Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Wow romba arumayana novel. Intha novel loda special drama pani il illamal mikavum uyir podu irunthathu than. I love katumaram and thakkaki.all characters nice. Rishi nethra parthu irukirathu ellam appadiye orignala ,vasikum pothu semma feeling aa irunthathu dear semmaya write pannurika. So cute.
 
Su


மொபைலில் பேசினாலோ முகாரி பாடுபவளை சமாதானம் செய்யவே அவனுக்கு பெருத்த அவஸ்தையாக இருந்தது. அவளில்லாத அவர்களின் அறையின் வெறுமை அவனை பரிகாசமாய் பார்க்க உள்ளுக்குள் வெறுத்தே போனான்.


காதலித்து மணந்தும் தன்னிலை இப்படியா ஆகவேண்டும்? என உள்ளுக்குள் வெதும்பினாலும் அவளின் எதிர்காலத்தை முன்னிட்டு தன் உணர்வுகளை கட்டிவைத்தான்.


மேலும் ஒருவாரம் கடக்க மறுநாள் சென்னை கிளம்பியே ஆகவேண்டும் என்ற முடிவோடு வீட்டிற்கு வந்தவன் வாசலில் ஏகப்பட்ட கார்கள் இருப்பதை பார்த்ததும் துணுக்குற்றான்.


கேட்டிற்கு வெளியே தன் காரை நிறுத்தி வேகமாக வீட்டிற்குள் ஓட மொத்த குடும்பமும் கும்பலாக அங்கே சூழ்ந்து நிற்பதை பார்த்ததும் அவனின் இதயம் அளவிற்கதிகமாய் வேகமாக துடித்தது.


யாருக்கு என்னவோ என்ற பயம் நெஞ்சை கவ்வ அவர்களுக்குள் தன்னை வேகமாக நுழைத்தவன் கண்ட காட்சியில் விழியே தெறித்தது.


நடுநாயகமாக நேத்ரா அமர்ந்திருக்க அவளுக்கு மாறி மாறி உபசாரம் நடந்துகொண்டிருந்தது. ஒன்றும் புரியாமல் திருதிருத்தான். அவனை கண்டுவிட்ட நேத்ராவின் முகம் மகிழ்ச்சியில் மின்ன,


“ஹை கட்டுமரம்...” என்றாள் சுமங்கலியின் புறம் சாய்ந்து.


அவனை அப்போதுதான் பார்ப்பதை போல அனைவரும் கட்டியணைத்து வாழ்த்திவிட்டு செல்ல ஓரளவிற்கு அவனாலும் யூகிக்க முடிந்தது. கண்கள் கலங்க அவளையே பார்த்திருந்தான்.


அனைவரும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலக சிவராமனோ,


“ரிஷி நீ நேத்ராவை உன் ரூம்க்கு அழைச்சிட்டு போப்பா...” பின்னே எல்லோரின் முன்பும் அவர்கள் சண்டை போட்டால் யார் சமாதானம் செய்ய என்ற பயம் தான்.


அவனையே அவள் பார்த்திருக்க ஒன்றும் பேச தோன்றாமல் அவன் தன்னறைக்கு சென்றுவிட்டான்.


“ப்ரெண்ட், எதாச்சும் டிப்ஸ் குடுங்க. மிஸ்டர் கட்டுமரம் ஓவர் ஆங்ரி...” சுமங்கலியின் காதை கடிக்க,


“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ போய் பேசு. சரியாகிடுவான்...” என அவளை அனுப்பிவிட்டு வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தார்.


மெல்ல மேலே அறைக்குள் வந்தவள் ரிஷியின் நிலையை பார்த்து அப்படியே சமைந்துதான் நின்றாள்.


கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தவன் விழி மூடியிருக்க அங்கே ஈரம் கசிந்திருந்தது. இப்படி ஒரு தோற்றம் அவள் பார்த்திராதது. பரிதவித்து போனாள் பெண்ணவள்.


அவனருகே நெருங்கி அமர்ந்தவள், “சாரி ரிஷி. எங்க என்னை வரவேண்டாம்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்து தான் தாத்தாக்கிட்ட இப்படின்னு விஷயம் சொன்னேன். இன்னும் வீட்ல கூட யாருக்கும் தெரியாது...”


உண்மையான கவலையோடு பேசியவளை விழி திறவாமலே தன் மீது சரித்துக்கொண்டான். அவனின் நெஞ்சத்தில் சாய்ந்தவள்,


“என்னை திரும்ப சென்னைக்கே அனுப்பிடுவீங்களா? மாட்டீங்க தானே? ப்ளீஸ். என்னால உங்களை விட்டு இருக்க முடியலை மிஸ்டர் கட்டுமரம்...” என்றவள் முதுகு அழுகையில் குலுங்க,


“இப்பவும் சொல்றேன், என்னோட கண்ணீர் எல்லாமே உங்களுக்கா தான். நீங்க தான் நீங்க மட்டும் தான் என்னை அழ வைக்கிறீங்க...” சொல்லி மேலும் அழ அவள் புறம் திரும்பியவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து,


“ஒரு பைவ் மினிட்ஸ்டா. சைலண்டா இரு. எனக்கு இந்த நிமிஷத்தை, உன்னோட அருகாமையை, உன் வாசத்தை, உன் தீண்டலை நான் பரிபூரணமா அனுபவிக்கனும். நீ இல்லாமல் இங்க நான் ஒவ்வொரு நிமிஷமும் சிதைஞ்சி போய்ட்டு இருந்தேன் நேத்ரா. இனி உன்னை விட்டு ஒரு நிமிஷமும் நான் இருக்க மாட்டேன்...” சிறு விசும்பலோடு கூறி,


“உன்னை ரொம்பவே மிஸ் பண்ணினேண்டி தக்காளி. இனி உன்னை என்னை விட்டு எங்கயுமே அனுப்பவே மாட்டேன். மாட்டேன். அதுவும் இந்த நிலைல. என்னோட சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியலை. அந்தளவுக்கு நான் ஹேப்பியா இருக்கேன்...”


அவளுள்ளே புதைந்துவிடுபவன் போல அவளை இறுக்கிக்கொள்ள அதில் திணறியவள்,


“ஹைய்யோ விடுங்க கட்டுமரம். உள்ள நம்ம பேபி ரொம்ப திட்டுது. ஏன் இப்படி போட்டு படுத்தறேங்கன்னு...” என்றதும் அவளை விட்டு கொஞ்சமே விலகியவன்,


“இனி முரட்டுத்தனமா நடக்கமாட்டேன். ஆனா இப்படி நடந்துக்கவே மாட்டேன்னு சொல்ல மாட்டேன்....” என புன்னகைக்க,


“அதானே பார்த்தேன்?...” நேத்ரா சொல்ல,


“பேபி என்னை போலவா? உன்னை போலவா? எதாச்சும் கெஸ்ஸிங் இருக்கா தக்காளி...” மீண்டும் அவளை தன் மேல் சரித்து கேட்க,


“உங்களமாதிரி இருந்தாலும், இல்லை என்னை போல இருந்தாலும் அதுவும் இல்லாம நம்ம ரெண்டு பேரை போலவும் இருந்தாலும் ஊர் தாங்காது மிஸ்டர் கட்டுமரம்...” என சொல்லி சிரிக்க அவளோடு தானும் இணைந்துகொண்டான்.


------------------------------------------------------------------


பத்து வருடங்கள் கழித்து....


ஆர் ஜே கல்லூரி.


“ஸ்டூடன்ஸ் இந்த சம் கொஞ்சம் டிபிகல்ட் தான். ஆனாலும் கொஞ்சம் ஈஸி மெத்தட்ல சொல்லித்தர ட்ரை பண்ணியிருக்கேன். புரியலைனா உடனே சொல்லிடுங்க...”


கண்களை உறுத்தாத நிறத்தில் அழகான உயர்ரக காட்டன் சேலையில் ஆசிரியருக்கே உரித்தான கணீர் குரலில் கம்பீரம் கலந்து மாணவர்களுக்கு புரியும் வகையில் கணக்கை சொல்லிகொடுத்துக்கொண்டிருந்தாள் நேத்ரா.


அதற்கான விளக்கங்களை மிக நேர்த்தியாக சொல்லிகொண்டிருந்தவள் கடைசி வரிசையில் வகுப்பில் கவனம் செலுத்தாத பெண்களை பார்த்து ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி அவர்களையே கூர்மையாக பார்த்தாள்.


திடீர் நிசப்தம், அம்மாணவிகளும் இவளின் பார்வை வீச்சில் கவனம் நேத்ராவின் புறம் திரும்ப எழுந்து நின்றனர்.


“ஸாரி மேம்...” அவர்களாகவே மன்னிப்பையும் கேட்க,


“பேச்சு முக்கியம் தான். லைப் ஃபுல்லா பேசிட்டு இருக்க போறோம் தான். ஆனா பாடமும் படிப்பும் அதை விட முக்கியம். இதெல்லாம் சகஜம் தான் கேர்ள்ஸ். நானும் இதை தாண்டி வந்தவ தான். ஆனாலும் என்னோட படிப்பில் நான் கவனத்தை சிதறவிடலை. ஸிட்டவுன்...”


மீண்டும் பாடத்தில் கவனத்தை திருப்பியவள் வகுப்பு நேரம் முடிந்த பெல் சத்தத்தில்,


“ஓகே ஸ்டூடன்ஸ். பை....” என்றபடி தன்னுடைய புக்கை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டாள் நேத்ரா.


தன்னுடைய அறை வாசலில் லெக்சர் ரஞ்சனி, அவரோடு இன்னும் இரண்டு லெக்சரர்ஸ் நின்றிருக்க பார்வையாலே என்னவென கேட்டாள்.


“மேம் கல்சுரல்ஸ் பத்தி கரெஸ்பாண்டென்ட் ஸார் உங்ககிட்ட பேச சொல்லியிருந்தார். அதான் வெய்ட் பன்றோம்...” எனவும் பிரின்ஸிபல் நேத்ரா என்று அடையாளமிட்டிருந்த தன்னுடைய அறையை திறந்துகொண்டு உள்ளே சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள்.


அவர்களையும் அமரும் படி கை காட்டியவள் அதுவரை பாடமெடுத்ததில் காய்ந்திருந்த தொண்டைக்கு இதமாக பாட்டிலில் அடைத்து சுமங்கலியால் அனுப்பப்பட்டிருந்த இளநீரை எடுத்து சரித்துக்கொண்டாள்.


“ஹ்ம் சொல்லுங்க...” என அவர்களை ஆரம்பிக்க சொல்லி அடுத்த இரண்டு மணிநேரமும் அந்த விவாதத்திலேயே சென்றது.


அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒருவழியாக கல்சுரல்ஸ் பத்தின அட்டவணை சரியாக தயாராக அப்போதுதான் மற்ற மூவரும் நிம்மதியாகினர். இல்லைஎன்றால் சரியாக திருப்தியாக வரும் வரை நேத்ரா தங்களை விடப்போவதில்லை என்பது அவர்களின் திண்ணம்.


மூவரும் நன்றி சொல்லி வெளியேற கடைசியாக சென்ற ரஞ்சனி நேத்ராவை திரும்பி பார்த்தாள்.


பத்து வருடங்களுக்கு முன் இருந்த நேத்ராவிற்கும் இப்போதிருக்கும் நேத்ராவிற்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசம். அவளை இந்த காலேஜை விட்டு விரட்ட தான் முயன்ற அனைத்து சின்னத்தனமான செயல்களும் ஞாபகம் வர இப்போது நினைக்கவே அசிங்கமாக இருந்தது.


ஆனால் நேத்ராவிற்கோ அது சிரிப்பாக இருந்தது. ரஞ்சனியின் பார்வையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் என்னவென புருவம் உயர்த்த,


“நத்திங் மேம்...”அவசரமாக சொல்லி வெளியேறிவிட்டாள்.


அதில் நேத்ரா வாய்விட்டு சிரிக்க சரியாக ரிஷியும் உள்ளே நுழைந்தான்.


“என்ன பிரின்ஸிபல் மேம். சிரிப்பு வெளிய வரை கேட்குது...” என்றபடி வர அவனிடம் ஒன்றுமில்லை என்று புன்னகைத்தாள்.


“உனக்கு ஏண்டா இந்த வேலை. பேசாம இந்த காலேஜை நீயே நடத்தேன். நான் அப்பாவுக்கு ஹெல்ப் பன்றேன். இல்லைனா பிரின்ஸிபால் போஸ்டிங் மட்டும் பாரு. எதுக்கு க்ளாஸ் எடுத்திட்டு உன்னை நீயே ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற?...”


“ஸி மிஸ்டர் கட்டுமரம். உடனடியா பெரிய பதவிக்கு வந்துட்டா அதுக்கான வேல்வ்யூ, கஷ்டம் என்னனு எனக்கு தெரியாமலே போய்டும். அதுக்கான வயசும் அனுபவமும் எனக்கில்லை. நீங்களும் அத்தை மாமாவும் சொன்னதால தான் இந்த போஸ்டிங் கூட. இல்லைனா எனக்கு பிடிச்ச டீச்சிங்ல நான் இருந்திருப்பேன். எனக்கு பாடம் எடுக்க பிடிச்சிருக்கு ரிஷி...”


லட்சமாவது முறையாக இதை ரிஷியிடமும் தன் குடும்பத்திடமும் சொல்லிவிட்டாள். ஆனாலும் அவர்களுக்கு இது ஒரு குறையாகவே இருந்து வருகிறது.


“என்னைக்கு என் பேச்சு உன்கிட்ட எடுபட்டிருக்கு? ஓகே கிளம்புவோம். நாளைக்கு லீவ். எங்கையாவது போக ப்ளான் பண்ணுவோம்...” என,


“என்ன ப்ளான் பண்ண? வழக்கம் போல தாத்தா வீடு தான். அதுல மட்டும் நோ சேஞ்ச் மிஸ்டர் கட்டுமரம்...” கட் அன்ட் ரைட்டாக கூறினாலும் அவள் விழிகளில் குறும்பு பூக்கள்.


அவளை அறிந்தவனால் சிணுங்கியபடி தரையில் காலை உதைக்க மட்டுமே முடிந்தது.


“பிடிவாதம் பிடிவாதம்...” முணுமுணுத்துக்கொண்டே அவளோடு சென்றான்.


இரண்டு மாதங்களுக்கு பின் நடைபெற இருக்கும் கல்சுரல் ப்ரோக்ராம் பற்றி பேசிய கருத்துக்களை ரிஷியிடம் பகிர்ந்தவாறே நேத்ரா வீட்டினுள் வர அமைதியாக இருந்தது.


சிவராமனையும் சுமங்கலியையும் காணாது தேடியவர்கள் பின்புறம் ஏதோ சத்தம் கேட்க அங்கே விரைந்தனர்.


இருவரின் வருகையை அறிந்ததை போல திடுதிப்பென்று அவர்களின் முன்னால் குதித்தான் அவர்களின் செல்ல புதல்வன் அபினவ்.


“ஹே அம்மாவும், அப்பாவும் வந்தாச்சு. ஆத்தா, ஐயா. வாங்க...” என்றபடி வீட்டின் பின்னால் இருந்த கெஸ்ட்ஹவுஸ் நோக்கி ஓடினான்.


ரிஷிக்குத்தான் பற்றிக்கொண்டு வந்தது மகனின் விளிப்பில். அவனின் எண்ணமறிந்தவள் வாய் பொத்தி சிரிக்க அவளை முறைத்தான்.


“நாளைக்கு மீசைக்கு இருக்கு வேடிக்கை...” என்றுவிட்டு,


“அவரை சொல்லி என்ன செய்ய? அவரோட சப்ஸ்டிட்யூட் நீ இருக்கும் போது? வா அங்க எதோ கிளீன் பண்ணிட்டு இருக்காங்க. நாம போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வருவோம்...” சொன்னதை போல விரைவில் அவர்களுடன் வந்து இணைந்துகொண்டான்.


“என்ன ப்ரெண்ட் நீங்க? நாங்க வந்ததும் இதையெல்லாம் பண்ணவேண்டியது தானே? நானும் ஹெல்ப் பண்ணியிருப்பேன்ல...” என நேத்ரா சுமங்கலியை கடிந்துகொண்டாள்.


இந்த சின்ன வீட்டில் இருப்பதனைத்தும் அவர்களின் மாமியார் நாயகியம்மாளும், சுமங்கலியின் வீட்டினரும் அவருக்கு கொடுத்த சீதனம். இப்போது நேத்ராவினதும் சில அங்கே. அதை வருடம் இரண்டுமுறை தாங்களே சுத்தம் செய்வது வழக்கம்.


ரிஷியின் திருமணத்தின் முன்பு திலகா வந்துவிடுவார் சுமங்கலியின் துணைக்கு. வேலையாட்களிடம் இதை கொடுக்காமல் தங்களின் கையாலே சுத்தம் செய்வதுதான் அவர்கள் வழக்கம்.


“நாங்களே இப்போதான் ஆரம்பிச்சோம் நேத்தும்மா. எனக்கு தெரியுமே இன்னைக்கு நீங்க மூணு மணிக்கெல்லாம் வந்துடுவீங்கன்னு. சாப்டீங்க தானே?...” என்றபடி பேச்சு பேச்சாக இருந்தாலும் கை அதன்பாட்டிற்கு வேலையில் இருந்தது.


அவர்களை வேலை செய்யவிடாமல் அபினவ் தன் பங்கிற்கு சேட்டையில் கலக்க, “ஏன்டா அபி. ஓரமா அங்க போய் உட்காரேன். ஊடால வந்து என்னை தொந்தரவு பண்ணாதே...” என சிவராமன் கூற,


“நீங்க வேலை செய்யறீங்களா இல்லையான்னு நான் இங்க உட்கார்ந்து பார்த்தாதான் தெரியும். அங்க போனா எப்படி தெரியுமாம்? என்னை ஏன் பார்க்கறீங்க? உங்க வேலையை நீங்க பாருங்க...” என,


“அப்படியே அப்பனை கொண்டு பிறந்திருக்குது. என்ன சொன்னாலும் கேட்கிறதே இல்லை...” சிவராமன் கத்திக்கொண்டிருந்தார்.


அவரை ஒருவித நமுட்டுச்சிரிப்போடு பார்த்தவன் மெல்ல நகர்ந்து உள்ளே நேத்ராவோடு இணைந்துகொண்டான்.


அங்கிருந்த பொருட்களை துடைத்துக்கொண்டிருந்தவளை இடையோடு அணைத்தவன் அவனும் வேலை செய்யாமல் அவளையும் பார்க்கவிடாமல் படுத்திவைத்தான்.


அவனை விலக்கியவள், “அங்கே உங்க பையன், இங்க நீங்களா? ஒழுங்கா போங்க. போய் வேலையை பாருங்க...” என மிரட்ட சிரிப்போடு இன்னும் நெருங்கினான்.


“தக்காளி நான் மட்டும் அன்னைக்கு திருச்சி வராம இருந்தா என்ன ஆகியிருக்கும்?...” நேத்ராவின் தோளை பற்றியபடி கழுத்தில் முகம் சாய்த்து கேட்க,


“எனக்கு வேற யாரோடையாச்சும் கல்யாணம் ஆகியிருக்கும் மிஸ்டர் கட்டுமரம்...” சொல்லி குறும்பாய் சிரிக்க அவளை முறைக்க முயன்று தானும் சிரித்தான்.


அவர்களை கலைக்கவென வந்த அவர்களின் மகன் அபினவ் ரிஷியின் ட்ராக் சூட்டை பிடித்து இழுக்க அவனோ மனைவியின் மதிமுகத்தை ஒருவித மோனநிலையோடு பார்த்திருந்தான்.


“ம்ஹூம் சரியில்லையே...” என்றபடி அவனின் காலில் நறுக்கென அபி கிள்ளிவைக்க ஆவென அலறினான் ரிஷி.


அதில் கலகலத்த அபினவ் தகப்பன் கையில் சிக்காமல் அவனிற்கு ஒழுங்கு காட்டிவிட்டு அங்கிருந்து ஓட,


“ஹைய்யோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலையே...” என்றபடி தலையிலடித்து திரும்ப அங்கே பரிதாபமாக சிவராமனும் அவரின் அருகில் சுமங்கலியும். சற்றே அதிர்ந்துதான் விட்டான் ரிஷி.


“ஹைய்யோ தாத்தா உன்னை உம்ட்டு மவன் கொசுன்னு சொல்லிட்டான்...” என்று போட்டுகொடுத்துவிட்டு சிட்டாக வெளியில் பறந்துவிட்டான் அபினவ்.


அதில் கணவரின் பாவனையில் சுமங்கலி வாய்விட்டே சிரித்துவிட சிவராமனுமே மகன் முழித்த முழியில் புன்னகைத்துவிட்டார். அங்கே சிரிப்பலை ஆர்ப்பரித்து பொங்கி பிராவகம் எடுத்தது.


சிரித்துக்கொண்டே சுமங்கலியும் சிவராமனும் பேரனை தேடி செல்ல மீண்டும் ரிஷி நேத்ராவின் புறம் திரும்பினான்.


கலகலவென்ற அவளின் சிரிப்பில் என்றைக்கும் போல அவள் பால் நுரைத்து பொங்கிய தன் காதலில் தன்னை தொலைத்து கரைந்து நின்றான் ரிஷி.


அவளை காணாத நாட்களையும் கணக்கிலெடுத்து அனைத்திற்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக இன்றுவரை திகட்ட திகட்ட வாழ்ந்து அவளையும் வாழவைத்துக்கொண்டிருப்பவனின் காதலை இன்றளவும் பிரமிப்போடே உள்வாங்குகிறாள் நேத்ரா.


தன் மீதான நேத்ராவின் உயிரெல்லாம் நேசமணம் பரப்பும் காதலில் உலகமே அவனின் காலடியில் என்பதை உணர்ந்தவனின் நெஞ்சை நிறைத்தவளின் ஓயாத காதல் அலைகளில் மிதந்து அவளின் அன்பெனும் பேரலையில் சுகமாய் திளைத்திருந்தான்.


என்றும் என்றென்றும் நேத்ராவை தீண்டும் காதல் அலையாய் ரிஷி.


நிறைவுற்றது
Superrrrrrrrrrr story
 
அலை – 23

திருமணம் முடிந்து எப்படி இரண்டரை மாதம் கடந்ததேன்றே தெரியவில்லை நேத்ராவிற்கு. மறுவீடு, கோவில் பூஜை, தேன்நிலவு, உறவினர் வீட்டு விருந்துகள் என அது இது என்று அனைத்தையும் நினைக்கவே இப்போது மலைப்பாய் இருந்தது நேத்ராவிற்கு.


இரண்டு நாட்களுக்கு முன்புதான் சேர்ந்தார் போன்று எங்கும் செல்லாமல் மாமியார் வீட்டில் இருக்கிறாள் நேத்ரா.


விரும்பியவனின் கை சேர்ந்த நிறைவு, திருமணமான களை, சந்தோஷ வாழ்வின் பூரிப்பு, வஞ்சைனையில்லா விருந்து உபசாரம் என ஒரு சுற்று பெருத்துதான் போனாள் நேத்ரா.


மாமியாரோடு கேரம்போர்ட் விளையாடியபடி இருந்தவள் துரைச்சாமியின் திடீர் வருகையில் துள்ளிக்குதித்து வெளியே சென்றாள்.


இப்போதெல்லாம் அவளுக்கு எதுவும் காரியம் ஆகவேண்டும் என்றால் துரைச்சாமியை உடனடியாக தொடர்புகொண்டு விடுவாள். அதில் ரிஷிக்குத்தான் அத்தனை காண்டாக இருக்கும்.


“உனக்கு எதுவும் வேணும்னா என்னை கேட்கனும் தக்காளி. எப்போ பார் மீசையை பிடிச்சு இழுத்துட்டு வந்திடற?. என்னால முடியலைடி. இப்படி பாசத்தை பொழியறீங்க...” என மூக்கால் அழுது புலம்புவான்.


எந்தளவிற்கு ரிஷி அவர்களின் குடும்ப கட்டுதிட்டங்களை வெறுத்தானோ அதற்கு மேல் நேத்ரா அதே கட்டுதிட்டங்களில் கவரப்பட்டு ஒன்றிப்போனாள். முதலில் திணறியவள் பின் ஆர்வமாகவே அனைத்து சம்பிரதாயம் வாழ்க்கைமுறை என பின்பற்றதொடங்கினாள். அதில் துரைச்சாமிக்கு ஏக பெருமை.


“நான் கொண்டுவந்த பொண்ணாகிற்றே...” என மீசையை முறுக்கிக்கொள்வார்.


அவர் இதை சொல்லுபோதெல்லாம் சிவராமனை வாய் திறக்கவிடாமல் நிறுத்திவைக்க தான் பெரும்பாடாக இருக்கும் சுமங்கலிக்கு.


“டாட் ஏதோ சொல்ல பிரியப்படறார் மாம். விடுங்களேன் நீங்க...” என ஏற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பான் ரிஷி. திலகா உசிதமணியின் முறைப்பில் அடங்கி நின்றாலும் அப்படி ஒரு கேலி சிரிப்பு பொங்கி தான் வரும் அவனுக்கு.


“மாமா நீங்களே வான்ட்டடா போய் சிக்கிடாதீங்க. இப்போதான் உங்க வொய்ப் ஆலமரத்தை கவுத்திருக்கா. ஓவர் பேச்சு ஊருக்கு ஆகாது...” காவேரி காதை கடிக்க அவளை ஒரு கொட்டு கொட்டி அடக்குவான்.


“நீயெல்லாம் என்னை கலாய்க்கிறியா?...” என்பதை போல. சூழ்நிலை அறியாத துரைச்சாமி,


“பெரியவங்க சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும். என் பேரன் அதை புரிஞ்சு தான் செஞ்ச தப்பை உணர்ந்து நான் பார்த்த பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கறேன்னு எங்களுக்காகவே வந்து நின்னானாக்கும்...”


ஊர் மக்களிடம் பெருமை தாளிக்க அவர் கொஞ்சம் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என உசிதமணி சங்கடமாக பார்த்துவைப்பார்.


பின்னே துரைச்சாமியின் பேச்சில் சிவராமனின் குற்ற உணர்ச்சி அதிகரித்து சிறுபிள்ளை போல முகத்தை தூக்கிவைத்து பரிதாபமாக பார்க்கவே சகியாமல் போகும். சமாதானம் செய்து மீட்டெடுக்கும் முன் இவரின் பொறுமை பறந்தே போகும்.


“தாத்தா வாங்க வாங்க. நானே நாளைக்கு உங்களை பார்க்க வரனும்னு இருந்தேன். இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க...” என்றபடி நேத்ரா அவரின் கையை பற்றிக்கொள்ள சுமங்கலிக்குதான் வியப்பாக போயிற்று.


தங்கள் குடும்பத்தில் யாரும் அவ்வளவு இலகுவாக துரைச்சாமியிடம் நினைத்த நேரத்தில் நின்று பேசிவிட முடியாது. இப்பெண் அவரையே மாற்றிவிட்டாளே என்று ஆச்சர்யமாக பார்த்தாலும் மனதினுள் அத்தனை மகிழ்ச்சி.


“ஒண்ணுமில்லத்தா, நம்ம தோப்புல பனைமரம் இருக்கு. இன்னைக்கு நொங்கு வெட்டினோம். அதான் உனக்கு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்...”


வாசலிலேயே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டவர் அவளையும் தன்னருகில் அமர்த்தி,


“ஏலே பாண்டி, அங்க என்ன பராக்கு பார்த்துட்டு மசமசன்னு நிக்கித? நொங்கை எடுத்தாந்து தலையை சீவி எம்ட்டு பேத்திக்கிட்ட குடு...” மீசையை முறுக்கிகொண்டார்.


“உங்களுக்கு அழகும் கம்பீரமும் இந்த மீசை தான் தாத்தா...” என நேத்ரா சில்லாகிக்க அதில் சிலிர்த்துப்போனார் துரைச்சாமி. எப்போதும் போல நேத்ராவின் மீது அவருக்கொரு தனிப்பட்ட ப்ரியம் ஊற்றெடுத்தது.


“வாங்க மாமா. மாமா இந்தாங்க மோர்...” என சுமங்கலி வந்து நிற்க,


“இங்க வச்சிடும்மா. நான் பொறவு குடிக்கிறேன்...” என்றுவிட்டு,


“ஏலே பாண்டி இன்னுமா வேலையாவலை?...” என விரட்டினார் அவனை.


“இந்த வெயில்ல நீங்க வரனுமாங்க மாமா...” என வாய்வரை வந்துவிட்ட கேள்வியை வெளிவராமல் சிறைசெய்தபடி அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.


அவர் ஒருவர் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் தாத்தாவும் பேத்தியும் அவர்களுக்குள்ளாக பேசி சிரித்தபடி இருக்க அதற்குள் நொங்கும் வர நேத்ரா சாப்பிடுவதை பார்த்துவிட்டு தானும் மோரை எடுத்துகொண்டார்.


வாரத்தில் ஒருநாள் எதையாவது கொண்டுவந்து கொடுப்பதும் இல்லை நேத்ராவை அங்கு வரவழைத்து ஒருவேளையாவது தன்னோடு உண்ணவைப்பதும் நேத்ரா வந்ததிலிருந்து வழக்கமாகிற்று அவருக்கு.


ஆரம்பத்தில் அனைவரும் இதனை கண்டு புருவம் உயர்த்தினாலும் போக போக அவர்களுக்குள்ளாக சிரித்துக்கொண்டனர்.


“என்ன உன் புருஷன் அந்த சண்டியர் இன்னும் வரலையா?...” துரைச்சாமி கேட்க,


“தாத்தா இது ஆப்டர் நூன். இப்போ காலேஜ்ல தான் இருப்பாங்க. ஈவ்னிங் தான் வீட்டுக்கு வருவாங்க...” நொங்கை தோல் எடுத்து வாய்க்குள் போட்டபடி சொல்ல,


“சரித்தா, சரித்தா...” என்று சொல்லியவருக்கு அவ்வப்போது ஆங்கில வார்த்தைகள் ஒன்றிரண்டை நேத்ரா கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருந்தாள். அவரும் அதை ஆட்சேபிக்காமல் கேட்டுகொள்வது தான் அதிசயத்திலும் அதிசயம்.


மாலை வரை இருந்து ரிஷி வரும் முன்னே கிளம்பியும் விட்டார். வெகு நேரம் கழித்து அலுப்போடு வீட்டுக்குள் நுழைந்த ரிஷியை தட்டு நிறைய நொங்கோடு வரவேற்றாள் நேத்ரா.


“என்னாச்சுங்க? ரொம்ப டயர்டா தெரியறீங்க? இதை சாப்பிடுங்க...” என்றபடி கொடுக்க அதில் ஒன்றை எடுத்துகொண்டவன்,


“என்ன மீசை வந்தாராக்கும்?...” என கேட்டு கொண்டவளின் முறைப்பை வாங்கிக்கட்டிக்கொண்டான்.


“ஓகே, ஓகே. பழகிடுச்சுடி தக்காளி. அதுக்கு இப்படி முறைக்காதே. ஏற்கனவே ரொம்ப டயர்ட்...” மாடியேற ஆரம்பித்தான் ரிஷி.


“அட்மிஷன் இந்ததடவை கொஞ்சம் அதிகமாவே இருக்கு. ஹாஸ்டல் ரூம் பத்தாது. நியூ ஹாஸ்டல் கன்ஸ்ட்ரக்ஷன் வேற ஆரம்பிச்சிருக்கோம். அங்கயும் போய்ட்டு எல்லாம் பார்த்துட்டு வர டைம் வேற ஆகிட்டு...”


ரிஷியின் பேச்சை கேட்டவாறே அவனுக்கு தேவையான டவல் இத்யாதி இத்யாதிகளை எடுத்துக்கொடுத்துகொண்டிருந்தாள் நேத்ரா.


“காலேஜ்ல வேற ஒருத்தரும் வேலையே பார்க்கலையா? அத்தனை வேலையும் நீங்களே செய்யனுமா?...” என குறைபட்டுக்கொண்டே சொல்ல,


“என்னதான் ஆள் இருந்தாலும் நம்மோட கண்ட்ரோல்ல தான் எல்லாம் நடக்கனும் நேத்ரா...” என சொல்லி அவளின் கன்னம் தட்டி பாத்ரூமினுள் நுழைந்தான்.


குளித்துவிட்டு தலையை துவட்டியபடி வந்து நின்றவன், “அம்மா எங்க?...” என கேட்டபடி டிஷர்ட்டை எடுத்து போட்டுகொண்டான்.


அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெற்றுப்பார்வை பார்க்க அதில் குழம்பி தெளிந்து தலையில் தட்டிக்கொண்டான்.


“சாரிடா நிஜமா மறந்துட்டேன். நீயாவது எனக்கு ஞாபகம் செய்திருக்கலாம்ல...”


“அக்கறை இருக்கிறவங்களுக்கு ஞாபகப்படுத்தனும்னு அவசியம் இல்லை. இந்நேரம் வந்திருப்பாங்க. கீழே போகலாம்...”


சமாதானம் வேலைக்காகாது என்பதை புரிந்து அவனும் எதுவும் பேசவே இல்லை. கீழே இவர்களுக்காக சுமங்கலியும் சிவராமனும் காத்திருக்க,


“மாம் ஸாரி மாம்...” அவரின் கையை பிடித்துக்கொண்டான்.


“உன்னை தெரியாதா ரிஷி. விடு. பூஜை ரூம்ல பிரசாதமும் அபிஷேக பாலும் வச்சிருக்கேன். போய் ரெண்டு பேரும் சாமிகும்பிட்டுட்டு எடுத்துக்கங்க. போடா நேத்ரா...” அவர்களை அனுப்பிவிட்டு சுமங்கலி இரவு உணவை எடுத்துவைக்க கிட்சனில் நுழைந்தார்.


ரிஷிக்கு கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக போனது. நேத்ராவை திரும்பி பார்த்தான். கை கூப்பி இறைவனை வணங்கி நின்ற அவளின் தோற்றம் இனிமையாக மனதில் நிறைந்தது.


கோவிலில் தாய் தங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த அபிஷேகம். ஆனாலும் தன்னையன்றி நேத்ரா எங்கும், யாரோடும் செல்லமாட்டாள். ஆனந்தமாக இருந்தும் இன்னும் அரைமணி நேரத்தில் எப்படி வெடிக்குமோ என்ற அச்சமும் அவனுள். சமாளித்துதானே ஆகவேண்டும்.


கோவிலில் நடந்ததை சுமங்கலி கூற அதை மற்றவர்கள் கேட்டுகொண்டே அமைதியாக கழிந்தது இரவு உணவு நேரம்.


ஹாலில் வந்தமர்ந்ததும் மெதுவாக ஆரம்பித்தான் ரிஷி. இடம் பார்க்காமல் வெடித்தேவிட்டாள் நேத்ரா.


விஷயம் இதுதான் நேத்ராவின் மேல் படிப்பிற்காக சென்னையில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கி இருக்கும் ரிஷி அப்ளிகேஷன் ஃபார்மில் அவளின் கையெழுத்தை அவனே போட்டு நாளை சென்னை கிளம்பவேண்டும் என்னும் முடிவோடு வந்திருந்தான்.


“யாரை கேட்டு என்னை காலேஜ்ல சேர்க்கனும்னு முடிவு பண்ணுனீங்க?...”


“யாரை கேட்கனும். எல்லாம் உன் நல்லதுக்குத்தான். நீ மேல படிச்சே ஆகனும்...”


“முடியாது. நான் போகமாட்டேன்...”


“போய் தான் ஆகனும். உன்னை லேசுல விடமாட்டேன்...”


“படிக்கனும்னா நான் நம்ம காலேஜ்ல படிக்கிறேனே...” கொஞ்சம் இறங்கி வந்தாள்.


“எதுக்கு? எதுக்கு? இங்க படிச்சு நித்தமும் ஒரு பஞ்சாயத்துன்னு என் உயிரை வாங்க. ஒன்னும் தேவையில்லை. நீ சென்னையில தான் படிக்கனும். இன்னும் ரெண்டே நாள்ல நீ அங்க இருக்கனும்...”


“நான் போகமாட்டேன். உங்களால ஆனதை பார்த்துக்கோங்க...”


“நீ போகனும். நான் உன்னை கூட்டிட்டு தான் போவேன். ரெடியாகிக்கோ...”


இருவரும் சண்டைகோழிகளாய் சிலிர்த்துக்கொள்ள யாரை அடக்குவதென்றே தெரியாமல் சிவராமனும் சுமங்கலியும் விழி பிதுங்கி நின்றனர்.


“ஹைய்யோ போதும் ரிஷி. இப்படித்தான் சந்தைகடை மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டு கட்டி உருளறதா?...”


சுமங்கலி என்னவோ சாதாரணமாக தான் கேட்டார். ஆனால் ரிஷியோ அவளை ரசனையாய் பார்த்து,


“நாங்க எப்போ எங்கம்மா கட்டி உருண்டோம்? அதுவும் ஹால்ல வச்சு...” விஷமமாய் நேத்ராவை பார்த்து கண்ணடித்தவன் சுமங்கலியிடம் பாவம் போல கேட்க சிவராமன் நழுவிவிட்டார்.


அவனின் முதுகில் பலமாய் அடித்த சுமங்கலி, “உங்க சண்டையை உங்க ரூம்ல வச்சிக்கோங்க...” என அடித்து துரத்தாத குறையாக இருவரையும் விரட்டினார்.


அறைக்குள் நுழைந்ததிலிருந்து நேத்ரா மிஞ்ச ரிஷி கெஞ்ச மீண்டும் அவன் மிஞ்ச நேத்ரா கெஞ்ச என சண்டைகள் நீண்டு சமாதானம் செல்லுபடியாகாமல் போக் நேத்ராவிற்கு கோபம் பயங்கரமாய் கொதித்துக்கொண்டு வந்தது.


“மிஸ்டர் கட்டுமரம். கெஞ்சி பார்த்தும்,சொல்லி பார்த்தும் நீங்க கேட்கலை. எனக்கென்ன? இங்க இருந்தா பக்கத்துலையே என்னை கூட்டி வச்சுதிட்டலாம். உங்க கண்ட்ரோல்ல வச்சுக்கலாம்...”


“சென்னைக்கு அனுப்பி வினையை தேடிக்கறீங்க. எனக்கென்ன? இனி வாராவாரம் பஞ்சாயத்துக்கு சென்னைக்கும் புதுக்கோட்டைக்குமா நீங்க தான் அல்லாடப்போறீங்க. அவங்களே என்னை காலேஜ்லை விட்டு அனுப்ப வைக்கிறேன். பார்த்துட்டே இருங்க...”


சபதம் போல விடைத்துக்கொண்டு விறைப்பாக பேசியவளை பார்த்து புன்னகை பொத்துக்கொண்டு வந்தது.


வாய்விட்டு சிரிக்காமல் இருந்தாலும் கண்கள் காட்டிக்கொடுக்க மீண்டும் அவனின் கன்னம் தாங்கி தாடை தடவி முத்தமிட்டு முடிவை மாற்ற நேத்ரா எத்தனை முயன்றும் வேலைக்காகாமல் மறுநாள் சென்னைக்கு கிளம்பவே செய்தாள்.


அவளின் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு செல்ல சொல்லியிருந்தவன் அடுத்த இரண்டு நாட்களும் அவளை ஒரு ஷணமும் பிரிந்து இருக்கவில்லை. வாகாக அவளும் அவனோடு ஒட்டித்திரிய,


“இரண்டுபேருக்குமே பிரிய மனமில்லை. இது எதற்கு வேண்டாத வேலை?...” என்றே எண்ண தோன்றியது நேத்ராவின் பெற்றோருக்கு.


அவளை சென்னையில் விட்டு வந்து ஒருவாரமாகிற்று. ஏனோதானோவென்று முகத்தில் அருளின்றி வளையவந்த மகனை காண சகியாத சுமங்கலி,


“ஏன் ரிஷி இப்படி உன்னையே நீ கஷ்டப்படுத்திக்கற? பேசாம நேத்ராவை கூட்டிவா...” என சொல்ல,


“நோ மாம். இது அவ ப்யூச்சர். நம்ம காலேஜ்ல ஒன்னை நேத்ரா பொறுப்பேத்து நடத்தற அளவுக்கு அவளுக்கு பொறுப்பு வரனும். இப்போ இருக்கிறது போல சின்னபிள்ளையா இருந்தா எப்படி?...”


“அதுக்கு அவ மேல படிக்கனும்னு என்ன இருக்கு ரிஷி? அதுவும் உடனே? அவளுக்கு எல்லா டேலேண்டும் இருக்கு. நானும் அப்பாவும் அவளுக்கு சொல்லி புரியவைக்கிறோம். புத்திசாலி, நிச்சயம் புரிஞ்சுப்பா...”


சுமங்கலியின் எந்த சமாதானமும் அவனிடம் எடுபடவில்லை. துரைச்சாமி வேறு வந்து கோபத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு குதித்துவிட்டு போனார். எதையும் ரிஷி கண்டுகொள்ளவில்லை.


இன்னும் ஒரு வாரம் செல்லவும் சென்று பார்த்துவருவோம். இதே மனநிலையில் சென்றால் நிச்சயம் தானே அவளை அழைத்துவந்துவிடுவோம் என்று பயந்து நேத்ராவை காணும் நாளை தள்ளிவைத்தான்.
Nice
 
Top