வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(28) F
“ சார்…. சார்…. எங்க ஓட பார்க்குறீங்க??... இருங்க சார்” என ஹர்ஷா கூற அங்கிருந்தவர்கள் அதிர்ந்து விஜயனை நோக்கினர்.
“ என்ன??... என்ன திரு இது??... என்னைய நிக்கவச்சு உன் வீட்டுல அசிங்கபடுத்து றாங்க நீயும் பார்த்துகிட்டு இருக்க. உன் பையனுக்காகத்தான் வந்தேன். ஆனா நீயே என்னன்னா……..” என விஜயன் பதட்டத்துடன் திருவாசகத்திடம் கூற,
திருவாசகம் ஒன்னும் புரியாது ருத்ரனை நோக்கினார்.
“ என்ன ருத்ரா???”
“ அப்பா நான் சொல்றேன் எல்லாம். ஆனா அதுக்கு முதல்ல ஹர்ஷாவா பேச விடுங்க. அப்புறம் அங்கிள். ஹ்ம்ம்….. இல்ல இல்ல நீங்க பண்ணுன வேலைக்கு நான் அப்பிடி கூப்டுறது ரொம்ப தப்பு” என முக சுளிப்புடன் கூறிய ருத்ரனை கண்டு கோபத்துடன்
“ ருத்ரா என்ன இது மரியாதை இல்லாம??... உனக்காகன்னு நான் வந்தா நீ என்னைய அசிங்கப்படுத்துற” என விஜயன் எகிற
“ பார்ரா!!.. அது சரி என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம். அப்போ நீங்கதான் என்னைய பார்க்கணும். அப்புறம் இன்னொரு விஷயம் இப்போ இங்க வர வச்சது என்னோட வேலை. எனக்கு கால் வலி எல்லாம் இல்ல உங்கள இப்போ இங்க வர வைக்க நானும் ஹர்சாவும் போட்ட பிளான் இது” என ருத்ரன் கூற
இன்னும் பதட்டமான விஜயன், “ என்ன என்னென்னமோ பேசுற நான் கிளம்புறேன் முதல்ல” விஜயன் மீண்டும் கிளம்ப பாக்க
“ சார் என்ன நீங்க போங்க. நான் உங்கள ரொம்ப புத்திசாலின்னு நினைச்சா இப்படி பம்முறீங்க. சரி விடுங்க உங்கள நாங்க வரவச்சா நீங்க என்னமோ கலயாணவீட்டுல மொய் எழுதிட்டேன் போய்ட்டுவாரேன் போய்ட்டுவாரேன்னு சொல்றமாதிரி கிளம்புறேன் கிளம்புறேன்னு சொல்றிங்க. அப்படியே விட்டுடுவோமா நாங்க??.....
அப்போ சட்டம் அதன் கடமையை எப்போதான் செய்றது. கொஞ்சம் இருங்க சார் ரொம்பதான்” என ஹர்ஷா பேசிக்கொண்டே அங்கிருந்த சோபாவில் விஜயனை சற்றே பலம்கொண்டு நகர்த்தி அமரவைத்து ருத்ரனிடம் கண் காட்ட ருத்ரனும் எழுந்து விஜயன் அருகில் அமர்ந்து எங்கும் நகர விடாது,
பின் சிம்மவர்மனை கண்டு “ சிம்மா நீ சாருக்கு இந்த பக்கம் உட்காரு ஓடுற போறாரு” என கூற சிம்மனும் மறுத்து எதுவும் கூறாது விஜயனின் மறுபக்கம் அமர்ந்தான்.
பின் ஹர்ஷா அங்கிருந்தவர்களை பார்த்துக்கொண்டே
“ இப்போ நான் ஒருத்தர கூப்புடுறேன் அவர் சொல்ற விஷயங்களை வச்சு மிச்சத்தை டாக்டர் விஜயன் சொல்வாரு சொல்லித்தான் ஆகணும்” என கூறி விஜயனின் கார் டிரைவர் மணியை அழைத்துவர,
அவனை கண்ட விஜனின் உடம்பில் நடுக்கம் ஏற்பட சிம்மவர்மன் திரும்பி விஜயனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு மணியின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.
“ ஹ்ம்ம் சொல்லு மணி ராஜேஷ் பத்தியும், அவனுக்கும் உங்க முதலாளி விஜயனுக்கு உள்ள பழக்கம் பத்தியும் என்கிட்டே சொன்னதை எல்லாம் சொல்லு” என ஹர்ஷா கூற ஏற்கனவே ஹர்ஷாவின் கவனிப்பில் போலீஸ் கவனிப்பிலும் பயந்திருந்தவன் மீண்டும் தனக்கு தெரிந்தவைகளை கூற ஆரம்பித்தான்.
“ சார் என் பேரு மணி. நான் டாக்டர் விஜயன் சார் வீட்டுல பத்து வருசமா கார் டிரைவரா இருக்கேன். என் பெரியப்பா பையன் ராஜேஷ் ஒரு ஏலெட்டு மாசத்துக்கு முன்னாடி வந்து அவன் மனைவிக்கு இதயத்துல பிரச்சனை ஆப்ரேசன் பண்ண பணம் கேட்டான். நான் விஜயன் சார் கிட்ட கேட்டேன் முதல்ல சார் தரமாட்டேன்னு சொல்லிட்டார்.
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு என்கிட்டே ராஜேஷ் பத்தி விசாரிக்க நானும் அவன் லாரி டிரைவர் அப்படின்னு அவணை பத்தி எல்லாம் சொன்னே. உடனே ராஜேஷை பார்க்கனுன்னு சொன்னாரு நானும் ஏற்பாடு பண்ணுனேன்.
அப்புறம் கொஞ்ச நாளுல விஜயன் சாரே ராஜேஷ் மனைவிக்கு இலவசமா அவரோட ஹாஸ்பிடல்ல ஆப்ரேசன் பண்ணுனாரு. அப்புறம் ராஜேஷ்கிட்ட கேட்டேன் எப்படி பணம் தரவே ஒத்துக்காதவாறு இலவசமா மருத்துவம் பார்த்தாருன்னு. அப்புறம் சில விஷயம் தெரிய வந்துச்சு சார்” என கூறி மணி நிறுத்த
“ என்ன நிறுத்திட்டு ஹ்ம் சொல்லு மணி” என ஹர்ஷா அவனின் தோள்மீது கை போட்டு அழுத்த
“ ஹ்ம்ம் அது…. அது… ராஜேஷ் அவனோட லாரியை வச்சு ருத்ரன் சார் வந்த காரை இடிக்க சொல்லிருக்காரு. அதுவும் விபத்து மாதிரி இருக்கனும்ன்னு. அதுல இவரோட பெயர் வெளிய வராம பார்த்துக்கணுமாம். அதுக்கு உபகாரமா ராஜேஷ் மனைவிக்கு இலவசமா ஆப்ரேசனும் அவனை வெளியே எடுக்க மறைமுக்கமான வேலையும் பார்த்துருக்காரு” என மணி கூறி முடிக்க அனைவரும் கோபத்துடன் விஜயனை முறைக்க
திருவாசகம் பாய்ந்து விஜயனின் சட்டை பிடித்து எழுப்பி ஒரு அரை வைத்தார்.
“ டேய்!!... என்ன இது எல்லாம்???... என் மகனை ஆள் வச்சு கொல்லபார்த்துட்டு அப்புறம் நீயே அவனை காப்பதுறமாதிரி நடிச்சுருக்க. சொல்லுடா எதுக்கு அவனை கொல்ல பார்த்த சொல்லுடா வாய துறந்து சொல்லு. இப்போ சொல்ல போறியா இல்லையா???.....” என மீண்டும் மீண்டும் கன்னத்தில் மாறி மாறி அடிக்க அதில் கோவத்தில் திருவாசகனின் கையை தட்டிவிட்ட விஜயன்
“ டேய் என்ன பிள்ளை பாசமோ!!!.... அப்பிடித்தானே எல்லாருக்கும் இருக்கும். உனக்காவது நாலு பிள்ளை ஆனா எனக்கு ஒரே ஒரு பொண்ணுடா. அவ அம்மா போன அப்புறம் என் உலகமே அவள்தான். அவன் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அவ நினைக்கும் போதே நடத்தி வச்சவண்டா நான்.
ஆனா… ஆனா… உன் பையன் ருத்ரன் மேல ஆசைப்பட்டது மட்டும் எனக்கு ரொம்ப நாளா தெரியாம போச்சு. ஒரு வேளை முன்னாடியே நான் கண்டுபிடிச்சுருந்தா இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது” என கூறி விஜயன் நிறுத்த அனைவரும் புரியாது நோக்கினர்.
“ என்ன எல்லாரும் அப்படி பார்க்குறீங்க??... என் மக ஷாலுவும் ருத்ரனும் ஒண்ணா படிச்சவங்க. சின்ன வயசு பிரெண்ட்ஸ். அதுல எப்போ இவனை காதலிக்க ஆரம்பிச்சான்னு எனக்கு தெரியல. ஆனா நாலு வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் அவ ரூம்குள்ள எதோ சத்தம் கேட்டுச்சுன்னு போனா என் ஷாலு ருத்ரன் போட்டோவை போட்டு உடைச்சுக்கிட்டு இருந்தா.
நான் என்னமான்னு கேட்டா அவள் ருத்ரன் வேணும் எனக்கு வேணும்ன்னு பைத்தியம் மாதிரி புலம்ப ஆரம்பிச்சா. அப்போ நான் அப்படியே துடிச்சு போய்ட்டேன். ஒரு தகப்பனாவும் ஒரு மருத்துவனாவும் என் மக நிலைமை என்னைய பயமுறுத்துச்சு.
அதனால திரு கிட்ட இதைப்பத்தி பேசலாம்ன்னு வந்தா அன்னைக்குதான் சொல்றான் நித்திக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் பேசிருக்குறதா. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல என் மகளை பத்தி.
கண்டிப்பா இந்த விஷயம் தெரிஞ்சுதான் இப்படி என் மக பைத்தியக்காரி மாதிரி புலம்புறா. எப்பிடி இதை சரி பன்றதுன்னு தெரியாம நித்திகிட்ட பேசி என் மகளை பத்தி சொல்லி ருத்ரனை விட்டுகுடுக்க சொல்லலாம்ன்னு நித்தியை பார்க்க அவளோட காலேஜ்க்கு போனேன்.
அப்போ யாரோ ஒரு பொண்ணுகிட்ட அநேகமா பிரெண்டுன்னு நினைக்குறேன் அவகிட்ட நித்தி அழுதுகிட்டே எனக்கு ருத்ரனை கட்டிக்க இஷ்டம் இல்ல நான் சிம்மா அத்தானைதான் விரும்புறேன் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கறதை கேட்டு அப்படியே வீட்டுக்கு போய்ட்டேன்.
அதை ஷாலுகிட்ட சொல்லி எப்படியாவது உனக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் செஞ்சுவைக்குறேனு சத்தியம் பண்ணி பேசி பேசி அவளை மீட்டேன். அப்புறம் ருத்ரனை எப்படியும் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்ன்னு ரொம்ப நம்பினேன்.
ஆனா இந்த சிந்தியா அவ அவ மட்டும் ருத்ரன் வாழ்க்கைல வந்துருக்கவே கூடாது. எப்போ ருத்ரனை ஷாலு விரும்புறான்னு தெரிஞ்சுச்சோ அப்போவே அவனை கண்காணிக்க ஆர்மபிச்சுட்டேன்.
ஏன்னா வேற எந்த பொண்ணும் ருத்ரன் வாழ்க்கைல வந்துரக்கூடாதுன்னு என் மகளோட வாழ்க்கைல நான் ரிஸ்க் எடுக்க விரும்பம் இல்ல. ஆனா இந்த சிந்தியா ருத்ரனோட
“ சார்…. சார்…. எங்க ஓட பார்க்குறீங்க??... இருங்க சார்” என ஹர்ஷா கூற அங்கிருந்தவர்கள் அதிர்ந்து விஜயனை நோக்கினர்.
“ என்ன??... என்ன திரு இது??... என்னைய நிக்கவச்சு உன் வீட்டுல அசிங்கபடுத்து றாங்க நீயும் பார்த்துகிட்டு இருக்க. உன் பையனுக்காகத்தான் வந்தேன். ஆனா நீயே என்னன்னா……..” என விஜயன் பதட்டத்துடன் திருவாசகத்திடம் கூற,
திருவாசகம் ஒன்னும் புரியாது ருத்ரனை நோக்கினார்.
“ என்ன ருத்ரா???”
“ அப்பா நான் சொல்றேன் எல்லாம். ஆனா அதுக்கு முதல்ல ஹர்ஷாவா பேச விடுங்க. அப்புறம் அங்கிள். ஹ்ம்ம்….. இல்ல இல்ல நீங்க பண்ணுன வேலைக்கு நான் அப்பிடி கூப்டுறது ரொம்ப தப்பு” என முக சுளிப்புடன் கூறிய ருத்ரனை கண்டு கோபத்துடன்
“ ருத்ரா என்ன இது மரியாதை இல்லாம??... உனக்காகன்னு நான் வந்தா நீ என்னைய அசிங்கப்படுத்துற” என விஜயன் எகிற
“ பார்ரா!!.. அது சரி என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம். அப்போ நீங்கதான் என்னைய பார்க்கணும். அப்புறம் இன்னொரு விஷயம் இப்போ இங்க வர வச்சது என்னோட வேலை. எனக்கு கால் வலி எல்லாம் இல்ல உங்கள இப்போ இங்க வர வைக்க நானும் ஹர்சாவும் போட்ட பிளான் இது” என ருத்ரன் கூற
இன்னும் பதட்டமான விஜயன், “ என்ன என்னென்னமோ பேசுற நான் கிளம்புறேன் முதல்ல” விஜயன் மீண்டும் கிளம்ப பாக்க
“ சார் என்ன நீங்க போங்க. நான் உங்கள ரொம்ப புத்திசாலின்னு நினைச்சா இப்படி பம்முறீங்க. சரி விடுங்க உங்கள நாங்க வரவச்சா நீங்க என்னமோ கலயாணவீட்டுல மொய் எழுதிட்டேன் போய்ட்டுவாரேன் போய்ட்டுவாரேன்னு சொல்றமாதிரி கிளம்புறேன் கிளம்புறேன்னு சொல்றிங்க. அப்படியே விட்டுடுவோமா நாங்க??.....
அப்போ சட்டம் அதன் கடமையை எப்போதான் செய்றது. கொஞ்சம் இருங்க சார் ரொம்பதான்” என ஹர்ஷா பேசிக்கொண்டே அங்கிருந்த சோபாவில் விஜயனை சற்றே பலம்கொண்டு நகர்த்தி அமரவைத்து ருத்ரனிடம் கண் காட்ட ருத்ரனும் எழுந்து விஜயன் அருகில் அமர்ந்து எங்கும் நகர விடாது,
பின் சிம்மவர்மனை கண்டு “ சிம்மா நீ சாருக்கு இந்த பக்கம் உட்காரு ஓடுற போறாரு” என கூற சிம்மனும் மறுத்து எதுவும் கூறாது விஜயனின் மறுபக்கம் அமர்ந்தான்.
பின் ஹர்ஷா அங்கிருந்தவர்களை பார்த்துக்கொண்டே
“ இப்போ நான் ஒருத்தர கூப்புடுறேன் அவர் சொல்ற விஷயங்களை வச்சு மிச்சத்தை டாக்டர் விஜயன் சொல்வாரு சொல்லித்தான் ஆகணும்” என கூறி விஜயனின் கார் டிரைவர் மணியை அழைத்துவர,
அவனை கண்ட விஜனின் உடம்பில் நடுக்கம் ஏற்பட சிம்மவர்மன் திரும்பி விஜயனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு மணியின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.
“ ஹ்ம்ம் சொல்லு மணி ராஜேஷ் பத்தியும், அவனுக்கும் உங்க முதலாளி விஜயனுக்கு உள்ள பழக்கம் பத்தியும் என்கிட்டே சொன்னதை எல்லாம் சொல்லு” என ஹர்ஷா கூற ஏற்கனவே ஹர்ஷாவின் கவனிப்பில் போலீஸ் கவனிப்பிலும் பயந்திருந்தவன் மீண்டும் தனக்கு தெரிந்தவைகளை கூற ஆரம்பித்தான்.
“ சார் என் பேரு மணி. நான் டாக்டர் விஜயன் சார் வீட்டுல பத்து வருசமா கார் டிரைவரா இருக்கேன். என் பெரியப்பா பையன் ராஜேஷ் ஒரு ஏலெட்டு மாசத்துக்கு முன்னாடி வந்து அவன் மனைவிக்கு இதயத்துல பிரச்சனை ஆப்ரேசன் பண்ண பணம் கேட்டான். நான் விஜயன் சார் கிட்ட கேட்டேன் முதல்ல சார் தரமாட்டேன்னு சொல்லிட்டார்.
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு என்கிட்டே ராஜேஷ் பத்தி விசாரிக்க நானும் அவன் லாரி டிரைவர் அப்படின்னு அவணை பத்தி எல்லாம் சொன்னே. உடனே ராஜேஷை பார்க்கனுன்னு சொன்னாரு நானும் ஏற்பாடு பண்ணுனேன்.
அப்புறம் கொஞ்ச நாளுல விஜயன் சாரே ராஜேஷ் மனைவிக்கு இலவசமா அவரோட ஹாஸ்பிடல்ல ஆப்ரேசன் பண்ணுனாரு. அப்புறம் ராஜேஷ்கிட்ட கேட்டேன் எப்படி பணம் தரவே ஒத்துக்காதவாறு இலவசமா மருத்துவம் பார்த்தாருன்னு. அப்புறம் சில விஷயம் தெரிய வந்துச்சு சார்” என கூறி மணி நிறுத்த
“ என்ன நிறுத்திட்டு ஹ்ம் சொல்லு மணி” என ஹர்ஷா அவனின் தோள்மீது கை போட்டு அழுத்த
“ ஹ்ம்ம் அது…. அது… ராஜேஷ் அவனோட லாரியை வச்சு ருத்ரன் சார் வந்த காரை இடிக்க சொல்லிருக்காரு. அதுவும் விபத்து மாதிரி இருக்கனும்ன்னு. அதுல இவரோட பெயர் வெளிய வராம பார்த்துக்கணுமாம். அதுக்கு உபகாரமா ராஜேஷ் மனைவிக்கு இலவசமா ஆப்ரேசனும் அவனை வெளியே எடுக்க மறைமுக்கமான வேலையும் பார்த்துருக்காரு” என மணி கூறி முடிக்க அனைவரும் கோபத்துடன் விஜயனை முறைக்க
திருவாசகம் பாய்ந்து விஜயனின் சட்டை பிடித்து எழுப்பி ஒரு அரை வைத்தார்.
“ டேய்!!... என்ன இது எல்லாம்???... என் மகனை ஆள் வச்சு கொல்லபார்த்துட்டு அப்புறம் நீயே அவனை காப்பதுறமாதிரி நடிச்சுருக்க. சொல்லுடா எதுக்கு அவனை கொல்ல பார்த்த சொல்லுடா வாய துறந்து சொல்லு. இப்போ சொல்ல போறியா இல்லையா???.....” என மீண்டும் மீண்டும் கன்னத்தில் மாறி மாறி அடிக்க அதில் கோவத்தில் திருவாசகனின் கையை தட்டிவிட்ட விஜயன்
“ டேய் என்ன பிள்ளை பாசமோ!!!.... அப்பிடித்தானே எல்லாருக்கும் இருக்கும். உனக்காவது நாலு பிள்ளை ஆனா எனக்கு ஒரே ஒரு பொண்ணுடா. அவ அம்மா போன அப்புறம் என் உலகமே அவள்தான். அவன் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அவ நினைக்கும் போதே நடத்தி வச்சவண்டா நான்.
ஆனா… ஆனா… உன் பையன் ருத்ரன் மேல ஆசைப்பட்டது மட்டும் எனக்கு ரொம்ப நாளா தெரியாம போச்சு. ஒரு வேளை முன்னாடியே நான் கண்டுபிடிச்சுருந்தா இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது” என கூறி விஜயன் நிறுத்த அனைவரும் புரியாது நோக்கினர்.
“ என்ன எல்லாரும் அப்படி பார்க்குறீங்க??... என் மக ஷாலுவும் ருத்ரனும் ஒண்ணா படிச்சவங்க. சின்ன வயசு பிரெண்ட்ஸ். அதுல எப்போ இவனை காதலிக்க ஆரம்பிச்சான்னு எனக்கு தெரியல. ஆனா நாலு வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் அவ ரூம்குள்ள எதோ சத்தம் கேட்டுச்சுன்னு போனா என் ஷாலு ருத்ரன் போட்டோவை போட்டு உடைச்சுக்கிட்டு இருந்தா.
நான் என்னமான்னு கேட்டா அவள் ருத்ரன் வேணும் எனக்கு வேணும்ன்னு பைத்தியம் மாதிரி புலம்ப ஆரம்பிச்சா. அப்போ நான் அப்படியே துடிச்சு போய்ட்டேன். ஒரு தகப்பனாவும் ஒரு மருத்துவனாவும் என் மக நிலைமை என்னைய பயமுறுத்துச்சு.
அதனால திரு கிட்ட இதைப்பத்தி பேசலாம்ன்னு வந்தா அன்னைக்குதான் சொல்றான் நித்திக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் பேசிருக்குறதா. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல என் மகளை பத்தி.
கண்டிப்பா இந்த விஷயம் தெரிஞ்சுதான் இப்படி என் மக பைத்தியக்காரி மாதிரி புலம்புறா. எப்பிடி இதை சரி பன்றதுன்னு தெரியாம நித்திகிட்ட பேசி என் மகளை பத்தி சொல்லி ருத்ரனை விட்டுகுடுக்க சொல்லலாம்ன்னு நித்தியை பார்க்க அவளோட காலேஜ்க்கு போனேன்.
அப்போ யாரோ ஒரு பொண்ணுகிட்ட அநேகமா பிரெண்டுன்னு நினைக்குறேன் அவகிட்ட நித்தி அழுதுகிட்டே எனக்கு ருத்ரனை கட்டிக்க இஷ்டம் இல்ல நான் சிம்மா அத்தானைதான் விரும்புறேன் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கறதை கேட்டு அப்படியே வீட்டுக்கு போய்ட்டேன்.
அதை ஷாலுகிட்ட சொல்லி எப்படியாவது உனக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் செஞ்சுவைக்குறேனு சத்தியம் பண்ணி பேசி பேசி அவளை மீட்டேன். அப்புறம் ருத்ரனை எப்படியும் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்ன்னு ரொம்ப நம்பினேன்.
ஆனா இந்த சிந்தியா அவ அவ மட்டும் ருத்ரன் வாழ்க்கைல வந்துருக்கவே கூடாது. எப்போ ருத்ரனை ஷாலு விரும்புறான்னு தெரிஞ்சுச்சோ அப்போவே அவனை கண்காணிக்க ஆர்மபிச்சுட்டேன்.
ஏன்னா வேற எந்த பொண்ணும் ருத்ரன் வாழ்க்கைல வந்துரக்கூடாதுன்னு என் மகளோட வாழ்க்கைல நான் ரிஸ்க் எடுக்க விரும்பம் இல்ல. ஆனா இந்த சிந்தியா ருத்ரனோட