

அவன் கேவலமாக ஒரு லுக் விட்டான்...

"லுக்கை அப்புறம் விடு தங்கோ... இப்ப போய் பிரியாணி வாங்கிட்டு வா.... போ ராசா... போ...."

***********

"ஏய் நவ்யா... சைரா எங்க டி... நீ மட்டும் தனியா வர..."

"அவள் தான் என்னை போக சொல்லிட்டா மச்சி..."

"அவள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டாளே..."

"அப்படி தான் சொன்னாள் ஆரா..."

"அவளுக்கு இருட்டுன்னா பயம் தான டி..."

"ஆமா தான்... பட் என்னன்னு தெரியலை... சைரா என்னை அனுப்பிட்டா..."

"என்னமோ சரி இல்ல..." என்று மனதில் நினைத்தால் ஆரா என்ற ஆராதனா...

***********

"கைஸ்... நாம ரெண்டு வருஷமா பார்த்துட்டு இருக்கும் கேஸ்..."

"எஸ் சார்..."

"இன்னைக்கு அந்த குரூப்பை பிடிச்சே ஆகணும்..."

"எஸ் சார்..."

"இது நமக்கு ஒரு சவாலான விஷயம்..."

"எஸ் சார்..."

"யூ மே ஆல்... கோ நவ்..."

"தேங்க் யூ சார்..."

*********

"இனியா..."

"சொல்லு **** "

"இன்னைக்கு அந்த குரூப் நம்ம கிட்ட வசமா சிக்கிட்டாங்க டா..."

"ம்ம் ஆமா டா..."

"ஆனால்... நீ என் கூட வரீயே என்னால போய் பிடிக்க முடியும்..."

"அடேய் மச்சி... என்னடா இப்படி சொல்ற..."

"சரி... சரி வா..‌. மூஞ்சிய ஒழுங்கா வச்சிட்டு வாடா... அந்த காட்டுக்கு போகலாம்..."

**********

" **** "

"என்ன இனியா..."

"இங்க ஏதோ... என்னமோ... சவுண்ட் கேட்குது டா..."

"ஹ்ம்ம்... ஆமா... அந்த நதி கரை ஓரத்தில் இருந்து தான் கேட்குது இனியன்..."

"வா போய் பார்க்கலாம் மச்சி..."

"சரி போலாம் இனியா..."

என்னவா இருக்கும் என்று யோசித்து கொண்டே சென்றான் ****

***********

ஹாய் செல்லம்ஸ்...

இந்த கதை திங்கள் முதல் வெள்ளி வரை வரும் ???? பதிவு குட்டி குட்டியாக தான் என்றும் சொல்லிக் கொள்கிறேன் ??

இதில் இருந்து உங்களுக்கு ஒன்னும் புரியாது தான்... அங்க அங்க பிட்டு பிட்டா இருக்கும்...?

சரி கவிதையில் இருந்து ஏதாவது புரிந்ததா ???

எப்படி போக போகுதுன்னு தெரியவில்லை செல்லம்ஸ் ???? அந்த ஆண்டவன் மேல பாரத்தை போட்டு நல்லா எழுத டிரை பண்றேன் செல்லம்ஸ் ??

லவ் யூ லாட் செல்லம்ஸ் ??

Urs....
Kani ??
 
உங்களுடைய "உனைக் கொடுத்து
உயிர் கொடுத்தாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நிலவின் தோழி கனி டியர்
 
Last edited:
Top