நான் தற்போது வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் என்னும் நகரத்தில் வசிக்கி்றேன். இங்கு உள்ள நூலகத்தில் எண்ணற்ற தமிழ் நாவல்கள் இருப்பது கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்து பல புத்தகங்களை எடுத்து படித்து வருகிறேன். மல்லிகா மணிவண்ணன், சரண்யா ஹேமா, சரயு, லதா பைஜூ, போன்று இந்த தளத்தில் எழுதும் பல எழுத்தாளர்களின் நாவல்களை மீண்டும் புத்தக வடிவில் கையில் வைத்து படிக்கும்போது என் உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. இன்ப அலோசியஸ், நிதனிபிரபு,ஹமீதா, ரமணிசந்திரன், ரோசி கஜன் போன்றவர்களின் நாவல்களும் கிடைக்கின்றது. உலகத்தின் ஒரு கோடியில் இருக்கும் இந்நகரத்தில் நம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் படிக்க கிடைப்பது ஒரு வரமல்லவா?