அருமையான பதிவு சரண்யா???.இவ்வளவு நேரம் இளங்கோவோடு பேசிட்டு இருந்த அனலரசு,முகிலன் தோப்புல இருந்து வீட்டுக்கு வந்ததும் ஓவியாவை போய் தூங்க சொல்றதும், வேதாவை அரட்டை அடிச்சது போதும் போங்கன்னு விரட்டறதும் சரியில்லை????.
அந்த காலத்து கிராமத்து பெரிய வீடு,வீட்டுக்குள்ள இருந்தாலும் குளுமையா இருக்கறதை போல கட்டியிருக்க வீட்டை இடிச்சுட்டு கட்ட சொல்றானே???,இவனென்ன லூசா??.குனிஞ்சு போக இஷ்டமில்லைனா இங்கே வராம ஊர்ல இருக்க வேண்டியது தானே????.
முகிலன் படிப்பு,வேலை எல்லாம் அனலரசு விருப்பப்படி என நெனச்சா,அவன் போடற சட்டையும் தன் விருப்பப்படி போடனும்னு நெனைக்கறானே லூசுப்பய???.முகிலனுக்கு தான் அனலரசு நடந்துக்கற விதம் பிடிக்கலைன்னு நெனச்சா,மனைவி,மகள்,மகன்,மாமனார் என குடும்பத்துல யாருக்குமே இவனோட நடத்தை புடிக்கலை?????.
சின்ன வயசுலேயே கல்யாணத்தை பத்தி பேசி ரெண்டு பேர் மனசுலேயும் ஆசைய வளர்த்துட்டு, இப்ப அனலோட அடவாடியால எதுவும் தவறா நடந்திுடுமோன்னு பெண்ணோட அம்மாவா வேதா பயப்படறதும் சரிதான்???.இளங்கோ எதை கண்டு அனல் சொல்றதுக்கெல்லாம் ஆடறார்....
வீட்ல தான் பிரச்சனைனா,வேலை செய்யற இடத்துலேயும் முகிலுக்கு பிரச்சனையா??.சஞ்சய்கு இதை பற்றி தெரியுமா???.கல்யாண யோகம் வர ஒன்றரை வருசம் இருக்க,ஓவியாவுக்காக முகிலன் பொறுத்து போக,அனலரசு இன்னும் என்னென்ன அலப்பறை பண்ணுவானோ????.