Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 11

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 11

இப்படியே நான்கு நாட்கள் கடந்தது. யமுனா தன்னுடைய ஐடி கார்டை சரண்டர் செய்து வெளியில் வரும் போது மனது பாரமானது.எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்குன வேலை எவனோ ஒருத்தன் தீடிரென்று வந்து என் வாழ்க்கையயே அழிச்சிட்டானே என்று வெளியே வந்தவள் முன்னாடியே தான் கிளம்புகிறேன் என்று மெயில் அனுப்பி வைத்திருந்தாள் தன்னுடைய டீமிற்கு.

அன்று மாலை ஹாஸ்டலிற்கு வந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் இருந்தாள். அப்போது திவாகரிடம் இருந்து ஃபோன் வந்தது. கடந்த இரு நாட்களாகவே திவாகர் விடாமல் கால் பண்ணிக் கொண்டே இருந்தான் அவனிடம் பேச யமுனா விற்கு விருப்பம் இல்லை ஏனெனில் அவனால் தான் இவ்வளவு பிரச்சனையும் முளைத்தது. அதே மாதிரி யமுனா அவனை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது அவளுக்கு எரிச்சலானது. காதல் என்பது யாராலும் திணிக்க முடியாத ஒன்று காதல் என்று ஒன்று மலர்ந்தால் சாதாரணமாக இருக்கும் விஷயங்கள் கூட அழகாக இருக்கும்.

இதை எல்லாம் யோசித்து நமக்கு என்ன பயன் நம்முடைய வாழ்க்கை தான் முடிந்துவிட்டதே என்று யோசித்தவள் முடிந்த வரை தன்னை எதாவது வேலை செய்து கொண்டிருக்கும்படி பிஸியாக வைத்தாள்.

திவ்யாவை கண்டும் காணாத மாதிரி யமுனா தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திவ்யாவிற்கு மனசே சரியாக இல்லை உடனே குணா விற்கு கால் பண்ணி அழத் தொடங்கினாள். "ஏன் குணா யமுனா அத்தான கல்யாணம் பண்றதுக்கு முக்கியமான காரணம் திவாகர் ஆனா நம்ம இரண்டு பேர் தான் காரணம் மாதிரி அவள் பண்றது எனக்கு ரொம்ப ஹர்ட்டிங்கா இருக்கு" என்றாள்.

"நீ அவங்க இடத்துல இருந்து யோசிச்சு பாரு திவ்யா யாரோ ஒருத்தர் அவங்க குடும்பத்தோட நலனுக்காக திடிர்னு மிரட்டி கல்யாணம் பண்ண சொன்னா எப்படி இருக்கும்" என்றான் குணா." அதுவும் சத்யா அண்ணா கிட்ட பேசவே நாங்க எல்லாருமே பயப்படுவோம் அப்போ யமுனா சின்ன பொண்ணு தான அவங்களுக்கும் அண்ணா க்கும் எப்படி செட் ஆக போதுனு தான் தெரியல" என்றான்.

" ம்ம் உங்க அண்ணா க்கு வயசு என்ன குணா" என்று திடிரேன ஒரு படபடப்புடன் கேட்டாள். "எனக்கு இருபத்தி ஏழு ஆகுது அண்ணா என்னை விட இரண்டு வருஷம் பெரியவங்க சோ இருபத்தி ஒன்பது" என்றான்." என்னது இருபத்தி ஒன்பதா!" என்று அதிர்ந்தாள்." யேய் திவ்யா என்ன ஆச்சு அண்ணா வயசுல என்ன பிரச்சனை உனக்கு" என்று கேட்டான்." எனக்கு பிரச்சனை இல்லை குணா யமுனா விற்கு தான்" என்று இழுத்தாள்." யமுனா க்கு என்ன கொஞ்சம் டென்ஷன் ஆக்காம சொல்லு தாயே" என்றாள்." குணா என்னை விட யமுனா ஒரு வருஷம் சின்னவள் அவளுக்கு இப்ப தான் வயசு இருபத்தி இரண்டு ஆகுது என்றாள். "ஓ.. சேரி இப்போ அதுக்கு என்ன சொல்லவற நீ" என்றான். "யமுனா என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கா கல்யாணம் பண்ணா அவளை விட நான்கு வருஷம் இல்லன்னா அதுக்கு கம்மியா இருந்தா மட்டும் தான் பண்ணுவேனு உங்க அண்ணா இவளை விட ஏழு வருஷம் பெரியவங்க இது தெரிஞ்சா என்ன ஆட்டம் ஆட போறாளோ எனக்கு இப்பவே பயமா இருக்கு" என்றாள்.

"ஹே ரிலாக்ஸ் திவ்யா யமுனா ஹாஸ் நோ அதர் கோ சோ ஃபிரியா விடு" என்றான்." உங்க அண்ணா பார்க்க அவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காரு இன்ஃபக்ட் நீயே அவர் பக்கத்துல கம்மியா இருப்ப அப்போ ஏன் அவர் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல" என்று கேட்டாள். இதற்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான் குணா." குணா என்ன ஆச்சு ஏன் அமைதியாகவே இருக்கீங்க எனி ப்ராப்ளம்"என்று கேட்டாள் திவ்யா." திவ்யா சத்யா அண்ணா க்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு வயசுல ஒரு பொண்ணு இருக்கு" என்றான். இதைக் கேட்ட திவ்யா வின் நெஞ்சே ஒரு நிமிஷம் நின்று விட்டது. "எஸ் திவ்யா அண்ணா க்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது அவருடைய மனைவி ஐ மீன் முதல் மனைவி பெயர் பிரணிதா அண்ணாவும் பிரணிதாவும் காலேஜ்ல படிக்கும் போதே காதலிச்சாங்க பிரணிதா வும் எங்கள மாதிரி வசதி உள்ளவங்க தான் கல்யாணம் நடந்தது ஆனா பிரணிதா எங்க யார் கிட்டயும் சரியா மூஞ்ச குடுத்து கூட பேச மாட்டாங்க உண்மைய சொல்லனும்னா நான் சத்யா அண்ணா இல்லாமல் செயல் பட முடியாது ஐடி கம்பெனி ஹாஸ்பிடல் லெதர் பிஸினஸ்னு எல்லாமே அண்ணன் கன்ட்ரோல் தான் அதனால ரொம்பவே கர்வமாக இருப்பாங்க எங்க அப்பா அம்மா மற்றும் பிரியா ஒருத்தரயும் மதிக்க மாட்டாங்க அண்ணா கல்யாணம் பண்ண உடனே அமெரிக்கா லண்டன்னு இருந்துட்டே இருப்பாங்க அப்போ லாம் இவங்களும் அங்க பொய்டுவாங்க அண்ணனுக்கு எங்கள மதிக்காத விஷயம் தெரியாது நாங்களும் சொல்லல அப்புறம் ஆதிரா பாப்பா பிறந்த உடனே அண்ணி எங்க வீட்டுக்கு வந்திட்டாங்க அண்ணா அமேரிக்கால இருந்தாரு அப்பொ அப்பொ இங்க வருவாரு பிரணிதா ஆதிராவ கவனிக்கவே மாட்டாங்க அம்மாவும் பிரியாவும் தான் ஆதிராவ வளர்த்தாங்க தன்னுடைய அழகு பொய்டும்னு ஆதிராக்கு தாய்ப்பால் கூட கொடுக்கல அவங்க இதனால ஆதிரா ரொம்ப வீக் ஆகிட்டா இந்த விஷயம் தெரிஞ்ச உடனே அண்ணா இங்க வந்து பிரணிதாவ பயங்கரமா போட்டு அடிச்சாங்க அப்போ வேணும்டே பிரணிதா பப்புனு லாம் போக ஆரம்பிச்சா. நாங்க ரொம்ப வருஷமா டெல்லில தான் இருக்கோம் ஆனா நாங்க நம்ம தமிழ் கலாச்சாரம்படி தான் வாழ்ந்தோம் பிரணிதா இப்படி பண்ண உடனே அண்ணா அவளை வீட்டை விட்டு அனுப்பி நிறைய பிரச்சனை வந்து இப்போ அவங்களுக்குள்ள டைவர்ஸே ஆகிடுச்சு கேஸ்ல கூட அண்ணா தான் ஜெயிச்சாரு அதனால ஆதிரா பாப்பா எங்க கூட தான் இருக்கா பிரணிதா வீட்டுக்கு மாசம் ஒரு தடவை வரலாம் ஆனா கடந்த ஒரு வருஷத்துல இவ இதுவரைக்குமே இரண்டு தடவை தான் வந்திருக்கா நீ என்ன நினைப்பனு புரியது கலாச்சாரம்னு சொல்லும் போது அப்போ நம்ம பண்ணது தப்பு தான அதுவும் கலாச்சாரம் சீர்கேடு தான்னு கேட்க தோணும் ஆமா நம்ம பண்ணது தப்பு தான் ஆனாலும் நம்ம காதல் உண்மை ஆனா பிரணிதா அப்படி இல்லை அவளுக்கு இப்போ பசங்க பழக்கம் கூட இருக்குனு கேள்விப்பட்டோம்" என்றான்.

" யேய் திவ்யா என்ன எதுவும் பேச மாட்டுற" என்றான்.தன்னுடைய குரலில் கரகரப்போடு" என்னை என்ன பேச சொல்றீங்க எனக்கு தெரியல என் மைன்ட்டே பிளான்க்கா இருக்கு யமுனா விற்கு இது கண்டிப்பா தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை அவளுக்கு இது தெரியாம எப்படி குணா அது தப்பாச்சே இப்போ எனக்கே நான் ஏதோ கேட்க போய் தான் சொல்றீங்க இல்லன்னா எனக்கும் பின்னாடி தான் தெரிஞ்சிருக்கும் போல" என்று சலிப்போடு சொன்னாள்.

" சத்யா அண்ணாக்கு அவரோட பேர்ஸ்னல் பத்தி பேச பிடிக்காது திவ்யா அதான் நானும் பேசல" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே" ஓ அதுக்காக கல்யாணம் பண்ண போற பொண்ணு கிட்ட கூட சொல்லாம இருக்கலாமா"என்று அதிர்ந்து கேட்டாள்." நீ சொல்றது எனக்கு புரியுது திவ்யா ஆனா யமுனா க்கு இந்த உண்மை அண்ணா சொல்லி தான் தெரியனும் அதான் அண்ணாவும் நினைச்சு சொல்லாம இருந்திருக்காரு ஆதிராவ இப்போ வளர்க்கிறது பிரியா தான் ஒரு தாய் போல பார்த்துக்கிறாள் அதனால ஆதிரா பிரியாவ விட்டு வர மாட்டுறா பிரியமாட்டாள் பிரியா நிச்சயம் முடிந்ததும் வெளிநாட்டுல நம்பகமான ஆள உட்கார வெச்சிட்டு அண்ணா இந்தியாவிலேயே செட்டில் ஆயிட்டாரு பிரியா ஆதிராவ அப்படி பார்த்துக்கறதுனால அண்ணாக்கு பிரியா மேல ஒரு மரியாதை கலந்த அன்பு அதனாலேயே அவள் ஆசைப்பட்டு கேட்ட திவாகர எப்படியாவது கல்யாணம் பண்ணி வெக்க முடிவு பண்ணிட்டாரு" என்றான்.

" திவாகர் வீட்டுக்கு சத்யா அத்தானுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது தெரியாதா"என்று வியப்போடு கேட்டாள்." ம்ம் தெரியாது நான் தான் சொன்னேன்ல சத்யா அண்ணா வோட பேர்ஸ்னல் யாருக்கும் தெரியாம தான் இருக்கும் அப்படி அண்ணா கன்ட்ரோல்ல வெச்சிருப்பாரு" என்றான்.

என்னவோ யமுனாவின் நிலைமை கண்டு கண்ணீர் கரை புரண்டு வந்தது திவ்யா விற்கு. அவளுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் நான் இங்கே சோகத்தில் மூழ்கி கிடந்த போது என்னை சிரிக்க வைத்து என் வாழ்க்கைக்கு பிடிப்பு கொடுத்த அழகிய தேவதை யமுனா தன்னை விட வயதில் சிறியவளாக இருந்தாலும் மனதளவில் ரொம்ப தெளிவானவள் சின்ன வயதில் தாய் தந்தையை இழந்த அப்பெண்ணிற்கு மாமாவின் அன்பு மற்றும் அரவணைப்பில் படித்து இப்போது தனியாய் வளர்ந்து நிற்கும் இந்த அழகிய அறிவுள்ள நல்ல பெண்ணிற்கு ஏன் இந்த நிலைமை இதை நினைத்தவள் குணாவுடன் கால்லில் இருக்கும் போதே தேம்பி தேம்பி அழுதாள். "திவ்யா ப்ளிஸ் காம் டௌன் ரிலாக்ஸ்" என்று ஆறுதல் படுத்தினாலும் திவ்யாவால் முடியவில்லை "நான் கொஞ்சம் தனியா இருக்கனும் குணா ஃபோனை வைக்கிறேன்" என்று சொல்லும் போது "ஓகே திவ்யா எக்காரணம் கொண்டும் சத்யா அண்ணா வோட கல்யாணம் குழந்தை பத்தி யமுனா விற்கு உன்னால் தெரியக்கூடாது" என்றான்." சேரி" என்று ஃபோனை வைத்த திவ்யா தன்னுடைய கட்டிலில் குப்புற விழுந்து கதறி கதறி அழுதாள்.
 
ennanga idhu kattaya kalyanam dhan appadinnu partha second marriage vereya
andha dhivya ponnukku help panna poi dhan yamuna ippaid matti kitta
avanga rendu perukkum konjam kooda guilt illai
pavam yamuna
ama en ivlo kutti kutti episode adhivum ore nalle 11 episodes
edhanum guinness recordkku try panreengala :LOL: :LOL:
 
ennanga idhu kattaya kalyanam dhan appadinnu partha second marriage vereya
andha dhivya ponnukku help panna poi dhan yamuna ippaid matti kitta
avanga rendu perukkum konjam kooda guilt illai
pavam yamuna
ama en ivlo kutti kutti episode adhivum ore nalle 11 episodes
edhanum guinness recordkku try panreengala :LOL: :LOL:
Ha ha.. Kuttiyava sis iruku?
Already 11 uds eluthiten
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

அடப்பாவி சத்யதேவ்
ஏற்கனவே இவனுக்கு கல்யாணமாகி இரண்டு வயசுலே ஒரு பொண்ணு இருக்கிறாளா?
அதை யமுனாவிடம் சத்யா நாய் ஏன் சொல்லவில்லை?
அவ்வளவு பணக் கொழுப்பு

இரண்டாவது கல்யாணம் பண்ணும் பொழுதே இந்த பரதேசி யமுனாவை இப்படி மிரட்டுறானே
இன்னும் முதல் ஒய்ப்புன்னா அவளை என்ன பாடுபடுத்துவான்?

இவன் பொண்ணைப் பார்த்துக்கிட்ட தொங்கச்சி மேலே பாசம்ன்னா அதுக்கு யமுனாவை பலிகடா ஆக்குவானா, சத்யதேவ்?
நாசமாப் போனவன் இவனெல்லாம் உருப்படவே மாட்டான்

யமுனா பாவம்
இவனுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் விஷயம் தெரிந்தால் என்னவாவாளோ?

கேட்க ஆளில்லைன்னா அனாதையாக இருக்கும் ஒரு பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்வாங்களா?

திவ்யா நாய்க்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இல்லவே இல்லையா?
 
Top