என்ன ஒரு கனமான பதிவு சரண்யா. இதயாவின் பொருட்களை பேக் பண்ணும்போது இதயாவையும் ஒரு பொருளாக ..என்று எழுதியிருப்பது மனதுக்கு பாரமாக இருந்தது. ஆனால் நிதர்சனம் அதுதான். பொருளாக கலெக்டர் வீடு செல்லும் இதயா எப்படி ஒரு மனைவியாக மாறுவாள் என்பது இனி கலெக்டர்பாடு. ஆனால் சுதாகரன் குடும்பத்தையே இடம் மாற்றுவது கொஞ்சம் அதிகம்தான். அப்பா அம்மா அந்த ஊரில் இருந்தாலும் இதயா என்னவோ இனி திரும்ப அந்த வீட்டுக்கு போகப்போவதில்லை என்று தீர்மானித்துவிட்டதால் சுதாகரன் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாலும் யாருமில்லா அநாதையாக இருக்கும் இதயாவை கலெக்டர் எப்படி சமாதானப் படுத்தப்போகிறார் என்பதை அறிய காத்திருக்கிறோம் சரண்.