Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான் -30

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான் -30

அவளை தூக்கி கொண்டே கதவை காலால் மூடினான்... ரூம் எப்படி இருக்கு சக்தி..

ம்ம்...

தன் மூக்கை அவளின் மூக்கின் மேல் தேய்த்து விட்டு என்ன அம்மினி ஒரு நிமிஷத்துக்கு நூறு வார்த்தை பேசுவ... இப்போ வாயை கம் போட்டு ஒட்டிக்கிட்டியா... அவளை கீழே இறக்கி விட. சக்தி பெட்டின் அந்தப்பக்கம் போக அடி எடுத்து வைக்க...

கையை பிடித்து இழுத்தான்... என்னடி ரொம்ப பண்ணுற அவள் காதுமடலை தன் இதழலால் தேய்த்தப்படியே பேச.. கூச்சத்தில் நெளிந்தாள்..

சிவ்வா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு...

என்ன மாதிரி..

வெட்கமா, நீ அப்படி பார்க்காத , ஏதோ நடக்குது எனக்குள்ள..

அப்பறம் என்று அவளை கட்டிலில் அமர வைத்து, கையை பிடித்து முத்தமிட்டான்... சக்தி நெளிய ஆரம்பித்தாள்.. அன்னிக்கு எல்லோர் முன்னாடி கிஸ் செஞ்ச, இப்போ என்ன ஆயிடுச்சி, அதே சிவாதானே உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே..

ம்ம்...

இதுக்குதானே ஆசைப்பட்ட, குழந்தை வேணும் கேட்டியேடி... இப்போ என்ன முழிக்கிற... நான் நினைச்சேன் நீ என்னை ரேப் பண்ணுவேன்...

நானா, சிவா எனக்கு இதைப்பற்றி ஒண்ணுமே தெரியாது, சும்மா படத்தை பார்த்து உன்கிட்ட வம்பு பண்ணுவேன்..

ஏய் நடிக்காதடி, நீ இன்னிக்கு வந்த மேக்கப்புலே தெரிஞ்சிடுச்சே...நல்லா நடிக்கிற..

யாரு நானா, குரலை உயர்த்தி சண்டையிட..

இப்போ தான் என் சக்தி என்று அவள் எதிர்பார்க்காத நேரத்தில் இதழை சிறையிட்டான்..

அதில் மயங்கி கண்ணை மூடினாள் சக்தி, ச்சே இதுக்கே இவன்கிட்ட மயங்கிறேன் சக்தி தன்னில் நினைக்க.. சிவாவின் பிடரி முடியை அழுத்தி பிடித்துக்கொண்டாள், அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். பிறகு முகத்தை தன் ஆட்காட்டி விரலால் கோடு இழுக்க... ஏய் பாவா பாருடி.

ம்ம் மாட்டேன்...மயக்கும் குரலில் மெதுவாக சொல்ல, அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான். அவள் இடையை அழுத்தி பற்றினான்

ச்சீ என்று அவள் முனுங்க, வெட்கத்தில் சிவாவை இறுக்கி கட்டிக்கொண்டாள்...அய்யோ சிவா என்ன செய்யற..

நீதான்டி சொன்ன புடவை கசகச இருக்குனு, அதுக்கு விடுதலை தரேன். உன்மேல என்னைதவிர யாரும் இருக்க கூடாது...

பாவா உனக்கு சிக்ஸ் பேக் அழகா இருக்கு... கொஞ்சம் கொஞ்சமாக மோகத்தில் முழுக ஆரம்பித்தார்கள்...

“பழகும் போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னை கொள்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு


நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ முள்ளாகி போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீ அன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீ அன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே”​

பாவா எனக்கு பயமா இருக்கு, பயப்படாத பாவா கட்டிக்கோ, எட்டாவது ஸ்வரம் போல அவளின் முனுகலின் ஒசை... இருவரும் கலந்தார்கள், ஒருவர் ,இன்னோருவருக்குள்.. அனைத்தும் முடித்த பிறகு ,அவள் நெற்றியில் முத்தமிட்டு.. ஐ லவ் யூடி என்றான்.

சிவாவின் நெஞ்சில் தலை சாய்ந்து படுத்திருந்தாள் சக்தி, அவள் தலையை கோதி விட்டு.. பேபி... பிடிச்சதா உனக்கு, ரொம்ப படுத்திறேனா...

ம்ம் அவன் மீசையை இழுத்துவிட்டாள்.. ஏய் வலிக்குது விடுடி...

என்னடி பதிலே கானோம்... அவன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டு, பிடிச்சிருக்கு சிவ்வா..

.....

அடுத்த நாள், டயர்டா அவன் மேல் படுத்திருந்தாள், அவள் முகத்தின்மேல் விழுந்த மூடியை எடுத்து காதின் அடியில் சொறுக்கி விட்டான்..

பாத்ரூமிற்கு சென்று குளித்துவிட்டு வெளியே வந்தான்...அவளுக்கு ஹிட்டரை போட்டுவிட்டு வந்து, சக்தி எழுதிருடி டைம்மாகுது..

பாவா எனக்கு டயர்டா இருக்கு, சக்தி சாப்பிட்டு தூங்குடி, மதியம் ஆயிடுச்சிடி..

என்னது மணி 12.00 ஆகுதா என்று எழுந்து உட்கார்ந்தாள்..அவனை பார்த்து வெட்கப்பட்டு போ பாவா நீ தூங்கவே விடுல.. அதான் டயர்டா ஆயிட்டேன்...

யாரு நீ, வேலை செஞ்சது நானு, அதுவும் ஒவ்வாரு ரவுண்ட் முடிய சொல்ல, அவ்வளவு தானா, அவ்வளவு தானா.. கேட்டு உசுப்பேத்திட்டு... இப்போ என்னைய காரணம் காட்டுற..

இப்போ போய் குளிச்சிட்டு வறீயா, இல்ல நான் மறுபடியும் ஆரம்பிக்கவா.

அய்யோ பால்காரனுக்கு ரொம்பதான் கோவம் வருது..அடிங்க என்ன சொன்ன பால்காரணா அவளை துரத்த பாத்ரூமில் சென்று கதவை அடைத்தாள்..

ஓய் போட்டுக்க டிரஸே எடுத்துக்காம உள்ளே போயிட்ட..

ஆமாமில்ல, சிவா எனக்கு பசிக்குது காபி போட்டு வையேன்..

கீழே இறங்கினான், அவள் வருவதற்குள் லைட்டா டிபனும் செய்து வைத்தான்...

தலைக்குளித்து தலையில் டவல் சுற்றி டி ஷர்ட் பேல்லோஸா பேண்ட் போட்டு இறங்கி வந்தாள்..

அல்லாக்கா பின்னாடியிருந்து தூக்கிக் கொண்டான்...அவள் கழுதில் முத்தமிட்டபடி, பேபி ஏன்டி என் சோப்பு போட்டு குளிச்ச, அந்த சோப்புதான் பிடிக்காதே உனக்கு..

அது நேற்று நைட்டே பிடிச்சிடுச்சு...

எப்படி..

அது உன்வாசம் நைட்டு முழுக்க என்னையை தீண்டுச்சா , அப்போயிருந்து. பாருடா சரி இந்தா காபி குடி...

நீ குடிச்சியா சிவா...ம்ம் நான் குடிச்ச பாதிதான் அது..

ச்சீ எச்சிக் காபியா,

என்னடி சொன்ன, தினமும் நீ எச்சில் காபிதான கொடுக்கற..

எப்படி கண்டுபிடிச்ச சிவா..

அது நீ குடிச்சிட்டே வாயை துடைக்காத எடுத்திட்டு வந்து தருவ..எப்படி கண்டுபிடிச்சேன் பாரு…

உலக மகா கண்டுபிடிப்பு...பாவா சாப்பாடு செஞ்சிட்டியா. அய்யோ தேங்க்யூ... கண்ணத்தில் முத்தமிட்டாள்.. போய் சாப்பிடு... டிவியை ஆன் செய்து நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தான்..

சக்திம்மா...சொல்லு பாவா,

ஈவினிங் வனிதா வீட்டு போகனும், வர வெள்ளிக்கிழமை அவளுக்கும் உன் அண்ணன் வேலுக்கு நிச்சியம் வைக்க போறோம்டா, அவளை கூட்டிட்டு நாளை மேரேஜ் பட்டுபுடவை ,தாலி ,பொண்ணுக்கு சில நகை எடுக்கனும் சக்தி நம்ம சார்பா அவளுக்கு பிடிச்ச நகையை எடுத்துக் கொடு, நான் எதாவது எடுத்தா, வேணாண்ணா சொல்லுவா, எல்லாமே நாம்மதான் செய்யனும்... வேற எந்த கமிட்மன்ட் வச்சிக்காதே...

ஓகே சிவா..நான் பார்த்துக்கிறேன்..

சாப்பிட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்தாள், அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். கொஞ்சம் நேரம் கழிச்சி எழுப்பு சக்தி என்றான்.. அவள் முடி கோதி விட, தூங்க ஆரம்பித்தான்.

பட்டுபுடவை எடுத்துமுடித்தவுடன் வேலு கடைக்குள் நுழைந்தான்...சித்தப்பூ ஏன் லேட்டு, இப்படிதான் லேட்டா வருவியா சக்தி கேட்க...

அது ஒரு வேலையா மாட்டிக்கிட்டேன் பாப்பா, வனியை பார்க்க முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்... அவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு அனைவரும் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

சிவா , நான் கொஞ்சம் வனிக்கு நகை வாங்கனும், நாங்களும் அங்கேதான் போகுறோம். வா

சிவா அதான் நான் வாங்குறேனே,

நீ உன் வருங்கால மனைவிக்கு வாங்கு, நான் என் தங்கச்சிக்கு வாங்குறேன்...அப்படியே வீட்டிக்கு தேவையான பொருளும் வாங்கனும்.. புதுவீட்டுக்கு வேற போறீங்க... அண்ணா சீர் உண்டு.

கல்யாணத்திற்கு முன்னே வீடு கிரகபிரவேஷம் செய்ய,அங்கு எல்லா பொருள்களும் வாங்கி போட்டான் சிவா. பிறகு ரேணு கையில் கொடுத்து வேலுவிடம் கொடுக்க சொன்னான்...

என்ன சிவா இது... சித்தப்பூ இந்த கேன்டின் அக்ரிமென்ட்டும் உன் பேருதான் போட்டேன். அதில் வந்த லாபம்தான் பேங்கில போட்டு வைத்தேன். இப்போ அதை கொடுக்க நேரம் வந்திடுச்சு..

சிவா நீ என்னை வேற்று ஆளா நினைச்சிட்டியாடா...

வேலுவை கையை பிடித்து... அப்படி உன்னை நினைப்பேனா சித்தப்பூ, சொந்தங்கள் எல்லாம் கையை விட்டபோது, என் தோள் கொடுத்தது. நீதானே சித்தப்பூ..உனக்கு எப்படி லாபத்தை பிரித்துக்கொடுத்தேனோ, அதுப்போல மோகனுக்கும் பிரிச்சி வச்சிருக்கேன்...

அதோ மோகனே வந்துட்டான், நேரே ஊட்டியிலிருந்து வந்திருக்கான். ஹாய் அண்ணா, சித்தப்பூ, அண்ணி..கத்திக் கொண்டே வர...

எப்படி எக்ஸாம் எழுதியிருக்க மோகன்.. சூப்பர் அண்ணி, ஸ்ரீ எங்கடா..

நேரா வீட்டுக்கு போயிட்டா, வேற டிரஸ் சேன்ஞ்ச் பண்ணிட்டு வராலாம்.. இருவரும் ஊட்டியில் படிக்கிறார்கள்.



......தெறிக்க விடுவான்
 
நல்லா இருக்கு பதிவு
சிவா சித்தப்புக்கு செய்றது
வனிதாக்கு அண்ணனா
சீர் செய்றதுனு
அசத்தல்??
 
Top