அருமையான கதை சரண்யா????.திருமணத்துக்கு முன் கடத்தப்படும் நிலாவை, ஆரவ் காப்பாற்றுவதும்,தலையில் அடிபட்டதால் நிலா பழைய நினைவுகளை மறந்து விடுகிறாள்???.
நிலாவை கண்டதும் காதலிக்கும் ஆரவ் அவளை திருமணம் செய்வதும் சந்தோஷமாக செல்லும் அவர்கள் வாழ்க்கையில்,நிலாவுக்கு ஏற்படும் விபத்தால் பழைய நினைவு திரும்ப, ஆரவ்வுடன் திருமணமானதை மறந்து நிலா ஊருக்கு சென்றபின் ஏற்படும் திருப்பங்கள்???,ஆரவ் பற்றி நிலா தெரிந்து கொண்டாளா,ஒன்று சேர்ந்தார்களா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது???.
அர்ஜூன்,ஸ்டெபியின் காதல் திருமணம்,தனக்கு குழந்தை பிறக்காது என தெரிந்து அர்ஜூனை பிரிவது,அர்ஜூன் அவள்மீது கொண்ட காதலை புரிந்து இணைவது அருமை????.
ஜீவா,தன் தந்தை நிலாவுக்கு திருமணமானதை மறைத்து வேறு திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததை தெரிந்து அவரை வெறுப்பவள்???,கார்த்திக்கை திருமணம் செய்து தனக்கு பிறக்கும் முதல் குழந்தையை ஸ்டெபியிடம் கொடுத்து அனைவர் மனதையும் கவர்ந்து விட்டாள்????.
தினகரன்,மதி,ஆரவ்,நிலா திருமணம் நடைபெறவும்,அவர்கள் குழந்தையை காத்ததும் இவர்களே???. சேகரன் அக்காவுக்கு செய்த சத்தியத்தால் மனைவி,மகள்கள் முன் தன்னுடைய மதிப்பை இழந்தவர்,தயா கோழைதனத்தாலும்,வள்ளியம்மையின் தவறான செயலாலும் காதலை இழந்தவன்.
ஆரவ்வின் தாத்தா மகனின் காதல் திருமணத்தை விரும்பாதவர்,தர்ஷினியை மருமகளாக ஏற்று, திருமணத்தை நடத்திய விதம் அருமை????.
அருமையான குடும்பகதை.எதிர்பாராத திருப்பங்கள்.நிறைவான முடிவு????.
ரீ-ரன் கதை என்றாலும்,படிக்காதவர்களுக்காக மறுபதிவு செய்ததற்க்கு நன்றி சரண்யா???.