Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 2 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
விறுவிறுப்பான பதிவு சரண்யா☺☺☺.விஜய் நிச்சயத்துக்கு வந்தான்,சொன்னபடி நிச்சயத்தை நிறுத்திட்டு போயிட்டான்??.ஏன் இப்படி செஞ்சான்,என்ன நடந்ததுன்னு தெரியலையே???.

அருமை, பெருமை, பொருமை என சொல்றவன் எருமைனு மனசுல நெனச்சுக்குவானோ???.
விஜய் மனசுல வந்த அந்த மஞ்சள் முகம் அம்மாவா இல்லை அக்காவா அவங்க இப்போ எங்கே இருக்காங்க????.

அருமை நாயகம் தாய்மாமாவா,அத்தை வீட்டுக்காரரா???.வசந்தி,அருமை நாயகம்,பார்வதி மேல கோபத்துல இருக்க,தனக்கு ஆதரவாக பேசிய ஒரே ஜீவன்னு விஜய் நினைக்க,பார்வதி நான் வேணும்னு செய்யலை என பவித்ராவிடம் சொல்ல என்ன தான் நடந்தது????.

நடந்ததை மறைச்சு கல்யாணம் பண்ண பார்த்தாங்கன்னு சொல்றதை விட,பொண்ணுக்கு விருப்பம் இல்லைனு சொல்லட்டும் என பவித்ரா சொல்வது சரிதான்.அருமை நாயகம் சொல்லனும் என விஜய் நெனச்சதை பவித்ரா சொல்லிட்டா???.

என்ன கைய புடிச்சு இழுத்தியான்னு பஞ்சாயத்து பண்றாங்களா????.வாத்திக்கு ரொம்பவும் குசும்பு ஜாஸ்தியா இருக்கு???.வந்திருந்த சொந்தம் எல்லாரும் விஜய்க்கு,பவித்ராவை கல்யாணம் செஞ்சு தரலாம்னு சொல்லியும் அருமைக்கு ஏன் இத்தனை பிடிவாதம்????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

எனக்கென்னவோ விஜயநெடுமாறனிடம் தப்பு இருப்பதாக தோன்றவில்லை
அருமைநாயகமும் அவருடைய லட்சுமணன் தம்பி பழனியப்பனும் ஏற்கனவே இழுத்து விட்ட வினைக்கு விஜய் இப்போ பதிலடி கொடுக்கிறான்
அவ்வளவுதான்
உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகணும், அருமைநாயகம்

பழைய சம்பவத்தில் விஜய்க்கு என்ன இழப்பு வந்தது?
பெற்றோர் இறந்து விட்டார்களா?
இல்லை சகோதரி யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டதா?

அதெல்லாம் சரிதான், மிஸ்டர் விஜய் வாத்தி
உங்கள் சண்டையில் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் இருக்கே
அதையும் கொஞ்சம் ரோசன பண்ணுங்க வாத்தி

பவித்ராவுக்கும் விஜய்க்கும் நிச்சயம் மட்டும் நடந்ததா?
இல்லை கல்யாணமே நடந்து விட்டதா?

ஏற்கனவே கல்யாணமான பெண்ணுக்கா அருமையும் பழனியும் வேறு மாப்பிள்ளை பார்த்தாங்க?
எங்கேயோ இடிக்குதே
 
Last edited:
Top