Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Announcement - Regarding Results

Advertisement

Admin

Admin
Member
டியர் ஃபிரண்ட்ஸ், நாம் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம். ஆம்! முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நம் தை திருநாளாம் பொங்கல் அன்று மாலை நான்கு மணி அளவில் ZOOM APP மூலமாக நாம் எல்லோரும் சந்தித்து கொள்ளலாம். அந்த நிகழ்வில் எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் ஐயா அவர்கள் முடிவுகளை அறிவிக்க உள்ளார். வெறுமனே ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் இடங்கள் என்று சொல்லப் போவதில்லை. பத்து கதைகளிலும் உள்ள நிறை குறைகளை மட்டுமன்றி இன்னும் எப்படி எழுத்தாளர்கள் எழுத்துக்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லப் போகிறார். முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளை ஏன் வந்தது என்ற காரண காரியமும் சொல்லப் போகிறார்.

அது மட்டுமன்றி பொதுவிலும் எப்படி கதை எழுவது என்பது குறித்த சில ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

உங்களை போல நானும் ஆவலாக இருக்கிறேன் யார் வருவார்கள் என்று. அன்று தான் சொல்ல இருக்கிறார். இந்த கதை போட்டியில் பங்கு கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது மற்றும் வாசகர்களின் நன்றிகள். எங்களுக்கு சிறந்த படைப்புகளை கொடுத்து எங்களின் பொழுதுகளை உபயோகமுள்ளாதாக மாற்றியதற்கு.

எங்களுக்கு உங்களின் official name வேண்டும். தங்களது வங்கி கணக்கில் இருக்கும் பெயர் விபரங்கள் வேண்டும் பங்கேற்ப்பு பரிசு செக் அனுப்புவதற்காக. அதுமட்டுமன்றி தங்களின் முகவரியும். காசோலை அனுப்புவதற்காக. என்னை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு மேற்கூறிய இரண்டு விபரங்களையும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த போட்டி லாப நோக்குடன் நடத்தப்பட்ட ஒரு போட்டி அல்ல. நான் இந்த எழுத்து துறையில் ஆன்லைன் மூலம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில், எழுத்தாளர்களுக்கு ஒரு ஊக்கமும் உற்சாகமும், வாசகர்களுக்கு ஒரு வாசக விருந்து கொடுக்கவும் நடத்தப்பட்ட ஒன்று.

இந்த போட்டி எந்த பாரபட்சமுமின்றி வேண்டியவர் வேண்டாதவர் இப்படி எதுவுமன்றி வாசகர் தேர்வு கொண்டு நான்கு கட்ட வாக்குகள், பின் இப்போது ஒரு நிலை தவறாத நடுவர் கொண்டு முடிவுகள்.

போட்டியின் முடிவு நடுவரை கொண்டு எனும் போது சிறப்பான ஒருவர் நமக்கு கிடைக்க வேண்டும் என்று கவலையுடன் இருந்த நாட்கள் அனைத்தையும் சகோ வெற்றி வேல் மூலம் அறிமுகம் கிடைத்த ஐயா இந்திரா சௌந்தராஜன் ஒப்புக் கொண்டு, நமது இந்த போட்டி முழு வெற்றியடைய உறுதுணையாக நிற்கிறார்.

இந்த மீட்டிங் லிங்க் நான் ஒரு வாரம் முன்பிருந்தே பகிர தொடங்கி விடுவேன். எழுத்தாளர்கள் வாசகர்கள் என்று அனைவரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள் மட்டுமல்ல, ஏனையோரும் எழுதுவதில் தங்களை மேம்படுத்திக் கொள்ள இந்த ZOOM சந்திப்பு மிக மிக உறுதுணையாக இருக்கும்.

எல்லாம் விட இது நமக்கான சந்திப்பு. நாம் எல்லோரும் சந்திக்கலாம் கணினி மூலமாகவோ அல்லது கைபேசி மூலமாக. நேரில் ஒரு நிகழ்ச்சி நடத்த நானும் சசி முரளியும் நினைத்திருந்த போது, இந்த கொரோனா காலங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இன்று இதில் சந்திப்போம்.

இந்த கடினமான கொரோனா காலங்கள் கடந்த பிறகு நாம் எல்லோரும் நேரிலும் சந்திக்கலாம் தோழமைகளே. சக எழுத்தாளர்கள் வாசகர்கள் எல்லோரும் ஆவலுடன் கேட்கும் விஷயம் இது. நேரம் ஒத்துழைக்க காத்திருக்கிறோம்.

உங்களை எல்லோரையும் இப்போதைக்கு இந்த ZOOM link மூலம் சந்திப்பதில் மிக மிக ஆவலுடன் உள்ளோம். பொங்கல் பண்டிகை அன்று மாலை நான்கு மணிக்கு... கனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing contest

கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A NOVEL WRITING CONTEST முடிவுகள்... உங்களின் பார்வைக்கு... உங்களின் பங்கேற்பிற்கு...

SM Tamil Novels (smtamilnovels) Tamil Novels (tamilnovelwriters) மற்றும் Tamil Novels And Stories ( mallikamanivanan.com )தங்களின் எழுத்தாளர்கள் வாசகர்கள் அனைவரின் சார்பாக உங்களை அன்புடன் வரவேற்கிறது. இது போட்டிக்காக மட்டுமல்ல நாம் கலந்துரையாடி கொண்டாடவும் ஒரு சந்தர்ப்பம்.
 
Last edited:
:love::love::love: சூப்பர் சூப்பர்.......
? ஜூம் ல வர்றோம்......

பரிசு அனுப்ப நாங்களும் அனுப்பனுமா ஆஃபிஸில் நேம் :p :p :p
 
Last edited:
???

ஐயோ! அன்னைக்கு ஆஃபீஸ் இருக்கே....?? எல்லாரையும் மீட் பண்ண லீவ் போட்டுற வேண்டியது தான்....??
 
Last edited:
Top