Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா ஷன்முகமின் காதலால் நெய்திடு 2

Advertisement

Admin

Admin
Member








:) :) :)
 
மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்

ஹா ஹா ஹா
நிலவழகிக்கு ஜோடி ஏ சி பி ஸார் கலையரசனா?
இதுவும் நல்லாத்தானிருக்கு
அப்போ அப்பாவுக்கு கொடுத்த வாக்கை நிலா மீறிடுவாளோ?
கலையுடன் காதலில் விழுந்திடுவாளோ?

ஹா ஹா ஹா
எட்டாப்பு ஒன்பது படிக்கும் பெண்ணில்லை போலீஸ்கார்
நிலா பத்தாப்பு படிக்கும் பெண்ணுங்கோ

பரவாயில்லை
சுவாதிக்கு உதவி செய்யத்தான் கலையரசன் அவள் வீட்டுக்கு வந்திருக்கிறான்

சுவாதியின் புருஷன் அந்த அறிவுகெட்ட குமார் பைனான்ஸ் கம்பெனி நடத்தி பணத்தை அமுக்கிட்டானா?
பணம் கொடுத்தவங்களுக்கு பயந்து எங்கோ ஓடி விட்டானா?

அச்சோ
அப்போ இரண்டு குழந்தைகளையும் படிப்பைக் கூட முடிக்காத சுவாதி எப்படி காப்பாற்றுவாள்?
 
Last edited:
அருமையான பதிவு கிரிஜா???.ஊரை விட்டு வேற ஊர் வந்து ஏழு மாசம் ஆகியும் சுவாதியை தேடி வந்து மிரட்டறதை போல அவ கணவன் என்ன செஞ்சான்???.வசூல் போனவன் அப்படி என்ன ஆபத்துல மாட்டியிருப்பான்????.சுவாதி அவ குழந்தைங்க உயிருக்கு ஆபத்துன்னு தகவல் சொன்னவன் ஏன் சொன்னான்?????.

தீவிரவாதியா இருந்தா இன்னேரம் போட்டு தள்ளியிருப்பாங்க என கலையரசன் சொல்றதும் சரிதான்???.கத்துக்கிட்ட வித்தையை சரியான நேரத்துல உபயோகப்படுத்தி ஒரு பெண்ணை காப்பாத்த முடியாதவன்,ஆயிரம் பேர் முன்னாடி சண்டை போட்டு என்ன பிரயோஜனம்????.

தன்னலம் யோசிக்காம பிறர் நலம் யோசிக்கறவங்க தான் அதுக்கு சரி வருவாங்கன்னு ஓவரா பில்டப் கொடுக்கறாரேன்னு நெனச்சா,"அசிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ்" ஆக கலையரசன் ஆகிட்டான்னு இன்ப அதிர்ச்சியை கொடுக்கறார் சூப்பர்???.

ரெண்டு வருசம் தொடர்ந்து கோல்ட் மெடல் வாங்கியவன் போலிஸ் ஆனதை சொன்னாலும் நம்ப மாட்டாரா???.கலையரசன் விளையாட்டு விளையாட்டுன்னு இருக்கான்னு மயில்சாமி வேதனை படறாரே???.கிரிக்கெட்கு கொடுக்கற முக்கியத்துவம் வேறு விளையாட்டுக்கு கொடுக்கறதில்லைனு அவர் நினைப்பதும் தவறில்லை????.

எதே...கோபத்தை கட்டுப்படுத்த முத்தம் கொடுக்க சொல்வானா???.இது என்ன புதுசா இருக்கு, பசங்கட்ட சொன்னது சரி.பொண்ணு கிட்ட கேட்டிருக்கான்.சின்ன நண்டு,சில் வண்டுன்னு பேர் வைக்கிறதும்,அடிச்சதை நெனச்சு கோபப்படாம சிரிக்கிறதும் சரியில்லையே தம்பி????.
 
Last edited:
Top