Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-15

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-15
“மாமா நீங்க மட்டும் எப்படி தனியா, உன்னுடன் நான்.“

“அம்மா! நல்லவளே, நடக்காதடி, இரண்டு நாள் முன்னாடி கல்யாணம் பண்ணிக்க சத்தியம் வாங்கின. அப்ப உனக்கு எல்லாம் தெரியும், தாலி கட்டாத விட்டுருப்பேன், நீ அழுததால கட்டினே. “

டேய் உன்னைய பத்தி தெரியாதா அதனாலதான சத்தியமே வாங்கின என சுந்தரி நினைக்க.

“ஏய்! எல்லாமே உன் பிளானா ஒரு வாரத்துக்கு முன்னாடி, உங்க அப்பன் வெறும் பையன் சொல்ல, பரதன் பரிவட்டம் கட்டனும் பேச அப்பறம் எங்க அக்கா பத்திரிக்கை எப்படி அடிச்சிது அதுக்குள்ள , சொல்லுடி எல்லாம் உன் பிளானா. “

“அது வந்து மாமா, பிளான் எல்லாம் இல்ல, உன் கட்டிக்கணும் எண்ணம்தான். “
“பரதா கூட கூட்டா என் பிரண்டுடி அவன். “

“ஆமாம் பொல்லாத பிரண்டு , முருகரையோ, பெருமாளையோ கும்பிட சொல்லிருக்கணும் , இந்நேரம் இரண்டு பிள்ளையை பெத்துருப்பேன், அவங்க கிடக்கிறான் விளங்காதவன். அவன்தான் உன் பிரண்டு, அவன் பொண்டாட்டி மைதிலி என் பிரண்டு, எனக்கு வேலை செய்யலைன்னா டைவர்ஸ் கொடுத்திடு சொல்லிட்டேன் பையபுள்ள பயந்திட்டான். “

“கேடி ,சரி அதவிடு , இப்படி உட்காரு மாமா உன்னை ஒண்ணும் சொல்லமாட்டேன். உங்க அப்பாகிட்ட பேசமாட்டியே இப்ப பேசற எனக்கு தெரியாத ஏதாவது நடந்திச்சா, இல்ல நீ எங்கிட்ட மறைக்கிறீயா. “

“அதெல்லாம் எதுவும் இல்லை“,

“இல்ல, உன் கண்ணு பொய் சொல்லுது, நீ சொல்லுறீயா இல்ல நமக்கு ஃபர்ஸ்ட் நைட் கிடையாது. “

“மாமா“ என்று அவனை பார்க்க
எப்போ சொல்லுறீயோ அப்போ.

மாமா, சொன்னாதான் ஃபர்ஸ்ட் நைட்டா அது சொல்லாமலே நடக்கும் பார்க்கிறீயா.

பார்க்கிறேன், என் சமந்தம் இல்லாமல் எப்படி நடக்குமுனு , கையில் ஒரு தலையனை பெட்சீட் எடுத்துக்கொண்டு “ நான் கீழே படுக்குறேன்,நீ மேல படு. “

“பூவா அப்ப இந்த பெட்மேல இருக்கிற பூவலெல்லாம் வேஸ்டா“.

“நீயே வேஸ்டுடி“ சொல்லிக்கொண்டே பெட்சீட் விரித்து அதில் படுத்தான்.
“பூவா“ ரோஸை தூக்கி அவன்மேல் போட்டு , ம்ம்,

“உன்னைய எப்படி கூல் பண்ணனும் சொல்லித்தரேன் சொன்னீயே, “
“ஒரு ஹேரும் பண்ணத்தேவையில்ல மூடிட்டு தூங்கு. “

இன்னோரு ரோஸை போட்டு, “போ பூவா லிப் டு லிப் கிஸ் தரேன் சொன்னே. “

“உன்ன“ ,பக்கத்திலிருந்த வாட்டர்கேனை எடுத்து கதவு மேல் எறிந்தான்.

“என்னடா ரொம்பதான் ஓவரா செய்யற, என் கனவ கலைச்சிட்டல, உன்ன என் பின்னாடி சுத்த வைக்கல இந்த சுந்தர பூவரசனின் சுந்தரியில்ல நான். “

“போதும்டி மங்கம்மா உன் சபத்தை எடுத்து குப்பத்தொட்டியில போடு, இன்னிக்கு கல்யாணம் ஆச்சே உன்மேல கையை வைக்க கூடாது பார்த்தேன், இல்ல மணமேடையில வச்சி வாங்கிருப்பேன். என்னைய தொந்தரவு பண்ணாத தூங்கு. “

சண்முகவேல் வீட்டில், ஏங்க சுந்தரி திருமணம் எப்படி நடந்தது. நல்லா நடந்தது பாக்கியம். நல்ல ஜோடிப்பொருத்தம் என் கண்ணே பட்டுட்டும் போல, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா. என்ன பூவரசன் தான் முறைச்சிட்டு இருந்தான், எம்பொண்ணு பார்த்துப்பா.

“நான் பண்ண தப்பு கொஞ்சமா,அந்தபுள்ள சொன்னமாதிரி எல்லா இருந்தும் என்னால நோயில்லாம இருக்கமுடியில. “

“டேய் நில்லுடா துரைப்பாண்டி “, என்ன மாமா. “இங்க பாரு பாக்கியம் உன் தம்பி என் பொண்ணை மிரட்டிருக்கான்.உனக்கு எவ்வளவு தைரியம். அவ என் பொண்ணு, இதுக்குமேல எதாவது பண்ண கொண்ணே போட்ருவேன் . நான் சும்மா இருந்தாலும் பூவரசன் இருக்க மாட்டான் , சொல்லி வை பாக்கியம். “

காலை 5.30 மணிக்கு பொழுது விடிய, தூக்கம் கலைந்து கண்விழித்தான் பூவரசன் அவன் பக்கத்தில் தலையனையை போட்டு படுத்திருந்தாள் சுந்தரி. இவ எப்போ வந்து படுத்தா.

அவ மூஞ்சியை பார்த்துக்கொண்டே எவ்வளவு பிடிவாதம் பூவரசனின் சுந்தரியாம், எங்கனா அடங்குதா, எல்லாம் பிளான் பண்ணி செஞ்சிருக்கா முனகிக்கொண்டே அவளை தூக்கி பெட்டில் படுக்க வைத்தான்.

குளித்து முடித்து, தேங்காய் லோட் ஏத்த தோப்புக்கு சென்றான். மணி 9.15 பெரியவீட்டிற்கு வந்தான். அவனுக்கு தட்டில் இட்லி , பூரி பரிமாறப்பட்டது “எங்க, உம் பொண்ணு“.

அவ உன்கிட்ட சொல்லலையா, “இல்லக்கா நான் காலையில தோப்புக்கு போயிட்டேன்“.

“ஏன்டா கல்யாண ஆயி முதல் நாள் இரண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடமாட்டிங்களா“

ஏன், எங்கே அவ.

“என்ன மாமா, உன்கிட்ட கூட சொல்லாம எங்க போயிட்டா“. அப்ப இவங்களுக்குள்ள ஒண்ணு நடக்கல போல என்று மனதில் நினைத்தாள் பவி.

போனை எடுத்து பார்த்தான், அய்யோ இரண்டு மிஸ்ட்டு கால் இருக்கு, போன் செஞ்சிருக்கா.
உடனே போனை போட்டான். எங்கடி இருக்க , சொல்லாம போவியா.

மாமா நான் ஆஸ்பிட்ட்ல்ல இருக்கேன் என் பிரண்டுக்கு டெலிவரி கொஞ்சம் கிரிடிக்கல் அதான் அவ பயந்து என்னைய கூப்பிட்டா, அதுக்குத்தான் போன் செஞ்சேன்.

“சரி நேரா பெரியவீட்டுக்கு வந்துடு“. சரி பூவா.

அ“ய்யோ பூவரசு சீக்கிரம் வா அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. “ உடனே காரில் ஏத்தி வேகமாக ஓட்டினான். போற வழியில் சுந்தரிக்கு போன் பண்ணி நீ அங்கேயே இரு அம்மாவுக்கு உடம்பு சரியில்ல உன் ஆஸ்பிட்டலுக்கு தான் வறோம் என்றான்.

எமர்ஜென்ஸி வார்டில் சேர்க்க , சிறிது நேரத்தில் வெளியெ வந்தாள் சுந்தரி . “மாமா பயப்பட ஓண்ணுமில்ல பீ.பி , சுகர் அதிகமாயிட்டு இந்த கல்யாண வேலை வேற நேரத்துக்கு சாப்பிட்டு இருக்க மாட்டாங்க போல அதான். “

“இன்னிக்கு நைட் ஆப்ஸர்வேஷன்ல இருக்குனும் நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்“. இதை கேட்ட பின்தான் பூவரசனுக்கு நிம்மதியா இருந்தது. நைட் பூவரசனும் , சுந்தரியும் பவளத்தாய் பார்த்துக்கொண்டார்கள்.

அடுத்த நாள் காலை முழுவது தூங்கினாள். சாய்ந்தரம் நைட் டியூட்டி சென்றாள்.
சுந்தரிக்கு கால் பண்ணினா பூவரசன், எங்கடி இருக்க பண்னை வீட்டுக்கு வரல, இனிமே கொஞ்ச நாள் இந்த வீடுதான் கிளம்பி வா.

மாமா, எனக்கு இன்னிக்கு நைட் டியூட்டி காலையில வீட்டுக்கு வரேன்.
நான் ஒரு வாரம் கழிச்சுதான் ஜாயின் செய் சொன்னேன், நீ என் பேச்ச கேட்கல, மாமா அது வந்து சொல்லும்போதே போனை கட் பண்ணினான்.

மூன்று நாள் இப்படியே சென்றது. இரவு மணி 7 மாமா, வீட்டுக்கு வரல, எங்க இருக்கீங்க
நான் தோட்டத்து வீட்ல இருக்கேன்,வரல போனை வை.

தோட்டத்து வீடு பம்புசெட்டு ஓட்டி ஓட்டுவீடு , அங்கே சென்றாள். பரதாவும், லோகும் கூட இருந்தார்கள். “பரதா , லோகு வீட்டுக்கு கிளம்புங்க சொல்லி, மாமா வீட்டுக்கு வாங்க“ .

“எவளோ ஒருத்தி என்னைய இப்படி பார்த்துப்பேன், அப்படி பார்த்துப்பேன் சொன்னா அவள தேடிட்டு இருக்கேன். “
“மாமா தப்புதான் வாங்க“

“உன்னைய யாரு நைட் டூயூட்டி போக சொன்னது. அக்காவே கேட்கறா எதாவது பிரச்சனையா உங்க இரண்டு பேருக்கும். அதவிட கல்யாண ஆயி அடுத்த நாளே நைட் டூயூட்டிக்கு போனா, ஊருல நீயேல்லாம் ஆம்பளையா கேட்கறாங்க. “

“மாமா ஏன் இப்படி பேசறீங்க. “

“கல்யாணத்து முன்னாடி நல்லாதான் இருந்தேன் , உன்னைய கட்டிக்கிட்டு நிம்மதியில்ல போடி“.

“நான் உன்மேல உயிரே வச்சிருக்கேன் மாமா, நீயில்லாம் என்னால உயிர் வாழ முடியாது, அழ ஆரம்பித்தாள்“

“வாழாத போய் சாவு நான் நிம்மதியா இருக்கேன் “

“நான் செத்தா நிம்மதியா மாமா “,போதும்டி உன் டிராமா போடி.

கண்ணைத்துடைத்துக் கொண்டே , ஓடிப்போய் கினற்றில் விழுந்தாள். அதை பார்த்த பூவரசன் பொம்மி என கத்திக்கொண்டே கிணற்றில் விழுந்தான். அங்க இங்க தேடி, உள்ளே போய் கொண்டிருந்த சுந்தரியை தூக்கி தன் தோளில் போட்டு கரை ஏறினான்.

லைட் வெளிச்சத்துக்கு அருகில் படுக்க வைத்து, பொம்மி கண்ணை தொற, உனக்கு வேற நீச்சல் தெரியாதே, பொம்மி பயமுறுதாத மாமாவால தாங்க முடியாது பேசு, வயிற்றில் கையை வைத்து அழுத்தினான் தண்ணீர் வரவில்லை. தன் நெஞ்சில் அவளை சாய்த்துக்கொண்டு, தப்புதான்டி இனிமே இப்படி பேச மாட்டேன் சாரிடி மாமாவ வேணா அடிச்சிகோ பொம்மி , என்னை அழ வைக்காத கண்ணத்தை தட்டினான் ,

பிறகு நெஞ்சில் கையை வைத்து அழுத்தினான் நெஞ்சில் தலையை வைத்து இதய துடிப்பை அளந்தான் நன்றாகவே துடித்தது. அவள் வாய் மேல் வாய் வைத்து மூச்சு கொடுத்தான். சிறிது நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு , அவள் உதடுகளை தன் இதழால் சிறை செய்தான். கொஞ்சம் நேரம் கழித்தே மணமே இல்லாமல் விடுவித்தான்.
மெல்ல கண் திறந்தாள் சுந்தரி, அவனை பார்த்து “சாரி மாமா சொல்ல “ அவளை அனைத்துக்கொண்டு வா வீட்டுக்கு போகலாம் இருவரும் கிளம்பினார்கள்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் கதவை தாழிட்டான், போ டிரஸ் மாத்து. ரூமுகுள் அழைத்து சென்றான். நான் சுடா பால் எடுத்துட்டு வரேன் , பூவரசன் கிச்சனுக்குள் சென்று பாலை சூடாகி எடுத்து வந்தான்.

மாமா எனக்கு குளிருது, தலையை முதல்ல துவட்டு பொம்மி சொல்லி பெரிய துண்டை எடுத்து துவட்டி விட்டான்.மாமா உன் தலையும் ஈரமா இருக்கு சொல்லி துண்டின் அடுத்த முனையை எடுத்து துவட்டி விட்டாள்.

இருவர் தலையும் மோதிக்கொண்டன. ஒருத்தர் ஒருத்தரை பார்த்துக்கொண்டன. அந்த மோனநிலையை கலைத்தாள் சுந்தரி.

மாமா , ம்ம், சட்டை ஈரமா இருக்கு.

கழட்டு. மெல்ல இரு கைகளால் சட்டை பட்டனை விடுவித்தாள், இருவர் நெருக்கத்தில் அவன் மூச்சை அவள் சுவாசிக்க. தன் கையை அவன் நெஞ்சில் வைத்து கண்ணை மூடினாள்.
 
Super epi sis indha sundhari ponnu than ella characters thaandi manasula nikkiranga herovaye thookki saptutanga andha alavukku arumaiya sundhari character uruvakki irunkinga ????very interesting ?
 
Top