Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் நீயே என் சுவாசக் காற்று அத்தியாயம் -1

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே,

இதோ அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்....

இதற்கு முன்பு கொடுத்த ஆதரவை இப்போதும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.....




அத்தியாம்-1:

அன்று வெள்ளிக்கிழமை...
வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது...

முற்பகல் பத்து மணி இருக்கும்....இருவரும் பிரமாண்ட பங்களாவின் கேட்டின் முன் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கினர்....

வாயிற் காவலாளி அதிர்ந்த முகத்துடன் கேட்டை திறந்து விட்டான்....
பின் வந்திருப்பது இப்பங்களாவின் செல்ல பையன் அல்லவா!அதுவும் ஒரு பெண்ணோடு..

கேட்டைக் கடந்து உள்ளே அரைக் கி.மீ பாதை நடந்தனர்...சுற்றிலும் பசுமையான தோற்றம்....செடிகள் எங்கும் பூக்கள் பூத்துக் குலுங்கின....

அவர்கள் வீட்டை அடையும் முன் அவர்கள் மற்றும் யார் யார் இந்த வீட்டில் உள்ளனர் என்று பார்ப்போம்..

அது கூட்டுக் குடும்பம்....அவ் வீட்டின் தலைவர் -சூர்ய நாராயணன்
தலைவி-சந்திரலேகா. அவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள்.

முதலில் இரண்டு ஆண் மக்கள்....அடுத்து ஒரு மகள்.அடுத்து ஒரு ஆண்.

முதலாவதாக அருண்-அனிதா->இவர்களுக்கு இரண்டு மகள்கள்.(1)அங்கீதா-வயது 6,(2)அஷ்வதா வயது 3...

இரண்டாவதாக ஆதி-ஆனந்தி->இவர்களுக்கு ஒரு மகள்-ஆத்மிகா-வயது-4

மூன்றாவதாக மேகலா-மேகவர்ணன்-வசிப்பது வெளிநாட்டில்-இவர்களுக்கு ஒரு மகள்-மேக்னா

கடைசியில் ரித்விக்(நம்ம ஹீரோ)(டெரர் பீஸ்)அதுவும் இளவயதில் ஐ.பி.எஸ் வில் முதலாவதாகவதாக வந்தவன்‌....
இவனுக்கு தான் வீட்ல பொண்ணு பார்ப்போம் னு முடிவு பண்ணிருக்காங்க...


பங்களா பற்றியும் பார்த்து விடுவோம்....
கீழ் தளத்தில் பெரிய வரவேற்பை,பெரிய சமையலறை,பூஜை அறை, மூன்று படுக்கையறை கள்...ஒன்று பெரியவர்கள் அறை, ஒன்று மேகலா அறை,ஒன்று பெரிய விருந்தினர்கள் அறை....

முதல் தளத்தில் இரண்டு பெரிய படுக்கை அறைகள் (அருண் மற்றும் ஆதி குடும்பத்தினர்க்கு)மற்றும் ஒரு பொழுதுபோக்கு அறை..

இரண்டாம் தளத்தில் ஒரு படுக்கை அறை(ரித்விக்) ,ஒரு உடற்பயிற்சி அறை மட்டும்...

பங்களாவின் பின்புறம் குழந்தைகள் விளையாட இடமும் பொருட்களும் உள்ளன..

வீட்டு வேலைகளுக்கும் சமையலுக்கும் தனித்தனி ஆட்கள்..வீட்டு பெண்களுக்கு மேற்பார்வை மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பு.

இதுலாம் சரி... ரித்விக் கூட வந்தது யார்னு தான் கேட்கிறீங்க.
வேற யாரும் இல்லை...நம்ம கதையின் நாயகி தான்.ஹரிணி.எம்.பி.பி.எஸ்.டி.ஜி.ஓ.(மகப்பேறு மருத்துவர்).

அச்ச்ச்சோ‌.... வாசலுக்கு வந்துட்டாங்க....அங்க போய் என்ன நடக்கும்னு பார்ப்போம்...

வீட்டுக்குள் நுழைந்து அம்மா னு ரித்விக் கூப்பிட்டான்... அவன் அம்மா அவர்களுடைய அறையிலிருந்து வெளியே வந்தார். ...

அம்மா வின் முகத்தை தயங்கி தயங்கி பார்த்துக் கொண்டே இவள் என் மனைவி ஹரிணி,மகப்பேறு மருத்துவளாக இருக்கிறாள் என்று கூறினான்....

அவன் அறிமுக படுத்திய பெண்ணை ஒரு நிமிடம் கூட பார்த்திருக்க மாட்டார்....

திடிரென்று அவன் கண்ணம் காந்திய பிறகு தான் உணர்கிறான் தன் தாய் தன்னை அறைந்துள்ளார் என்று..

ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவர் அறையின் உள்ளே சென்று விட்டார்.உள்ளே சென்று அப்படி ஓர் அழுகை அவர்க்கு....

அவர் அறைக்கு சென்று ஐந்து நிமிடங்களிள் சூர்ய நாராயணன் ,அருண்,ஆதி வீட்டிற்கு வந்து விட்டனர்..

அடித்த அரையின் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆனந்தி மற்றும்அனிதாவும் அப்படியே நின்று விட்டனர்...

வெளியே இருந்து வந்து நின்று பார்த்த அனைவருக்குமே அதிர்வு தான்....

பின்னே இருக்காதா!!! யாரிடமும் நின்று ஒரு வார்த்தை கூட அன்பாக ஏன் சிரிக்க கூட செய்யாதவன் ஒரு பெண்ணுடன் அதுவும் அவள் கையில் மிகப் பெரிய பெட்டியுடன் வந்து நிற்பது தான் காரணம்...

முதலில் தெளிந்தது சூர்ய நாராயணன் தான்...தன் மனைவியை தேடி தங்கள் அறைக்கு சென்றார்....

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த சூர்ய நாராயணன், ரித்விக் அந்த பெண்ணை கூப்பிட்டு உன் அறைக்கு செல் என்று கூறினார்...

எதுவும் பேசாமல் அவன் லிப்ட்டுக்குள் போக அவன் பின்னால் ஹரிணி யும் சென்றாள்...

இரண்டாம் தளத்தில் உள்ள தனது அறைக்கு வந்தவன் நேராக கட்டிலில் படுத்து கண்களை மூடி கொண்டான்...

ஹரிணியோ அறை வாயிலில் நின்று அறையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்....

விசாலமான அறை தான்.....நடுவில் 3 பேர் தாரளமாக படுத்து உறங்கும் அளவு பெரிய கட்டில் மெத்தையுடன் இருந்தது...

ஒரு பக்கம் குளியலறை மும் உடைமாற்றும் அறையும் இருந்தது...
இன்னொரு பக்கம் பால்கனி....ஒரு சுவருடன் ஒரு சோபா வரும் இருந்தது....

நடந்து வந்து சோபாவின் பக்கம் பெட்டியை வைத்து விட்டு அவனை திரும்பி இரண்டு நிமிடம் நின்று பார்த்தாள்....அவனிடம் சிறு அசைவும் இல்லை...

உடனே பால்கனிக்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிது நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விட்டது.....பயம் மற்றும் பதற்றத்தில் நேற்று இரவும் இன்று காலையும் உணவை ஒழுங்காக சாப்பிடவில்லை....

இப்போது பசிக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தன்னிடமிருந்த நீரை கைப்பையிலிருந்து எடுத்து குடித்தவள் அந்த சோபாவில் அப்படியே உட்கார்ந்து விட்டாள்...

மேலும் ஒருமணி நேரம் கடந்தது...
அவனை திரும்பி பார்த்தாள்....அவன் உறங்கிவிட்டான் என்று தெரிந்தது...
மெதுவாக வெளியே வந்து கீழ் தளம் சென்றாள்...

அவளை முதலில் பார்த்தது சந்திரலேகா தான்...பார்த்ததும் சிரித்த முகத்துடன் வா ஹரிணி வந்து சாப்பிட வா என்று கூறினார்...உள்ளுக்குள் திகைத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் வந்து உணவு மேஜையில் அமர்ந்தாள்....

மாமா,அத்தான்கள் மற்றும் குழந்தைகள் சாப்பிட்டாச்சா என்று கேட்டாள்...

மூன்று பெண்களும் சந்தோசமாக தலையை ஆட்டினார்...

அதன்பின் ஒவ்வொன்றாக பேசியபடி அவர்களே பரிமாறிக் கொண்டு ஹரிணியையும் நன்றாக சாப்பிட வைத்து அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்...

.குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பின் சிறிது உட்கார்ந்து பேசிவிட்டுஅனைவரும் தங்கள் அறைக்கு ஓய்வு எடுக்க சென்று விட்டனர். ...

ஹரிணி மட்டும் வரவேற்பை யில் உள்ள சோபாவில் உட்கார்ந்து நாளிதழ்களை வாசித்து கொண்டு இருந்தாள்...

மாலை 4.30 மணிக்கு அனைவரும் வந்து சேர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர்.

உறக்கம் கலைந்து எழுந்த ரித்விகிற்கு இப்பொழுது தான் ஹரிணியை இங்கே அழைத்துக் கொண்டு வந்தது ஞாபகம் வந்தது.அவளை அறையில் மற்றும் பால்கனியில் தேடி பார்த்தான்....

ஒருவேளை இங்கிருந்து போய் விட்டாளானு தோன்றிய அடுத்த நொடி அவன் கண்ணில் அவளுடைய பெட்டி பட்டது....அதை பார்த்ததும் தான் நிம்மதி ஆனான்...

ஒருவேளை கீழே போய்விட்டாளானு பார்ப்போம்னு கீழ் தளத்திற்கு வந்தான்....

வந்தவன் அதிர்ந்து நின்று விட்டான்....
அனைவரும் ஹரிணி விடம் ஏதோ அவளை பல வருடங்களாக தெரிந்த மாதிரி பேசி கொண்டிருந்தனர்....

அவனை கண்டு கொண்டாலும் யாரும் அவனிடம் ஒன்றும் பேசவில்லை....
சிறிது நேரம் கழித்து அம்மா என்னை மன்னியுங்கள் என்று அவன் அம்மாவின் கையை பிடித்து பேசினான்....

சந்திராவோ கையை உதறி விட்டு அனைவரிடமும் இவனிடம் யார் வேண்டுமானாலும் பேசுங்கள் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை ஆனால் நான் பேச போவதில்லை அவனும் என்னிடம் பேசக் கூடாது என்று கூறிவிட்டு பூஜை அறை க்குள் சென்று விட்டார்....

சூர்ய நாராயணன் எழுந்து எல்லாம் சரியாகிவிடும்... கவலைப்படாதே..என்று சொல்லி விட்டு சந்திராவை அழைத்து நான் அலுவலகம் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

அருண் மற்றும் ஆதி யும் அவருடன் அவர்களுடைய ஆடை உற்பத்தி அலுவலகத்திற்கு கிளம்பினர்...

ரித்விக் அப்படியே அவனுடைய ராயல்டு என்ஃபில்டில் வெளியே சென்று விட்டான்...

ஹரிணி அவர்களுடைய அறைக்கு சென்று முகம் கழுவி ஃப்ரெஷ் ஆகி வந்தாள்..

அவள் வந்ததும் பெண்கள் அனைவரும் பூஜையறை க்கு சென்று இறைவனை பூஜித்தனர்....


இரவு7 மணி ஆனதும் ஆண்கள் அனைவரும் வீடு திரும்பினர்....ஆனால் ரித்விக் மட்டும் வரவில்லை....

சிறிது நேரம் அவர்கள் அலுவலக நிகழ்வுகளை ஆலோசித்து விட்டு உணவு உண்டு அவரவர் அறைக்கு சென்று விட்டனர்....

ஹரிணி குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்...

குழந்தைகளுக்கு ஊட்டி முடித்ததும் அனைவரும் உண்டு விட்டு குழந்தைகளுடன் தங்கள் அறைக்கு சென்றனர்....

மீதிருந்து சந்திராவும் ஹரிணி யும்..ஒன்பதரை மணிக்கு ரித்விக் வந்தான்.வந்தவன் எதுவும் பேசாமல் ஏன் திரும்பி கூட பாராமல் தனதறைக்கு சென்று விட்டான்....

அவர் சமையலறை சென்று ஒரு டம்ளர் பாலைக் கொண்டு வந்து கொடுத்து அவளை போகச் சொல்லிவிட்டு கதவுகளை அடைத்துவிட்டு தனதறைக்கு சென்று விட்டார்...

அவளும் கொஞ்சம் பதற்றத்துடன் அவர்கள் அறைக்கு வந்தாள்..அவன் அங்கே இல்லை....பால்கனியில் உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்து இருந்தான்...

பால் டம்ளரை அங்கிருந்த விளக்கு மேஜையில் வைத்து விட்டு பால்கனி சென்றாள்...

ரித்விக்என்று னு அழைத்தாள்...
அவன் திரும்பி அவளை முறைத்து விட்டு படுக்கையில் போய் படுத்து கொண்டான்...

சிறிது நேரம் நின்று உள்ளே வந்தாள்...அவன் கண்டு கொள்ள வில்லை....

அவள் வாஷ்ரூம் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் சோபாவில் ஒரு தலையணை யும் ஒரு போர்வை மும் கிடந்தது...

பால் காலி ஆகிய இருந்தது...பெரிய விளக்கை அணைத்து விட்டு விடிவிளக்கை போட்டுவிட்டு அப்படியே த
சோபாவில் படுத்து விட்டாள்....

இதிலாவது படுக்க விட்டானே....பால்கனியில் வெறும் தரையில் தான் இருக்க விடுவானோனு பயமும் இருந்தது...ஏன்!!!???இதற்கு முன்பு அவனுடன் ஒரே அறையிலோ ஒரே படுக்கையிலோ அவன் உன்னை இருக்க விட்டதில்லையோ,எப்பவும் அவனையே குறை கூறுகிறாய் என்று மனம் குற்றம் சாட்டியது..சரி சரி இனி என் ரித்துவை இப்படிலாம் சொல்லக் கூடாது என முடிவு செய்து விட்டாள்...

மனம் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...காரணம் தனக்கென்று ஒரு குடும்பம் கிடைத்து விட்டது என்று...
சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்...

ஆனால் ரித்விக்கிற்கோ உறக்கம் வரவில்லை..
பகலில் தூங்கியதா!!!தாய் அடித்ததா!!அவர் பேசாமல் இருப்பதூ!!இல்லை இவளை தன் அறையிலே வைத்திருப்பதா!!!யார் அறிவார்.....

எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரிய வில்லை...அவன் எழும் போது காலை மணி ஆறாகிருந்தது....
குளியலறை யில் கேட்ட சத்தத்தை கேட்டு அவள் உள்ளிருக்கிறாள் என்று உணர்ந்து அவன் படுக்கையிலேயே உட்கார்ந்து இருந்தான்...

கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தான்....

அழகிய கரும் பச்சை நிறத்தில் பட்டு காட்டன் புடவையும் வாடமல்லி நிறத்தில் எம்பிராய்டரி வேலை செய்ய பட்ட ரவிக்கை யும் அணிந்து வெளியே வந்தாள்...
தலைக்கு குளித்திருப்பாள் போல....

அவனை கண்டு கொள்ளாமல் முடியை உதிர்த்தி காய் வைத்து பின்னலிட்டு நெற்றி விட்டில் குங்குமம் வைத்து விட்டு வெளியே சென்று விட்டாள்...

இதுவரை அவளையே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவன் எழுந்து குளியலறை சென்றான்...

கீழே வந்த ஹரிணியை இன்று மருத்துவமனை போகிறாயா?என்று கேட்டார்..

இல்லை அத்தை... மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துள்ளேன்... திங்கள் போக வேண்டும் என்று கூறினாள்...
சரி...வா...காபி குடிக்கலாம் என்று கூறிவிட்டு சமையலறை சென்று விட்டார்...
காலையில் கூழ் தான் குடிப்பேன் என்று கூறிக் கொண்டே அவளும் பின்னே சென்றாள்.... திடிரென்று அவளை உற்று பார்த்து விட்டு வேலை ஆட்களிடம் அவளுக்கும் சேர்த்து கூழ் செய்ய சொன்னார்....

வீட்டில் வேறு எவரும் எழுந்திரிக்க வில்லை ....அவள் மட்டும் சோஃபாவில் அமர்ந்து தினசரிகளை புரட்டிக் கொண்டே கூழைக் குடித்துக் கொண்டிருந்தாள்...

மேலும் ஒரு மணிநேரம் கழித்து ,ரித்விக் உடற் பயிற்சி செய்து குளித்து கிளம்பி சீருடை அணிந்து வந்து உணவு மேசை மேல் அமர்ந்தான்...
சந்திரா ஹரிணியை அழைத்து அவனுக்கு உணவு பரிமாற சொல்லி விட்டு சென்று விட்டார்....

ஹரிணி அவனுக்கு காலை உணவை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்...அவன் கருமமே கண்ணாக அவன் அலைபேசி யை பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தான்...சாப்பிட்டதும் கிளம்பிவிட்டான்....பின் ஒவ்வொருவராக உணவு உண்ண வந்தனர்....

ஆண்கள் அனைவரும் கிளம்பி சென்றதும் பெண்கள் பேசிக்கொண்டே உணவு உண்டனர்...

அன்று சனிக்கிழமை ....ஆதலால் குழந்தைகளுக்கு விடுமுறை....எனவே மதியம் சாப்பிட்டு விட்டு வெளியே செல்ல ஏற்கனவே திட்டமிட்டனர்... ஆண்கள் அனைவரும் அங்கு நேராக வருவதாக முடிவு செய்யப் பட்டிருந்தது‌....


"ஹரிணி,இன்று மத்தியானம் நாங்க எல்லாரும் வெளியே போற மாதிரி பிளான் பண்ணிருந்தோம்..... இன்னைக்கு நீ ஃப்ரீனா எங்க கூட வர்றீயா?" எனக் சந்திரலேகா கேட்டார்....

"ம்ம்ம் ‌...சரி அத்தை...நானும் வர்றேன்....ஆமா....எங்க போறோம்?"

"அஷ்டலெட்சுமி கோவிலுக்கு ‌போயிட்டு கொஞ்சம் நேரம் பீச் போயிட்டு வெளியே சாப்பிட்டு விட்டு அத்தையும் மாமாவும் வீட்டுக்கு வந்திருவாங்க.....மீதி எல்லாம் மால்க்கு போய் நைட் சோ போயிட்டு வருவோம்" என்றாள் அனிதா....

"ஓஓஓஓஓ...ஓகே!!"ஹரிணி...


"நீ ரித்விக் கூட முதன்முதலாக வெளியே போகப்போற...அதுனால நீ அவன்கூட வா... அத்தையும் மாமாவும் ஒரு கார்ல் வருவாங்க...மீதியிருக்கிற நாங்கள் எல்லோரும் ஒரு கார்ல வர்றோம்...."என்றாள் ஆனந்தி....

மனதுக்குள்"இது ஒன்று தான் குறைச்சல்"என்று நினைத்து விட்டு வெளியே சிரித்து வைத்தாள்....

"இது நல்ல ஐடியா தான்....ஆனால் ஹரிணிக்கு இது ரித்விக் கூட போறது ஒன்னும் முதல் தடவை இல்ல...இரண்டு பேரும் அதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க...."என்று கூறி விட்டு சந்திரலேகா உள்ளே சென்று விட்டார்....

ஹரிணி மனதுக்குள்"பரவாயில்லையே!!!அத்தை!!நிறைய புரிந்து வைச்சிருக்காங்களே..."என்று நினைத்தாள்....


தொடரும்.....2540
 
Last edited:
Top