Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-49

Advertisement

praveenraj

Well-known member
Member
திவேஷ் ஒரு ஜீன் டீ ஷர்ட்டில் ரொம்ப கேசுவலாய் வர,"என்னடா மச்சான் வேலையை விட்டு துரத்தி விட்டுட்டாங்களா? நல்லது இனிமேலாச்சும் இந்த அசாம் வளரட்டும்" என்று தன்னுடைய ஸ்டைலில் அவனை கலாய்த்தாள் யாழ். அவளுக்கு ஹைபை கொடுத்த துஷியின் முதுகில் ஒன்றை ஓங்கி வைத்தான் திவேஷ்.

"ஏன்டா எத்தனை நாள் ஆசைடா இது? என்னை இப்படி வேலையில இருந்து கழட்டிவிட்டு ரோட்டல நாயா அலையனும்னு கனவு கண்டிருக்கீங்கப் போல?"

"டாக் இஸ் எ சோசியல் அனிமல் யூ நோ?" என்றான் விவான்.

"யூ டூ புரூட்டஸ்?" என்று அதிர்ந்தவன்,"பாவம் நம்மைத் தேடி ஊருக்கு வந்திருக்காங்களே உங்களுக்காக லீவ் போட்டு எல்லாம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நெனச்சேன் பாரு? என்னைச் சொல்லணும்" என்றான் திவேஷ்.

"மச்சான் கோச்சிக்கிட்டியா? டேய் திவே உன்னைத் தான் கோச்சிக்கிட்டியா?" என்று மீண்டும் கேட்டான் துஷி.

"ஆமாண்டா இப்போ என்ன அதுக்கு?"

"சரி கோச்சிக்கோ கோச்சிக்கோ" என்று சொல்ல விவா, யாழ் இருவரும் அவனுக்கு மீண்டும் ஹை பை கொடுக்க அப்போது அங்கே வந்தான் துவாரா.

"நான் போறேன்டா போங்கடா" என்று அவன் திரும்ப,

"மச்சி" என்றான் விவா அவன் தோளில் கைப்போட்டபடி,

"பரவாயில்ல உங்களை மன்னிக்கிறேன்" என்று சொன்ன திவேஷை,"அட சீ வழி இந்தப் பக்கம் இல்ல அந்தப் பக்கம்" என்றதும் யாழ்,"விவா ஃபுல் பார்ம்ல இருக்கப் போல?" என்று சொல்ல,

"ஹே ஏன் அவனை இப்படி கலாய்க்கறீங்க?" என்ற துவாராவை,

"சரி போ திவே நாங்க இனி துவாவை கலாய்ச்சிக்கிறோம்" என்று யாழ் சொன்னதும்

"அசிங்கப்பட்டான் அசோசியேட் ப்ரொபெஸர்" என்றான் துஷி. சட்டென துவாரவின் முகம் வெளிறியது. அவர்கள் யாரும் அதை நோட் செய்யத் தவறவில்லை. உடனே யாழ் துவாராவின் கையைப் பிடித்து,"என் செல்லத்தையே கலாய்ச்சிட்ட இல்ல? இன்னைக்கு நீ காலிடா துஷ்யந்த்" என்றதும்,"என்ன மேட்டர் யாழி?"என்ற துவாவிற்கு,

"அது ஒருத்தி இருக்கா மச்சான்.என்னடா சொல்லட்டா?" என்றதும்,"டேய் டைம் ஆச்சி" என்று பேச்சை மாற்றினான் திவே.

"ஆயிரம் இருந்தாலும் உங்க டி (d) பிளாக்கை விட்டுக்கொடுக்க மாட்டிங்களே?" என்று யாழ் சொன்னதும், திவேஷ், துவாரா, துஷ்யந்த் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்க (புரிந்திருக்கும் இல்லையென்றால் பரவாயில்லை dushyanth dhivesh dhuvarakesh மூவரும் d எழுத்தில் ஆரமிப்பதால் அவர்களை செல்லமாக டி பிளாக்ஸ் என்று அழைப்பார்கள். டி பிளாக் கெமிஸ்ட்ரில வரும் பிரியாடிக் எலிமெண்ட்ஸ். அதை s ,p,d,f என்று வகைப்படுத்துவார்கள் அல்லவா அதில் வரும் d பிளாக் என்று செல்லமாக அழைக்கப் பட்டனர்.)

நீண்ட தூரம் ஓடிய ஜிட்டன் தியா இருவரும் இப்போது ஒன்றாக இணைந்து வர எல்லோருமே ஆச்சரியம் கொண்டு பார்த்து,"என்னடா இப்படி ஜோடி போட்டுக்கிட்டு வராங்க"

அவர்கள் அருகில் வர வர ஜிட்டுவின் நடை தள்ளாடுவதையும் அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி வந்த தியாவையும் கவனித்தவர்கள் குழம்பினர். அவன் போட்டிருந்த ட்ராக்ஸ் டீ ஷர்ட் எல்லாம் அழுக்காக இருக்க அதைக் கண்ட ஹேமா தான்,"ஹே எல்லோரும் ஓடிவங்க ஓடிவங்க ஜிட்டன் ஏதோ சம்பவம் பண்ணியிருக்கான் போல" என்று அழைக்க எல்லோரும் சிரிப்பை அடக்கியபடியே அவர்களை நெருங்கினர்."வேகமா நடக்காதாடா அடேய் இவனே, என்னால முடியல பார்த்து" என்று தியாவிடம் பேசியபடியே வந்தவனை எல்லோரும் வட்டமடித்தனர்.

அவர்களை ஹேமாவும் இளங்கோவும் சுற்றிச் சுற்றி வட்டமடிக்க பொறுக்காமல்,

"இங்க என்ன நான் வித்தையா காட்றேன்? வழி விடுங்கடா" என்றான் ஜிட்டன்.

"என்ன அண்ணா இது கெட் அப் எல்லாம் சேஞ் பன்ணணியிருக்கீங்க?" என்ற பார்வதியிடம் ஒரு முறைப்பைச் செலுத்தியபடி வந்து அமர்ந்தான் ஜிட்டு.

"என்னடா ஆச்சு தியா?" என்று விவா கேட்டதும் வெடித்துச் சிரித்தான் அவன். ஜிட்டு கொலைவெறியில் முறைக்க,

"என்னனு சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்போமில்ல?" என்ற யாழுக்கு,

"அப்போ எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்க அக்கறை இல்ல? சிரிக்க ஜோக் தான் வேண்டும் இல்ல?" என்றான் முனகியபடியே,

"இவன் என்னைத் துரத்திட்டு வந்தான் இல்ல? நானும் சுத்தி சுத்தி ஓடுனேன் இவனும் விடாம தொடர்ந்தபடியே வந்தான். அப்போ ரிசார்ட் எண்டு வரப் போனதும் அங்க குழி தோண்டி வெச்சியிருந்தாங்க. நான் வந்த வேகத்துக்கு ஒரே தாவா தாவிட்டேன். தாவிட்டு பின்னாடி திரும்பிப் பார்த்தா அங்க இவனைக் காணோம். என்னடா இது ஆச்சரியமா இருக்கே எங்க போயிருப்பானு பார்க்க முன்னாடி வந்தா..."

"வந்தா?" என்று எல்லோரும் சிரிக்க,

"அந்த ஆறடி குழில ஐயா குப்புற விழுந்து கிடக்கறாரு" என்றதும் எல்லோரும் சிரித்தனர்.

"என்ன சிரிப்பு? ஆனைக்கும் அடி சறுக்கும் தெரியாதா?"

"ஆனைக்கு சறுக்கிருந்தா பரவாயில்ல, இங்க பூனைக்கல்லவா சறுக்கியிருக்கு?" என்று இளங்கோ கவுண்ட்டர் தர,

"ஏன்டா இங்க ஒருத்தனுக்கு விழுந்து உடம்பெல்லாம் வலில இருக்கேன் உனக்கு ஆனை பூனைன்னு எதுகை மோனை கேட்குதா? ஐயோ முடியலையே" என்றான் ஜிட்டு.

"ஏன்டா எருமை எருமை ஏழு கழுதை வயசாகுதில்ல? கல்யாணம் பண்ணிவெச்சி இருந்தா இந்நேரம் கொழந்தை குட்டின்னு பெத்திருப்ப... ஒரு குழியைத் தாண்ட உனக்குத் துப்பில்லை?" என்றான் ஹேமா.

"அவன் என்னடானா யானை பூனைங்கறான். நீ என்னடானா எருமை கழுதைங்கற? ஆக மொத்தம் எனக்கு யாரும் ஃபர்ஸ்ட் எய்ட் செய்ய மாட்டிங்க அப்படித்தானே?" என்று கையைக் காட்ட அது சிராய்த்திருந்தது.

"இரு இரு" என்ற நித்யா ஃபர்ஸ்ட் எய்ட் செய்து அவனுக்கு டிடி போட வந்தவள் நிறுத்தி, "ஆமா நான் தான் போலி டாக்டர் ஆச்சே? நான் எப்படி உனக்கு ஊசி போடலாம்?" என்று அவனை கலாய்க்க,

"ஐயோ தெரியாம சொல்லிட்டேன்... ஐயோ யாரது? செத்துப்போன என் பாட்டி வேற உனக்கு பிடிச்ச பால் பணியாரம் செஞ்சி வெச்சியிருக்கேன் வாடா வந்து ஒரு வாய் சாப்பிட்டு போடா என் பேராண்டினு கூப்பிடறாளே... சீக்கிரம் ஊசியைப் போட்டு என்னை காப்பாத்து நித்யா" என்றான் அவன். அவள் ஊசியைச் செலுத்தி விட,"நான் பொழச்சிபெனில்ல? என் உயிருக்கு ஒண்ணுமில்லை தானே?" என்று கேட்டவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் கிளம்ப தயார் ஆனார்கள்.

"டேய் ஏன்டா அதுவரை ஓடுன?" என்றான் துவாரா,

"நானாடா ஓடினேன்? விடாம துரத்திட்டே வந்தான்டா" என்றான் தியா."ஆனா ஒன்னு நீங்க அந்த கண்கொள்ளா காட்சியைப் பார்க்கல. அந்த குழிக்குள்ள ஜிட்டன் கவுத்துப்போட்ட கரப்பான் பூச்சி மாதிரி இருந்தான். அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு தான் வருதே தவிர அவனைக் காப்பாத்தணும்னே தோணல" என்று சிரிக்க எல்லோரும் அந்தக் காட்சியை நினைத்துச் சிரித்தனர்.

அப்போது விவானுக்கு அழைப்பு வந்தது. அழைப்பது வேறுயாருமில்லை அனேஷியாவே தான்.

தனியே சென்றவன்,"சொல்லு அனி"

"டேய் என்னடா எழுந்தாச்சா? நான் ஒன்னும் டிஸ்டர்ப் பண்ணலையே?"

"என்ன டிஸ்டர்ப்?"

"அதான் பார்த்தேனே நைட் அருமையான ரொமான்ஸ் காட்சி ஓடுச்சே? நீ மாறவேயில்லைடா. அதே காதல் மன்னனாவே வலம் வர. ஸ்கூல்ல எப்படி எலிசபெத் எலிசபெத்னு பின்னாடியே போவேயே ஞாபகம் இருக்கா? அப்படியே இருக்க" என்று அவள் சிரிக்க,

"ஏய் என்ன இது சின்ன புள்ள மாதிரி? அது ஏதோ அறியாத வயசு, புரியாத மனசு ரெண்டு அப்போ காதல் செஞ்சது" என்றதும்,

"என்னது ரெண்டுமா? டேய் அவ உன்ன அலைய விட்ட அலைப்புக்கு நீ ஓடியிருந்தா இந்நேரம் இந்தியாவுக்கு ஒரு கோல்ட் மெடலாச்சும் கெடச்சிருக்கும். அவ தான் உன்ன மதிக்கவே இல்லையே?" என்றதும் ஏனோ ஸ்பான்டேனியஸாக (உடனடியாக) "நீ கூட தான் துவாராவை எப்படி அலையவிட்ட? அலையமட்டுமா?" என்று சொல்ல வந்தவன் ஏனோ தவறாகச் சொல்லப் போவதாய் எண்ணி நிறுத்த,

"சொல்லு விவான். கம்ப்ளீட் தி சென்டென்ஸ்" என்றாள் அனி.

"சாப்பிட்டாச்சா? கிளம்பியாச்சா?"

"டேய் என்னமோ சொல்ல வந்த தானே?"

"நான் இப்போ நல்ல மூட்ல இருக்கேன். அதைப் பற்றிப் பேச வேண்டாம். எங்க இருக்க?"

"ஒர்க் விஷயமா வெளிய வந்தாச்சு"

"அப்போ ஜெஸ்ஸி?"

"அவளுக்கு இன்னைக்கு லீவ். ஏன்டா உனக்கே ஓவரா இல்ல? உன் வைப் ரொம்ப சூப்பர். அதும் உன் பொண்ணு செம கியூட். உன் மேரேஜ் அப்போ நான் இங்க இல்ல. இன்பெக்ட் இந்தியாவுளையே இல்ல. அப்புறோம் நம்ம கெட் டுகெதர்ல நீ போட்டோஸ் காட்டுன. பட் இப்போ தான் நேர்ல பார்த்தேன். நித்யா செம கேரக்டர்"

"அப்போ நான் மோசமானவனா?"

"டேய் டேய் டேய் நீ யாருனு எனக்குத் தெரியும். நான் யாருனு உனக்குத் தெரியும். நம்ம ரெண்டு பேரும் யாருனு எல்லோருக்கும் தெரியும். சோ மூடிட்டு இரு"

அதற்குள் அங்கே துவாரா அவனை நெருங்கி வர,"வெக்கறேன் பை" என்றான் விவான்.

"டேய் டேய் இரு"

"துவாரா வரான்டி" என்று உதடே அசையாமல் மெல்லமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

"யாருடா போன்ல?"

"எஸ்டேட்ல இருந்து கால். என்ன கிளம்பலாமா?"

"ஆம்"

"அப்போ அவன்? (ஜிட்டு)"

"அவன் வராம இருப்பானா?"

"ஆனா அவன் கால்ல அடிபட்டத்துக்கு பதிலா வாயில அடிபட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்" என்றான் விவான்.

"மச்சி நமக்கெல்லாம் உயிர் இதயத்துல இருக்குன்னா அவனுக்கு அது வாயில தான் இருக்கும் போல" என்றதும்,

"பரவாயில்லையே துவாரா ஜோக்கெல்லாம் அடிக்கற?" என்றான்.

அங்கே ஜிட்டு சிறிது ஓய்வெடுக்க இதியுடன் சென்றவனை கட்டிலில் படுக்க வைத்தவள்,"ஆர் யூ ஓகே?" என்றதும்,

"ஐயோ இதி என்னைய ஏன் கட்டில்ல படுக்க வெச்ச?"

"ஏன்டா?"

"நீ தான் என்னை கட்டில்ல படுக்கக் கூடாதுனு சொல்லிட்டியே?"

"பரவாயில்ல இப்போ மேல படுத்துக்கோ,நைட் கீழ படுப்பியாம்" என்றதும்,'ஆஹா நமக்கு காலே போனாலும் நம்மகிட்டச் சேர்க்க மாட்டா போலயே?' என்று யோசிக்க

"ஆமாம் தப்பா யோசிச்சு காலை கீழை உடைச்சிட்டு வந்திடப் போற?" என்று இதி சொல்லவும் தான்,

"ஐயோ மைண்ட் வாய்சுனு நெனச்சி வெளிய பேசிட்டேனோ?" என்று அவனுக்கு அவனே புலம்பினான்.

********************

கௌஹாத்தியின் மேற்கு புறமாக நிலாஞ்சல் மலையில் இருக்கும் காமக்கியாவுக்கு வந்தடைந்தனர். சக்தியின் பிரசித்திப் பெற்ற தலங்களில் இந்த காமக்கியா கோவிலும் ஒன்று. சொல்லப்போனால் சக்தி பீடங்கள் என்று சொல்லப்படும் ஐம்பத்தி ஒரு தலங்களில் பழமையானதும் பிரசித்தி பெற்றதும் இது தான். மாந்திரிகம் தந்திரங்கள் என்று அறியப்படும் வழிபாட்டு முறையில் மிகவும் புகழ்பெற்றது. தொல்பொருள் ஆராய்ச்சியின் முடிவில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்பு சொன்னதைப் போலவே அம்மனை யோனி வடிவில் வழிபாடும் தலம். தரைமட்டத்துக்கும் கீழ் பாறைகள் வெடித்து யோனி வடிவில் காட்சியளிக்கும் சன்னதி தான் இது. அதற்கு கீழே நீரூற்று ஒன்று இருக்கும். அதன் நீர் அந்த சிலையில் எப்போதும் இருக்குமாம். இந்த கோவிலில் சிறப்பம்சம் என்னவென்றால் 'அம்புமாச்சி மேளா' என்று கொண்டாடப்படும் விழா தான். வருடம் ஜுனில் மூன்று நாட்கள் அம்மனுக்கு மாதவிடாய் என்று சொல்லி மூடப்பட்டு பின்பு நான்காவது நாள் கோவிலை பக்தர்களுக்குத் திறந்துவிடுவார்கள்.

இதற்கு பல புராண கதைகள் சொல்கிறார்கள். அது நமக்கு வேண்டாம். இதில் இருக்கும் மர்மம் என்னவென்றால் அந்த ஜூன் மாதத்தில் அந்தக் கோவிலின் பின்னால் ஓடும் பிரம்மபுத்திரா நதி நீர் சிவப்பு கலரில் வருமாம். விஞ்ஞானிகளோ அதிக அளவிலான இரும்பு தாதுகளினால் இது சாத்தியம் என்கிறார்கள். ஆன்மிகத்தை நம்புவோர் ஆன்மிகமாவும் விஞ்ஞானத்தை நம்புவோர் அறிவியலாகவும் எடுத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம்.

இந்தக் கோவிலில் 'பில்லி சூனியம்' முதலிய மாந்திரீகங்களுக்குத் தீர்வாக விலங்குகளை பலிகொடுத்து காணிக்கையாகச் செலுத்துவார்கள். இதிலே வசீகரன் தந்திரம் என்றும் ஒன்று இருக்கிறதாம். அதாவது ஒருவர் மற்றொருவருடன் கருத்து வேறுபாடுகளை களைந்து இணைந்து வாழவும் தந்திரம் மாந்தீரிகம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் பிரிந்த அல்லது பிரிய முடிவெடுத்த கணவன் மனைவியை இணைக்கச் செய்கிறார்கள்.

மொத்தம் பத்து ரூபங்களில் சக்தி வழிபாடு நடக்கிறது. ஒருவழியாக கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் எல்லோரும் வெளியே வந்தனர். நித்யா போன்று தெய்வ நம்பிக்கை உடையவர்கள் ஆத்மார்த்தமாவும், யாழ் போல் அறிவியல் பூர்வமாக நம்பும் நபர்களும் சில அறிவியல் காரணங்களை நம்பி வெளியே வந்தனர். கோவில் குகைபோல் பாறைகளுக்கிடையில் இருந்ததால் இளவேனிலுக்குச் சற்று மிரட்சியுடன் கூடிய அனுபவமாக இருந்தது. அங்கிருந்து வெளியேறியவர்கள் கௌஹாத்தி ஜூவுக்கு சென்று கொஞ்சம் சுற்றிவிட்டு அங்கிருந்த விலங்குகளைப் பார்த்து பிறகு மதிய உணவை முடித்துவிட்டு 'போபிட்டோரா வனவிலங்கு சரணாலயம்' செல்ல முடிவெடுத்தனர்.

ஒரே கூட்டமாக ஒன்றாக எல்லோரும் ஜூவுக்குள் நுழைந்தனர்."டேய் அங்கப் பாருங்கடா ஜிட்டனோட மூதாதையர்கள்" என்றான் ஹேமா.

"ஆமாடா நான் குரங்குல இருந்து தான் வந்தேன். டார்வின் 'ஆர்ஜின் ஆப் ஸ்பீசிஸ்ல'(பரிணாம வளர்ச்சியின் கோட்பாடுகள் நிரம்பிய புத்தகம்) அப்படித் தான் சொல்லியிருக்கார். நீ தான் வானத்துல இருந்து அப்படியே குதிச்சவனாச்சே?" என்றான் ஜிட்டன். எல்லோரும் சிரிக்க,

"டேய் ஜிட்டா என்கூட தானே சுத்திட்டு இருந்த? இப்போ என்ன புதுசு புதுசா டார்வின்னு சொல்ற? 'ஆர்ஜின் ஆப் ஸ்பீசிஸ்' எல்லாம் சொல்ற? எப்படிடா?" என்றான் இளங்கோ ஆச்சரியமாக,

"அதுக்கெல்லாம் மூளை வேணும்டா"

"அதனால தானே சந்தேகமா கேட்கறேன் உனக்கெப்படித் தெரியும்?"

"ஓ என்னைய கலாய்க்க ட்ரை பண்றியா? ஏதாவது புதுசா நல்லா டைம் எடுத்துக்கோ" என்றான் அவன். இப்போது எல்லோரும் பலமாகச் சிரித்தனர்.

"ஜிட்டன் பார்முக்கு வந்துட்டான்" என்றனர்.

ஜூவுக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கு என்ன வித்தியாசம்? சுருக்கமாகச் சொன்னால், விலங்குகளை கூண்டில் அடைத்து வைத்து நாம் அவற்றை சுதந்திரமாகப் பார்வையிட்டால் அது ஜூ. அதுவே விலங்குகள் சுதந்திரமாகச் சுற்றி நாம் பாதுகாப்பாக கூண்டு போட்ட வண்டியில் வலம்வந்து பார்த்தால் அது வனவிலங்கு சரணாலயம். நிஜ விளக்கம், விலங்குகள் அதோட இயற்கை சூழலிலே வாழ்ந்து வருவது சரணாலயம். அதுவே அவற்றை செயற்கையாக அடைத்துவைத்து இருப்பது ஜூ. கிண்டியில் இருப்பது தேசியப் பூங்கா. வண்டலூரில் அறிஞர் அண்ணா ஜூ.

வனவிலங்கு சரணாலயத்திற்கு உயிரியல் பூங்காவிற்கு என்ன வித்தியாசம்? வனவிலங்கு சரணாலயம் விலங்குகளை மட்டும் வைத்திருக்கும் மேலும் குறிப்பிட்ட வகை விலங்குகள் மட்டும் அங்கே இருக்கும். முதுமலை பரம்பிக்குளம் முதலியவை வனவிலங்கு சரணாலயம். அவற்றில் யானைகள், புலிகள் தான் பிரதானம். உயிரியல் பூங்காவில் எல்லா விலங்குகளும் செடிகள் தாவரம் மரங்கள் கூட இருக்கும். மேலும் உயிரியல் பூங்காவில் மனிதர்களின் நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை(அதாவது ஆதிவாசியினர் கூட அங்கே மாடு முதலியவற்றை மேய்க்கக்கூடாது. ஆனால் சரணாலயத்தில் அவற்றுக்கு அனுமதி உண்டு.

கௌஹாத்தி ஜூவில் மொத்தம் 39 வகையான விலங்குகள் பராமரிக்கப் படுகிறது. உள்ளே நுழைந்ததுமே வடகிழக்கு மாநிலங்களின் என்டெமிக் (அங்கே மட்டும் காணப்படும் விலங்குகள்) வகையான கோல்டன் லாங்குர் என்னும் குரங்கு வகை அருகே ஹூலோக் கிப்பான் முதலிய குரங்குகளைப் பார்த்து தான் ஹேமா ஜிட்டனை கலாய்த்தான். அதற்கு பதிலடியை ஜிட்டன் தந்தான். இவ்வகை குரங்குகள் மிக பழமையான வகையைச் சேர்ந்தது . சொல்லப்போனால் பூமியில் தோன்றிய பழம் பெரும் பாலூட்டிகளில் ஒன்று.

image
image


முதல் படம் hoolook gibbon இரண்டாவது golden langur.

அடுத்ததாக 'காரியல்' எனப்படும் இந்தியாவில் மட்டும் இருக்கும் பிரத்தியேக வகை முதலையைக் கண்டனர். அது வெறும் மீன்களை மட்டும் உணவாக உண்டு வாழ்பவை. அழிவின் விளிம்பில் வாழும் ஒரு ஊர்வனை அது. அடுத்து 'ஹாக் டீர்' என்னும் ஒரு வகை மான் இருந்தது. அதன் பின் நிறைய வகை பறவைகள் இருந்தது. ஏனோ அவற்றையெல்லாம் பார்க்கும் போது அங்கிருந்த அனைவரும் இளவேனிலின் வயதை ஒத்தவர்கள் போலே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்துப் பார்த்தனர்.

அதன் பின்னர் காட்டுப்பூனை, இமயமலை கரடி, நீர்யானை, சிறுத்தைப்புலி முதலியவற்றைக் கண்டனர்.

image




காரியல் எனப்படும் முதலை .

'மௌஸ் டீர்' எனப்படும் எலி அளவே உள்ள மானைக் கண்டு எல்லோரும் ஆச்சரியம் கொண்டனர். அதன் பின்னர் கழுகுகள், சிங்கம் புலி ஆகியவற்றையும் கண்டனர். உலகத்திலே சிங்கம் மற்றும் புலி ரெண்டும் இயற்கையில் காடுகளில் வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.

பிறகு அஸ்ஸாமின் பிரத்தியேக ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பிஃமி ஹாக் எனப்படும் பன்றி வகை, ஈமு குள்ளநரி முதலியவற்றையும் பார்த்து குதூகலித்தனர். 'சங்காய்' எனப்படும் மானைப் பார்த்தனர். அதன் பின் இன்றளவும் அதன் பெயரைச் சொன்னால் நாம் நடுங்கும் பாம்புகளைக் காண அங்கிருக்கும் பாம்பு பண்ணைக்கு விரைந்தனர்.

image




சங்காய் வகை மான்.

image




அஸ்ஸாமின் மாநில விலங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்.

இவைமட்டுமின்றி உடும்பு, ஆமைகள் முதலிய விலங்குகளையும் பார்வையிட்டனர்.

இவற்றை எல்லாம் சுற்றிமுடிக்கவே நேரம் மதியதைக் கடந்தது. அங்கிருந்து அவர்களை ஒரு நல்ல அசைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் திவேஷ். பின்னே நேற்றே தாங்கள் நான்கு நாட்களாய் நாக்கு செத்துப் போய் உள்ளதாகவும் (டேய் ட்ரைன்ல தானே சிக்கன் பிரியாணி சாப்டீங்க?) அதனால் கண்டிப்பாக நல்ல உணவகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சொல்லி விட்டதால் 'கார்' எனப்படும் அஸ்ஸாமிய பிரத்தியேக அசைவ உணவைப் பற்றி நிறைய கூகுளித்தும் கண்டுக்கொண்டனர். அதே போல் அஸ்ஸாமிய பிரத்தியேக மீன் குழம்பு, வாத்து கறி முதலியவற்றை எல்லாம் ஒரு பிடிப் பிடித்தனர்.

அதும் மேலே சொன்ன அவை மூன்றும் சாதத்திற்கு அவ்வளவு பொருத்தமான சைட் டிஷ் என்பதால் ஒரு வெளு வெளுத்தனர். இவற்றுடன் அஸ்ஸாமின் மற்றொரு பிரத்தியேக உணவான சிக்கன் உடன் மூங்கில் தண்டுகளைச் சேர்த்து சமைக்கும் உணவு.ஏனோ, முன்கூட்டியே இதன் சுவையை திவேஷ் சொல்லிவிட்டான். இது பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்காது என்றது போலவே துவாரா, யாழ், ஹேமாவைத் தவிர யாருக்கும் இதன் சுவை பிடிக்கவேயில்லை.

ராஜ வாழ்வு என்பார்களே அதை இப்போது முழுவதுமாக அவர்கள் அனுபவித்தனர். நன்றாக ஊர் சுற்றிவிட்டு அதற்கு ஏற்றவாறு உணவை ஒரு கட்டு கட்டினார்கள். அதன் பின்னர் அவர்கள் போட்ட திட்டப்படியே அங்கிருந்து அருகில் இருக்கும் ஒரு தீவைப் பார்க்கச் சென்றனர். 'உமாநந்தா தீவு' எனப்படும் ஆற்றுத் தீவை, ஆம் பிரம்மபுத்திரா நதியின் மையத்தில் அமைத்திருக்கும் நிலப்பரப்பைக் கண்டனர். மேலே சொன்ன 'கோல்டன் லேங்குர்' என்னும் குரங்கு வசிக்கும் இடம். இதை 'மயில் தீவு' என்றும் சொல்வார்கள். ஆங்கிலேயர்கள் வைத்தப் பெயர். இந்த உமாநந்தா தீவுக்கும் ஒரு புராணக் கதை இருக்கிறதாம். இங்கே புகழ்பெற்ற சிவன் கோவில் இருக்கிறதாம். உலகத்திலே மனிதர்கள் வாழும் சிறிய நதிநீர் தீவு என்றால் அது இந்த தீவுதானாம்.

image




படகில் கொஞ்சம் சென்று அங்கே அந்த மாலை அந்தி சாயும் பொழுதில் ஆதவனை நன்கு கண்டு கழித்தபடி நிறைய செல்பிக்களை எடுத்துக் குவித்தனர். எல்லோரும் நான் வெஜ் சாப்பிட்டதால் யாரும் அந்தக் கோவிலுக்குள் செல்லாமல் அந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்தப்படி இருந்தனர்.

ஏனோ மௌனிக்கு ஒரு சர்ப்ரைஸ் பிளான் பண்ணியபடி அந்தத் தீவில் அந்த இடத்தில் ரொம்ப ரொமேன்டிக்காக ஒரு ப்ரோபோசலை செய்தான் ஹேமா. என்ன கையில் ஒற்றை ரோஜாவைப் பிடித்து அவளைப் பார்த்து சொல்ல அந்தக் கூட்டமே ஆர்ப்பரித்தது. இதை மௌனியே எதிர்பார்க்கவில்லை.

"இப்போ எதுக்கு இப்படி ஒரு ப்ரோபோசல்னு நினைக்கிறாயா?"

"அதானே ஒன்னா ஒர்க் பண்ணுவாங்கலாம், ஊர்ச் சுத்துவாங்கலாம் ஏன் ஒரே ரூம்ல..." என்றதும் இதித்ரி அவன் காலை மிதித்தாள்."நீயும் நானும் தான் ஒரே ரூம்ல தங்குறோம், நாம என்ன அப்படியா?" என்றதும்,"நாம வேணுனா அப்படி இல்லாம இருக்கலாம், ஆனா அவங்க" என்றான் ஜிட்டன். அவனைத் திரும்பி முறைத்தபடி,"நீ சொல்லு மௌனி அப்படித் தானே நினைக்கிற?" என்றான் ஹேமா.

"ஹ்ம்ம்" என்றாள்.

"நான் உனக்கு பெருசா ப்ரொபோஸ் பண்ணல. அன்னைக்கு பஸ்ல உன்கிட்ட என் லவ்வை சொன்னேன். மறுநாள் வீட்டுல சொன்னேன். யா நான் லவ்வை சொல்லலேயே ஒழிய நான் அதை என் ஒவ்வொரு செய்கையிலும் உனக்கு உணர்த்திட்டு தான் இருக்கேன். பட் நான் உனக்கு இன்னும் ப்ரொபோஸ் பண்ணலனு தோணுச்சு, சோ" என்றான்.

"ஆஹா என்னமா பிட்டைப் போடுறான்" என்றவன் திரும்பி இதியைப் பார்த்து, 'நாமளும் போடுவோம் எங்ககிட்டயும் கைவசம் பிட் இருக்கு' என்று யோசித்து,"இதி" என்று அவன் குழைந்து அழைக்க அவளோ,"எவ்வளவு அழகா ஒரு ரொமான்டிக் ப்ரோபோசல் போகுது நீயும் ரொமான்ஸ் பண்ண மாட்ட ரொமான்ஸ் பண்றவங்களையும் பார்க்க விட மாட்ட போடா?" என்றவள் அங்கேயே பார்க்க,

அதற்குள் இளங்கோ தியா இருவரும் அவனைப் பார்த்துச் சிரித்தனர். "ச்சே அவனுக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கான் போல" என்றான் சலித்தபடியே,

"அப்போ உனக்கு?" என்ற தியாவுக்கு,

"மூதேவி முதுகு மேல உட்கார்ந்துகிட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறா" என்றான்.

"கேட்டியா இதி உன்னை தான் மூதேவின்னு குறிப்பால் சொல்றான்" என்றதும்,"ஐயோ பேபி: என்று திரும்ப அவளோ அனல் பார்வை ஒன்றைப் பார்த்து அங்கிருந்து சென்றாள்.

"டேய் நான் ரொம்பலாம் பொறுக்க மாட்டேண்டா"

"ஏன் கால்ல விழுந்திடுவியா?"

"சும்மா இருந்த சிங்கத்தைச் சொறிஞ்சுப் பார்த்துடீங்க. இனிமேல் பார்ப்பீங்க என் ரூபத்தை" என்றான் ஜிட்டு.

அங்கோ அதற்குள் மௌனி அவன் செய்த ப்ரோபோசலில் திக்குமுக்காடிப் போய் அவன் கொடுத்த ரோசை வாங்க எல்லோரும் அவர்களுக்கு பெரிய ஓ போட்டனர்.

விசில் அடித்து நித்யாவை அழைத்த விவான் தன் விரல்களால் அவர்களைச் (ஹேமா மௌனியை) சுட்டி பின்பு அவனையும் அவளையும் சுட்ட (அதாங்க இது மாதிரி உனக்கேதாவது ரொமான்டிக் ப்ரோபோசல் வேண்டுமா? என்று சிக்கனலில் கேட்கிறானாம்) அவளோ திடுக்கிட்டு இரு கரங்களையும் கூப்பி 'ஆளை விடுடா சாமி' என்பது போல் செய்ய அவன் அவளை வம்பிழுத்த சந்தோசத்தில் அவர்களைப் பார்த்தான்.

பிறகு எழுந்த ஹேமா அவளை அணைக்க அதன் பின் அந்தக் கூட்டம் ஜோடிகளாகப் பிரிந்தது. பார்வதியை அழைத்துச்சென்ற இளங்கோ,"உனக்கேதாவது இந்த மாதிரி ஆசையிருக்கா?" என்றதும்,"எனக்கு இந்த மாதிரி ட்ராமாட்டிக் ப்ரோபோசல் எல்லாம் வேண்டாம். கடைசி வரை நம்ம ரிலேஷன் ஷிப் இதே மாதிரி இருந்தா போதும்" என்றதும் அவளை விந்தையாகப் பார்த்தான் இளங்கோ.

'பே'வென இதையே பார்த்துக்கொண்டிருந்த துஷ்யந்திடம்,"டேய் நல்லா பார்த்துக்கோ, உனக்கும் இதெல்லாம் யூஸ் ஆகும்" என்றதும்,"ஹ்ம்ம் அவளா இதுக்கெல்லாம் மசிவா? முட்டைக்கண்ணி" என்று செல்லமாய் அவளைத் திட்டினான்.

"யார் மச்சான் அந்தப் பொண்ணு? நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு தூக்கிடட்டுமா?" என்று திவேஷ் சிங்கமுத்து ஸ்டைலில் கேட்க,

"டேய் நீ மாவட்ட கலெக்டர்டா. என்னமோ அடியாள் கூட்டத் தலைவன் மாதிரி பேசுற?" என்று அதிர்ந்தான் துஷி.

துவாராவின் கரங்களில் இருந்த இளவேனில் அப்போது யாழிடம் கைமாறினாள். (பயணங்கள் முடிவதில்லை...)
 
எல்லாரும் சிரிக்க ஜிட்டுவை குழில தள்ளுவீங்களா? ? எனக்கு சிரிப்பே வரல.
எட்டாம் நுற்றாண்டு காமிக்கியா கோவில், வழிபடும் முறை, அறிவியல் ரீதியான தகவல்கள், ??
ஜிட்டன் இளங்கோ ?
Zoo சுத்தி காட்டிட்டீங்க ?
ஹேமா மௌனி ப்ரொப்போசல் ?
ஆனாலும் ஜிட்டு இப்படியா உன் mind voice? ? nice update.
 
Last edited:
எல்லாரும் சிரிக்க ஜிட்டுவை குழில தள்ளுவீங்களா? ? எனக்கு சிரிப்பே வரல.
எட்டாம் நுற்றாண்டு காமிக்கியா கோவில், வழிபடும் முறை, அறிவியல் ரீதியான தகவல்கள், ??
ஜிட்டன் இளங்கோ ?
Zoo சுத்தி காட்டிட்டீங்க ?
ஹேமா மௌனி ப்ரொப்போசல் ?
ஆனாலும் ஜிட்டு இப்படியா உன் mind voice? ? nice update.
சிலதுலாம் ஸ்பாட் காமெடி. அப்போ தான் சிரிப்பு வரும். இருந்தாலும் நீங்க ஜிட்டுவை ஹீரோ ரேஞ்சுக்கு பார்க்கறீங்க? நன்றி. ஜிட்டுக்கு பலம் பலவீனம் ரெண்டும் அவன் வாய் தான்...நன்றி???
 
Interesting episode...
A lots of informations..
நீங்க அஸ்ஸாம் ல இருந்தீங்களா...?
நோ நான் அசாம் மேப்ல பார்த்ததோடு சரி. எல்லாம் நான் கேதர் செஞ்ச விஷயம். நன்றி??
 
Top