அருமையான பதிவு பிரியா???.விளையாட்டா கூட சத்தம் போடாத அப்பா,அடிச்சுட்டு பேசாம இருக்கறதும்,பேத்தி மேல உயிரா இருந்த கிழவி கடவுளே கதின்னு இருக்கறதை பார்த்தும் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என அஷ்டா இன்னும் புரிஞ்சுக்கலையே????.
தான் செய்தது தவறுன்னு புரிஞ்சுக்காம, வீரா ஏதோ கோபத்துல போக சொல்லிட்டான் வந்து கூப்பிட்டு போவான்னு நெனச்சுட்டு இருக்கா???.அளவுக்கதிகமா செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி செவுரா ஆக்கிட்டு சண்முகமும்,மங்களம் பாட்டியும் இப்ப வருந்தி என்ன பண்ண???.
அப்பாவோட 'இன்னர்ஸ்'அம்மா துவைக்கறதை பார்த்து அதிர்ச்சியாகறவளுக்கு பத்துல,ஒன்பது பேர் கணவன்'இன்னர்ஸ்'துவைக்கறது தெரியலை??.
நீலா திருமணத்துக்கு முன் அம்மா வீட்டில் இருந்ததை பற்றியும்,திருமணத்துக்கு பின் சண்முகம், மங்களத்தால் அவரும்,அவர் குடும்பத்தாரும் பட்ட அவமானம்,வருத்தங்களை சொல்வதும்??அரசாங்க பள்ளியில் டீச்சர் வேலை கிடைத்தும் போக விடாதது,அடுப்போடு நின்னு நின்னு நானும் எரிஞ்சு சாம்பலாய்ட்டேன் என நீலா சொல்வது மனதை கனக்க செய்யுது????.
அந்த வீட்ல வாழாத நீ,வேற எங்கேயும் வாழ தகுதி இல்லாதவ என நீலா சரியா சொன்னார்????வீராவை பற்றி நீலா பெருமையாக பேசப் பேச,அஷ்டா தலை குனியும் நிலை???.வீரா எனும் சாது மிரண்டு போயிருக்கு,இவளாக தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் அவன் அழைக்க வருவது சந்தேகம் தான்??.
இந்த வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்க,உன் வீட்டுக்கு திரும்பி போகனுங்கறதை ஞாபகம் வச்சிக்கோன்னு சொல்லும் நீலா கொஞ்சம் வேலைகளையும் கத்துக் கொடுக்கலாம்????.
நீலா பேசியதை சண்முகம் கேட்டிருந்தால் நீலாவுக்கு செய்த தவறை உணர்ந்து கொள்வாரா????