Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!- 23

Advertisement

Miloni

Active member
Member
மறுநாள் சைதன்யா மிதுவின் அறைக்கு சென்றபோது கருணாகரனும் கூட இருந்தான்..
சிறிது நேரம் அவனிடம் ஆபிஸ் தொடர்பாக பேசிவிட்டு சரி கருணாகரன் அரவிந்த்திடம் மறுபடியும் வேலைக்கு வருவது பற்றி பேசி விட்டீர்களா என அவளை பார்த்துக்கொண்டே கேட்க அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..
சொல்லியாகிவிட்டது நாளைக்கு வந்து விடுவார் சார் என அவர்களிடம் விடை பெற்றுச் சென்றான்..
திரும்பவும் அவள் முகத்தையே பார்க்க எரிச்சலுற்று என்ன சார் என்றாள்..
இல்லை நீ சொன்னபடி அரவிந்தை வேலைக்கு அழைத்தாயிற்று நன்றி சொல்வாயோ என பார்த்தேன்..
அவன் பதிலில் நான் எதற்கு சார் நன்றி சொல்ல வேண்டும் நீங்கள் செய்த தவறை எடுத்துச் சொன்னேன் அதை சரி செய்கிறீர்கள் இதில் எனக்கு என்ன இருக்கிறது என எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்..
மிதுவும் சில வினாடி அவளையே பார்த்தவன் பிறகு திரும்பிக்கொண்டான் ஆனால் அவனது கோபத்தில் அந்த அறையே வெப்பமாக இருந்தது..
வீணாவை மூன்றாவது முறையாக மிது அழைக்கிறான் அவள் ஒன்றும் முட்டாள் அல்ல தன்னிடம் பேசவே யோசிப்பவன் மீண்டும் மீண்டும் அழைக்கும்போதே சந்தேகம் வந்தது..
காரணமாக உன் ஆடை வடிவமைப்பு சரியாக வந்திருக்கிறதா என பார்த்து செல் என்றுதான் கூறுவான் முதல்முறை தன்னை அழைத்த போது அவனே தன்னை போன் செய்து அழைத்து இருக்கிறானே என ஆசையாக தான் பேசச் சென்றாள்.. ஆனால் அறைக்குள் சைதன்யா வந்த பிறகு தான் பேசுவான் அது வரை அவள் என்ன பேசினாலும் "ம்" "ம்ஹூம்" தான்..
இரண்டாவது நாளே கண்டு கொண்டாள் அவர்களுக்குள் ஏதோ ஊடல் என அதற்கு என்னை வைத்து நாடகமாடுகிறான்..
அவளுக்கு கோவம் வந்தது என்னை உபயோகப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நான் இளக்காரமாக போய் விட்டேனா கண்டிப்பாக உங்கள் இருவரையும் பழிவாங்குவேன் இந்த முறை ஒரு முடிவுடன் வீணா,, மிது அலுவலகம் சென்றாள்..
வழக்கம்போல் சைதன்யா முன்னால் அவன் அவளிடம் இயல்பாக பேச இதுதான் சாக்கு என்று மிதுவின் கன்னத்தில் முத்தமிட்டாள் வீணா..
சைதன்யாவுக்கு அதிர்ச்சி என்றால் மிதுவுக்கு அதைவிட அதிர்ச்சி..
ஒன்றும் சொல்லாமல் சாரி சார் என்று கலங்கிய கண்களுடன் சைதன்யா வெளியே சென்றாள்..
மிது முகத்தை கடுமையாக்கி வீணாவைப் பார்த்தான் "வீணா என்ன அநாகரிகம் இது"..
அவள் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு என்ன அத்தான் நீங்கள் தானே என்னை போன் செய்து அழைத்தீர்கள்..
ஆமாம் உன்னை நீ டிசைன் செய்ய கொடுத்த ஆடைகளை சரி பார்க்க கூப்பிட்டேன் கடைசி நேரத்தில் பிரச்சினை செய்வாயென தான் உனது ஆடை தைத்து முடியும் வரை இங்கு வரச்சொன்னேன் உன்னுடையதை மட்டும் முன்னால் முடிக்கும் படி சொல்லி விட்டேன்..
இன்றே சரி பார்த்து வாங்கிச் செல் இனி நீ அலுவலகம் வரத்தேவையில்லை ஒருவேளை ஆடையில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமென்றாலும் டிரைவரிடம் கொடுத்து அனுப்பு அதற்காக நீ வரவேண்டாம் விழா தினத்தன்று வந்தால் போதும் என முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டான்..
அவளுக்கு கோபம் வந்தாலும் சைதன்யா கண்ணீருடன் சென்றதில் மகிழ்ச்சிதான் உண்மையில் அவள் ஆடை சரியில்லை என சொல்லி பிரச்சனை செய்யலாம் என தான் நினைத்திருந்தாள் அவன் கண்டு கொண்டது மட்டுமல்லாமல் அதற்கு தீர்வும் தன்னை வைத்தே கண்டுபிடித்து விட்டானே..
வெளியே வந்து நேராக சென்றது சைதன்யாவின் அறைக்கு தான் அவள் எய்த அம்பு குறி தவறாமல் சென்றதா என பார்க்கவேண்டும் அல்லவா வாய்ப்பிருந்தால் இன்னும் கொஞ்சம் அவளை குழப்பிவிடலாம்..
ஆனால் அவள் எதிர்பார்த்தது போல எதுவும் நடைபெறவில்லை மாறாக அவள் அருகில் இருந்து பேசவிடாமல் சுந்தரியும் கிறிஸ்டியுமே வீணாவின் தேவைகளை கவனித்தார்கள்..
ஏற்கனவே அவள் வந்த இரண்டு முறையும் சைதன்யா கவலையாக அமர்ந்து இருப்பதை கவனித்த சுந்தரி இனி அவள் வந்தாள் அக்கா அருகிலேயே விடக்கூடாது என செல்வியிடமும் கிறிஸ்டியிடமும் சொல்லியிருந்தாள்..
கிறிஸ்டிக்கும் அவளை முன்னாலேயே தெரியும் அல்லவா மிது வீட்டில் அவள் நடந்து கொண்டதை இருவரிடமும் சொல்லியிருந்தாள் அதுவும் அவர்களது கோபத்திற்குக் ஒரு காரணம்..
அது மட்டுமல்லாமல் நிரஞ்சனாவும் சைதன்யா அருகில் ரொம்ப நேரம் வீணாவை விட வேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தாள் எல்லாம் சேர்ந்து தான் அவளுக்கு அரணாக இப்படி நின்று கொண்டிருந்தார்கள்..
வீணாவிற்கு புரிந்தபோனது அவர்கள் வேண்டுமென்றே சைதன்யாவுடன் பேசவிடாமல் செய்கிறார்கள் எத்தனை நாட்கள் இவர்கள் அவளை காப்பாற்ற முடியும் எங்கே போக போகிறாள் பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக அவர்களைப் பார்த்தபடி கிளம்பி சென்றாள்..
அவளது பார்வையை பார்த்தாயா அக்கா ரொம்பத்தான் திமிரு என்னிடம் ஏதாவது இது போல பேசப்படும் கண்ணை நோண்டி எடுத்து விடுகிறேன்..
அவர்கள் பேசும் போதே அங்கு வந்திருந்த சந்தோஷ் கூட சைதன்யாவை திட்டிக்கொண்டிருந்தான் நாம் காலேஜ் படிக்கும்போது எல்லாம் எவ்வளவு தைரியமாக ஒரு தப்பு என்றால் சண்டைக்கு போவாய் அப்பொழுது இருந்த சைதன்யா இப்போது எங்கே போனாள்..
வீணா இவ்வளவு பேசியும் அவள் வெளியில் வரவில்லையா இல்லை வந்தவளை நீயே அடக்கி விட்டாயா..
எனக்கும் அப்பப்போ பழைய தனு வெளியில் வந்தாள் சந்து நாங்கள் போனது அவர்கள் வீடு என்ன இருந்தாலும் அவள் அவர்கள் வீட்டுப் பெண் இல்லையா அங்கே நான் அவளிடம் எதிர்த்துப் பேசினால் அவர்களுக்கு தான் சங்கடம்..
அவள் என்னிடம் ஒருநாள் கண்டிப்பாக மாட்டுவாள் அப்போது நான் கற்று வைத்திருக்கும் மொத்த வித்தைகளையும் அவள் மீது இறக்கி விடுகிறேன் என சிரித்தாள்..
நான் கராத்தேயில் பிளாக் பெல்ட் தெரியுமா சுந்தரி வேண்டுமானாலும் சந்துவிடம் கேட்டுப்பார்.. அவர்கள் அவனைப் பார்க்க உண்மைதான் அதைவைத்து இவள் அடிதடியில் இறங்கி ஹச்ஓடி அறை வாசலிலேயே தான் எப்பொழுதும் நிற்பாள்..
சந்து நீ எதைச் சொல்ல சொன்னால் எதை சொல்கிறாய் என் ரகசியங்களை இவர்கள் முன்னால் உளறுகிறாய் சும்மாவே இவர்கள் என்னை ஓட்டுவார்கள்..
அக்கா உண்மையிலேயே நீ பிளாக் பெல்ட்டா உன்னை பார்த்தால் அப்படி தெரியவில்லையே..
பார்த்தால் தெரியாது அடி வாங்கினால் தான் தெரியும் வேண்டுமானால் ஒரு டெமோ காமிக்கவா என்றாள் சைதன்யா..
ஐயோ அக்கா உனக்கு ஏன் இந்த கொலைவெறி நீ சாதாரணமாக அடித்தாலே நான் தாங்க மாட்டேன் இதில் கராத்தே அடி வேறு என்றால் நான் மற்கையா தான்..
எங்களிடம் ஒன்றும் உன் வீரத்தை காட்ட வேண்டாம் அதற்கு எம்டி சார் தான் பொருத்தமானவர் அவரிடமே இந்த அடிதடியெல்லாம் வைத்துக்கொள் எனவும் சைதன்யாவுக்கு முகம் சிவந்து போனது..
சந்து சார் அரியவகை போட்டோக்களை எல்லாம் கண்காட்சிக்கு வைப்பார்கள் தானே..
அவனும் ஆமாம், ஆனால் ஏன் இப்போது கேட்கிறாய் என சந்தேகமாக வினவினான்..
இல்லை என்றும் இல்லாத திருநாளாய் சைதன்யா அக்கா வெட்கமெல்லாம் படுகிறாள் அதை போட்டோ எடுத்து கண்காட்சிக்கு வைத்தால் நமக்கு நல்ல பணம் வரும் இதை யோசித்துப் பாருங்களேன்..
நீ சொல்வதும் சரிதான் சுந்தரி, வெட்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பாள் இப்போது இவளிடமிருந்து கிலோ கிலோவாக உருவலாம் போல் இருக்கிறது..
அப்புறம் ஏன்டி லேட் செய்கிறாய் இரு உடனே போய் கேமராவை எடுத்து வருகிறேன் அக்காவை படம் பிடித்து விடலாம் என்றாள் செல்வி..
என்னடி எல்லோரும் சேர்ந்து என்னை கிண்டல் செய்கிறீர்களா..
அது இப்போதான் உனக்கு புரிந்ததா கிறிஸ்டியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்..
ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா ஒன்னு கூடிட்டாய்ங்க என வடிவேலு பாணியில் சொல்ல அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது..
உரையாடலை காதில் வாங்கியபடி இருந்த சரவணன் கூட முதலில் வாய் திறக்கவில்லை எல்லோரும் கிண்டல் செய்யவும் வாய்ப்பை விடாமல் அவனும் ஏன் சைதன்யா அவர்கள் சொல்வதையும் முயற்சித்துப் பார்க்கலாமே..
யூ டூ புரூட்டஸ் நீங்களுமா சரவணன் நான் உங்களிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை..
இல்லை சைதன்யா இது வெற்றிகரமாக அமைந்தால் நீங்கள் வெட்கப்படும் விதவிதமான புகைப்படத்தை அங்கே வைத்து புதிய தொழில் தொடங்கி விடலாமே..
அவனை முறைத்தவள் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்..
இப்பொழுதெல்லாம் இவர்கள் குழுவில் சரவணனும் இணைந்து கொள்ள ஆரம்பித்தான் முன்பெல்லாம் சுந்தரி ஒதுங்கி போகிறாளே என அவர்களோடு இணைய மாட்டான் இப்போது அவள் அவனுடைய காதலுக்கு ஓகே சொல்லி இயல்பாக பேச ஆரம்பிக்கவும் அவர்களோடு இணைந்து கொண்டான்..
என்னக்கா அவர் பாட்டுக்கு தானே இருக்கிறார் அவரை ஏன் வம்பிழுக்கிறாய்..
ஐயோ பார்ரா, என்னம்மா உன் ஆளை சொன்னதும் அவருக்கு சப்போட்டா இவ்வளவு நேரம் என்னை எல்லாரும் மாறி மாறி கலாய்சிங்க..
இந்த முறை வெட்கப்படுவது சுந்தரி முறையானது..
அக்கா இவ போட்டோவையும் கண்காட்சிக்கு கொடுக்கலாம் ஆனால் மேலே அரிய வகை உயிரினம் வெட்கப்படுகிறது என போடலாம் - செல்வி..
ஏய் என்னடி நக்கலா - சுந்தரி
உண்மையை தான்டி சொல்கிறேன் பேபிமா பிலீவ் மீ..
அக்கா எப்படியோ நீ பழைய பார்முக்கு வந்துட்ட இதே மாதிரி இருந்தாலே போதும் என சிரித்தாள் சுந்தரி..
கூட சேர்ந்து சிரித்துவிட்டு வேலைகளை பார்க்காமல் வெட்டி அரட்டையா ஒழுங்காக எல்லோரும் இங்கிருந்து ஓடுங்கள் விழா தொடங்குவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது ஞாபகம் இருக்கிறதா இல்லையா என மிரட்டினாள்..
பேச்சை மாற்றி விட்டாயா சரி பிழைத்துப் போ மறுபடியும் மாட்டுவாய் அல்லவா அப்போது பார்த்துக் கொள்கிறோம் என கிறிஷ்டி அவளது அறைக்கு கிளம்பி சென்றாள்..
அவள் சென்றதும் நல்லவேளையாக மிது சாருடைய குடும்பத்தினர் ஆடைகளை முடித்துவிட்டோம் பொட்டிக் வேலைகள் கண்காட்சிக்கு வைக்க வேண்டிய ஆடைகளை முடித்துவிட்டு சந்தோஷிற்கு வேறு உதவவேண்டும் அவள் குரலில் உண்மையான கவலை தெரிந்தது..
விடு அக்கா அதெல்லாம் சீக்கிரமாக முடித்துவிடலாம் கவலைப்படாமல் நீ போய் MD சாருடன் கனவில் டூயட் பாடு எனவும் இவள் அடங்கவே மாட்டாள் என தலையில் தட்டி விட்டு வேலையை பார்க்கச் சென்றாள்..
அவள் சென்றதும் சுந்தரி அருகில் சென்ற சரவணன் ஈவினிங் கிளம்பி இரு வெளியில் செல்லலாம் நான் வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறி சென்றான் அவள் வெட்கத்துடன் சரி என தலையாட்டி கொண்டாள்..
செல்வி சொன்னது சரி தான் உன் புகைப்படத்தையும் இப்போது கண்காட்சிக்கு வைக்க வேண்டும் போலிருக்கிறது இதெல்லாம் கூட உனக்கு தெரியுமா என கேட்க அவள் நிமிர்ந்து அவனை முறைத்தாள்..
ஐயோ முறைக்கிறாளே நான் எஸ்கேப் என ஓடிவிட்டான்..
சந்தோஷுக்கு தான் வேலை அதிகம் இருந்தது இரண்டு துறை சார்ந்தவர்களும் வருகிறார்கள் அரசியல்வாதிகள் பெரிய அதிகாரிகள் என அவர்களை வரவேற்பது பத்திரமாய் ஹோட்டலுக்கு அழைத்து வந்து அழைத்துச் செல்வது என பல தரப்பட்ட வேலைகள் இதையெல்லாம் ஆபீஸ் நிர்வாகமே கவனித்துக் கொண்டாலும் கருணாகரனுடன் இணைந்து ஒரு சில வேலைகளை சந்தோஷும் செய்ய வேண்டியிருந்தது..
அதனால் இப்போது அடிக்கடி சந்தோஷ் கம்பெனி வந்து சென்றுகொண்டிருந்தான் வரும் பொழுதெல்லாம் இவளோடு பேசாமல் சென்றதில்லை..
மிது மேல் இருந்த கோபத்தில் அவளும் சந்து வந்தால் கொஞ்சம் அதிக நேரம் பேசுவாள் உண்மையில் அவர்களுக்கும் ஆலோசிக்க கூட இப்பொழுதெல்லாம் நேரமே கிடைப்பதில்லை எனவே அதிக நேரம் பேச அதுவும் ஒரு காரணம்..
பேசிக்கொண்டிருக்கும்போது மிது வந்தால் வேண்டுமென்றே சந்தோஷிடம் சிரித்து பேசுவாள் ஆனால் அவன் அவளை உறுத்து பார்ப்பதுடன் சரி வேறு எதுவும் சொல்வதில்லை..
இரண்டு நாட்கள் அவனை முறைத்துக் கொண்டிருந்த சைதன்யாவுக்கு என்ன செய்தாலும் ஒன்றும் பேசாமல் சென்ற மிதுவைக் கண்டு கோபம் தான் வந்தது..
 
அருமையான பதிவு சைந்துவை கடுப்பேத்த வீணாவை பயன் படுத்த அவள் இவர்கள் நாடகத்தை கண்டுகொண்டு அவர்களுக்கே அதிர்ச்சி குடுத்து அவள் வேளையை சிரப்பா முடிச்சிட்டு போய்ட்டா, மதுவும், சைந்துவும் எப்ப தான் காதல்லை வெளிப்படுத்துவர்களோ ???♥️♥️♥️???
 
அருமையான பதிவு சைந்துவை கடுப்பேத்த வீணாவை பயன் படுத்த அவள் இவர்கள் நாடகத்தை கண்டுகொண்டு அவர்களுக்கே அதிர்ச்சி குடுத்து அவள் வேளையை சிரப்பா முடிச்சிட்டு போய்ட்டா, மதுவும், சைந்துவும் எப்ப தான் காதல்லை வெளிப்படுத்துவர்களோ ???♥♥♥???
எங்கே இவர்கள் தான் போட்டியிடுவதிலேயே இருக்கிறார்களே.. மிக்க நன்றி sis..
 
Top