Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Diologue
“நீ இவர்க்கிட்ட மன்னிப்பு கேட்டா மட்டும் நான் இந்த காலேஜ்ல படிச்சிடுவேனாக்கும்? ஸ்டூடன்ஸ் ப்ராப்ளம்னு வந்தா அதை சால்வ் பண்ணாம கண்மூடித்தனமா பனிஷ் பன்ற இந்த காலேஜ் எனக்கு வேண்டாம்...”

மீண்டும் மீண்டும் இதையே திருப்பி சொல்ல யோசனையில் சுருங்கிய ரிஷி,

“ஓகே சொல்லு அப்படி என்னதான் சொல்றன்னு நானும் கேட்கிறேன்...” போனால் போகிறது என்பதை போல கூறியவனை எள்ளலாக பார்த்தவள்,

“ரோஷி கிளம்புவோம் நாம...” அவளை இழுத்துக்கொண்டு திரும்ப,

“இரு நேத்ரா என்ன விஷயம்னு நாம சொன்னா தானே ஸார்க்கு புரியும்...” ரிஷியை பார்த்து,

“ஸார் மூணு நாளைக்கு முன்னால பிரபா மேம் எடுத்த யூனிட் எங்க க்ளாஸ்ல யாருக்குமே புரியலை. அன்னைக்கே வந்து படபடன்னு சொல்லிக்குடுத்துட்டு போய்ட்டாங்க. லீவ்ல போனவங்க நேத்து ஈவ்னிங் வந்து இன்னைக்கு க்ளாஸ் டெஸ்ட் இருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க...”

“நாங்க இன்னொரு முறை நடத்தினதுக்கு பின்னால டெஸ்ட் வச்சுக்கலாம்னு சொன்னோம். அதுவும் ரொம்ப ரிக்வெஸ்ட்டா. ஆனா மேம் பிடிவாதமா மாட்டேன்னு சொல்லி இன்னைக்கு டெஸ்ட் பிக்ஸ் பண்ணிட்டாங்க. அதான் நாங்களும் எங்க க்ளாஸ்ல இன்னும் சிலபேரும் கட் அடிச்சோம்...”

ரோஷினி கூறுவதை உன்னிப்பாக கேட்டவன்,
“இதை நீங்க உங்க ஹெச்ஓடி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருக்கலாமே. இல்லைனா பிரின்ஸிபால் மேம் இருப்பாங்களே. அதை விட்டுட்டு கிளாஸ் கட் அடிச்சு மத்த ஸ்டூடன்ஸ் கெட்டு போறதுக்கும் நீங்க காரணமா இருக்கறது நல்லவா இருக்கு?...”

ரோஷிணியிடம் மட்டுமே பேசியவன் மறந்தும் நேத்ராவின் புறம் திரும்பவில்லை. ஆனால் நேத்ராவோ இன்னமும் அதே நிலையில் தான் இருந்தாள். கோவம் குறையாமல்.

“ஓகே. நீங்க கிளம்புங்க. நான் என்னனு பார்க்கறேன். இனிமே கிளாஸ் கட் பண்ணாம யாரும் கம்ப்ளைன்ட் பன்றதுக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க. இப்போ க்ளாஸ்க்கு போங்க. போகனும்...”
ரிஷி கூற அப்போதுதான் ரோஷிணிக்கு போன உயிர் திரும்பியது. நிம்மதியுடன் திரும்பி பார்க்க அங்கே நேத்ரா உக்கிரம் குறையாமல் ரிஷியை முறைத்தபடியே நின்றிருந்தாள்.

“இன்னும் என்னடி நேத்ரா? அதான் ஸார் பார்த்துக்கறதா சொல்லிட்டாங்களே, வா நாம போவோம்...” அவளை இழுக்க,
“ஓஹ் இவ்வளோ நேரம் நம்மை பேசவே விடாம இவங்க இஷ்டத்துக்கு என்னவேனாலும் பேசுவாங்க. நாம கேட்டுட்டு போகனுமா? நம்மோட பிரச்சனை என்னனு கூட கேட்காத இவங்களாம்...” அவளை இடைமறித்தவன்,

“என்ன உன்கிட்ட அப்பாலஜி கேட்கனும்னு எதிர்பார்க்கிறாயா?...”

“அதுல என்ன தப்பிருக்கு? காரணமே இல்லாம எங்க பேரன்ட்ஸ் பத்தி பேச உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு ஸார்?. எங்களை உங்களைமாதிரி ஆளுங்ககிட்ட பேச்சு வாங்கவா இங்க படிக்க அனுப்பினாங்க?...”

மீண்டும் மீண்டும் ரிஷி பார்த்த உதாசீன பார்வையும் தாங்கள் செய்ததற்கு பெற்றோரை பேசியதும் அவளை வெகுவாய் சீண்டியது. தன்னை எப்போதும் யாரேனும் கீழாக பார்ப்பதை ஒருபோதும் அனுமதியாதவள் ரிஷியின் எள்ளலில் ஏளனத்தில் உள்ளமெங்கும் மிளகாயை பூசியது போல காந்த வெகுண்டெழுந்தேவிட்டாள்.

“என்னை பற்றி என்ன தெரியும் இவனுக்கு?...” தன் தாய் தந்தையை நினைக்கையிலேயே கண் கலங்கியது. விழிகளில் திரண்ட துளிகள் உருண்டுவிடாமல் உள்ளிழுத்தவள்,

அவளின் பேச்சில் ரிஷியின் தன்மானம் சீண்டப்பட, “ஒரு சிறுபெண் தன்னை தாழ்த்தி பேசுவதா?...” நொடியில் நிதானம் இழந்தான்.

“ஓஹ் மேடம்க்கு அவ்வளோ கோவம் வருதோ? உன்னை வளர்த்ததுதான் நல்லா தெரியுதே?...” அவனின் வார்த்தை பிரயோகம் நேத்ராவை உசுப்ப,

“அப்டி என்ன தெரிஞ்சுட்டீங்க?...”

“முன்ன பின்ன தெரியாத என்னை உன்னோட ஆளுன்னு எங்கவீட்ல கூசாம சொன்னவ தானே நீ. நீ வேற எப்டி பேசுவ...”
விழிகள் தெறிக்க அதிர்ந்து பார்த்தாள் நேத்ரா. ரோஷிணிக்கு கூட இப்பேச்சு பிடிக்கவில்லை.

முதலில் திகைத்தாலும் அவனே வலையில் விழுவது போல எடுத்துகொடுத்ததில் கண்கள் மின்ன,

“ஏன் ஸார். நான் சொன்னதுல உங்களுக்கு உடன்பாடில்லைனா அப்போவே இல்லைன்னு மறுத்திருக்கலாமே. எனக்கு ஹெல்ப் பண்ணின ஒரு ஹெல்ப் பண்ண நினச்ச என் வளர்ப்பு இப்டினா, நான் சொன்னதும் இதுதான் சாக்குன்னு ஈன்னு சிரிச்சிட்டு நின்னீங்களே இதுதான் உங்க வளர்ப்போ?...”

இதை ரிஷி எதிர்பார்க்கவே இல்லை. இப்படி தன்னை மடக்குவாள் என நினைத்தா பார்த்தான். நேத்ராவின் முகத்தில் திருப்தி கலந்த வெற்றிக்களிப்பு.

“இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்திடனும் இவளை...” கண்கள் ரத்தமென சிவக்க அவளை நோக்கி இரண்டடி வைத்தான்.
ரிஷியின் முகத்தில் தெரிந்த ஆவேசத்தில் கொஞ்சம் மிரண்ட நேத்ரா அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

“சனியரசன் சட்டையை போட்டுட்டு சாட்டையை கையில எடுக்கிறதுக்குள்ள எஸ் ஆகிடுடி நேத்ரா...” என தனக்குள் கூறிக்கொண்டு ரோஷிணியை இழுத்துக்கொண்டு அறையை விட்டு சிட்டாக பறந்தேவிட்டாள்.

“தப்பிச்சுட்டாளே. நாளுக்கு நாள் இவ அட்டகாசம் தாங்க முடியலை. ம்ஹூம் இவளை இப்படியே விடக்கூடாது. ஒவ்வொரு தடவையும் என்னை வெறுப்பேத்திட்டே போறா. என்னோட குணம் தெரியாம என்கிட்ட மோதிட்டல...”

வஞ்சம் வைத்து பழிதீர்க்க முடிவெடுத்தேவிட்டான். ஆத்திரம் குறையாமல் சுவற்றில் குத்த மீண்டும் கதவு திறக்கும் ஓசையில் வேகமாக திரும்பினான்.

அங்கே நின்றிருந்த தன் இளைய பெரியப்பா மகம் தினேஷை கண்டதும் தன் முகபாவனையை மாற்றி,
“வாடா தினேஷ். என்ன காலேஜ் பக்கம்? காரணமில்லாமல் நீ வரமாட்டியே...”

வந்தவனை வரவேற்று அமரவைத்து அங்கிருந்த ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் புறம் நீட்டியவன் தனக்கும் ஒன்று எடுத்துக்கொண்டான்.

குளிர்ந்த நீரை குடித்ததும் தான் கொஞ்சம் எரிச்சல் அடங்கியது போல இருந்தது மனதிலும், உடலிலும். கைகள் தானாக தடையை தடவிக்கொள்ள வாய் வலிப்பது போல ஒரு பிரம்மை.

“இதுக்கே நமக்கு இப்படி வாய் வலிக்குதே பக்கம் பக்கமா பேசின அவளுக்கு?...” தன் யோசனை தறிகெட்டு செல்ல நொடியில் தலையில் தட்டிக்கொண்டவன்,

“நான் ஒன்னும் பாவப்படலை அவ மேல. இன்னொருக்க வார்த்தைக்கு வார்த்தை பேசட்டும். பேசற வாயை கிழிச்சிடறேன் கிழிச்சு...” சூளுரைத்துக்கொண்டான்.

அதன் பின் தினேஷிடம் பேச ஆரம்பித்தவன் முகம் மீண்டும் கோபத்தை தத்தெடுத்தது. தினேஷ் கிளம்பியதும் தலையை பிடித்துக்கொண்டான்.

“இன்னைக்கு நான் யார் முகத்துல முழிச்சேனோ? நேரமே சரியில்லை. இப்போ யார் கேட்டா எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு. பொண்ணு பார்த்திருக்காறாம் பொண்ணு...”

துரைச்சாமி மேல் கட்டுகடங்காமல் கோபம் பெருகியது.

“இவர் சொன்னா நான் உடனே பார்க்க போய்டனுமா? என்னை எவ்வளவு ஈஸியா நினைச்சுட்டார். இவர் பார்த்துவச்ச பொண்ணை நிச்சயம் கல்யாணம் செய்துக்கமாட்டேன். நோ வே...” பிடிவாதமாக எண்ணிக்கொண்டவன்,

“எல்லாம் இவளால. இவளை பார்த்த அன்னில இருந்து ஆரம்பிச்சது பிரச்சனை. தக்காளி சைஸ்ல இருந்துட்டு என்ன குதி குதிக்கா...”

மீண்டும் சுற்றி சுற்றி நேத்ராவிடம் வந்து நின்றவன் தனக்கு நடக்கும் விருப்பமில்லா செயல்கள் அனைத்திற்கும் காரணமாக அவளையே கொண்டுவந்து நிறுத்தினான்.
-------------------------------------------------------------​
ஹாஸ்டல் ரூமில் தனக்கு முன்னால் இருந்தவற்றை பார்க்க பார்க்க கண்ணீர் கரைபுரண்டது. இப்படி ஒரு தாக்குதலை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சத்யாவிற்கு இதை யார் செய்கிறார்கள் என்பது அனுமானத்திற்கு இடமில்லாமல் தெளிவாகவே தெரிந்தது. ஆனாலும் யாரிடமும் எதுவும் சென்று கூற பயமாக இருந்தது.

அழுகை முட்ட தன்னுடைய குமுறல்களை சைந்தவியிடம் பகிர அவளோ இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை, இது விஷயமாக என்னிடம் பேசவும் செய்யாதே என கண்டிப்போடு கூறிவிட இன்னமும் வெறுத்து போனாள் சத்யா.

நாளுக்கு நாள் சத்யாவின் பொறுமையும் எல்லையை கடக்க ஆனாலும் எதுவும் செய்யமுடியாத கையறுநிலை அவளுக்கு.
எத்தனை யோசித்தும் இதை எப்படி அணுகுவது என அவளுக்கு புரிபடவே இல்லை.

நேத்ராவால் மட்டுமே இதை சரிபண்ணமுடியும் என்பது அவளறிந்ததே. ஆனால் நேத்ரா தான் தன்னிடம் பேசமாட்டாளே. இப்போது தான் செய்த மடத்தனத்தை எண்ணி வருந்தி ஒரு பயனும் இல்லையே.

என்ன ஆனாலும் நேத்ராவிடம் பேசிவிடுவது என முடிவெடுத்தாள் சத்யா.

அலை தீண்டும்...
 
நேத்ராவின் கோபம் நியாயமே.அவளின் நேர்மையாய் இருப்பவர்களின் நியாயமான கோபம்
 
திணற வைக்கிறா
ரிஷிய
சத்யா கலக்கம் வனமலர் கூட்டம்
தான
 

Advertisement

Top