Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயே என் ஜீவனடி ?1?

Advertisement

Salma amjath khan

Tamil Novel Writer
The Writers Crew
'நான் என்ன பண்றேன். நான் ஏன் இவங்க கூட போறேன்.ஓ மை காட். ஏன் என்னால எதுவும் பண்ண முடியல. ஒரு கயிற காரணம் காட்டி இவங்களால எப்படி என்னை இவங்க கூட கூட்டிட்டு போக முடியும்.'என நினைத்தவளாய் சுற்றும் பார்த்தாள்.

' டிரைவர் சீட்டுல ஒரு எருமை மாடு. அதுக்கு பக்கத்துல ஒரு எருமை மாடு. எனக்கு பின்னாடி ரெண்டு கெட மாடு. இதெல்லாம் பத்தாதுன்னு எந்த உரிமையில என்னை உரசிட்டு உட்கார்ந்து இருக்கான்னு தெரியல பார்க்க காட்டுப் பன்னி மாதிரி இருக்கான்.' என ஓரக்கண்ணால் தன் அருகில் இருப்பவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்,ஆனந்தி.

தன் விதியை எண்ணி நொந்தவள் தன் பார்வையை வெளியில் செலுத்தினாள்.

தென்றல் வந்து ஆறுதல் அளிப்பதாக அவளை அணைத்து உறவாடியது.

'இவ்வளவு அழகா இயற்கைய படைச்சியே என் மேல அக்கறை இருந்திருந்தால் கொஞ்சம் என் வாழ்க்கையையும் அழகா படைச்சு இருக்கலாம்ல.' என கடவுளை அர்ச்சனை செய்து கொண்டிருக்க,

"வண்டிய ஓரமா நிறுத்து." என அருகில் இருப்பவன் கட்டளையிட, திடுக்கிட்டு திரும்பினாள்.

' இங்க எதுக்கு நிறுத்த சொன்னான்.ஒருவேளை நம்மள இறக்கிவிட போறானோ. இறக்கி விடுவறதா இருந்தா ஒரு பஸ் ஸ்டாப்ல இறங்கி விட வேண்டியது தானே. இங்கே இறக்கிவிட்டா நான் என்ன பண்ணுவேன்.'

அவளை ஒரு நொடி பார்த்தவன் அவளை சட்டை செய்யாமல் கதவை திறந்து வெளியே சென்று உடலை முறித்தான்.

அவன் இறங்கியதும் வண்டியில் இருந்த அத்தனை மாடுகளும் ஒவ்வொன்றாக இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தனர்.

" நீ என்ன சாப்பிடுற..?" என்ற குரல் கேட்க, தன் பார்வையை ஒருநிலைப்படுத்தி பார்க்க சற்று முன் தன் அருகில் அமர்திருந்தவன் வெளியில் நின்று தன்னை வெறித்துக் கொண்டிருந்தான்.

அதை கண்டும் காணாததுபோல் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

' திங்கிறதுக்கு தான் வண்டியை நிறுத்தினானா. நான் கூட என்னமோ நெனச்சேன்.' என எண்ணியவளை அவன் குரல் கலைத்தது.

" ஆனந்தி உன்ன தான் கேட்கிறேன். என்ன சாப்பிடுற" என்றவனை முறைத்தவள்,

"என்னது ஆனந்தி யா.... எந்த உரிமையில என் பேரை சொல்லி கூப்பிடுறீங்க. இந்த பேர் சொல்லி கூப்பிடுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுகாதீங்க." என கை நீட்டி எச்சரித்தாள்.

' என்னை தவிர வேற எவனுக்கும் அந்த உரிமை இருக்குன்னு நீ நினைக்கிற.' என மனதிற்குள் நினைத்தவன் அதை சொல்ல வாயால் ஆகாதவனாய் தன் பார்வையை இடதுபுறம் செலுத்தினான்.

அவன் கண்களில் இருந்த வலியை அவள் அறிய வாய்ப்பில்லை.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாதவன் அருகில் இருந்தவனிடம் கண்காட்டி விட்டு நகர்ந்து சென்றான்,
அரவிந்த்.

ஆனந்தி, 'நாமளும் கீழே இறங்கலாம்.' என கதவை திறப்பதற்குள் அவள் கதவின் அருகில் வந்த ஒரு மாடு, "நீங்க வண்டியை விட்டு இறங்க வேண்டாம்னு அண்ணே சொல்ல சொன்னாங்க."

' என்னை இறங்க வேண்டாம்னு சொல்றதுக்கு நீ யாரு. உன் நொன்னே யாரு...' என் மனதில் வசைபாடியவள் பாதி கதவு திறந்து இருந்ததால் கதவை அறைந்து சாத்தினாள்.

அவளிடம் சொன்னவன் நகராமல் அதே இடத்தில் இருக்க அவனை எரித்துவிடுவது போல் பார்க்க, அவன் திரும்பி நின்று கொண்டான்.

' எந்த இடத்தில் மாட்டிக் கொண்டோம்.' என மனதிற்குள் புலம்பிக் கொண்டே அரவிந்தை பார்க்க அவன் கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தான்.

' நான் என்னடாநா இங்க உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருக்கேன். அவன் என்னன்னா எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி உக்காந்து டீ குடிக்கிறான். என்னை ஒரு மனுஷியாக கூட மதிக்காம.' என புலம்ப,

" அண்ணே இந்த டீயை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க." என இதற்கு முன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த அவன் நீட்ட,

' பரவாயில்லை எனக்கு வாங்கி கொடுக்கணும்னாச்சும் தோணுச்சே' என யோசித்து கையை நீட்ட, பின் எதையோ நினைத்தவளாய் கையை உள்ளிழுத்துக் கொண்டாள்.

' என்ன பண்ற ஆனந்தி. நீ என்னமோ லவ் பண்ணி கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போற மாதிரி பிஹேவ் பண்ற. அவன் உன்னை கிட்டத்தட்ட கடத்திட்டுப் போறான். அவன் கிட்ட சொல்லி சொல்லி புரிய வைக்கிற வர நீ எதுவும் சாப்பிடாம இருக்குறது தான் நல்லது. அப்பதான் சிம்பதி கிரியேட் பண்ண முடியும்.'

" என்ன ஆச்சு அண்ணி, டீ குடிக்க மாட்டீங்களா. நான் வேணா காபி இல்ல பால் வாங்கி வரட்டா."

" என்ன அண்ணியா போடா பன்னி." என மனதில் நினைத்தவள் வாயை திறந்து சொல்ல,

" வார்த்தைய பார்த்து பேசு. பேசறதுக்கு முன்னாடி எங்க இருக்கோம். யார் கிட்ட பேசுறோம்னு புரிஞ்சு பேசினா உனக்கு நல்லது." என அரவிந்த் முறைப்பாக வந்து நிற்க, கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது ஆனந்திக்கு.

" பரவாயில்லை விடுங்க அண்ணே. அண்ணி என்னை தானே சொன்னாங்க." என பெருந்தன்மையாக கூற, அவனை ஏறிட்டவன்,

"சரி டீயை அவ கிட்ட குடுத்துட்டு போ." என சொல்ல,

" எனக்கு ஒன்னும் வேணாம்" என கோபமாக ஆனந்தி மறுக்க,

"நல்லதா போச்சு. டீயை கொடுத்துட்டு வந்து வண்டியை எடு குணா. மயிலம்மா நேரத்துக்கு வீட்டுக்கு வர சொன்னாங்க." என யாரையும் கண்டுகொள்ளாமல் சற்று திமிருடன் மீண்டும் அவள் அருகே வந்து அமர்ந்தான்.

ஆனந்திக்கு ஏனோ அவனை பார்க்க எரிச்சலாக வந்தது.

' நல்லதா போச்சாம்ல. ஆனந்தி எனக்கு என்னவோ இவன் உன்ன புரிஞ்சு அனுப்பி வைப்பான்னு தோனல. மனச கல்லாக்கிகோடி.

எப்படியாவது நைசா பேசி அவனுக்கு புரிய வச்சு எஸ் ஆயிரு.

அவனை பன்னின்னு சொன்னதுக்கே இவ்வளோ கோபப்படுறான் இதுல நான் இவனை காட்டுப் பன்னி திட்டினது தெரிஞ்சா...' என நினைக்கும் போதே பயம் அவளை தொற்றிக்கொள்ள், குணா வண்டியை அரவிந்த் வீடு நோக்கி செலுத்தினான்.
 
உங்களுடைய "நீயே என்
ஜீவனடி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சல்மா அம்ஜத் கான் டியர்
 
Top