Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சொந்தம் 1

Advertisement

sharmila

Member
Member
Hi friends sorry pa intro kuduthutu first epi kuduka late aiduchu , tamil la type pana palagete iruken, so adjust panunga pls ..

Idho first epi , paduchutu comment panunga pa. Konjam kutty ud dhan.



அத்தியாயம் 1



மதுரையில் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு வீடு காலை நேர பரபபரப்பில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கை சமையலறையில் பிசியாக இருக்க அவரை பின்னால் இருந்து அணைத்திருந்தால் அவரது தம்பி மகள் மீனாட்சி. என்ன பழக்கம் மீனா விடு, உன்ன கொஞ்ச நேரம் இல்லை தலைக்கு மேல் வேளை இருக்கு என்று சொன்ன அத்தைக்கு ஒரு முத்தம் கொடுத்து சின்ன மாமா எங்க அத்த ரூம்ல இல்லை என்று கேட்டாள்.

அவன் நைட்டு ஜாமத்துல தான் வந்தான். காலேஜ்க்கு தான, விஷ்வா கூட போ. அய்யோ அந்த மங்கி கூடையா வேணாம்பா என்று சொல்ல அவளை முறைத்தார் அங்கைக்கரசி, அந்த பாசக்கூட்டின் அரசி, கணவனுக்கு அங்கை.

ஈஷ்வரமூர்த்தி - அங்கைக்கரசிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். பரமேஸ்வரன் மற்றும் விஷ்வேஷ்வரன் பி.ஈ முடித்து குடும்ப தொழிலான கட்டுமான தொழிலை தந்தையுடன் சேர்ந்து சிறப்பாக செய்து வருகின்றனர். அதோடு அண்ணன் தம்பி மற்றும் மாமன் மகன் தங்கராசு இணைந்து சொந்தமான மால் வைத்து உள்ளனர் . மகள் சீதாலட்சுமி காலேஜ் செல்லும் அவ்வீட்டின் இளவரசி. இவர்கள் குடும்பத்தில் அங்கையின் தம்பி ஜம்புலிங்கம், அவரது மக்கள் தங்கராசு மற்றும் மீனாட்சி யும் அடக்கம்.


ஈஷ்வரமூர்த்தி, மதுரையில செல்வாக்கு உள்ளவர்களில் ஒருவர். தொழிலில் ஜாம்பவான், வீட்டில் அன்பான கணவர் மற்றும் தந்தை. மீனாட்சி உர் என்ற முகத்தோடு விஷ்வாவை தேடிச் செல்ல, அங்கே விஷ்வாவோ இவளை கவனியாதது போல் கவனித்து கொண்டிருந்தான். இவன கூப்ட்டா மாமா சொல்லுன்னு கடியேத்துவான் சிக்காத மீனா என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ஓடிவிட்டாள்.

கீழே டைனிங் ஹாலில் அனைவரும் குடியிருந்தனர். ஈஷ்வரமூர்த்தி, லிங்கம் நீ டெண்டர் ஆபிஸ்க்கு போய்ட்டு வந்துரு என்று சொல்ல சரி மாமா என்றார் ஜம்புலிங்கம். விஷ்வா நான் போறேன் பா என்று சொல்ல வேணாம்பா நீ போனா கைகலப்பு ஆய்டும் நீ சைட் விசிட் பாத்துக்கோ, மதியம் மந்திரி அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கு அதுக்கு பரமா போட்டும் அதுவரைக்கும் அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார். அதுவரை சாப்பிட்டு இருந்த சீதா, அப்பா காலேஜ் என்று ஆரம்பிக்க லிங்கம், ராசு பிள்ளைகளை காலேஜ் விட்டு கிளம்பு என்று மகனுக்கு சொன்னவர் பின் மீனா எந்த பஞ்சாயத்தும் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்ல , ட்ரை பன்றேன்பா என்று சென்றுவிட்டாள். சீதா விஷ்வா காதைக்கடிக்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்னும் விதமாக தலையசைத்தான்.

ஈஷ்வரமூர்த்தி கிளம்பும் சமயம் அப்பா என்று வந்த விஷ்வா ஏதோ சொல்ல கேட்டவர் கோவத்தில் சில கட்டளைகளை இட்டுச்சென்றார் . அவர் சென்றதும் வந்த மீனா இருக்கத்தான் இத நான் பைசல் பன்றேன்னு சொன்னா யார் கேக்கறா, பாசப்பறவைகள் தொல்ல தாங்கல, அண்ணா டேய் வா என்று சென்று விட்டாள். விடு மாப்ள நல்ல சிறப்பான தரமான சம்பவம் செய்யலாம் என்று விஷ்வா தோள் தட்டிசென்றான் அவனது உயிர் நண்பன் தங்கராசு.

11 மணியளவில் எழுந்த பரமேஸ்வரன் கீழே கிளம்பி வர, அங்கை சாப்பிட அழைத்தார். உடன் சென்ற பரமா அம்மாவோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தான். பின் மந்திரி வேதாச்சலத்தை தொழில்முறையில் சந்திக்க ஆயுத்தம் ஆகினான்.

காலேஜில் விஷ்வா மற்றும் தங்கராசு செய்த சிறப்பான தரமான சம்பவம் ஒரு பெண்ணின் வாழ்வில் புயலை உருவாக்கி, பரமேஸ்வரனை ருத்ரமூர்த்தியாக மாற்ற போதுமானதாக இருந்தது.
 
Top