Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரம் கொடி தராத கனிகள்

Advertisement

Joyram

New member
Member
செல்போன் டார்ச் லைட் போன்ற ஒரு பேரொளியை கண்டேன்
அது என் செல்போன் லைட் இல்லையென கண்டுகொண்டேன்
கருமேகம் இருமடங்கு கருப்பாகி மாரி பொழிய காத்திருந்தேன்
அது மேகம் இல்லை என் கண்களின் தாகமே என உணர்ந்தேன்
மர்மமான ஓர் மாமரம் கனிகளுடன் எனை நெருங்க கண்டேன்
மாமரம் அல்ல வழவழவென்ற வாழைமடல் என்றுணர்த்தேன்
இயற்கை அழகை போன்ற ஒருபேரழகு என்ன என வியந்தேன்
கண்ணிமைக்கும் நேரத்தில் தென்றல் என்னுடலை தழுவியது
ஐயோ,கவர்ச்சியான அந்த தென்றல் என்னைவிட்டு நழுவியது
என்னை ஏக்கத்தில் தவிக்கவிட்டு சென்றது ஓர் இளைய கன்னி
திரும்பினேன், கன்னியின் வைர அங்கங்களை பற்றிட எண்ணி
அய்யகோ, நான் கண்டது தங்கம் போன்று ஜொலித்த கதிரொளி
உடனே கனவின் தேவதையை வரைய தேடினேன் இரும்பு உளி

Joyram
 
Top