Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூங்காற்றே கேளடி.....

Advertisement

புவனா

New member
Member
சுற்றி எங்கிலும் பல அடுக்குகளை கொண்ட கட்டிங்களே தெரிய மென்மேலும் அதை உயர்த்தி கொண்டு இருந்தனர் கட்டிட தொழிலாளர்கள்..!!! கண்ணுக்கு சிறு புள்ளியாய் தெரியும் சிறு தொழிலாளர்களை கூட கனகச்சிதமாக கூர்ந்து கவனித்து அவர்களை வாட்டி எடுத்து கொண்டு இருந்தான் ஆரூத் என்கிற ஆரூத் நிகிலன்..!!
அண்ணா இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க..!! அங்க பாருங்க யாரும் வேலை செய்யலை கொஞ்சம் போயி பாருங்க அண்ணா..!! இந்த மாசம் நான் ப்ளாஸ்டெரிங் ஒர்க், பைண்டிங் ஒர்க் எல்லாம் முடிச்சு இருக்கணும் கொஞ்சம் பாருங்க போங்க!! என இவன் கத்த...
கண்களில் சிறு பயத்தை தேக்கிய படி இதோ பார்க்கற தம்பி ... என கூறி மேஸ்திரி அங்கிருந்து நகர்ந்தார்.!!
*******
அக்கா குறி பாத்து அடி கா... இல்லனா எங்கிட்ட கொடு நான் பார்த்து அடிக்கிற என் மனத்தை வாங்கிறதா அலு என அங்கிருந்த சிறுமி கூற
ஏய் வாண்டு கொஞ்சம் கம்னு இரு நான் அடிக்கிற அடியில இந்த கோழிக்குண்டு தெறிக்க போகுது நீ வேண பாரு...
இதுவே எவ்வளவு நேரம் தான் சொல்லுவ அடிக்கா எல்லாரும் நம்மலேயே பார்க்கறாங்க...
கடவுளே பெத்தரனா, பாட்டாப்பா, கருப்பு சாமி நீ தான் துணையா இருக்கணும் எப்படியோ இதை அடிக்க எனக்கு தையரியத்தை குடு இல்லைனா இவனுங்க என்னை வம்பு பண்ணியே ஒரு வழி ஆக்கிடுவானுங்க..
கீழ் உதட்டை கவ்வி, ஒரு இமையை மட்டும் இறுக மூடி குறி வைத்து அடிக்க தயாராக இருந்தாள் அவள் குறி வைத்து கோழிக்குண்டை அடிக்க மற்றொரு குண்டு தெறித்து வெளியில் விழ மற்றொரு குண்டு கோட்டின் அருகில் விழுந்து இருந்தது...
அல்லு அக்கா.... என கோரஸாக அனைவரும் கத்த...
இரு இமைகளையும் இறுக முடி இருந்தவள் மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள்...
ஐயோ செம நான் ஜெயிச்சிட்டேன் என கூறி அவள் குதிக்க..
அனைவரும் அவளை கொலை வெறியுடன் பார்த்தனர்..
டேய் டிகோ ஏன் டா அப்படி பார்க்கற ...
என்னது அப்படி பார்க்கறனா.. அங்க பாரு எருமை நம்ம அவூட்டு ஆகிட்டோம்
என கூறி அவன் அழுகைக்கு தயாராக
ஐயோ டிகோ அழாத டா வா நம்ம மறுபடியும் விளையாடி ஜெயித்து காட்டலாம் என கூறவும் அங்கிருந்து மற்றோரு சிறுமி அவளை அழைக்கவும் சரியாக இருந்தது..
அலரு.. ஏய் அலரு அக்கா.. உங்க வீட்டுக்கு வெள்ளை கலருல காரு வந்து இருக்கு அக்கா என அதுல நிறையா நகை எல்லாம் போட்டுட்டு பெரிய பொட்டு வைச்சுட்டு குண்டா ஒரு கிழவி வந்துச்சு... அப்பறம் இன்னொரு அக்கா வந்தாங்க ஆப்பிள்ளு, ஆரஞ்சு, எல்லாம் வைச்சு இருந்தாங்க அலரு...
சரி வா.. டிங்கு போயி பாத்திட்டு வருவோம் என டிகோ சொல்ல அனைவரும் படை எடுத்து கிளம்பினர் அலர் வீட்டிற்கு..
*****
வாங்க மா .. வாங்க எப்படி இருக்கீங்க என தங்கம் கேட்க..
நல்ல இருக்கோம் தங்கம் நீ எப்படி இருக்க... உன் புள்ளை படிப்பை முடிச்சுட்டாள என வந்தவள் கேட்க
முடிச்சுட்டா அம்மாச்சி அடுத்தது படிக்கறனு சொல்ற..
அதான் 21 வயசு ஆச்சுல்ல இப்பவே கல்யாணம் பண்ணி வைக்கமா எவ்ளோ நாள் இப்படியே புள்ளையை பொத்தி பொத்தி வளத்துட்டு இருக்க நீயும் ஒரு ஆளு நாளா பின்ன உனக்கு ஏதாவது ஆனால் அவளை பாத்துக்க ஆளு வேணும் தங்கம்..
ஏய் கிழவி.. உன் வாயை கலித்தண்ணி ஊத்தி கழுவு இல்லை உன் வாயை உடைக்க கூட தயங்க மாட்டேன்!! என கூறிக்கொண்டே அங்கிருந்து வந்தால் அலர்விழி....!!!!
அனைவரையும் கவரக்கூடிய மான்விழி,இடை தாண்டிய கற்றை
கூந்தலை கொண்டை போட்டு அது பாதி அவிழ்ந்து இருந்தது.. மாதுளை நிற இதழ்கள் சிவப்பும் இல்லாமல் மாநிறத்திலும் இல்லாமல் மிதமான அழகில் ஜொலித்தாள் கிராமத்து பெண் என்ற தோரணையில் நின்றாள் அவள் கண்களில் கொதிப்பு இருந்தது .. இவளையே இமைக்காமல் பார்த்த கிழவியை அவளின் அடுத்த வார்த்தை அதிர்ச்சியை தான் கொடுத்தது.. இப்போ எதுக்கு வந்து என் தங்கமா மனசை கஷ்ட படுத்திட்டு இருக்க தாய் கிழவி இங்க இருந்து கிளம்பு முதல்ல என அலர் கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் ..
அவளின் கோபம் நியாயம் தானே அதற்காக இப்படி பேசுவது முறையல்ல என்று அருகில் இருந்த பெண் பேசும் முன் தங்கம் பேசி இருந்தார் விழி மா இப்படி பெரியவர்களை பேச கூடாது மன்னிப்பு கேளு என சொல்ல.
அதெல்லாம் என்னால முடியாது என கூறி அங்கிருந்த அன்டாவை உதைத்து தள்ளியவள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டால் ...!!!
 
உங்களுடைய "பூங்காற்றே
கேளடி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
புவனா டியர்
 
Last edited:
Top