சமீராவின் மனைத்தக்க மாண்புடையவள்.
வெண்பா மதியின் மண வாழ்வில் ஒரு மனக்கசப்பின் காரணமாக இருவரும் மனதளவில் பிரிந்திருக்கிறார்கள்.வெண்பாவை வேண்டாம் என ஆழிக்கண்ணன் மறுத்து இருந்த நிலையில் மதியின் பிடிவாதத்தால் இருவரின் திருமணம் நடக்கிறது.சம்பந்தி வீட்டினரை சரியாக நடத்தாமல் அவமதிக்கும் ஆழிக்கண்ணன்.வெண்பாவின் மனம் கவலைப்பட்டாலும் மதியுடன் சுமுகமாக இருக்கிறாள்.
நிலாக்குட்டியின் காதணி விழாவில் சிறு வாக்குவாதம் பெரிதாக இளம் வயதான உதய் தன் பெற்றோரை அவமதிக்கும் ஆழிக்கண்ணனை எதிர்த்து பேசிவிட மதிக்கும் உதய் குடும்பத்துக்கும் இடையில் உறவு முறிகிறது.தன் அந்தரங்கத்தை கணவனிடம் மறைக்காது சொல்லியிருந்த விஷயத்தை குத்திக்காட்டி மதி பேசிவிட வெண்பா மனமொடிந்து மதியிடம் பேசுவதை நிறுத்தி விட குடும்பத்தில் அனைவரும் அதிர்ந்து பொகிறார்கள்.
உதயா உதய் யாரென அறியாமல் அவனை விரும்புகிறாள். அவனின் ஷார்ட் பிலிமில் நடிக்க வருகிறாள்.அவன் அவளை தவிர்க்கிறான்.அவனும் அவளின் மனதை அவமதிக்கும் வேலையை செய்ய மேலும் சிக்கலாகும் உறவு எப்படி சீரடைகிறது?இரு குடும்பங்களும் ஒன்றினைந்தார்களா இல்லியா என்பதுதான் கதை.எந்த நிலையிலும் தன் இணையை வெளியில் விட்டுக்கொடுக்கவே கூடாது என்பதுதான் நல்ல ஆணுக்கு அழகு!
தன் அந்தரங்கத்தை கணவன் குத்திக்காட்டியதும் ,உதய் உதயாவின் காதலை அசிங்கப்படுத்துவதும் பெண்களின் பார்வையில் பெரிய குற்றம் தான்.உதய்யின் திரைப்பட ஆர்வமும் அதுக்கு உறுதுணையா இருக்கும் உதயாவும் அழகு.வெண்பாவுக்கான தொழில் அமைத்துக்கொடுக்கும் மதியும் அழகு.பெண்களின் நுண்ணிய உணர்வுகளை அழகா எழுதியிருக்காங்க.
வெண்பா மதியின் மண வாழ்வில் ஒரு மனக்கசப்பின் காரணமாக இருவரும் மனதளவில் பிரிந்திருக்கிறார்கள்.வெண்பாவை வேண்டாம் என ஆழிக்கண்ணன் மறுத்து இருந்த நிலையில் மதியின் பிடிவாதத்தால் இருவரின் திருமணம் நடக்கிறது.சம்பந்தி வீட்டினரை சரியாக நடத்தாமல் அவமதிக்கும் ஆழிக்கண்ணன்.வெண்பாவின் மனம் கவலைப்பட்டாலும் மதியுடன் சுமுகமாக இருக்கிறாள்.
நிலாக்குட்டியின் காதணி விழாவில் சிறு வாக்குவாதம் பெரிதாக இளம் வயதான உதய் தன் பெற்றோரை அவமதிக்கும் ஆழிக்கண்ணனை எதிர்த்து பேசிவிட மதிக்கும் உதய் குடும்பத்துக்கும் இடையில் உறவு முறிகிறது.தன் அந்தரங்கத்தை கணவனிடம் மறைக்காது சொல்லியிருந்த விஷயத்தை குத்திக்காட்டி மதி பேசிவிட வெண்பா மனமொடிந்து மதியிடம் பேசுவதை நிறுத்தி விட குடும்பத்தில் அனைவரும் அதிர்ந்து பொகிறார்கள்.
உதயா உதய் யாரென அறியாமல் அவனை விரும்புகிறாள். அவனின் ஷார்ட் பிலிமில் நடிக்க வருகிறாள்.அவன் அவளை தவிர்க்கிறான்.அவனும் அவளின் மனதை அவமதிக்கும் வேலையை செய்ய மேலும் சிக்கலாகும் உறவு எப்படி சீரடைகிறது?இரு குடும்பங்களும் ஒன்றினைந்தார்களா இல்லியா என்பதுதான் கதை.எந்த நிலையிலும் தன் இணையை வெளியில் விட்டுக்கொடுக்கவே கூடாது என்பதுதான் நல்ல ஆணுக்கு அழகு!
தன் அந்தரங்கத்தை கணவன் குத்திக்காட்டியதும் ,உதய் உதயாவின் காதலை அசிங்கப்படுத்துவதும் பெண்களின் பார்வையில் பெரிய குற்றம் தான்.உதய்யின் திரைப்பட ஆர்வமும் அதுக்கு உறுதுணையா இருக்கும் உதயாவும் அழகு.வெண்பாவுக்கான தொழில் அமைத்துக்கொடுக்கும் மதியும் அழகு.பெண்களின் நுண்ணிய உணர்வுகளை அழகா எழுதியிருக்காங்க.