Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒருநாளும் மறையாத புதுப் பௌர்ணமி! -2

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -2

காலைச் சூரியன் தன் அலுவல்களை கவனிக்க ஆயத்தமானான். நளன் போர்வைக்குள் சுருண்டு கிடந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒரு கார் கம்பனியில் உதவி மேனேஜராக சமீபத்தில் பதவி உயர்வு பெற்று ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை செய்யும் அவனுக்கு அன்று மட்டும் விடுமுறை. இந்த இடத்தில் நாயகனைப் பற்றிய அறிமுகம் அவசியம் தேவை.

ஆறடிக்கு குறையாத உயரம். நல்ல திரண்ட தோள்கள். சிலுசிலுக்கும் கேசம். அளவாக ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், தாடியும் அவனுக்கு கூடுதல் அழகு. கூரான நாசி. முகத்தில் நிரந்தரமாய் குடிகொண்டுவிட்ட புன்னகை, நீண்ட கைகளும் கால்களும், மொத்தத்தில் ஒரு கதாநாயகனுக்கான எல்லா தகுதிகளும் சரியான விகிதத்தில் இருந்தன.

ஒரு சுகமான குளியலை முடித்துவிட்டு அவன் வெளியே வரவும், அவனது அறைக்கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.

கதவைத் திறந்தவன் அதிர்ந்தான். அவள் நின்றுக்கொண்டிருந்தாள்.

" நீயா....? இங்க என்ன பண்ற...?" என்று வாயைப் பிளந்தவனின் இதழ்களை தன் கையால் தடை செய்தவள், அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கதவை தாளிட்டாள் ஸ்வப்னா.

தன் ஆட்காட்டி விரலை தன் செவ்விய இதழ்களுக்கு கொடுத்துவிட்டு 'ஷ்.....' என்று சைகை காட்டினாள்

"இங்க என்னடிப் பண்ற..? நீ முதல்ல வெளிய போ.. யாராச்சும் வந்தா கதை கந்தல் தான்..." என்றான் நளன்.

"ஏன் இவ்வளவு டென்சன் ஆகுற....? உங்க அம்மா உப்புமா கூட போராடிக்கிட்டு இருக்காங்க, மாமா மார்க்கெட்டுக்குப் போயிருக்கார், உன் அருமை தங்கச்சி என்னை எட்டு மணிக்கு வரச் சொல்லிட்டு இப்பத் தான் எழும்பி குளிக்கவே போயிருக்கா... அவ சீவி சிங்காரிச்சு வாரதுக்கு நேரமிருக்கு கண்ணா.. அதான் அந்த கேப்பில் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்.. " என்று சொல்லிவிட்டு அவனை ஆசை குழைய பார்த்தாள்.

அப்போதுத் தான் அவன் டவலோடு நிற்பதை உணர்ந்து தன் கப்போர்ட்டை திறந்து தீவிரமாய் டீசேட் ஒன்றைத் தேடினான்.

அதற்குள் அவள் அவனை பின்னால் வந்து அணைத்துக் கொண்டாள். அவன் உடம்பில் பட்டுத் தெறித்த சோப்பின் வாசனையைப் பிடித்தாள். தன் மூக்கை உரசினாள். அவள் தொடுகை அவனை என்னென்னவோ செய்தது.

"ஹேய்.. என்னடி பண்ற....?" என்றான்.

"ஹூம்..... " என்று சத்தம் மட்டும் வந்தது.

"நான் பண்ண வேண்டியதெல்லாம் நீ பண்றடி..." என்றான். அவன் குரலிலும் காதல் கொட்டிக்கிடந்தது. அதற்கு மேல் நின்றால் எல்லை மீறிச் செல்ல நேரிடும் என்று அவள் கிளம்பினாள்.

"உன்னைப் பார்க்கனும் போல இருந்திச்சிடா.. அதான் உன் ருமுக்கு வந்தேன்.." என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அவள் கையை எட்டிப்பிடித்தான். தன் கை வளைவுக்குள் சிறை செய்தான். அந்த நீல நிற சுடிதாரில், சின்ன க்ளிப்புக்குள் அடங்காத கூந்தலுடன், சிவந்த கன்னங்களுடன் கொள்ளை அழகாய் இருந்தாள். அவனுக்குள் ஹார்மோன்கள் எல்லாம் வேலை செய்தது.

அவள் நெற்றியில் தன் இதழ் பதித்தான்.

"ஈவ்னிங் சிக்ஸ்க்கு பீச்சுக்கு வா... உன் கூட நிறைய பேசனும்... " என்றான்.

"சரி கண்ணா..." என்று கண்ணடித்தாள்.

"போடி.. யாராச்சும் வரப் போறாங்க...." என்று மனமே இல்லாமல்த்தான் சொன்னான்.

"சொன்ன டைம்க்கு வா....." என்று நினைவூட்டினான்.

"ஓகே கண்ணா..." என்று சொல்லிவிட்டு நகர்ந்தவள் திரும்ப வந்து அவன் கன்னத்தில் தன் முத்திரையை பதித்துவிட்டுச் சென்றாள்.

" கள்ளி......" என்று அவன் அதையும் ரசித்தான்.

ஸ்வப்னா நளனின் முறைப்பெண்.அவளைப் பற்றி போகப் போக தெரிந்து கொள்வோம். அவள் ஸ்வாரஸ்யமானவள்.

சிறிது நேரம் கழித்து கீழே சென்று பிடிக்காத உப்புமாவை சிரமப்பட்டு வயிற்றுக்குள் தள்ளினான்.

"அப்பா எங்கம்மா...?"

"மார்க்கெட் போயிருகார்ப்பா.... இப்ப வந்திடுவார்.." என்றார் மகேஸ்வரி.

"சஞ்சனா எங்கம்மா...?"

"ஸ்வப்னா வந்தா.. அவ கூட போயிருக்கா.. சஞ்சுவோட ப்ராஜெக்ட்க்கு ஏதோ ஹெல்ப் வேணும்னு ஸ்வப்னாகிட்ட கேட்டிருந்தாளாம். அதான் ரெண்டு பேரும் எங்கயோ போயிருக்காங்க. இந்தா உங்க அத்தை குலாப் ஜாமுன் அனுப்பியிருக்காங்க. சாப்பிடு.. " என்று கொண்டு வந்து வைத்தார்.

"அப்படியா..." என்று அதை ரகசியமாய் ரசித்துச் சாப்பிட்டான். அவன் ரசித்து சாப்பிடுவதை பார்த்தால் மகேஸ்வரி பத்ரகாளியாக மாறிடுவார் என்று அவனுக்குத் தெரியும். ஸ்வப்னாவின் அம்மா ரோகிணியின் மீது அத்தனை பாசம்.

"அம்மா.. எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு.. நான் போயிட்டு வாரேன் .." என்று தப்பித்துச் சென்றான்.

அப்பாவிடம் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்ற பதட்டம் அவனுக்கு.

"சரிப்பா.. பின்நேரம் சீக்கிரம் வாப்பா.. ஒரு இடத்துக்குப் போகனும்.."

"எங்கம்மா....?"

"நீ வா.. சொல்றேன்..." என்று புதிர் போட்டார் மகேஸ்வரி.

"சரிம்மா..." என்று சொல்லிவிட்டு காதலியை சந்திக்க போட்ட அப்பாய்ன்மென்ட்டை மறந்து விட்டு தன் கார் சாவியை சுழற்றியபடியே வெளியேறினான். அப்பாவிடம் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான். ஆனால் ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு எத்தனை நாள் தான் தப்பிப்பது.

நேராக வண்டியை தன் நண்பன் வீட்டிற்கு விட்டான். அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு மதிய நேரம் வீட்டிற்கு திரும்பினான்.

சஞ்சனா வந்திருந்தாள். அப்பா பத்திரிக்கையோடு இணைந்திருந்தார். அனைவரும் ஒன்றாக உணவருந்தினர். மகேஸ்வரியின் சமையல் சுமார் தான். ஆனால் யாரும் வாயை திறந்து ஒன்றும் சொல்லிவிட இயலாது. சொன்னால், அங்கு ஒரு யுத்தமே நடந்துவிடும். மேற்கொண்டு பேசினால் 'அப்ப இனி நீங்களே சமைச்சிக்குங்க..' என்று கறாராய் பதில் வரும். அதற்கு பிறகு யார் சமைப்பது. ஆனால் நளன் அருமையாக சமைப்பான். எங்கு கற்றுக்கொண்டானோ தெரியவில்லை. அம்மாவுக்கு உடல்நலக்குறைவாக உள்ள போதெல்லாம் அவன் கைவண்ணம் தான். சஞ்சனா அவ்வப்போது காய்கறிகளை நறுக்குவதோடு தன் கடமைகளை முடித்துக் கொள்வாள். ஒரு வழியாய் சாப்பாட்டுக் கடை முடிந்ததும் அனைவரும் குட்டி ஓய்வுக்கு தயாராகி அறைக்குள் புகுந்துக் கொண்டனர்.

நளன் தன் அறையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு கனவுலகத்தில் இருந்தான். காலையில் நடந்த சம்பவத்தை அசைப் போட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.
 
அத்தியாயம் -2

காலைச் சூரியன் தன் அலுவல்களை கவனிக்க ஆயத்தமானான். நளன் போர்வைக்குள் சுருண்டு கிடந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒரு கார் கம்பனியில் உதவி மேனேஜராக சமீபத்தில் பதவி உயர்வு பெற்று ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை செய்யும் அவனுக்கு அன்று மட்டும் விடுமுறை. இந்த இடத்தில் நாயகனைப் பற்றிய அறிமுகம் அவசியம் தேவை.

ஆறடிக்கு குறையாத உயரம். நல்ல திரண்ட தோள்கள். சிலுசிலுக்கும் கேசம். அளவாக ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், தாடியும் அவனுக்கு கூடுதல் அழகு. கூரான நாசி. முகத்தில் நிரந்தரமாய் குடிகொண்டுவிட்ட புன்னகை, நீண்ட கைகளும் கால்களும், மொத்தத்தில் ஒரு கதாநாயகனுக்கான எல்லா தகுதிகளும் சரியான விகிதத்தில் இருந்தன.

ஒரு சுகமான குளியலை முடித்துவிட்டு அவன் வெளியே வரவும், அவனது அறைக்கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.

கதவைத் திறந்தவன் அதிர்ந்தான். அவள் நின்றுக்கொண்டிருந்தாள்.

" நீயா....? இங்க என்ன பண்ற...?" என்று வாயைப் பிளந்தவனின் இதழ்களை தன் கையால் தடை செய்தவள், அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கதவை தாளிட்டாள் ஸ்வப்னா.

தன் ஆட்காட்டி விரலை தன் செவ்விய இதழ்களுக்கு கொடுத்துவிட்டு 'ஷ்.....' என்று சைகை காட்டினாள்

"இங்க என்னடிப் பண்ற..? நீ முதல்ல வெளிய போ.. யாராச்சும் வந்தா கதை கந்தல் தான்..." என்றான் நளன்.

"ஏன் இவ்வளவு டென்சன் ஆகுற....? உங்க அம்மா உப்புமா கூட போராடிக்கிட்டு இருக்காங்க, மாமா மார்க்கெட்டுக்குப் போயிருக்கார், உன் அருமை தங்கச்சி என்னை எட்டு மணிக்கு வரச் சொல்லிட்டு இப்பத் தான் எழும்பி குளிக்கவே போயிருக்கா... அவ சீவி சிங்காரிச்சு வாரதுக்கு நேரமிருக்கு கண்ணா.. அதான் அந்த கேப்பில் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்.. " என்று சொல்லிவிட்டு அவனை ஆசை குழைய பார்த்தாள்.

அப்போதுத் தான் அவன் டவலோடு நிற்பதை உணர்ந்து தன் கப்போர்ட்டை திறந்து தீவிரமாய் டீசேட் ஒன்றைத் தேடினான்.

அதற்குள் அவள் அவனை பின்னால் வந்து அணைத்துக் கொண்டாள். அவன் உடம்பில் பட்டுத் தெறித்த சோப்பின் வாசனையைப் பிடித்தாள். தன் மூக்கை உரசினாள். அவள் தொடுகை அவனை என்னென்னவோ செய்தது.

"ஹேய்.. என்னடி பண்ற....?" என்றான்.

"ஹூம்..... " என்று சத்தம் மட்டும் வந்தது.

"நான் பண்ண வேண்டியதெல்லாம் நீ பண்றடி..." என்றான். அவன் குரலிலும் காதல் கொட்டிக்கிடந்தது. அதற்கு மேல் நின்றால் எல்லை மீறிச் செல்ல நேரிடும் என்று அவள் கிளம்பினாள்.

"உன்னைப் பார்க்கனும் போல இருந்திச்சிடா.. அதான் உன் ருமுக்கு வந்தேன்.." என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அவள் கையை எட்டிப்பிடித்தான். தன் கை வளைவுக்குள் சிறை செய்தான். அந்த நீல நிற சுடிதாரில், சின்ன க்ளிப்புக்குள் அடங்காத கூந்தலுடன், சிவந்த கன்னங்களுடன் கொள்ளை அழகாய் இருந்தாள். அவனுக்குள் ஹார்மோன்கள் எல்லாம் வேலை செய்தது.

அவள் நெற்றியில் தன் இதழ் பதித்தான்.

"ஈவ்னிங் சிக்ஸ்க்கு பீச்சுக்கு வா... உன் கூட நிறைய பேசனும்... " என்றான்.

"சரி கண்ணா..." என்று கண்ணடித்தாள்.

"போடி.. யாராச்சும் வரப் போறாங்க...." என்று மனமே இல்லாமல்த்தான் சொன்னான்.

"சொன்ன டைம்க்கு வா....." என்று நினைவூட்டினான்.

"ஓகே கண்ணா..." என்று சொல்லிவிட்டு நகர்ந்தவள் திரும்ப வந்து அவன் கன்னத்தில் தன் முத்திரையை பதித்துவிட்டுச் சென்றாள்.

" கள்ளி......" என்று அவன் அதையும் ரசித்தான்.

ஸ்வப்னா நளனின் முறைப்பெண்.அவளைப் பற்றி போகப் போக தெரிந்து கொள்வோம். அவள் ஸ்வாரஸ்யமானவள்.

சிறிது நேரம் கழித்து கீழே சென்று பிடிக்காத உப்புமாவை சிரமப்பட்டு வயிற்றுக்குள் தள்ளினான்.

"அப்பா எங்கம்மா...?"

"மார்க்கெட் போயிருகார்ப்பா.... இப்ப வந்திடுவார்.." என்றார் மகேஸ்வரி.

"சஞ்சனா எங்கம்மா...?"

"ஸ்வப்னா வந்தா.. அவ கூட போயிருக்கா.. சஞ்சுவோட ப்ராஜெக்ட்க்கு ஏதோ ஹெல்ப் வேணும்னு ஸ்வப்னாகிட்ட கேட்டிருந்தாளாம். அதான் ரெண்டு பேரும் எங்கயோ போயிருக்காங்க. இந்தா உங்க அத்தை குலாப் ஜாமுன் அனுப்பியிருக்காங்க. சாப்பிடு.. " என்று கொண்டு வந்து வைத்தார்.

"அப்படியா..." என்று அதை ரகசியமாய் ரசித்துச் சாப்பிட்டான். அவன் ரசித்து சாப்பிடுவதை பார்த்தால் மகேஸ்வரி பத்ரகாளியாக மாறிடுவார் என்று அவனுக்குத் தெரியும். ஸ்வப்னாவின் அம்மா ரோகிணியின் மீது அத்தனை பாசம்.

"அம்மா.. எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு.. நான் போயிட்டு வாரேன் .." என்று தப்பித்துச் சென்றான்.

அப்பாவிடம் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்ற பதட்டம் அவனுக்கு.

"சரிப்பா.. பின்நேரம் சீக்கிரம் வாப்பா.. ஒரு இடத்துக்குப் போகனும்.."

"எங்கம்மா....?"

"நீ வா.. சொல்றேன்..." என்று புதிர் போட்டார் மகேஸ்வரி.

"சரிம்மா..." என்று சொல்லிவிட்டு காதலியை சந்திக்க போட்ட அப்பாய்ன்மென்ட்டை மறந்து விட்டு தன் கார் சாவியை சுழற்றியபடியே வெளியேறினான். அப்பாவிடம் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான். ஆனால் ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு எத்தனை நாள் தான் தப்பிப்பது.

நேராக வண்டியை தன் நண்பன் வீட்டிற்கு விட்டான். அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு மதிய நேரம் வீட்டிற்கு திரும்பினான்.

சஞ்சனா வந்திருந்தாள். அப்பா பத்திரிக்கையோடு இணைந்திருந்தார். அனைவரும் ஒன்றாக உணவருந்தினர். மகேஸ்வரியின் சமையல் சுமார் தான். ஆனால் யாரும் வாயை திறந்து ஒன்றும் சொல்லிவிட இயலாது. சொன்னால், அங்கு ஒரு யுத்தமே நடந்துவிடும். மேற்கொண்டு பேசினால் 'அப்ப இனி நீங்களே சமைச்சிக்குங்க..' என்று கறாராய் பதில் வரும். அதற்கு பிறகு யார் சமைப்பது. ஆனால் நளன் அருமையாக சமைப்பான். எங்கு கற்றுக்கொண்டானோ தெரியவில்லை. அம்மாவுக்கு உடல்நலக்குறைவாக உள்ள போதெல்லாம் அவன் கைவண்ணம் தான். சஞ்சனா அவ்வப்போது காய்கறிகளை நறுக்குவதோடு தன் கடமைகளை முடித்துக் கொள்வாள். ஒரு வழியாய் சாப்பாட்டுக் கடை முடிந்ததும் அனைவரும் குட்டி ஓய்வுக்கு தயாராகி அறைக்குள் புகுந்துக் கொண்டனர்.

நளன் தன் அறையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு கனவுலகத்தில் இருந்தான். காலையில் நடந்த சம்பவத்தை அசைப் போட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.
Nirmala vandhachu ???
 
Top