AshrafHameedaT
Administrator
அலை – 6
சத்யாவிற்குள் சர்வமும் அடங்கியது. இப்படி மாட்டிக்கொள்வோம் என அவள் நினைக்கவே இல்லை. ரஞ்சனி அந்தளவிற்கு தைரியமூட்டியிருந்தாள். நிச்சயம் இந்த முறை நேத்ரா சிக்கிக்கொள்வாள் என சொல்லியிருந்தாள் ரஞ்சனி.
அவள் கொடுத்த உற்சாகத்திலும் நம்பிக்கையிலும் நேத்ரா மீதிருந்த எரிச்சலிலும் உடனே ஒப்புக்கொண்டவள் வார்டனிடம் போட்டும் கொடுத்துவிட்டு எதையோ சாதித்துவிட்ட மிதப்பில் வந்து நின்றாள்.
வந்தவள் நேத்ராவின் தோரணையில் மிரண்டே விட்டாள். இதையா அவள் எதிர்பார்த்தாள்?
நேத்ரா அவரையே முறைக்க சைந்தவியின் பின்னே ஒண்டினாள் சத்யா.
“மேடம் கொஞ்சம் வெளில வரீங்களா?...” நேத்ராவின் குரலே வேறு மாதிரி கடினமாக மாறி இருந்தது.
எத்தனை மிரட்டினாலும், எவ்வளவு சீண்டினாலும் நேத்ராவின் குரலில் இத்தகைய வேற்றுமை என்றுமே நிகழ்ந்ததில்லை. இன்று அந்த வேறுபாட்டை அனைவருமே உணர்ந்தனர்.
“உன்னோட அல்ப ஆசை நிறைவேறிடுச்சா?...” வனமலர் சாட,
“உனக்கு இதெல்லாம் தேவையா சத்யா? என்ன வேலை பார்த்திருக்க?...” சைந்தவியின் பேச்சை காதில் வாங்கினாலும் சத்யா சிந்தனை வேறு.
என்னதான் நேத்ராவின் முகத்தை பார்த்தாலும் மொபைல் எப்படி சிக்காமல் போனது? என்ற கேள்வி மண்டைக்குள் குடைச்சலை குடுக்க அது சத்யாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அதை உணர்ந்தார் போன்றே கட்டிலை விட்டு இறங்கி வந்த நேத்ரா நேராக சத்யாவின் பின்னால் அவளுடைய கப்போர்டை திறந்து சில ஆடைகளுக்கு நடுவிலிருந்து மொபைலின் ஒவ்வொரு பாகங்களாக எடுத்தாள்.
அதை பார்த்து கண்களை விரித்த சத்யா மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ள அவளை எள்ளலாக பார்த்த நேத்ரா மொபைலை ஒன்றொன்றாக சேர்த்து ஆன் செய்ததும் அது அழைப்பு வந்ததற்கான ஒளி, ஒலியை எழுப்பியது.
எடுத்து பார்த்தவள், “ஹரிஷ்...” என முணுமுணுக்க பரபரவென ஆனாள் சத்யா.
“நேத்ராக்கா, ஹரிஷ் கால் பண்ணிருக்காங்களா?... படபடப்பாக கேட்க அதற்குள் மீண்டும் கால் வந்தது அவனிடமிருந்து. சட்டென காலை கட் செய்தவள் சத்யாவை தாண்டி நடக்க,
“ஏன் நேத்ராக்கா கட் செய்தீங்க?...” கொஞ்சம் வேகமாகவே கேட்டுவிட,
“என்ன அதிகாரம் தூள் பறக்குது? இது என்னோட மொபைல் நான் கட் செய்தேன்...” அமர்த்தலான குரலில் கூறியவள்,
“நீ செஞ்ச வேலைக்கு உன்னை கட்டையால அடிக்காம போன் காலை கட் பண்ணினதோட விட்டேன்னு சந்தோஷப்படு...”
ஹரிஷிடமிருந்து மீண்டும் அழைப்பு வர சத்யாவின் தவிப்பு அதிகமாகியது. பின்னே மாதத்திற்கு ஒருமுறை தானே அழைப்பான். இதை இழக்க முடியுமா? அதுவே அவளை நேத்ராவிடம் விவாதிக்க வைத்தது.
“இல்லை நேத்ராக்கா நீங்க இப்டி செய்யாதீங்க...” சத்யா இறைஞ்சுதலுடன் கேட்க நேத்ரா பொங்கிவிட்டாள்.
“செய்யாதீங்கவா? இனி உனக்கு செய்யறதுனா செய்வினை மட்டும் தான் செய்வேன்...” திமிராக கூறியவள்,
“என்னை என்னனு நினைச்ச நீ? உங்களுக்கு யாருக்கு எப்போ போன் பண்ணணும்னாலும் என் போன் தேவை. இந்த நேத்ராவின் தயவு தேவை. இன்னைக்கு இன்னொருத்தர் தூண்டிவிட்டதும் உனக்கு எனக்கே ஆப்படிக்கனும்னு தோணிருச்சுல...”
“ம்ஹூம் இது சரிப்படாது. இனி யாருக்கும் என் மொபைல்ல இருந்து எந்த இன்கமிங்கும் கிடையாது. அவுட் கோயிங்கும் கிடையாது. உங்களுக்கு போய் ஹெல்ப் பண்ணனும்னு எனக்கென்ன தலையெழுத்தா?...”
“அக்கா தெரியாம செய்துட்டேன்க்கா. சாரி சாரி. ரஞ்சனி மேம் தான் உங்களை மாட்டிவிட சொன்னாங்க. அவங்க பேச்சை கேட்டு நானும்...”
“அவங்க என்ன சொன்னாலும் கேட்டுடுவியா நீ? அவங்களா உன் ஆளு போன் செய்ததும் கொண்டுவது தராங்க? அவங்களா அவசரத்துக்கு வீட்டுக்கு கால் பண்ணனும்னா உங்களுக்கு தன்னோட மொபைல் கொடுத்து ஹெல்ப் பன்றாங்க?...”
சத்யாவை மட்டுமல்லாது மற்றவர்களையும் பார்த்து கேட்க அனைவரும் அமைதியாக நின்றனர்.
நேத்ரா சொல்வது போல அவளுடைய மொபைலில் தான் அவசரத்திற்கு வீட்டினருக்கு பேசிக்கொள்வர் மூவரும். சத்யா தன் காதலன் ஹரிஷ்க்கு பேசவேண்டும் என கூற மறுக்காமல் கொடுத்தாள் நேத்ரா.
“உன்னோட ஆளுகூட கடலைபோட என் போன் குடுத்தேன் பாரு என்னை சொல்லனும். எப்பவும் எந்த நேரம்னு பார்க்காம செஞ்சதுக்கு நல்ல. நல்ல...”
“நீ ஏன் இப்டி செஞ்சன்னு எனக்கு தெரியாம இல்லை. போன மாசம் அவன் கால் பண்ணும்போது நீ இல்லைனா நான் என்ன செய்ய? நீ திரும்ப பேசனும்னு கேட்டப்போ குடுக்கமுடியாத சூழ்நிலை எனக்கு. அதுக்கு என்னமும் செய்வியா நீ?...”
அதற்கு மேல் பேச முடியாமல் திரும்பி கொண்டவள் தன்னை நிதானித்துவிட்டு சத்யாவின் புறம் திரும்பி,
“இங்க பாரு இனிமே உன் ஆள் எனக்கு கால் பண்ண கூடாது. மீறி பண்ணினா நீ ஆளை மாத்திட்டன்னு கொஞ்சமும் யோசிக்காம சொல்லிடுவேன்...” மிரட்ட,
“ஹைய்யோ நேத்ராக்கா...” சத்யா பதற,
“உனக்கெல்லாம் தயவு தாட்சண்யமே பாக்கமாட்டேன். உதவி செஞ்சவங்களுக்கு உபத்திரவம் செய்ற உன்கூட பேசறதே எனக்கு அசிங்கம். திரும்ப என்கிட்ட எப்பவும் பேசிடாத...” எச்சரித்துவிட்டே சென்றாள் நேத்ரா.
“உனக்கிது தேவைதான் சத்யா. அந்தக்கா என்னதான் நம்மளை சீண்டிட்டே இருந்தாலும் நமக்கொரு உதவின்னு போய் நின்னா யோசிக்காம எப்படி செய்வாங்க. இப்படி பண்ணிட்டியே நீ...” என சைந்தவி திட்ட குறுகிப்போய் நின்றாள் சத்யா.
அநியாயமாக ரஞ்சனியின் சூழ்ச்சி வலையில் சிக்கி குற்றவாளியாய் நின்றுவிட்டோமே என்ற ஆற்றாமை மனதை அரிக்க தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
நேத்ராவோடு வந்த வனமலர், “நீ ஏண்டி அவளை சும்மா விட்ட. நல்லா நாலு அரை விட்டிருக்க வேண்டிதானே? ஆளும் மூஞ்சியும். பாக்க சாது மாதிரி இருந்துட்டு என்ன வேலையெல்லாம் பண்ணிருக்கா...”
வனமலரால் தாங்கமுடியவில்லை. நேத்ராவின் இரக்க குணம் இப்படி பட்ட துரோகிகளையும் அடையாளம் காணாமல் இருக்கிறதே என ஆதங்கப்பட்டாள். தேவையான உதவிகளையும் பெற்றுக்கொண்டு உதவியவர்களின் முதுகில் குத்தும் இந்த பழக்கம் என்றைக்குத்தான் குறையுமோ?
இவர்கள் வரும் போதே ரோஷிணி எதிர்வர, “இவளை பாரு ரோஷி. அந்த பொண்ணை சும்மா விட்டுட்டு பேசிட்டு வந்திருக்கா. டிஸ்கஸ்டிங். நானா இருந்தா நடக்கிறதே வேற. இவ என்னடான்னா? ப்ச்...” பொரிய,
“அடங்குடி, நீவேற அவளுக்கு கொம்பு சீவிட்டு...” மலரை அதட்டல் குரலில் கூறிய ரோஷிணி,
“நேத்ரா, என்ன பீல் பன்றையா?...” அவள் முகம் பார்த்து வினவ,
“என்னது பீலிங்கா? நீ வேற, நான் எதுக்கு அந்த சில்லி கேர்ள் செஞ்சதுக்கு பீல் பண்ணனும். அந்தளவுக்கு அவ வொர்த் கிடையாது. இந்த நேத்ரா மைண்ட்ல நிக்கிறதுக்கு கூட அவளுக்கு தகுதி கிடையாது...” சிலிர்த்துக்கொண்டாள்.
“பின்ன எதுக்கு இப்படி வந்து நிக்கிற?...”
“நான் எங்க நின்னேன். நீயா தான உன் ரூம்க்கு வந்துட்டுருந்தவளை வழிமறிச்சு பேசிட்டு இருக்க...” ரோஷிணியை வார அவள் முறைக்க,
“இந்த ராசு அண்ணாக்கிட்ட மிஸ்டர் கட்டுமரத்தை பத்தின டீட்டயில்ஸ் கேட்ருந்தேன். இன்னும் ஒன்னும் சொல்லலை. அதான். சரி நீ ரூம்க்கு போ. நான் போய் பாத்து பேசிட்டு வரேன்...”
“ஒண்ணும் தேவையில்லை. ராகி போய்ட்டு வந்துட்டா. நீ வா நம்ம ரூம்ல போய் பேசலாம்...”
“அது நம்ம ரூம் இல்லை. உன் ரூம்...” நேத்ரா வாயாட,
“தெரியுது, நம்ம போய் ரூம்ல பேசலாம்ன்ற மீனிங்ல சொன்னேன்...” ரோஷிணி திருத்த,
“அதத்தான நானும் சொன்னேன்...” நேத்ராவை அடிக்கவே கிளம்பிவிட்டாள் வனமலர்.
“நோ நோ அமேஸான். ஆக்ஷன்லாம் வேண்டாம்...’ என சொல்லி சிட்டாக பறக்க இருவரும் அவளின் அலும்பில் புன்னகைத்து மலரின் முகம் தெளியாததை கண்ட ரோஷிணி,
“என்ன மலர்? இன்னும் கோவமா இருக்க போல?...” என்க,
“கோவப்பட்டு என்ன செய்ய? நீ தான் அவளை ஒன்னும் சொல்லவேண்டாம்னு சொல்லிட்டியே...”
“அவளை தானே எதுவும் செய்ய விடகூடாதுன்னு சொன்னேன். நாம செய்யவேண்டாம்னு சொல்லலையே...” எனவும் வனமலரின் முகம் பளிச்சிட்டது.
“சொல்லு சொல்லு. என்ன பண்ணலாம்? அவளை இப்படியே விடமாட்டேன் நான். நமக்கப்றம் இந்த காலேஜ்ல சேர்ந்து நம்ம புள்ளைக்கிட்டாயே அவ தேவைக்கு நின்னுட்டு கேட்பார் பேச்சை கேட்டு நம்ம ப்ரெண்டை காட்டிக்குடுப்பா? எட்டப்பி. என்ன ஒரு திண்ணக்கம் இவளுக்கு?...”
வனமலர் அடங்காமல் ஆக்ரோஷம் கொள்ள,
‘அவளை மட்டுமில்ல, அந்த ரஞ்சனி மேமையும் சேர்த்தே கவனிச்சிடுவோம். படிக்கிற பொண்ணுக்களுக்கு படிப்பை சொல்லிகுடுங்கன்னா இவங்க போட்டுகுடுக்கிற கிரிமினல் வேலையை சொல்லிகுடுக்காங்க. சேர்த்து இருக்கு ரெண்டு பேருக்கும்...”
ரோஷிணியும் வனமலரும் சேர்ந்து பேசி முடிவெடுத்து அதை செயல்படுத்தும் வழிகளை பற்றி பேசிக்கொண்டே நேத்ராவை பின்பற்றி சென்றனர்.
சத்யாவிற்குள் சர்வமும் அடங்கியது. இப்படி மாட்டிக்கொள்வோம் என அவள் நினைக்கவே இல்லை. ரஞ்சனி அந்தளவிற்கு தைரியமூட்டியிருந்தாள். நிச்சயம் இந்த முறை நேத்ரா சிக்கிக்கொள்வாள் என சொல்லியிருந்தாள் ரஞ்சனி.
அவள் கொடுத்த உற்சாகத்திலும் நம்பிக்கையிலும் நேத்ரா மீதிருந்த எரிச்சலிலும் உடனே ஒப்புக்கொண்டவள் வார்டனிடம் போட்டும் கொடுத்துவிட்டு எதையோ சாதித்துவிட்ட மிதப்பில் வந்து நின்றாள்.
வந்தவள் நேத்ராவின் தோரணையில் மிரண்டே விட்டாள். இதையா அவள் எதிர்பார்த்தாள்?
நேத்ரா அவரையே முறைக்க சைந்தவியின் பின்னே ஒண்டினாள் சத்யா.
“மேடம் கொஞ்சம் வெளில வரீங்களா?...” நேத்ராவின் குரலே வேறு மாதிரி கடினமாக மாறி இருந்தது.
எத்தனை மிரட்டினாலும், எவ்வளவு சீண்டினாலும் நேத்ராவின் குரலில் இத்தகைய வேற்றுமை என்றுமே நிகழ்ந்ததில்லை. இன்று அந்த வேறுபாட்டை அனைவருமே உணர்ந்தனர்.
“உன்னோட அல்ப ஆசை நிறைவேறிடுச்சா?...” வனமலர் சாட,
“உனக்கு இதெல்லாம் தேவையா சத்யா? என்ன வேலை பார்த்திருக்க?...” சைந்தவியின் பேச்சை காதில் வாங்கினாலும் சத்யா சிந்தனை வேறு.
என்னதான் நேத்ராவின் முகத்தை பார்த்தாலும் மொபைல் எப்படி சிக்காமல் போனது? என்ற கேள்வி மண்டைக்குள் குடைச்சலை குடுக்க அது சத்யாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அதை உணர்ந்தார் போன்றே கட்டிலை விட்டு இறங்கி வந்த நேத்ரா நேராக சத்யாவின் பின்னால் அவளுடைய கப்போர்டை திறந்து சில ஆடைகளுக்கு நடுவிலிருந்து மொபைலின் ஒவ்வொரு பாகங்களாக எடுத்தாள்.
அதை பார்த்து கண்களை விரித்த சத்யா மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ள அவளை எள்ளலாக பார்த்த நேத்ரா மொபைலை ஒன்றொன்றாக சேர்த்து ஆன் செய்ததும் அது அழைப்பு வந்ததற்கான ஒளி, ஒலியை எழுப்பியது.
எடுத்து பார்த்தவள், “ஹரிஷ்...” என முணுமுணுக்க பரபரவென ஆனாள் சத்யா.
“நேத்ராக்கா, ஹரிஷ் கால் பண்ணிருக்காங்களா?... படபடப்பாக கேட்க அதற்குள் மீண்டும் கால் வந்தது அவனிடமிருந்து. சட்டென காலை கட் செய்தவள் சத்யாவை தாண்டி நடக்க,
“ஏன் நேத்ராக்கா கட் செய்தீங்க?...” கொஞ்சம் வேகமாகவே கேட்டுவிட,
“என்ன அதிகாரம் தூள் பறக்குது? இது என்னோட மொபைல் நான் கட் செய்தேன்...” அமர்த்தலான குரலில் கூறியவள்,
“நீ செஞ்ச வேலைக்கு உன்னை கட்டையால அடிக்காம போன் காலை கட் பண்ணினதோட விட்டேன்னு சந்தோஷப்படு...”
ஹரிஷிடமிருந்து மீண்டும் அழைப்பு வர சத்யாவின் தவிப்பு அதிகமாகியது. பின்னே மாதத்திற்கு ஒருமுறை தானே அழைப்பான். இதை இழக்க முடியுமா? அதுவே அவளை நேத்ராவிடம் விவாதிக்க வைத்தது.
“இல்லை நேத்ராக்கா நீங்க இப்டி செய்யாதீங்க...” சத்யா இறைஞ்சுதலுடன் கேட்க நேத்ரா பொங்கிவிட்டாள்.
“செய்யாதீங்கவா? இனி உனக்கு செய்யறதுனா செய்வினை மட்டும் தான் செய்வேன்...” திமிராக கூறியவள்,
“என்னை என்னனு நினைச்ச நீ? உங்களுக்கு யாருக்கு எப்போ போன் பண்ணணும்னாலும் என் போன் தேவை. இந்த நேத்ராவின் தயவு தேவை. இன்னைக்கு இன்னொருத்தர் தூண்டிவிட்டதும் உனக்கு எனக்கே ஆப்படிக்கனும்னு தோணிருச்சுல...”
“ம்ஹூம் இது சரிப்படாது. இனி யாருக்கும் என் மொபைல்ல இருந்து எந்த இன்கமிங்கும் கிடையாது. அவுட் கோயிங்கும் கிடையாது. உங்களுக்கு போய் ஹெல்ப் பண்ணனும்னு எனக்கென்ன தலையெழுத்தா?...”
“அக்கா தெரியாம செய்துட்டேன்க்கா. சாரி சாரி. ரஞ்சனி மேம் தான் உங்களை மாட்டிவிட சொன்னாங்க. அவங்க பேச்சை கேட்டு நானும்...”
“அவங்க என்ன சொன்னாலும் கேட்டுடுவியா நீ? அவங்களா உன் ஆளு போன் செய்ததும் கொண்டுவது தராங்க? அவங்களா அவசரத்துக்கு வீட்டுக்கு கால் பண்ணனும்னா உங்களுக்கு தன்னோட மொபைல் கொடுத்து ஹெல்ப் பன்றாங்க?...”
சத்யாவை மட்டுமல்லாது மற்றவர்களையும் பார்த்து கேட்க அனைவரும் அமைதியாக நின்றனர்.
நேத்ரா சொல்வது போல அவளுடைய மொபைலில் தான் அவசரத்திற்கு வீட்டினருக்கு பேசிக்கொள்வர் மூவரும். சத்யா தன் காதலன் ஹரிஷ்க்கு பேசவேண்டும் என கூற மறுக்காமல் கொடுத்தாள் நேத்ரா.
“உன்னோட ஆளுகூட கடலைபோட என் போன் குடுத்தேன் பாரு என்னை சொல்லனும். எப்பவும் எந்த நேரம்னு பார்க்காம செஞ்சதுக்கு நல்ல. நல்ல...”
“நீ ஏன் இப்டி செஞ்சன்னு எனக்கு தெரியாம இல்லை. போன மாசம் அவன் கால் பண்ணும்போது நீ இல்லைனா நான் என்ன செய்ய? நீ திரும்ப பேசனும்னு கேட்டப்போ குடுக்கமுடியாத சூழ்நிலை எனக்கு. அதுக்கு என்னமும் செய்வியா நீ?...”
அதற்கு மேல் பேச முடியாமல் திரும்பி கொண்டவள் தன்னை நிதானித்துவிட்டு சத்யாவின் புறம் திரும்பி,
“இங்க பாரு இனிமே உன் ஆள் எனக்கு கால் பண்ண கூடாது. மீறி பண்ணினா நீ ஆளை மாத்திட்டன்னு கொஞ்சமும் யோசிக்காம சொல்லிடுவேன்...” மிரட்ட,
“ஹைய்யோ நேத்ராக்கா...” சத்யா பதற,
“உனக்கெல்லாம் தயவு தாட்சண்யமே பாக்கமாட்டேன். உதவி செஞ்சவங்களுக்கு உபத்திரவம் செய்ற உன்கூட பேசறதே எனக்கு அசிங்கம். திரும்ப என்கிட்ட எப்பவும் பேசிடாத...” எச்சரித்துவிட்டே சென்றாள் நேத்ரா.
“உனக்கிது தேவைதான் சத்யா. அந்தக்கா என்னதான் நம்மளை சீண்டிட்டே இருந்தாலும் நமக்கொரு உதவின்னு போய் நின்னா யோசிக்காம எப்படி செய்வாங்க. இப்படி பண்ணிட்டியே நீ...” என சைந்தவி திட்ட குறுகிப்போய் நின்றாள் சத்யா.
அநியாயமாக ரஞ்சனியின் சூழ்ச்சி வலையில் சிக்கி குற்றவாளியாய் நின்றுவிட்டோமே என்ற ஆற்றாமை மனதை அரிக்க தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
நேத்ராவோடு வந்த வனமலர், “நீ ஏண்டி அவளை சும்மா விட்ட. நல்லா நாலு அரை விட்டிருக்க வேண்டிதானே? ஆளும் மூஞ்சியும். பாக்க சாது மாதிரி இருந்துட்டு என்ன வேலையெல்லாம் பண்ணிருக்கா...”
வனமலரால் தாங்கமுடியவில்லை. நேத்ராவின் இரக்க குணம் இப்படி பட்ட துரோகிகளையும் அடையாளம் காணாமல் இருக்கிறதே என ஆதங்கப்பட்டாள். தேவையான உதவிகளையும் பெற்றுக்கொண்டு உதவியவர்களின் முதுகில் குத்தும் இந்த பழக்கம் என்றைக்குத்தான் குறையுமோ?
இவர்கள் வரும் போதே ரோஷிணி எதிர்வர, “இவளை பாரு ரோஷி. அந்த பொண்ணை சும்மா விட்டுட்டு பேசிட்டு வந்திருக்கா. டிஸ்கஸ்டிங். நானா இருந்தா நடக்கிறதே வேற. இவ என்னடான்னா? ப்ச்...” பொரிய,
“அடங்குடி, நீவேற அவளுக்கு கொம்பு சீவிட்டு...” மலரை அதட்டல் குரலில் கூறிய ரோஷிணி,
“நேத்ரா, என்ன பீல் பன்றையா?...” அவள் முகம் பார்த்து வினவ,
“என்னது பீலிங்கா? நீ வேற, நான் எதுக்கு அந்த சில்லி கேர்ள் செஞ்சதுக்கு பீல் பண்ணனும். அந்தளவுக்கு அவ வொர்த் கிடையாது. இந்த நேத்ரா மைண்ட்ல நிக்கிறதுக்கு கூட அவளுக்கு தகுதி கிடையாது...” சிலிர்த்துக்கொண்டாள்.
“பின்ன எதுக்கு இப்படி வந்து நிக்கிற?...”
“நான் எங்க நின்னேன். நீயா தான உன் ரூம்க்கு வந்துட்டுருந்தவளை வழிமறிச்சு பேசிட்டு இருக்க...” ரோஷிணியை வார அவள் முறைக்க,
“இந்த ராசு அண்ணாக்கிட்ட மிஸ்டர் கட்டுமரத்தை பத்தின டீட்டயில்ஸ் கேட்ருந்தேன். இன்னும் ஒன்னும் சொல்லலை. அதான். சரி நீ ரூம்க்கு போ. நான் போய் பாத்து பேசிட்டு வரேன்...”
“ஒண்ணும் தேவையில்லை. ராகி போய்ட்டு வந்துட்டா. நீ வா நம்ம ரூம்ல போய் பேசலாம்...”
“அது நம்ம ரூம் இல்லை. உன் ரூம்...” நேத்ரா வாயாட,
“தெரியுது, நம்ம போய் ரூம்ல பேசலாம்ன்ற மீனிங்ல சொன்னேன்...” ரோஷிணி திருத்த,
“அதத்தான நானும் சொன்னேன்...” நேத்ராவை அடிக்கவே கிளம்பிவிட்டாள் வனமலர்.
“நோ நோ அமேஸான். ஆக்ஷன்லாம் வேண்டாம்...’ என சொல்லி சிட்டாக பறக்க இருவரும் அவளின் அலும்பில் புன்னகைத்து மலரின் முகம் தெளியாததை கண்ட ரோஷிணி,
“என்ன மலர்? இன்னும் கோவமா இருக்க போல?...” என்க,
“கோவப்பட்டு என்ன செய்ய? நீ தான் அவளை ஒன்னும் சொல்லவேண்டாம்னு சொல்லிட்டியே...”
“அவளை தானே எதுவும் செய்ய விடகூடாதுன்னு சொன்னேன். நாம செய்யவேண்டாம்னு சொல்லலையே...” எனவும் வனமலரின் முகம் பளிச்சிட்டது.
“சொல்லு சொல்லு. என்ன பண்ணலாம்? அவளை இப்படியே விடமாட்டேன் நான். நமக்கப்றம் இந்த காலேஜ்ல சேர்ந்து நம்ம புள்ளைக்கிட்டாயே அவ தேவைக்கு நின்னுட்டு கேட்பார் பேச்சை கேட்டு நம்ம ப்ரெண்டை காட்டிக்குடுப்பா? எட்டப்பி. என்ன ஒரு திண்ணக்கம் இவளுக்கு?...”
வனமலர் அடங்காமல் ஆக்ரோஷம் கொள்ள,
‘அவளை மட்டுமில்ல, அந்த ரஞ்சனி மேமையும் சேர்த்தே கவனிச்சிடுவோம். படிக்கிற பொண்ணுக்களுக்கு படிப்பை சொல்லிகுடுங்கன்னா இவங்க போட்டுகுடுக்கிற கிரிமினல் வேலையை சொல்லிகுடுக்காங்க. சேர்த்து இருக்கு ரெண்டு பேருக்கும்...”
ரோஷிணியும் வனமலரும் சேர்ந்து பேசி முடிவெடுத்து அதை செயல்படுத்தும் வழிகளை பற்றி பேசிக்கொண்டே நேத்ராவை பின்பற்றி சென்றனர்.