Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-32 (prefinal)

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-32 (prefinal)

மெதுவா படி இறங்கி வா பொம்மி.

ஐயோ மாமா இப்பவே இப்படி பண்ணாதே இன்னும் மாசம் போகனும்.

சரிடி பொறுமையா வா.”அக்கா அம்மா”, பூவரசன் கூப்பிட இருவரும் ஹாலுக்கு வந்தார்கள்.

பரதா கையில் ஸ்வீட் பாக்ஸோடு நுழைந்தான். இந்தா மாப்பிள்ள எதுக்கு லட்டு வாங்கிட்டு வர சொன்ன.

ம்ம் சொல்றேன் மாமா பொறு, அக்கா, அம்மா இங்க வாயேன் , என்னடா என்ன விஷியம் பிஸினேஸ்ல லாபம்மா.

அதெல்லாம் இல்ல , நீங்க இரண்டு பேரும் பாட்டியாக போறீங்க. நான் அப்பா ஆக போறேன் சொன்னவுடனே பூவரசை தூக்கி சுற்றினான் பரதன்.

பாரேன்க்கா எப்பார்த்தாலும் சண்டையா போட்டாங்க... போ மாமா என்று பூவரசு வெட்கப் பட. சுந்தரி முறைத்தாள்,

அங்க என்ன வாழுது வருஷத்துக்கு ஒண்ணு ரீலீஸ் செய்யற, நீ எங்க மாமனை சொல்லுற.

ஆமாம் அப்படியே உன் மாமன் ஒண்ணும் தெரியாத பாப்பா , முதல்ல எனக்கு மாப்பிள்ள சரியா அப்பறம்தான் உனக்கு மாமன் புரியுதா. டேய் பூவரசு லட்டு கொடு எல்லோருக்கும் .நான் இன்னும் வாங்கிட்டு வரேன், வேலை செய்யறவங்களுக்கு கொடுக்கனும்.

பவளத்தாய் சுந்தரியை நெட்டி முறித்து திருஷ்டி எடுக்க, ஆனந்தவல்லி பெண்ணை கட்டிக்கொண்டாள். தன் கண்கள் கலங்க சந்தோஷமா இருக்குடி. முதல்ல சாமிக்கு அர்ச்சனை கொடுக்கனும்.... பவிக்கு போண் போட்டு சொல்லனும்.

என் குலத்தை வளர்க்க வந்த மகாலட்சுமி நீ, இந்த பாட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி கடைசியில எங்களுக்கு வேலை கொடுத்திட்ட

எல்லோரும் சிரிக்க... பொம்மியின் வெட்கத்தை ரசித்தான் பூவரசன். தாய்மை என்ற புரிப்பு பெண்ணுக்கு மேலும் அழகை சேர்க்கிறது.

இரவு சுந்தரியின் அறையில், மாமா பால் குடிக்காதே வந்திட்டிங்க இந்தாங்க, டம்பளரை நீட்ட .... ம்ம் அப்படி வை பொம்மி, நான் அப்பறம்மா குடிக்கிறேன் பூவரசன் சொல்ல.

அவன் பக்கத்தில் அமர்ந்தாள், பெட்டில் காலை நீட்டி சாய்ந்திருந்தான் கையில் செல்போன். ஆர்வமாக ஏதோ படித்துக்கொண்டிருந்தான்.

சுந்தரி கையால் அவனை சீண்டிக்கொண்டே இருந்தாள் ... ம்ம்ம் தொந்தரவு செய்யாதடி.

என்ன செய்றீங்க ஏதோ முக்கியமான வேலையா மாமா , பொம்மி கேட்க. அவளை நிமிர்ந்து பார்த்து, பொம்மி கூகுள்ல கருவுற்ற பெண் என்ன சாப்பிடனும், எப்படி கவனிக்கனும் படிச்சிட்டு இருக்கேன்.

மாமா நானே ஒரு டாக்டர் எனக்கு எல்லாம் தெரியும், இத வேற சர்ச் பண்ணிங்களா.

உனக்கு தெரியும் , ஆனா எனக்கு தெரியாதுல்ல. சோ நான் படிச்சி தெரிஞ்சிக்கிறேன். நீ படுத்து தூங்கு பொம்மி டைம்முக்கு தூங்கனும்.

மாமா லைட் ஆப் பண்ணு, இல்லன்னா எனக்கு தூக்கம் வராது . அவள் பக்கத்தில் தலையனை வைத்தான்.

என்ன மாமா செய்யற.... ம்ம்ம் உன் மேல கால போட்டுட்டா அதுக்குத்தான்

அதெல்லாம் போட மாட்டே, பூவா என்னைய கட்டிக்கோ.. முனகலாக கூற.

ஏய் நீ ரொம்ப மூட்ல இருக்க, பரதா சொன்னான் தள்ளிபடுன்னு ஒரு டூ மன்த் அப்பதான் பேபி சேப்பா இருக்கும்மா.

அந்த லூஸூ சொல்லுச்சா, முதல்ல கேப் விட்டு பிள்ளைய பெத்துக்க சொல்லு பாவம் என் ப்ரெண்டு கஷ்டப்படுறா குழந்தைகளை வைத்து.. உடம்புல சக்தி வேணாம்மா, எடுத்து சொல்லு பரதாக்கிட்ட.. வேற என்ன டிப்ஸ் கொடுத்தான்.

அதுவாடி மாதவா வேற ஊருக்கு போயிருக்கானா, சரி நம்ம மாமாவுக்கு அனுபவம் இருக்கேன்னு கேட்டேன். மாமா சொல்லுச்சு, முதல்ல நான்கு மாசம் தள்ளிபடுக்கனும்மா. அப்பறம் மாசம் ஆக ஆக உனக்கு பிரசவ பயத்தில ஸ்டர்ஸ் ஆகுவியாம், அடிக்கடி சண்ட போடுவியாம். அப்ப நாம்ம கோவப்பட கூடாதாம் ஸாப்ட்டா இருக்கனும்மா. ஹாங் குங்கும்மபூ போட்டு நைட்ல பால் குடிக்கனும்மா. நிறைய டூபிளீகேட் வருது அதான் ஆடர் கொடுத்திருக்கேன்.

அப்பறம் இன்னோன்னும் சொன்னா அது பர்சனல் , அது உன்கிட்ட சொல்ல கூடாது ஓன்லி கணவனுக்கு மட்டும்.

நமக்குள்ள என் பர்சனல் மாமா சொல்லேன் , அதுவா எனக்கு உன்மேல ஆசையா வருமா, கண்ட்ரோல் பண்ணிக்கனும்மா, புரியுதா...

ஆம்மா, அப்படியே நீ ஆசைப்பட்டு சிம்லா, சுவிஸ்ன்னு கூட்டிட்டு போனப்பாரு, எப்ப பார்த்தாலும் உனக்கு என்கிட்ட சண்ட போடவே நேரம் கரட்டா இருந்தது.

ஏய் கொடைக்காணல்ல நீ தான்டி தொடாதேன்னு சொன்னே. செம மிஸ் தெரியுமா. நான் எப்படி பிரேக் டவுன் ஆனேன்.

நான் சொன்னா அப்படியே விட்டுட்டுவியா, சுந்தரி சொல்ல..

பூவரசன் கண்களை விரித்து , என்னடி மாத்தி மாத்தி பேசற....

ம்ம் என்ன மாத்தி, பொண்டாட்டிய கொஞ்சனும், கெஞ்சனும் அப்பதான மலை இறங்கி வர முடியும்....உனக்கு கோவம் மட்டும் டக்கு டக்குன்னு வருது.

சரி இனிமே அப்படி செய்ய மாட்டேன். தூங்கு என்று அனைத்துக் கொண்டான்... கொஞ்ச நேரத்தில் பூவரசன் தூங்கிவிட , சுந்தரி அவன் தூங்குவதை பார்த்துக்கொண்டே இருந்தாள். எத்தனை நாள் ஆச்சி , மாமா பக்கத்தில் தூங்கி... உன்னைய பார்த்திட்டே இருக்கனும்போல இருக்குது மாமா ,அவ்வளவு ஆசை உன்மேல, என் பூவா. என்னை விட்டு வேற யாராவது நீ கல்யாணம் செஞ்சிருந்த நான் செத்து போயிட்டிருப்பேன் மாமா.

சின்ன குழந்தை மாதிரி உதடை கடிச்சுட்டு தூங்குற பழக்கம், தன் விரலால் உதட்டை சுண்டி விட்டாள்.

ஸ்ஸ் பொம்மி வலிக்குது சொல்லி சினுங்கினான். அய்யோ என் பூவா என்ன அழகு சுந்தரி வாய்விட்டு சொல்ல. அவள் இதழில் இதழ் வைத்தான் சுந்தரன்.

நடு இரவில் செல் ஒலிக்க மெல்ல கண்ணை திறந்தான் பூவரசன். என்ன இந்த நேரத்தில, போனை ஆன் செய்து , சொல்லு வேலா..

அய்யா அறுவடை செஞ்த பயிரெல்லாம் தீ வச்சிட்டாங்க, வைக்கோல் பிரி, கரும்பு தோட்டத்தில சீக்கீரம் வாங்க பதட்டத்தோடு சொல்ல.

என்னாச்சு வேலா தோ வரேன். அரக்கபரக்க எழுந்தான் , சுந்தரி தூக்கம் கலைய என்ன மாமா,

யாரோ தோட்டத்தில தீ வச்சிருக்காங்க பொம்மி, செல்லை இயக்கிக் கொண்டே பேசினான். பரதா சீக்கீரம் வா தோட்டத்தில தீ பத்திக்கிச்சாம் சொல்லிட்டு கிளம்பினான்.

மாமா போலிஸ்க்கு சொல்லலாம். நைட் டைம்மா இருக்கு மாமா, முதல்ல பரதா அனுப்பி பார்த்திட்டு வர சொல்லு.

என்ன பொம்மி, யாருக்கு பயப்படனும். வேலன் போன் பண்ணி சொல்லுறான். நான் போனோம் விடு சட்டையை மாட்டினான் , கையில் அருவா எடுத்துக் கொண்டான் பரதா வீட்டுக்கு வரவும் இருவரும் பைக்கில் ஏறி போனார்கள்.

சுந்தரியின் மனம் பதைத்தது. நேற்றுதான் அவள் அப்பா சொன்னது ஞாபகம் வந்தது.திவாகர் ஆள் வைத்து லாரி மோத பார்த்தான், ஜல்லிகட்டுக்கு போயிருந்தா அடிப்பட்டுருக்கும் ,பூவரசு மேல கொலை வேறியில் இருக்கான் பத்திரம்மா பார்த்துக்கோ சுந்தரி மாப்பிள்ளையை , துறைப்பாண்டிக்கூட நான் திட்டினதால திவாகரோட சேரதில்ல,

நான் உன்வீட்டில தங்கப்போறேன் தெரிஞ்சு ஏன் மாமா என்னைய விட்டு போறீங்க கேட்டான். என் பொண்னையே எதிரியா பார்க்கிற உங்கிட்ட இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். நான் செஞ்ச தப்புக்கு என் மாப்பிள்ள தீட்டதான் செய்வான் அவன் இடத்தில நீ இருந்து பாரு உனக்கு புரியும் அவனுடைய கஷ்டம்.

உடனே போனை எடுத்து சண்முக பாண்டியை அழைத்தாள், ரிங் போய் கொண்டே இருந்தது. எடுக்கவில்லை துரைப்பாண்டியை அழைத்தாள், சொல்லு சுந்தரி என்ன இந்நேரத்தில , வயல்ல தீன்னு மாமா போயிருக்காரு கொஞ்சம் அப்பாகிட்ட சொல்லுங்க அவசரம்...

சரி நான் போய் பார்க்கிறேன் , மாமா மாத்திரை போட்டு தூங்கிட்டாரும்மா. என்னென்னு நான் பார்க்கிறேன். நீ பயப்படாத...

தன் அக்கா இறந்தபின் தன் மாமாவும் தனக்கில்லையே என்று துறைப்பாண்டி ஏங்கினான்.தன் வீண் பிடிவாதம் தம்மிடம் உள்ள தப்புமும் உணர்ந்தான். பூவரசனை எதிரியாக நினைத்து திவாகருக்கு துணை போனான். இன்று திருந்தி திவாவை விட்டு விலகினான்.

வயலில் என்ன மாமா தீ பத்தன மாதிரி எதுவுமில்ல. பூவரசு அங்க பாரு வைக்கோல் பிரியாண்ட, தீ பத்திக்கிட்டு இருக்கு இருவரும் அங்கே ஓடினர். வேலா தண்ணீரை எடுத்து ஊற்றிக்கொண்டிருந்தான்.

தம்பி கரும்பு தோட்டத்தில தீ பத்திக்கிச்சு. யாரோ நாலு பேர் வந்து என்னைய அடிச்சுட்டு தீ வச்சாங்க பேச சொல்லவே அவர்களை சுழந்து பத்து பேர் அரிவாள் கம்புடன் வர , அதில் திவாகரும் இருந்தான் , எங்கடா எங்க ஆளு லாரி டிரைவர் ,

உன் வேல தானா நினைச்சேன். என்கிட்ட தான் இருக்கான் என்ன பண்ணுவே பூவரசன் கேட்க

அதற்குள் அங்கே துரைபாண்டி வர, திவா திவா கொஞ்சம் சண்டையை நிறுத்து... எதுக்கு இங்க தீயை வச்ச, நம்மோட உணவை நாசம் செய்யலாமா. நீ விவசாயியா இருந்தா தெரியும் எங்களுடைய கஷ்டம்.

என்னடா உபதேசம் செய்யற, எப்போ என்கூட சேர மாட்டேன் சொல்லிட்டியோ இதுல உனக்கு சம்மந்தமில்ல போயிடு.

போக மாட்டேன் எங்க மாப்பிள்ள...

ஓஓ கூட்டு சேர்ந்தாச்சா, டேய் இவனையும் வெட்டி போடுங்கடா , தீயோடு தீயா கருகி சாவட்டும்.

மூவரும் ஓன்று சேர்ந்து அடியாட்களை அடித்தனர். சிலர் அடியில் மயங்கி அப்படியே விழுந்தனர். ஒரு பக்கம் தீ எரிந்துக்கொண்டிருந்தது. சமதளத்தில் ஒருவரை ஒருவர் அடித்தனர்.

பூவரசு போனையும் எடுக்க வில்லை என்றதும் சுந்தரி தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வயலுக்கு வந்தாள். வண்டியை நிறுத்திவிட்டு திரும்ப, திவாகர் கத்தியை எடுத்து பூவரசனை நோக்கி போனான். பூவரசன் ஒருவனை அடித்துக்கொண்டிருக்க முதுக்கு பின்னால் குத்த வந்தான் திவாகர்.

“மாமா” என்று குறுக்கே நின்றாள் சுந்தரி.... கத்தி அவள் வயிற்றில் இறங்கியது. பொம்மிமிமிமி என்று பூவரசன் கத்த... சுந்தரி என்று பரதனும், துரைப்பாண்டியும் ஒடி வந்தார்கள்.

பூவரசன் சுந்தரியை மடியில் தாங்க, பொம்மி ,பொம்மி வயிற்றில் கையை வைத்தான் ரத்தம் பீறீட்டு வந்தது. அய்யோ பொம்மி...

மாமா .. ஏண்டி வந்த பொம்மி, பூவரசனுக்கு ஒன்றும் புரியாமல் உடம்பு நடுங்க அவளை அனைத்திருந்தான்.சுந்தரின்னு பரதா அவளை பிடிக்க , சுந்தரியை பரதனிடம் விட்டு

டேய் திவாகர்ர் கத்தினான் பூவரசன் கையில் கத்தியோடு அப்படியே கொஞ்சம் தள்ளி நின்றான். என்னைய கொண்ணுடுடா என் பொம்மியில்லாம என்னால இருக்க முடியாது கொல்லுடா என்று அவனை நோக்கி அருவா எடுத்துக்கொண்டு பூவரசன் கோவமாக போக....

மாமா வேணாம், பரதா போய் மாமாவ பிடிச்சு தடு அவனை ஏதாவது செய்ய போறாரு....மாமா நில்லு வலியை பொறுத்துக்கொண்டு கத்தினாள்.

பூவரசனின் சுந்தரி.......
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

அச்சோ
என்னம்மா லக்ஷும்மா இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா
பூவரசனுக்கு வந்த கத்திக்குத்து சுந்தரிக்கு வயிற்றில் பட்டுவிட்டதே
அவள் புள்ளைத்தாய்ச்சி வேறயே
எல்லோருமே லூசுகளா இருக்காங்க
ஒருத்தர் கூடவா போலீஸ்ஸுக்கு சொல்லவில்லை?
 
Last edited:
Top