Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-7

Advertisement

praveenraj

Well-known member
Member
மொட்டுவின் பின்னாலே சென்ற லவாவுக்கு அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் தன் நண்பன் வெங்கடேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் ஆந்திராவையே பூர்விகமாகக் கொண்டவன் என்பதால் அவனுடன் ஆங்கிலத்திலே உரையாட அங்கே அமர்ந்திருந்த வைத்தி மற்றும் கனகா இருவரும் தங்கள் பேரனின் திணறல் இல்லாத சரளமான ஆங்கில உரையாடலையே கவனித்தனர். பேசும் பொழுது அதை எதேர்சையாகப் பார்க்க நேர்ந்தவன் அவர்களுக்கு ஒரு புன்னகை சிந்தி அவனிடம் பேசி முடித்ததும்,"என்ன அம்மாச்சி ரெண்டு பேரும் அப்படிப் பார்க்கறீங்க?"

"மெத்த படிச்சு இப்படி நல்லா ஆங்கிலம் பேசுறதைப் பார்க்க எங்களுக்குப் பெருமையா இருக்குவே..." என்ற வைத்திக்கு,

"இங்கிலிஷ் தெரிஞ்சு இங்கிலிஷ் பேசுறது ஏன் இங்கிலீஷ்னு இல்ல வேற எந்த மொழியைப் பேசுனாலும் அதுல பெருமை ஒன்னும் இல்ல தாத்தா. மொழி ஒரு கருவி தான். தோராயமான உலகத்துல இன்னைக்கு 6500 மொழிகள் இருக்காம். இதுல ஒரு சில மொழி பேசுறது மட்டும் தான் பெருமைனு நெனைக்கறதால் நிறைய மொழிங்க அழிவின் விளிம்பில் இருக்காம். இந்தியாவுல மட்டுமே ஆயிரத்தி நானூறு மொழிகளை தனித்துவ மொழிகளாகவும் ஆயிரத்தி ஐநூறு மொழிகளை கிளை மொழிகளாகவும் (பல ஆயிர மொழிகளை உச்சரிப்பு வேறுபாடுகளாகவும் அதாவது சென்னை தமிழ் கொங்கு தமிழ் மாதிரி...) பிரிச்சிருக்காங்க. ஆனா அதுல நூத்தி இருபத்தி ஒன்னு மொழிகளை மட்டும் தான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவங்க பேசுறங்கலாம். இந்த மாதிரி அழிவின் விளிம்பில் இருக்கும் மொழிகளைக் காப்பாத்துவதற்கே ஒரு அமைப்பு வேற இருக்கு... இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன்னா, நீங்களே சின்ன பிள்ளைங்க மத்தியில இந்த மொழி பேசுனா தான் பெருமை இதுதான் அறிவுனு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தவறான கற்பித்ததை மனசுல ஆழ விதைச்சிடுறிங்க... நாளைக்கு அந்தக் குழந்தையால அதைப் பேச முடியலைன்னா இது கூடத் தெரியாதானு அவமானப் படுத்தறீங்க... இப்போ எதுக்கு இங்க இதெல்லாம் சொல்றேன்னா குஷா படிப்பை வெச்சு மொட்டுவை மட்டம் தட்டுறதுக்கு ஒருவகையில் நீங்களும் தான் காரணம். சின்ன வயசுல நீங்க குஷா மனசுல நீ நல்லாப் படிக்கறய்யா ஆனால இவளைப் பாருனு நீங்க வெதைச்ச அந்த விதை தான் இன்னைக்கு இப்படி மரமா வந்து நிக்குது... குழந்தைக மனசு பால் மாதிரி... அதுல இனம், மொழி, நிறம், படிப்புனு எதையும் கலந்துடாதீங்க..." என்றவன் இதற்கெல்லாம் நீங்களும் ஒரு காரணம் என்பதைப் பெரியவர்களுக்கு ஆழப் புரியுமாறு விளக்கிவிட்டுச் சென்றான்.

பெரியவர்கள் இருவரும் தங்கள் தவறை எண்ணி வருந்த ஏனோ அவளுக்காக தன்னை தன் உடன் பிறந்தவனே குத்திக்காட்டுவதாக குஷாவிற்குத் தோன்றியது.

மேலே சென்றவன் அவள் அறை தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு,'டொக் டொக்' என்னும் சப்தத்துடன் தட்ட,

"யாரது?" என்று உள்ளே இருந்து மொட்டு குரல் கொடுக்கவும்,

"திருடன்ன்ன்...." என்று சிரித்தவாறே மொழிந்தான்.

"என்ன வேணும்?" என்று அதே குறும்புடன் அவள் வினவ,

"நகை வேணும்..."

"அப்படியா? என்ன நகை?" என்று அவள் சிரித்தபடியே கேக்க,

"உள்ளே அஞ்சறை அடில சுமார் ஒரு அறுபது கிலோ எடைல ஒரு தங்கம் இருக்கு... அது தான் வேணும்" என்றான் லவா.

"அச்சச்சோ நாங்க யாரும் அந்தத் தங்கத்தை விக்கறதிலையே?" என்று அப்பாவியாய் மொழிந்தாள் மொட்டு.

"ஹே நான் வாங்க வந்தவன் இல்ல... கடத்த வந்தவன்... ஐ மீன் திருடன்..." என்றதும், தண்ணீர் சப்தம் கேக்கவும்,"சாரி சாரி குளிக்கறியா மொட்டு?"

"ஆமா... நான் கதவைத் திறந்து டூ மினிட்ஸ் கழிச்சு தான் நீ உள்ள வரணும் ஓகேவா?" என்ற நிபந்தையுடன் கதவைத் திறந்துவிட்டு அவள் மீண்டும் உள்ளே சென்று விட நுழைந்தவன் அந்த அறையைச் சுற்றியும் நோட்டம் விட்டான். அறையின் சுவற்றில் விராட் கோலியின் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருக்க ஆங்காங்கே அவளுடைய படம் அவள் பெற்றோரின் படம் என்று மாட்டப்பட்டிருந்தது. அப்படியே நோட்டமிட்டவன் அந்த அறையின் ஜன்னல் ஓரத்தில் ஒரு பெரிய புளியமரத்தின் கிளை இருக்க அதன் உச்சியில் ஏதோ பறவை ஒன்று கூடு கட்டியிருந்தது. சிறிது நேரம் ஏதேதோ யோசனையில் வேடிக்கை பார்த்தவனின் கண்ணில் அந்த எம்ப்ராய்டரி ஒர்க் செய்யப்பட்ட பிரேம் தென்பட்டது. தஞ்சை பெரிய கோவிலின் வெளிப்புறம் பிரவுன் நிற வண்ண நூலிலும் மேலே மேகம் நீல நிறத்திலும் கீழே பச்சை வண்ணத்தில் புல்வெளியுமாக மிகத் தத்ரூபமாகவே இருந்தது அந்த பிரேம். அதன் அழகிலும் அவளுடைய திறமையிலும் பிரமித்தவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவள் எம்பிராய்டரிங் செய்வாள் என்று அவனும் அறிவான் தான். ஆனால் இதுவரை அவள் செய்த பறவையையோ விலங்கையோ மலரையோ மட்டும் கண்டவன் தற்போது அவளுடைய திறமையில் மயங்கியவாறே நின்றிருந்தான்.

"ஹலோ சார்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க?" என்று அவனைக் கிள்ளவும் தான் தன்னிலை அடைந்தவன் அந்த மன எழுச்சியில் அவள் கரத்தைப் பிடித்து வாழ்த்திவிட்டு அவளை கட்டியும் பிடித்தான். ஆனால் அவனுடைய இந்த திடீர் செய்கையில் அவளுடைய அசௌகரியத்தை உணர்ந்தவனாக விலகி,"சத்தியமா சொல்றேன் எனக்கு வார்த்தையே வரல மொட்டு... மெஸ்மெரைஸ்ட் அதாவது மதிமயங்கினேன்னு சொல்லுவாங்க இல்ல? அதை இப்போ நான் அனுபவிச்சேன் மொட்டு. இதை சும்மா விடக் கூடாது... ஐ மஸ்ட் காம்ப்ளிமென்ட் யூ... சொல்லு உனக்கு என்ன வேணும்? ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் ஆஃபர்... நீ என்ன கேட்டாலும் கிடைக்கும்... சொல்லு மொட்டு..." என்றவனின் கண்களில் தெரிந்த அந்த உண்மையான மகிழ்ச்சியை மொட்டுவால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. அதை வெறும் மகிழ்ச்சி என்று மட்டும் சுருக்கிவிடாமல் உற்சாகத்தின் உச்சம் எனலாம். விட்டால் லவா ஆனந்த தாண்டவமே ஆடிவிடுவதைப் போல் காட்சியளித்தான்.

"நீ என்னைப் பாராட்டுனதே எனக்கு அப்படி இருக்கு... நம்ம திறமைகளால் நாம பணம் காசு சம்பாதிக்கனும்னு எல்லாம் அவசியம் இல்ல லவா... நம்ம திறமைக்கான உரிய அங்கீகாரம் அதும் நமக்கு உரியவங்க கிட்ட இருந்து வந்தாலே போதும்... என் மகிழ்ச்சியினுடைய எல்லை நீ தான் லவா... அப்படிப்பட்ட உன்கிட்ட இருந்து ஒரு உற்சாகமான வார்த்தை... வார்த்தை எதுக்கு உன் சிரிப்பு ஒன்னு போதும்... வேற எதுவும் வேணாம்..." என்று மொட்டு நிறுத்த,

"இதை ஏன் இங்க மாட்டியிருக்க? கீழ ஹால்ல மாட்டியிருக்கலாம் இல்ல? இரு நான் மாட்டுறேன்..." என்று அதைக் கழட்ட முற்பட்டவனைத் தடுத்தவள்,

"வேணாம் லவா இங்கேயே இருக்கட்டும்..."

"ஏன்?"

"ஏன்னா இத உன்னைத் தவிர யாருமே இன்னும் பார்த்ததில்லை. இன் பேக்ட் போன மாசம் தான் இதை முடிச்சேன். இதை நான் யாருகிட்டயும் சொல்லல. அண்ட் இது எனக்கும் ரொம்ப ஸ்பெஷல்... ஏன்னா இதுவரை சின்ன சின்னதா மட்டுமே செஞ்சிட்டிருந்த நான் செஞ்ச பெரிய ஒர்க் இது... அண்ட் அது போக..." என்று அவள் இழுக்க,

"அது போக?"

"நான் இன்னும் டிகிரி முடிக்கலைனு வீட்ல எல்லோரும் செம கடுப்புல இருக்காங்க... இப்போ இது தெரிஞ்சா இதால தான் நான் படிக்க மாட்டேங்குறேன்னு இன்னும் டோஸ் விழும்..." என்று அவள் ரகசியம் போல் சொல்லிச் சிரிக்க,

"ஏன் மாமா எதாவது சொல்லுவாரா?"

"அப்பாக்கு நான் படிச்சு உங்களைப் போல் ஒரு என்ஜினீயர் ஆகணும்னு ஆசை... ஆனா நான் பி.எஸ்.சி அக்ரி எடுத்ததே அவருக்குப் பிடிக்கல... சரி அதுலையாவது ஒழுங்கா டிகிரி முடிச்சேன்னானா அதுவும் இல்லயே... சோ அவருக்கு இந்த விஷயத்துல என் மேல செம கடுப்பு... என்னமோ பண்ணுனு விட்டுட்டாரு..." என்று அவள் மீண்டும் சிரிக்க இம்முறை லாவவிடம் இருந்த உற்சாகம் முற்றிலும் விடிந்திருந்தது.

"ஏம்பா மூஞ்சி டல் ஆகிடுச்சு?"

"நான் அங்க ஹைதராபாத்ல இருக்கும் போதும் எப்போவாது வீட்டு ஞாபகம் வந்தா உன்னை தான் நெனப்பேன். ச்சே மொட்டு மட்டும் எவ்வளவு லக்கி இல்ல? அவ பாரு ஜாலியா வீட்ல அம்மாச்சி தாத்தா கூட இருக்கானு யோசிப்பேன். பியர் ப்ரெஸ்ஸர்ங்கறது (சக அழுத்தம் அல்லது சமூக அழுத்தம்) எல்லோருக்கும் இருக்கு தானே? மாமா வரட்டும் நான் பேசுறேன்... இப்போ தான் கீழ எல்லோருக்கும் ஒரு லெக்சர் கொடுத்துட்டு வந்தேன்... எல்லோரும் பர்ஸ்ட் ரேங்க்கும் கோல்ட் மெடலும் தான் வாங்கணும்னா அப்போ யாரு தான் அரியர் எக்ஸாம் எல்லாம் எழுதுறது?" என்று எரிச்சலில் லவா வினவ ஏனோ மொட்டு கிளுக்கென சிரித்தாள்.

"ஏ அப்பா மேலெல்லாம் எந்த மிஸ்டேக்கும் இல்ல... அவர் என்கிட்ட எப்பயும் போல ஜாலியா தான் இருப்பாரு. ஆனா இந்தப் படிப்பு விஷயத்துல மட்டும் தான்..." என்று அவள் இழுக்க,

"ஆமா உங்க அப்பா அப்படியே படிச்சு தஞ்சாவூர் கலெக்டரா இருக்காரு பாரு?" என்று லவா கேட்டதும்,

"ஏய் இதுதான் சாக்குன்னு என் அப்பாவைக் கிண்டல் செய்றய்யா?"

"உங்க அப்பாவை விட்டுக்கொடுக்க மாட்டையே?"

"நீ உங்க அப்பாவை விட்டுக்கொடுக்கறியா? அது மாதிரி தான்..." என்றதும் இருவரும் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தனர். இப்பொழுது தான் எதற்காக வந்தோம் என்பதே லவாவுக்கு நினைவுவர அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு அவள் உடையைக் கவனித்தவனாக,

"அத்தைக்குப் பிறந்தவளே... ஆளாகி நின்றவளே...
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே...
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ...
மூன்றாம் பிறையே நீ முழு நிலவானது எப்போ?
மௌனத்தில் நீ இருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ?"
என்று பாடலாகவே பாட,
வெட்கம் வந்தவளாக,"ஏன் நான் தாவணி போடக்கூடாதா? சும்மா தான் போட்டேன்..."

"காலையில தான் குஷா உன் ட்ரெஸ்ஸை வெச்சு கிண்டல் செஞ்சதா ஞாபகம்... உடனே இப்படி காஸ்டியூம் போட்டா எப்படி? நீ இந்த டிரஸ்ல வரப்புல ஓடிவர அப்படியே கேமராவை லாங் ஷாட்ல இருந்து ஜூம் பண்ணி உன்னைக் காட்டிட்டு அப்படியே திரும்பினா தூரத்துல நம்ம குஷா அதே வரப்புல உனக்கு எதிரா வரான்..." என்னும் போதே அவள் முகம் சுருங்க,

"அப்படியே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கறிங்க... யாரு வழிவிடுறதுனு சண்டை... ரெண்டு பேரும் முரண்டு பிடிக்கும் போது அவன் உன்னை கோவமா கழனில தள்ளி விடுறான்... நீ அப்படியே அவனையும் சேர்த்து இழுக்குற... அப்படியே ரெண்டு பேரும் சேத்துல உருள்றிங்க...அப்போ அப்படியே கேமெராவை ஜூம் அவுட் கொண்டு போய் எ பிலிம் பை பாரதிராஜான்னு எண்டு கார்ட் போடுறோம் எப்படி?" என்று லவா கேட்கவும் அருகே மேஜையில் இருந்த தன்னுடைய எம்ப்ராய்டரிங் ஊசியை எடுத்தவள் வலிக்காமல் அவனைக் குத்தினாள்.

"ஏன்டா அப்படியெடுத்தா மனுஷன் பார்ப்பானா அதை? அதும் அவனுக்கு நான் ஜோடியா? அவன் கூட ஜோடியா நடிக்கிறதுக்கு நான் ஒரு எருமை மாட்டுக்கு ஜோடியா நடிப்பேன்..." என்று கோவமாக மொட்டு சொல்லவும் அடக்கமுடியாமல் சிரித்தான் லவா.

"என்ன சிரிப்பு?"

"இல்ல அந்த சீன்ல நீயும் எருமைமாடும் நடிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சேன்..." என்றவன் தயாராக எழுந்து ஓட அந்த ஊசியை கையில் ஏந்தியவாறு அவனைத் துரத்தினாள் மொட்டு. அப்போது பார்த்து படியேறிய குஷாவின் மீது மோதியவள் இருவரும் கீழே விழ வழக்கத்திற்கு மாறாய் குஷா வலியில் அலறினான். என்னவென்று லவா எட்டிப்பார்க்க அவர்கள் இருவரும் அருகருகே விழுந்திருப்பதைக் கண்டு அவன் சிரிக்க தன்னைக் குத்திய அந்த ஊசியை அவள் கரத்திலிருந்து குஷா பிடுங்க முற்பட அதைக்கண்டு எதிர்க்க முடியாதவள் அவன் எதிர்பாரா நேரத்தில் ஊசியை அவனிடம் கொடுத்துவிட்டு மொட்டு எழுந்து லவாவிடம் ஓட அவனோ அவள் தன்னைத் தான் துரத்துகிறாள் என்று ஓட இங்கே குஷாவோ,"நீ தெரியாம எல்லாம் மோதி ஊசி ஏத்தியிருக்க மாட்ட... என்னைப் பழிவாங்க வேணும்னே செஞ்சியிருக்க டி... உன்ன..." என்று பல்லைக் கடித்தான்.

அங்கே கீழே ஓடியவர்கள் அந்தக் கிணற்றடியில் அமர்ந்து மூச்சு வாங்கினார்கள். லவா அர்த்தமாய்ச் சிரிக்க அவனைக் கிள்ளியவள்,"எல்லாம் உன்னால... உனக்கு வெச்ச ஊசில அவங்க குத்து வாங்கிட்டான்... இருந்தாலும் அவன் வாங்க வேண்டியவன் தான்... தப்பில்லை..." என்றதும்,

"ஏய் அப்போ வேணும்னே அவன் மேல குத்தியிருக்க?"

"ச்சே ச்சே... ஆனா அவன் குத்து வாங்குவான்னு தெரிஞ்சிருந்தா வேற இடத்துல குத்தியிருப்பேன்..." என்று வாய்ப்பை நழுவவிட்டவள் போல் அவள் சோகமாய் உரைக்க,

"இப்படிப் பழிவாங்குற அளவுக்கு உங்களுக்குள்ள என்ன நடந்தது? சின்ன வயசுல அடிக்கடி சண்டை போடுங்க தான்... ஆனா அதெல்லாம் எல்லோரும் செய்யுறது தானே? ஏன் அனுவுக்கும் எனக்கும் தான் எத்தனையோ சண்டை வந்திருக்கு... ஆனா வளர்ந்ததும் நாங்க அதை அப்படியே மறந்துட்டோம்... ஆனா நீங்க இன்னுமா அதையே மனசுல வெச்சியிருக்கிங்க? நாமெல்லாம் வளர்ந்துட்டோம் மொட்டு... எனக்கு இது தான் சுத்தமா பிடிக்கல... அண்ட் உங்க சண்டையைப் பார்க்குற மத்தவங்களுக்கு வேணுனா நீங்க சாதரணமா ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்யுற மாதிரி தெரியலாம்... ஆனா இதையும் கடந்து தனிப்பட்ட வெஞ்சென்ஸ் உங்களுக்குள்ள இருக்குனு எனக்கு இப்போ தான் தெரிஞ்சது... என்னனு சொல்லு, அவன்கிட்ட நான் பேசுறேன்..." என்னும் போது அவளோ அந்த ஊசியை அவனுடைய சட்டையின் அருகில் கொண்டுவந்து,

"லவா இப்போ இந்த நிழலைப் பாரு... இது என்ன காட்டுது? நான் உன்னைக் குத்த வர மாதிரி தானே இருக்கு? ஆனா நான் என்ன பண்றேன்னு பாரு? உன் சட்டையைத் தைக்க முயற்சிக்கிறேன்... இந்த நிழலை மட்டும் பார்க்கறவங்க என்னை ஒரு கொலைகாரினு சொல்லலாம்... ஆனா நிஜம்? இதுக்கு யாரை குறைசொல்ல முடியும்? எல்லாமே அவங்கவங்க பார்வையில இருக்கு... அண்ட் என் நிலையில நான் எப்படி உறுதியா இருக்கேனா அதே மாதிரி அவன் நிலையில அவன் உறுதியா இருக்கான்..."

"ஆனா யாராச்சும் ஒருத்தர் இறங்கி வந்து கள நிலவரத்தைப் பார்க்கலாமில்ல?"

"பார்க்கலாம் தான்... ஆனா இங்க யார் இறங்கி வராங்கங்கறதுல தானே பிரச்சனை?"

"அப்போ ரெண்டு பேரும் எதுவும் பேசம ஒதுங்கியே போகவேண்டியது தானே?"

"இங்க எல்லோரும் அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்தா இங்க சண்டை சமாதானங்கறதுக்கே வேலை இல்லாம போயிடுமே?" என்று அவள் சிரிக்க,

"சோ பிரச்னையை முடிக்க மாட்டீங்க... அதே நேரம் ஒதுங்கியும் போக மாட்டிங்க... இப்படியே வளர்த்திட்டு இருக்கப்போறிங்க?" என்றதும் அவள் சிரிக்க,

"என்னமோ போ... நம்ம அப்பாங்களுக்குள்ள தான் சண்டை பிரச்சனை. பெரியவங்க பிரச்னையை பெரியவர்களே பார்த்துக்கட்டும் நாம சின்னவங்க எல்லாம் ஒற்றுமையா இருக்கலாம்னு நெனச்சா நீங்க இப்படி இருக்கீங்க?"

"நமக்குள்ள ஏன் எந்த சண்டையும் இல்ல சொல்லு? நாம ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி வெச்சியிருக்கோம்... அண்ட் நமக்குள்ள முரண்படுற விஷயங்கள பேச நாமாகவே தெரிஞ்சு தவிர்த்திடுறோம். அது ரெண்டு தரப்பும் சுயமா எடுக்கவேண்டியது. ஒரு கை என்னைக்குமே ஓசை தராது..." என்னும் வேளையில் வெளியே வந்த கனகா,

"அவனை ஏன் டி ஊசியில குத்தின?" என்றதும்,

"ஹ்ம்ம் நீ நல்லா இருந்தா அவனை ஊசியில குத்துறேன்னு நேந்துகிட்டேன்... அதான்..." என்று அசட்டையாகச் சொன்ன தொனியில் லவா சிரிக்க,

ஊசியை கையில் பிடித்தவள்,"தாத்தா நல்லா இருந்தா இன்னொருத்தனுக்கு ஊசி குத்துறேன்னு..." என்று முடிக்கும் முன்னே லவா எஸ் ஆனான்...(நேரம் கைகூடும்...)
 
மொட்டுவின் பின்னாலே சென்ற லவாவுக்கு அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் தன் நண்பன் வெங்கடேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் ஆந்திராவையே பூர்விகமாகக் கொண்டவன் என்பதால் அவனுடன் ஆங்கிலத்திலே உரையாட அங்கே அமர்ந்திருந்த வைத்தி மற்றும் கனகா இருவரும் தங்கள் பேரனின் திணறல் இல்லாத சரளமான ஆங்கில உரையாடலையே கவனித்தனர். பேசும் பொழுது அதை எதேர்சையாகப் பார்க்க நேர்ந்தவன் அவர்களுக்கு ஒரு புன்னகை சிந்தி அவனிடம் பேசி முடித்ததும்,"என்ன அம்மாச்சி ரெண்டு பேரும் அப்படிப் பார்க்கறீங்க?"

"மெத்த படிச்சு இப்படி நல்லா ஆங்கிலம் பேசுறதைப் பார்க்க எங்களுக்குப் பெருமையா இருக்குவே..." என்ற வைத்திக்கு,

"இங்கிலிஷ் தெரிஞ்சு இங்கிலிஷ் பேசுறது ஏன் இங்கிலீஷ்னு இல்ல வேற எந்த மொழியைப் பேசுனாலும் அதுல பெருமை ஒன்னும் இல்ல தாத்தா. மொழி ஒரு கருவி தான். தோராயமான உலகத்துல இன்னைக்கு 6500 மொழிகள் இருக்காம். இதுல ஒரு சில மொழி பேசுறது மட்டும் தான் பெருமைனு நெனைக்கறதால் நிறைய மொழிங்க அழிவின் விளிம்பில் இருக்காம். இந்தியாவுல மட்டுமே ஆயிரத்தி நானூறு மொழிகளை தனித்துவ மொழிகளாகவும் ஆயிரத்தி ஐநூறு மொழிகளை கிளை மொழிகளாகவும் (பல ஆயிர மொழிகளை உச்சரிப்பு வேறுபாடுகளாகவும் அதாவது சென்னை தமிழ் கொங்கு தமிழ் மாதிரி...) பிரிச்சிருக்காங்க. ஆனா அதுல நூத்தி இருபத்தி ஒன்னு மொழிகளை மட்டும் தான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவங்க பேசுறங்கலாம். இந்த மாதிரி அழிவின் விளிம்பில் இருக்கும் மொழிகளைக் காப்பாத்துவதற்கே ஒரு அமைப்பு வேற இருக்கு... இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன்னா, நீங்களே சின்ன பிள்ளைங்க மத்தியில இந்த மொழி பேசுனா தான் பெருமை இதுதான் அறிவுனு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தவறான கற்பித்ததை மனசுல ஆழ விதைச்சிடுறிங்க... நாளைக்கு அந்தக் குழந்தையால அதைப் பேச முடியலைன்னா இது கூடத் தெரியாதானு அவமானப் படுத்தறீங்க... இப்போ எதுக்கு இங்க இதெல்லாம் சொல்றேன்னா குஷா படிப்பை வெச்சு மொட்டுவை மட்டம் தட்டுறதுக்கு ஒருவகையில் நீங்களும் தான் காரணம். சின்ன வயசுல நீங்க குஷா மனசுல நீ நல்லாப் படிக்கறய்யா ஆனால இவளைப் பாருனு நீங்க வெதைச்ச அந்த விதை தான் இன்னைக்கு இப்படி மரமா வந்து நிக்குது... குழந்தைக மனசு பால் மாதிரி... அதுல இனம், மொழி, நிறம், படிப்புனு எதையும் கலந்துடாதீங்க..." என்றவன் இதற்கெல்லாம் நீங்களும் ஒரு காரணம் என்பதைப் பெரியவர்களுக்கு ஆழப் புரியுமாறு விளக்கிவிட்டுச் சென்றான்.

பெரியவர்கள் இருவரும் தங்கள் தவறை எண்ணி வருந்த ஏனோ அவளுக்காக தன்னை தன் உடன் பிறந்தவனே குத்திக்காட்டுவதாக குஷாவிற்குத் தோன்றியது.

மேலே சென்றவன் அவள் அறை தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு,'டொக் டொக்' என்னும் சப்தத்துடன் தட்ட,

"யாரது?" என்று உள்ளே இருந்து மொட்டு குரல் கொடுக்கவும்,

"திருடன்ன்ன்...." என்று சிரித்தவாறே மொழிந்தான்.

"என்ன வேணும்?" என்று அதே குறும்புடன் அவள் வினவ,

"நகை வேணும்..."

"அப்படியா? என்ன நகை?" என்று அவள் சிரித்தபடியே கேக்க,

"உள்ளே அஞ்சறை அடில சுமார் ஒரு அறுபது கிலோ எடைல ஒரு தங்கம் இருக்கு... அது தான் வேணும்" என்றான் லவா.

"அச்சச்சோ நாங்க யாரும் அந்தத் தங்கத்தை விக்கறதிலையே?" என்று அப்பாவியாய் மொழிந்தாள் மொட்டு.

"ஹே நான் வாங்க வந்தவன் இல்ல... கடத்த வந்தவன்... ஐ மீன் திருடன்..." என்றதும், தண்ணீர் சப்தம் கேக்கவும்,"சாரி சாரி குளிக்கறியா மொட்டு?"

"ஆமா... நான் கதவைத் திறந்து டூ மினிட்ஸ் கழிச்சு தான் நீ உள்ள வரணும் ஓகேவா?" என்ற நிபந்தையுடன் கதவைத் திறந்துவிட்டு அவள் மீண்டும் உள்ளே சென்று விட நுழைந்தவன் அந்த அறையைச் சுற்றியும் நோட்டம் விட்டான். அறையின் சுவற்றில் விராட் கோலியின் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருக்க ஆங்காங்கே அவளுடைய படம் அவள் பெற்றோரின் படம் என்று மாட்டப்பட்டிருந்தது. அப்படியே நோட்டமிட்டவன் அந்த அறையின் ஜன்னல் ஓரத்தில் ஒரு பெரிய புளியமரத்தின் கிளை இருக்க அதன் உச்சியில் ஏதோ பறவை ஒன்று கூடு கட்டியிருந்தது. சிறிது நேரம் ஏதேதோ யோசனையில் வேடிக்கை பார்த்தவனின் கண்ணில் அந்த எம்ப்ராய்டரி ஒர்க் செய்யப்பட்ட பிரேம் தென்பட்டது. தஞ்சை பெரிய கோவிலின் வெளிப்புறம் பிரவுன் நிற வண்ண நூலிலும் மேலே மேகம் நீல நிறத்திலும் கீழே பச்சை வண்ணத்தில் புல்வெளியுமாக மிகத் தத்ரூபமாகவே இருந்தது அந்த பிரேம். அதன் அழகிலும் அவளுடைய திறமையிலும் பிரமித்தவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவள் எம்பிராய்டரிங் செய்வாள் என்று அவனும் அறிவான் தான். ஆனால் இதுவரை அவள் செய்த பறவையையோ விலங்கையோ மலரையோ மட்டும் கண்டவன் தற்போது அவளுடைய திறமையில் மயங்கியவாறே நின்றிருந்தான்.

"ஹலோ சார்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க?" என்று அவனைக் கிள்ளவும் தான் தன்னிலை அடைந்தவன் அந்த மன எழுச்சியில் அவள் கரத்தைப் பிடித்து வாழ்த்திவிட்டு அவளை கட்டியும் பிடித்தான். ஆனால் அவனுடைய இந்த திடீர் செய்கையில் அவளுடைய அசௌகரியத்தை உணர்ந்தவனாக விலகி,"சத்தியமா சொல்றேன் எனக்கு வார்த்தையே வரல மொட்டு... மெஸ்மெரைஸ்ட் அதாவது மதிமயங்கினேன்னு சொல்லுவாங்க இல்ல? அதை இப்போ நான் அனுபவிச்சேன் மொட்டு. இதை சும்மா விடக் கூடாது... ஐ மஸ்ட் காம்ப்ளிமென்ட் யூ... சொல்லு உனக்கு என்ன வேணும்? ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் ஆஃபர்... நீ என்ன கேட்டாலும் கிடைக்கும்... சொல்லு மொட்டு..." என்றவனின் கண்களில் தெரிந்த அந்த உண்மையான மகிழ்ச்சியை மொட்டுவால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. அதை வெறும் மகிழ்ச்சி என்று மட்டும் சுருக்கிவிடாமல் உற்சாகத்தின் உச்சம் எனலாம். விட்டால் லவா ஆனந்த தாண்டவமே ஆடிவிடுவதைப் போல் காட்சியளித்தான்.

"நீ என்னைப் பாராட்டுனதே எனக்கு அப்படி இருக்கு... நம்ம திறமைகளால் நாம பணம் காசு சம்பாதிக்கனும்னு எல்லாம் அவசியம் இல்ல லவா... நம்ம திறமைக்கான உரிய அங்கீகாரம் அதும் நமக்கு உரியவங்க கிட்ட இருந்து வந்தாலே போதும்... என் மகிழ்ச்சியினுடைய எல்லை நீ தான் லவா... அப்படிப்பட்ட உன்கிட்ட இருந்து ஒரு உற்சாகமான வார்த்தை... வார்த்தை எதுக்கு உன் சிரிப்பு ஒன்னு போதும்... வேற எதுவும் வேணாம்..." என்று மொட்டு நிறுத்த,

"இதை ஏன் இங்க மாட்டியிருக்க? கீழ ஹால்ல மாட்டியிருக்கலாம் இல்ல? இரு நான் மாட்டுறேன்..." என்று அதைக் கழட்ட முற்பட்டவனைத் தடுத்தவள்,

"வேணாம் லவா இங்கேயே இருக்கட்டும்..."

"ஏன்?"

"ஏன்னா இத உன்னைத் தவிர யாருமே இன்னும் பார்த்ததில்லை. இன் பேக்ட் போன மாசம் தான் இதை முடிச்சேன். இதை நான் யாருகிட்டயும் சொல்லல. அண்ட் இது எனக்கும் ரொம்ப ஸ்பெஷல்... ஏன்னா இதுவரை சின்ன சின்னதா மட்டுமே செஞ்சிட்டிருந்த நான் செஞ்ச பெரிய ஒர்க் இது... அண்ட் அது போக..." என்று அவள் இழுக்க,

"அது போக?"

"நான் இன்னும் டிகிரி முடிக்கலைனு வீட்ல எல்லோரும் செம கடுப்புல இருக்காங்க... இப்போ இது தெரிஞ்சா இதால தான் நான் படிக்க மாட்டேங்குறேன்னு இன்னும் டோஸ் விழும்..." என்று அவள் ரகசியம் போல் சொல்லிச் சிரிக்க,

"ஏன் மாமா எதாவது சொல்லுவாரா?"

"அப்பாக்கு நான் படிச்சு உங்களைப் போல் ஒரு என்ஜினீயர் ஆகணும்னு ஆசை... ஆனா நான் பி.எஸ்.சி அக்ரி எடுத்ததே அவருக்குப் பிடிக்கல... சரி அதுலையாவது ஒழுங்கா டிகிரி முடிச்சேன்னானா அதுவும் இல்லயே... சோ அவருக்கு இந்த விஷயத்துல என் மேல செம கடுப்பு... என்னமோ பண்ணுனு விட்டுட்டாரு..." என்று அவள் மீண்டும் சிரிக்க இம்முறை லாவவிடம் இருந்த உற்சாகம் முற்றிலும் விடிந்திருந்தது.

"ஏம்பா மூஞ்சி டல் ஆகிடுச்சு?"

"நான் அங்க ஹைதராபாத்ல இருக்கும் போதும் எப்போவாது வீட்டு ஞாபகம் வந்தா உன்னை தான் நெனப்பேன். ச்சே மொட்டு மட்டும் எவ்வளவு லக்கி இல்ல? அவ பாரு ஜாலியா வீட்ல அம்மாச்சி தாத்தா கூட இருக்கானு யோசிப்பேன். பியர் ப்ரெஸ்ஸர்ங்கறது (சக அழுத்தம் அல்லது சமூக அழுத்தம்) எல்லோருக்கும் இருக்கு தானே? மாமா வரட்டும் நான் பேசுறேன்... இப்போ தான் கீழ எல்லோருக்கும் ஒரு லெக்சர் கொடுத்துட்டு வந்தேன்... எல்லோரும் பர்ஸ்ட் ரேங்க்கும் கோல்ட் மெடலும் தான் வாங்கணும்னா அப்போ யாரு தான் அரியர் எக்ஸாம் எல்லாம் எழுதுறது?" என்று எரிச்சலில் லவா வினவ ஏனோ மொட்டு கிளுக்கென சிரித்தாள்.

"ஏ அப்பா மேலெல்லாம் எந்த மிஸ்டேக்கும் இல்ல... அவர் என்கிட்ட எப்பயும் போல ஜாலியா தான் இருப்பாரு. ஆனா இந்தப் படிப்பு விஷயத்துல மட்டும் தான்..." என்று அவள் இழுக்க,

"ஆமா உங்க அப்பா அப்படியே படிச்சு தஞ்சாவூர் கலெக்டரா இருக்காரு பாரு?" என்று லவா கேட்டதும்,

"ஏய் இதுதான் சாக்குன்னு என் அப்பாவைக் கிண்டல் செய்றய்யா?"

"உங்க அப்பாவை விட்டுக்கொடுக்க மாட்டையே?"

"நீ உங்க அப்பாவை விட்டுக்கொடுக்கறியா? அது மாதிரி தான்..." என்றதும் இருவரும் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தனர். இப்பொழுது தான் எதற்காக வந்தோம் என்பதே லவாவுக்கு நினைவுவர அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு அவள் உடையைக் கவனித்தவனாக,

"அத்தைக்குப் பிறந்தவளே... ஆளாகி நின்றவளே...
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே...
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ...
மூன்றாம் பிறையே நீ முழு நிலவானது எப்போ?
மௌனத்தில் நீ இருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ?"
என்று பாடலாகவே பாட,
வெட்கம் வந்தவளாக,"ஏன் நான் தாவணி போடக்கூடாதா? சும்மா தான் போட்டேன்..."

"காலையில தான் குஷா உன் ட்ரெஸ்ஸை வெச்சு கிண்டல் செஞ்சதா ஞாபகம்... உடனே இப்படி காஸ்டியூம் போட்டா எப்படி? நீ இந்த டிரஸ்ல வரப்புல ஓடிவர அப்படியே கேமராவை லாங் ஷாட்ல இருந்து ஜூம் பண்ணி உன்னைக் காட்டிட்டு அப்படியே திரும்பினா தூரத்துல நம்ம குஷா அதே வரப்புல உனக்கு எதிரா வரான்..." என்னும் போதே அவள் முகம் சுருங்க,

"அப்படியே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கறிங்க... யாரு வழிவிடுறதுனு சண்டை... ரெண்டு பேரும் முரண்டு பிடிக்கும் போது அவன் உன்னை கோவமா கழனில தள்ளி விடுறான்... நீ அப்படியே அவனையும் சேர்த்து இழுக்குற... அப்படியே ரெண்டு பேரும் சேத்துல உருள்றிங்க...அப்போ அப்படியே கேமெராவை ஜூம் அவுட் கொண்டு போய் எ பிலிம் பை பாரதிராஜான்னு எண்டு கார்ட் போடுறோம் எப்படி?" என்று லவா கேட்கவும் அருகே மேஜையில் இருந்த தன்னுடைய எம்ப்ராய்டரிங் ஊசியை எடுத்தவள் வலிக்காமல் அவனைக் குத்தினாள்.

"ஏன்டா அப்படியெடுத்தா மனுஷன் பார்ப்பானா அதை? அதும் அவனுக்கு நான் ஜோடியா? அவன் கூட ஜோடியா நடிக்கிறதுக்கு நான் ஒரு எருமை மாட்டுக்கு ஜோடியா நடிப்பேன்..." என்று கோவமாக மொட்டு சொல்லவும் அடக்கமுடியாமல் சிரித்தான் லவா.

"என்ன சிரிப்பு?"

"இல்ல அந்த சீன்ல நீயும் எருமைமாடும் நடிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சேன்..." என்றவன் தயாராக எழுந்து ஓட அந்த ஊசியை கையில் ஏந்தியவாறு அவனைத் துரத்தினாள் மொட்டு. அப்போது பார்த்து படியேறிய குஷாவின் மீது மோதியவள் இருவரும் கீழே விழ வழக்கத்திற்கு மாறாய் குஷா வலியில் அலறினான். என்னவென்று லவா எட்டிப்பார்க்க அவர்கள் இருவரும் அருகருகே விழுந்திருப்பதைக் கண்டு அவன் சிரிக்க தன்னைக் குத்திய அந்த ஊசியை அவள் கரத்திலிருந்து குஷா பிடுங்க முற்பட அதைக்கண்டு எதிர்க்க முடியாதவள் அவன் எதிர்பாரா நேரத்தில் ஊசியை அவனிடம் கொடுத்துவிட்டு மொட்டு எழுந்து லவாவிடம் ஓட அவனோ அவள் தன்னைத் தான் துரத்துகிறாள் என்று ஓட இங்கே குஷாவோ,"நீ தெரியாம எல்லாம் மோதி ஊசி ஏத்தியிருக்க மாட்ட... என்னைப் பழிவாங்க வேணும்னே செஞ்சியிருக்க டி... உன்ன..." என்று பல்லைக் கடித்தான்.

அங்கே கீழே ஓடியவர்கள் அந்தக் கிணற்றடியில் அமர்ந்து மூச்சு வாங்கினார்கள். லவா அர்த்தமாய்ச் சிரிக்க அவனைக் கிள்ளியவள்,"எல்லாம் உன்னால... உனக்கு வெச்ச ஊசில அவங்க குத்து வாங்கிட்டான்... இருந்தாலும் அவன் வாங்க வேண்டியவன் தான்... தப்பில்லை..." என்றதும்,

"ஏய் அப்போ வேணும்னே அவன் மேல குத்தியிருக்க?"

"ச்சே ச்சே... ஆனா அவன் குத்து வாங்குவான்னு தெரிஞ்சிருந்தா வேற இடத்துல குத்தியிருப்பேன்..." என்று வாய்ப்பை நழுவவிட்டவள் போல் அவள் சோகமாய் உரைக்க,

"இப்படிப் பழிவாங்குற அளவுக்கு உங்களுக்குள்ள என்ன நடந்தது? சின்ன வயசுல அடிக்கடி சண்டை போடுங்க தான்... ஆனா அதெல்லாம் எல்லோரும் செய்யுறது தானே? ஏன் அனுவுக்கும் எனக்கும் தான் எத்தனையோ சண்டை வந்திருக்கு... ஆனா வளர்ந்ததும் நாங்க அதை அப்படியே மறந்துட்டோம்... ஆனா நீங்க இன்னுமா அதையே மனசுல வெச்சியிருக்கிங்க? நாமெல்லாம் வளர்ந்துட்டோம் மொட்டு... எனக்கு இது தான் சுத்தமா பிடிக்கல... அண்ட் உங்க சண்டையைப் பார்க்குற மத்தவங்களுக்கு வேணுனா நீங்க சாதரணமா ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்யுற மாதிரி தெரியலாம்... ஆனா இதையும் கடந்து தனிப்பட்ட வெஞ்சென்ஸ் உங்களுக்குள்ள இருக்குனு எனக்கு இப்போ தான் தெரிஞ்சது... என்னனு சொல்லு, அவன்கிட்ட நான் பேசுறேன்..." என்னும் போது அவளோ அந்த ஊசியை அவனுடைய சட்டையின் அருகில் கொண்டுவந்து,

"லவா இப்போ இந்த நிழலைப் பாரு... இது என்ன காட்டுது? நான் உன்னைக் குத்த வர மாதிரி தானே இருக்கு? ஆனா நான் என்ன பண்றேன்னு பாரு? உன் சட்டையைத் தைக்க முயற்சிக்கிறேன்... இந்த நிழலை மட்டும் பார்க்கறவங்க என்னை ஒரு கொலைகாரினு சொல்லலாம்... ஆனா நிஜம்? இதுக்கு யாரை குறைசொல்ல முடியும்? எல்லாமே அவங்கவங்க பார்வையில இருக்கு... அண்ட் என் நிலையில நான் எப்படி உறுதியா இருக்கேனா அதே மாதிரி அவன் நிலையில அவன் உறுதியா இருக்கான்..."

"ஆனா யாராச்சும் ஒருத்தர் இறங்கி வந்து கள நிலவரத்தைப் பார்க்கலாமில்ல?"

"பார்க்கலாம் தான்... ஆனா இங்க யார் இறங்கி வராங்கங்கறதுல தானே பிரச்சனை?"

"அப்போ ரெண்டு பேரும் எதுவும் பேசம ஒதுங்கியே போகவேண்டியது தானே?"

"இங்க எல்லோரும் அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்தா இங்க சண்டை சமாதானங்கறதுக்கே வேலை இல்லாம போயிடுமே?" என்று அவள் சிரிக்க,

"சோ பிரச்னையை முடிக்க மாட்டீங்க... அதே நேரம் ஒதுங்கியும் போக மாட்டிங்க... இப்படியே வளர்த்திட்டு இருக்கப்போறிங்க?" என்றதும் அவள் சிரிக்க,

"என்னமோ போ... நம்ம அப்பாங்களுக்குள்ள தான் சண்டை பிரச்சனை. பெரியவங்க பிரச்னையை பெரியவர்களே பார்த்துக்கட்டும் நாம சின்னவங்க எல்லாம் ஒற்றுமையா இருக்கலாம்னு நெனச்சா நீங்க இப்படி இருக்கீங்க?"

"நமக்குள்ள ஏன் எந்த சண்டையும் இல்ல சொல்லு? நாம ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி வெச்சியிருக்கோம்... அண்ட் நமக்குள்ள முரண்படுற விஷயங்கள பேச நாமாகவே தெரிஞ்சு தவிர்த்திடுறோம். அது ரெண்டு தரப்பும் சுயமா எடுக்கவேண்டியது. ஒரு கை என்னைக்குமே ஓசை தராது..." என்னும் வேளையில் வெளியே வந்த கனகா,

"அவனை ஏன் டி ஊசியில குத்தின?" என்றதும்,

"ஹ்ம்ம் நீ நல்லா இருந்தா அவனை ஊசியில குத்துறேன்னு நேந்துகிட்டேன்... அதான்..." என்று அசட்டையாகச் சொன்ன தொனியில் லவா சிரிக்க,

ஊசியை கையில் பிடித்தவள்,"தாத்தா நல்லா இருந்தா இன்னொருத்தனுக்கு ஊசி குத்துறேன்னு..." என்று முடிக்கும் முன்னே லவா எஸ் ஆனான்...(நேரம் கைகூடும்...)
Semma semma, sariyaa sonneenga, mozhi oru tool thaan,mozhihaL pathi oru research panniteenga,5lines same mozhi, fantastic,endla vanthaa iyaibu,ithu enna vahai, neraya therinchukka mudiyuthu unga storynaala,thank u,
ada poanga ji... Kusha panrathukku avanga eppadi responsible aavaanga, nalla padikirannu sonnathu oru kuththamaa, compare pannaathaan thappu,
Lavakum, Mottukkum super wavelength, extra talent neraya irukku Mottu kitta, expect pannathuthaan, unga heroines naa summaavaa?
paaratukkal oru enthuva kodukkum, athum namakku vendiyavanga kitta irunthu vanthathunaa ulahame namakku keezha thaan,
Oru country ku agriculture thaan backbone,itha yaarume purinchikirathilla,so pity...
Ha..Ha... Mottu Kusha va vachu seivaa polaye...So.... Yetho oru incident, thappu Mottu pakkam illa, Kusha misunderstand pannirukaan appadithaane,
Very interesting epi
 
இயற்கையின் மொழிகள் புரிந்து விடின்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை ???
 
மொட்டுவின் பின்னாலே சென்ற லவாவுக்கு அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் தன் நண்பன் வெங்கடேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் ஆந்திராவையே பூர்விகமாகக் கொண்டவன் என்பதால் அவனுடன் ஆங்கிலத்திலே உரையாட அங்கே அமர்ந்திருந்த வைத்தி மற்றும் கனகா இருவரும் தங்கள் பேரனின் திணறல் இல்லாத சரளமான ஆங்கில உரையாடலையே கவனித்தனர். பேசும் பொழுது அதை எதேர்சையாகப் பார்க்க நேர்ந்தவன் அவர்களுக்கு ஒரு புன்னகை சிந்தி அவனிடம் பேசி முடித்ததும்,"என்ன அம்மாச்சி ரெண்டு பேரும் அப்படிப் பார்க்கறீங்க?"

"மெத்த படிச்சு இப்படி நல்லா ஆங்கிலம் பேசுறதைப் பார்க்க எங்களுக்குப் பெருமையா இருக்குவே..." என்ற வைத்திக்கு,

"இங்கிலிஷ் தெரிஞ்சு இங்கிலிஷ் பேசுறது ஏன் இங்கிலீஷ்னு இல்ல வேற எந்த மொழியைப் பேசுனாலும் அதுல பெருமை ஒன்னும் இல்ல தாத்தா. மொழி ஒரு கருவி தான். தோராயமான உலகத்துல இன்னைக்கு 6500 மொழிகள் இருக்காம். இதுல ஒரு சில மொழி பேசுறது மட்டும் தான் பெருமைனு நெனைக்கறதால் நிறைய மொழிங்க அழிவின் விளிம்பில் இருக்காம். இந்தியாவுல மட்டுமே ஆயிரத்தி நானூறு மொழிகளை தனித்துவ மொழிகளாகவும் ஆயிரத்தி ஐநூறு மொழிகளை கிளை மொழிகளாகவும் (பல ஆயிர மொழிகளை உச்சரிப்பு வேறுபாடுகளாகவும் அதாவது சென்னை தமிழ் கொங்கு தமிழ் மாதிரி...) பிரிச்சிருக்காங்க. ஆனா அதுல நூத்தி இருபத்தி ஒன்னு மொழிகளை மட்டும் தான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவங்க பேசுறங்கலாம். இந்த மாதிரி அழிவின் விளிம்பில் இருக்கும் மொழிகளைக் காப்பாத்துவதற்கே ஒரு அமைப்பு வேற இருக்கு... இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன்னா, நீங்களே சின்ன பிள்ளைங்க மத்தியில இந்த மொழி பேசுனா தான் பெருமை இதுதான் அறிவுனு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தவறான கற்பித்ததை மனசுல ஆழ விதைச்சிடுறிங்க... நாளைக்கு அந்தக் குழந்தையால அதைப் பேச முடியலைன்னா இது கூடத் தெரியாதானு அவமானப் படுத்தறீங்க... இப்போ எதுக்கு இங்க இதெல்லாம் சொல்றேன்னா குஷா படிப்பை வெச்சு மொட்டுவை மட்டம் தட்டுறதுக்கு ஒருவகையில் நீங்களும் தான் காரணம். சின்ன வயசுல நீங்க குஷா மனசுல நீ நல்லாப் படிக்கறய்யா ஆனால இவளைப் பாருனு நீங்க வெதைச்ச அந்த விதை தான் இன்னைக்கு இப்படி மரமா வந்து நிக்குது... குழந்தைக மனசு பால் மாதிரி... அதுல இனம், மொழி, நிறம், படிப்புனு எதையும் கலந்துடாதீங்க..." என்றவன் இதற்கெல்லாம் நீங்களும் ஒரு காரணம் என்பதைப் பெரியவர்களுக்கு ஆழப் புரியுமாறு விளக்கிவிட்டுச் சென்றான்.

பெரியவர்கள் இருவரும் தங்கள் தவறை எண்ணி வருந்த ஏனோ அவளுக்காக தன்னை தன் உடன் பிறந்தவனே குத்திக்காட்டுவதாக குஷாவிற்குத் தோன்றியது.

மேலே சென்றவன் அவள் அறை தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு,'டொக் டொக்' என்னும் சப்தத்துடன் தட்ட,

"யாரது?" என்று உள்ளே இருந்து மொட்டு குரல் கொடுக்கவும்,

"திருடன்ன்ன்...." என்று சிரித்தவாறே மொழிந்தான்.

"என்ன வேணும்?" என்று அதே குறும்புடன் அவள் வினவ,

"நகை வேணும்..."

"அப்படியா? என்ன நகை?" என்று அவள் சிரித்தபடியே கேக்க,

"உள்ளே அஞ்சறை அடில சுமார் ஒரு அறுபது கிலோ எடைல ஒரு தங்கம் இருக்கு... அது தான் வேணும்" என்றான் லவா.

"அச்சச்சோ நாங்க யாரும் அந்தத் தங்கத்தை விக்கறதிலையே?" என்று அப்பாவியாய் மொழிந்தாள் மொட்டு.

"ஹே நான் வாங்க வந்தவன் இல்ல... கடத்த வந்தவன்... ஐ மீன் திருடன்..." என்றதும், தண்ணீர் சப்தம் கேக்கவும்,"சாரி சாரி குளிக்கறியா மொட்டு?"

"ஆமா... நான் கதவைத் திறந்து டூ மினிட்ஸ் கழிச்சு தான் நீ உள்ள வரணும் ஓகேவா?" என்ற நிபந்தையுடன் கதவைத் திறந்துவிட்டு அவள் மீண்டும் உள்ளே சென்று விட நுழைந்தவன் அந்த அறையைச் சுற்றியும் நோட்டம் விட்டான். அறையின் சுவற்றில் விராட் கோலியின் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருக்க ஆங்காங்கே அவளுடைய படம் அவள் பெற்றோரின் படம் என்று மாட்டப்பட்டிருந்தது. அப்படியே நோட்டமிட்டவன் அந்த அறையின் ஜன்னல் ஓரத்தில் ஒரு பெரிய புளியமரத்தின் கிளை இருக்க அதன் உச்சியில் ஏதோ பறவை ஒன்று கூடு கட்டியிருந்தது. சிறிது நேரம் ஏதேதோ யோசனையில் வேடிக்கை பார்த்தவனின் கண்ணில் அந்த எம்ப்ராய்டரி ஒர்க் செய்யப்பட்ட பிரேம் தென்பட்டது. தஞ்சை பெரிய கோவிலின் வெளிப்புறம் பிரவுன் நிற வண்ண நூலிலும் மேலே மேகம் நீல நிறத்திலும் கீழே பச்சை வண்ணத்தில் புல்வெளியுமாக மிகத் தத்ரூபமாகவே இருந்தது அந்த பிரேம். அதன் அழகிலும் அவளுடைய திறமையிலும் பிரமித்தவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவள் எம்பிராய்டரிங் செய்வாள் என்று அவனும் அறிவான் தான். ஆனால் இதுவரை அவள் செய்த பறவையையோ விலங்கையோ மலரையோ மட்டும் கண்டவன் தற்போது அவளுடைய திறமையில் மயங்கியவாறே நின்றிருந்தான்.

"ஹலோ சார்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க?" என்று அவனைக் கிள்ளவும் தான் தன்னிலை அடைந்தவன் அந்த மன எழுச்சியில் அவள் கரத்தைப் பிடித்து வாழ்த்திவிட்டு அவளை கட்டியும் பிடித்தான். ஆனால் அவனுடைய இந்த திடீர் செய்கையில் அவளுடைய அசௌகரியத்தை உணர்ந்தவனாக விலகி,"சத்தியமா சொல்றேன் எனக்கு வார்த்தையே வரல மொட்டு... மெஸ்மெரைஸ்ட் அதாவது மதிமயங்கினேன்னு சொல்லுவாங்க இல்ல? அதை இப்போ நான் அனுபவிச்சேன் மொட்டு. இதை சும்மா விடக் கூடாது... ஐ மஸ்ட் காம்ப்ளிமென்ட் யூ... சொல்லு உனக்கு என்ன வேணும்? ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் ஆஃபர்... நீ என்ன கேட்டாலும் கிடைக்கும்... சொல்லு மொட்டு..." என்றவனின் கண்களில் தெரிந்த அந்த உண்மையான மகிழ்ச்சியை மொட்டுவால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. அதை வெறும் மகிழ்ச்சி என்று மட்டும் சுருக்கிவிடாமல் உற்சாகத்தின் உச்சம் எனலாம். விட்டால் லவா ஆனந்த தாண்டவமே ஆடிவிடுவதைப் போல் காட்சியளித்தான்.

"நீ என்னைப் பாராட்டுனதே எனக்கு அப்படி இருக்கு... நம்ம திறமைகளால் நாம பணம் காசு சம்பாதிக்கனும்னு எல்லாம் அவசியம் இல்ல லவா... நம்ம திறமைக்கான உரிய அங்கீகாரம் அதும் நமக்கு உரியவங்க கிட்ட இருந்து வந்தாலே போதும்... என் மகிழ்ச்சியினுடைய எல்லை நீ தான் லவா... அப்படிப்பட்ட உன்கிட்ட இருந்து ஒரு உற்சாகமான வார்த்தை... வார்த்தை எதுக்கு உன் சிரிப்பு ஒன்னு போதும்... வேற எதுவும் வேணாம்..." என்று மொட்டு நிறுத்த,

"இதை ஏன் இங்க மாட்டியிருக்க? கீழ ஹால்ல மாட்டியிருக்கலாம் இல்ல? இரு நான் மாட்டுறேன்..." என்று அதைக் கழட்ட முற்பட்டவனைத் தடுத்தவள்,

"வேணாம் லவா இங்கேயே இருக்கட்டும்..."

"ஏன்?"

"ஏன்னா இத உன்னைத் தவிர யாருமே இன்னும் பார்த்ததில்லை. இன் பேக்ட் போன மாசம் தான் இதை முடிச்சேன். இதை நான் யாருகிட்டயும் சொல்லல. அண்ட் இது எனக்கும் ரொம்ப ஸ்பெஷல்... ஏன்னா இதுவரை சின்ன சின்னதா மட்டுமே செஞ்சிட்டிருந்த நான் செஞ்ச பெரிய ஒர்க் இது... அண்ட் அது போக..." என்று அவள் இழுக்க,

"அது போக?"

"நான் இன்னும் டிகிரி முடிக்கலைனு வீட்ல எல்லோரும் செம கடுப்புல இருக்காங்க... இப்போ இது தெரிஞ்சா இதால தான் நான் படிக்க மாட்டேங்குறேன்னு இன்னும் டோஸ் விழும்..." என்று அவள் ரகசியம் போல் சொல்லிச் சிரிக்க,

"ஏன் மாமா எதாவது சொல்லுவாரா?"

"அப்பாக்கு நான் படிச்சு உங்களைப் போல் ஒரு என்ஜினீயர் ஆகணும்னு ஆசை... ஆனா நான் பி.எஸ்.சி அக்ரி எடுத்ததே அவருக்குப் பிடிக்கல... சரி அதுலையாவது ஒழுங்கா டிகிரி முடிச்சேன்னானா அதுவும் இல்லயே... சோ அவருக்கு இந்த விஷயத்துல என் மேல செம கடுப்பு... என்னமோ பண்ணுனு விட்டுட்டாரு..." என்று அவள் மீண்டும் சிரிக்க இம்முறை லாவவிடம் இருந்த உற்சாகம் முற்றிலும் விடிந்திருந்தது.

"ஏம்பா மூஞ்சி டல் ஆகிடுச்சு?"

"நான் அங்க ஹைதராபாத்ல இருக்கும் போதும் எப்போவாது வீட்டு ஞாபகம் வந்தா உன்னை தான் நெனப்பேன். ச்சே மொட்டு மட்டும் எவ்வளவு லக்கி இல்ல? அவ பாரு ஜாலியா வீட்ல அம்மாச்சி தாத்தா கூட இருக்கானு யோசிப்பேன். பியர் ப்ரெஸ்ஸர்ங்கறது (சக அழுத்தம் அல்லது சமூக அழுத்தம்) எல்லோருக்கும் இருக்கு தானே? மாமா வரட்டும் நான் பேசுறேன்... இப்போ தான் கீழ எல்லோருக்கும் ஒரு லெக்சர் கொடுத்துட்டு வந்தேன்... எல்லோரும் பர்ஸ்ட் ரேங்க்கும் கோல்ட் மெடலும் தான் வாங்கணும்னா அப்போ யாரு தான் அரியர் எக்ஸாம் எல்லாம் எழுதுறது?" என்று எரிச்சலில் லவா வினவ ஏனோ மொட்டு கிளுக்கென சிரித்தாள்.

"ஏ அப்பா மேலெல்லாம் எந்த மிஸ்டேக்கும் இல்ல... அவர் என்கிட்ட எப்பயும் போல ஜாலியா தான் இருப்பாரு. ஆனா இந்தப் படிப்பு விஷயத்துல மட்டும் தான்..." என்று அவள் இழுக்க,

"ஆமா உங்க அப்பா அப்படியே படிச்சு தஞ்சாவூர் கலெக்டரா இருக்காரு பாரு?" என்று லவா கேட்டதும்,

"ஏய் இதுதான் சாக்குன்னு என் அப்பாவைக் கிண்டல் செய்றய்யா?"

"உங்க அப்பாவை விட்டுக்கொடுக்க மாட்டையே?"

"நீ உங்க அப்பாவை விட்டுக்கொடுக்கறியா? அது மாதிரி தான்..." என்றதும் இருவரும் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தனர். இப்பொழுது தான் எதற்காக வந்தோம் என்பதே லவாவுக்கு நினைவுவர அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு அவள் உடையைக் கவனித்தவனாக,

"அத்தைக்குப் பிறந்தவளே... ஆளாகி நின்றவளே...
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே...
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ...
மூன்றாம் பிறையே நீ முழு நிலவானது எப்போ?
மௌனத்தில் நீ இருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ?"
என்று பாடலாகவே பாட,
வெட்கம் வந்தவளாக,"ஏன் நான் தாவணி போடக்கூடாதா? சும்மா தான் போட்டேன்..."

"காலையில தான் குஷா உன் ட்ரெஸ்ஸை வெச்சு கிண்டல் செஞ்சதா ஞாபகம்... உடனே இப்படி காஸ்டியூம் போட்டா எப்படி? நீ இந்த டிரஸ்ல வரப்புல ஓடிவர அப்படியே கேமராவை லாங் ஷாட்ல இருந்து ஜூம் பண்ணி உன்னைக் காட்டிட்டு அப்படியே திரும்பினா தூரத்துல நம்ம குஷா அதே வரப்புல உனக்கு எதிரா வரான்..." என்னும் போதே அவள் முகம் சுருங்க,

"அப்படியே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கறிங்க... யாரு வழிவிடுறதுனு சண்டை... ரெண்டு பேரும் முரண்டு பிடிக்கும் போது அவன் உன்னை கோவமா கழனில தள்ளி விடுறான்... நீ அப்படியே அவனையும் சேர்த்து இழுக்குற... அப்படியே ரெண்டு பேரும் சேத்துல உருள்றிங்க...அப்போ அப்படியே கேமெராவை ஜூம் அவுட் கொண்டு போய் எ பிலிம் பை பாரதிராஜான்னு எண்டு கார்ட் போடுறோம் எப்படி?" என்று லவா கேட்கவும் அருகே மேஜையில் இருந்த தன்னுடைய எம்ப்ராய்டரிங் ஊசியை எடுத்தவள் வலிக்காமல் அவனைக் குத்தினாள்.

"ஏன்டா அப்படியெடுத்தா மனுஷன் பார்ப்பானா அதை? அதும் அவனுக்கு நான் ஜோடியா? அவன் கூட ஜோடியா நடிக்கிறதுக்கு நான் ஒரு எருமை மாட்டுக்கு ஜோடியா நடிப்பேன்..." என்று கோவமாக மொட்டு சொல்லவும் அடக்கமுடியாமல் சிரித்தான் லவா.

"என்ன சிரிப்பு?"

"இல்ல அந்த சீன்ல நீயும் எருமைமாடும் நடிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சேன்..." என்றவன் தயாராக எழுந்து ஓட அந்த ஊசியை கையில் ஏந்தியவாறு அவனைத் துரத்தினாள் மொட்டு. அப்போது பார்த்து படியேறிய குஷாவின் மீது மோதியவள் இருவரும் கீழே விழ வழக்கத்திற்கு மாறாய் குஷா வலியில் அலறினான். என்னவென்று லவா எட்டிப்பார்க்க அவர்கள் இருவரும் அருகருகே விழுந்திருப்பதைக் கண்டு அவன் சிரிக்க தன்னைக் குத்திய அந்த ஊசியை அவள் கரத்திலிருந்து குஷா பிடுங்க முற்பட அதைக்கண்டு எதிர்க்க முடியாதவள் அவன் எதிர்பாரா நேரத்தில் ஊசியை அவனிடம் கொடுத்துவிட்டு மொட்டு எழுந்து லவாவிடம் ஓட அவனோ அவள் தன்னைத் தான் துரத்துகிறாள் என்று ஓட இங்கே குஷாவோ,"நீ தெரியாம எல்லாம் மோதி ஊசி ஏத்தியிருக்க மாட்ட... என்னைப் பழிவாங்க வேணும்னே செஞ்சியிருக்க டி... உன்ன..." என்று பல்லைக் கடித்தான்.

அங்கே கீழே ஓடியவர்கள் அந்தக் கிணற்றடியில் அமர்ந்து மூச்சு வாங்கினார்கள். லவா அர்த்தமாய்ச் சிரிக்க அவனைக் கிள்ளியவள்,"எல்லாம் உன்னால... உனக்கு வெச்ச ஊசில அவங்க குத்து வாங்கிட்டான்... இருந்தாலும் அவன் வாங்க வேண்டியவன் தான்... தப்பில்லை..." என்றதும்,

"ஏய் அப்போ வேணும்னே அவன் மேல குத்தியிருக்க?"

"ச்சே ச்சே... ஆனா அவன் குத்து வாங்குவான்னு தெரிஞ்சிருந்தா வேற இடத்துல குத்தியிருப்பேன்..." என்று வாய்ப்பை நழுவவிட்டவள் போல் அவள் சோகமாய் உரைக்க,

"இப்படிப் பழிவாங்குற அளவுக்கு உங்களுக்குள்ள என்ன நடந்தது? சின்ன வயசுல அடிக்கடி சண்டை போடுங்க தான்... ஆனா அதெல்லாம் எல்லோரும் செய்யுறது தானே? ஏன் அனுவுக்கும் எனக்கும் தான் எத்தனையோ சண்டை வந்திருக்கு... ஆனா வளர்ந்ததும் நாங்க அதை அப்படியே மறந்துட்டோம்... ஆனா நீங்க இன்னுமா அதையே மனசுல வெச்சியிருக்கிங்க? நாமெல்லாம் வளர்ந்துட்டோம் மொட்டு... எனக்கு இது தான் சுத்தமா பிடிக்கல... அண்ட் உங்க சண்டையைப் பார்க்குற மத்தவங்களுக்கு வேணுனா நீங்க சாதரணமா ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்யுற மாதிரி தெரியலாம்... ஆனா இதையும் கடந்து தனிப்பட்ட வெஞ்சென்ஸ் உங்களுக்குள்ள இருக்குனு எனக்கு இப்போ தான் தெரிஞ்சது... என்னனு சொல்லு, அவன்கிட்ட நான் பேசுறேன்..." என்னும் போது அவளோ அந்த ஊசியை அவனுடைய சட்டையின் அருகில் கொண்டுவந்து,

"லவா இப்போ இந்த நிழலைப் பாரு... இது என்ன காட்டுது? நான் உன்னைக் குத்த வர மாதிரி தானே இருக்கு? ஆனா நான் என்ன பண்றேன்னு பாரு? உன் சட்டையைத் தைக்க முயற்சிக்கிறேன்... இந்த நிழலை மட்டும் பார்க்கறவங்க என்னை ஒரு கொலைகாரினு சொல்லலாம்... ஆனா நிஜம்? இதுக்கு யாரை குறைசொல்ல முடியும்? எல்லாமே அவங்கவங்க பார்வையில இருக்கு... அண்ட் என் நிலையில நான் எப்படி உறுதியா இருக்கேனா அதே மாதிரி அவன் நிலையில அவன் உறுதியா இருக்கான்..."

"ஆனா யாராச்சும் ஒருத்தர் இறங்கி வந்து கள நிலவரத்தைப் பார்க்கலாமில்ல?"

"பார்க்கலாம் தான்... ஆனா இங்க யார் இறங்கி வராங்கங்கறதுல தானே பிரச்சனை?"

"அப்போ ரெண்டு பேரும் எதுவும் பேசம ஒதுங்கியே போகவேண்டியது தானே?"

"இங்க எல்லோரும் அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்தா இங்க சண்டை சமாதானங்கறதுக்கே வேலை இல்லாம போயிடுமே?" என்று அவள் சிரிக்க,

"சோ பிரச்னையை முடிக்க மாட்டீங்க... அதே நேரம் ஒதுங்கியும் போக மாட்டிங்க... இப்படியே வளர்த்திட்டு இருக்கப்போறிங்க?" என்றதும் அவள் சிரிக்க,

"என்னமோ போ... நம்ம அப்பாங்களுக்குள்ள தான் சண்டை பிரச்சனை. பெரியவங்க பிரச்னையை பெரியவர்களே பார்த்துக்கட்டும் நாம சின்னவங்க எல்லாம் ஒற்றுமையா இருக்கலாம்னு நெனச்சா நீங்க இப்படி இருக்கீங்க?"

"நமக்குள்ள ஏன் எந்த சண்டையும் இல்ல சொல்லு? நாம ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சி வெச்சியிருக்கோம்... அண்ட் நமக்குள்ள முரண்படுற விஷயங்கள பேச நாமாகவே தெரிஞ்சு தவிர்த்திடுறோம். அது ரெண்டு தரப்பும் சுயமா எடுக்கவேண்டியது. ஒரு கை என்னைக்குமே ஓசை தராது..." என்னும் வேளையில் வெளியே வந்த கனகா,

"அவனை ஏன் டி ஊசியில குத்தின?" என்றதும்,

"ஹ்ம்ம் நீ நல்லா இருந்தா அவனை ஊசியில குத்துறேன்னு நேந்துகிட்டேன்... அதான்..." என்று அசட்டையாகச் சொன்ன தொனியில் லவா சிரிக்க,

ஊசியை கையில் பிடித்தவள்,"தாத்தா நல்லா இருந்தா இன்னொருத்தனுக்கு ஊசி குத்துறேன்னு..." என்று முடிக்கும் முன்னே லவா எஸ் ஆனான்...(நேரம் கைகூடும்...)
Rmba Nala irundhuchu... Oru happy mood create achu.... Language pathi nalla sonninka... Actually Enakae inferiority
iruku.. Mottukita ivlo tallent irukae Apram pass ana ena Arrear irundha ena skill thn mukiyam knowledge kaaga thn education..
Lava Nala point ah pesuran... Rmba appreciate panran super super
 
Semma semma, sariyaa sonneenga, mozhi oru tool thaan,mozhihaL pathi oru research panniteenga,5lines same mozhi, fantastic,endla vanthaa iyaibu,ithu enna vahai, neraya therinchukka mudiyuthu unga storynaala,thank u,
ada poanga ji... Kusha panrathukku avanga eppadi responsible aavaanga, nalla padikirannu sonnathu oru kuththamaa, compare pannaathaan thappu,
Lavakum, Mottukkum super wavelength, extra talent neraya irukku Mottu kitta, expect pannathuthaan, unga heroines naa summaavaa?
paaratukkal oru enthuva kodukkum, athum namakku vendiyavanga kitta irunthu vanthathunaa ulahame namakku keezha thaan,
Oru country ku agriculture thaan backbone,itha yaarume purinchikirathilla,so pity...
Ha..Ha... Mottu Kusha va vachu seivaa polaye...So.... Yetho oru incident, thappu Mottu pakkam illa, Kusha misunderstand pannirukaan appadithaane,
Very interesting epi
மிக்க நன்றி... நான் இதை எழுத காரணம் சமீபமா நிறைய இடத்துல தமிழ் புறக்கணிக்கப்படுறதால் தான்... எந்த மொழியும் உயர்வு இல்லை எதுவும் தாழ்வும் இல்லை... நன்றி?கம்பெறும் பண்ணியிருக்காங்க சொல்றேன்... எஸ் பொதுவா என் ஹீரோயின்ஸ ரசிச்சு தான் ஸ்கெட்கச் செய்வேன். ஆனால் ஆத்யாவுக்குப் பிறகு அதிகம் மெனக்கெடும் கேரக்டர் மொட்டு தான்...? நான் அதை அனுபவிச்சும் இருக்கேன் ஏங்கியும் இருக்கேன். சொல்றேன் சொல்றேன் நன்றி?
 
இயற்கையின் மொழிகள் புரிந்து விடின்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை ???
ஹா பாட்டாவே பாடிட்டீங்களா? அப்போ நானும் பாடிடுறேன்

நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு... ????
 
Rmba Nala irundhuchu... Oru happy mood create achu.... Language pathi nalla sonninka... Actually Enakae inferiority
iruku.. Mottukita ivlo tallent irukae Apram pass ana ena Arrear irundha ena skill thn mukiyam knowledge kaaga thn education..
Lava Nala point ah pesuran... Rmba appreciate panran super super
மிக்க நன்றி... உண்மையைச் சொல்லனும்னா எனக்கும் அந்த காம்ப்ளெக்ஸ் இருந்தது. நான் 3rd வரை படிச்ச ஸ்கூல்ல இங்கிலிஷ் அவ்வளவா சொல்லி தரல(இத்தனைக்கும் அது இங்கிலிஷ் மீடியம் ஸ்கூல்) வேற ஸ்கூலுக்குப் போனா எனக்கு 'cheat' முதலிய சாதரண சொல்லுக்கு கூட அர்த்தமே தெரியாது... ரொம்ப பீல் பண்ணதுண்டு? எஸ் எஸ் அறிவு இருந்தா போதும்... நன்றி?
 
Top