AshrafHameedaT
Administrator
அலை – 9
நேத்ராவின் வேண்டுதலை கடவுள் சரியாக நிறைவேற்றினார் போலும். ரிஷியின் கண்களுக்கு தான் மாட்டிவிட கூடாது என்று நினைத்தாளே தவிர தன்னுடைய கண்களுக்கு ரிஷி பட்டுவிட கூடாது என்று வேண்டவில்லையே. இருவரின் வாக்குவாதத்தின் பின் நாள் தவறாமல் ரிஷி இவளின் பார்வை வட்டத்திற்குள் விழுந்துகொண்டே தான் இருந்தான். பார்க்கும் போதெல்லாம் எள்ளும்கொள்ளும் வெடித்தது இவளுள்.
“என்ன இந்த கடவுள் கொஞ்சம் கூட இரக்கமே காட்டலை. கட்டுமரத்தை கண்ணுல காட்டிட்டே இருக்காரே?. இவனை பார்க்கலைன்னு யார் அழுதா?..” கடுப்பாகிவிட்டாள்.
என்னதான் இவள் அலுத்துக்கொண்டாலும் ரிஷி ஒரு பொருட்டாகவே இவளை பார்க்கவில்லை. எதிர்பட்டாலும் கண்டுகொள்ளாத பாவனையை காட்ட அது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல ஆகிவிட்டது நேத்ராவிற்கு.
“இவன் பெரிய இவன். என்னை பார்க்காத மாதிரி போவானாக்கும். எனக்கு தெரியாதா இப்படி போக...” வெட்டிக்கொண்டாள்.
தானும் இரண்டு நாள் அது போலவே போனாலும் ஏனோ அவனை பார்த்து உள்ளுக்குள் இரண்டு வார்த்தை திட்டி சென்றால் தான் மனதே மட்டுப்படும்.
அன்றும் அப்படி லைப்ரேரியில் வைத்து அவனை காண அவனோ இவளை பார்ப்பதும் லைப்ரேரியனிடம் பேசுவதுமாக இருக்க,
“எப்டி பார்க்கறான் பாரு. இவனை பாக்க சொன்னோமா? வேலையை பார்த்துட்டு போக வேண்டியது தானே?...”
திட்டிக்கொண்டே மீண்டும் அவனை பார்க்க இப்பொது அவளை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த லெட்ஜரில் பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தான். வேண்டுமென்றே எடுத்த புத்தகத்தை மேஜை மேல் படாரென போட அந்த சத்தத்தில் ரிஷி மட்டுமின்றி அங்கிருந்த அனைவருமே இவளை ஒரு நிமிடம் திரும்பி பார்த்துதான் விட்டனர்.
“நான் எதை தூக்கி போட்டா இவனுக்கென்ன? ஏன் பார்த்தான்?...” மீண்டும் திட்டிக்கொண்டே எழுந்து சென்று எடுத்த புத்தகத்தை வைத்துவிட்டு வேறு தேட,
“உன் வீட்ல இருந்து கொண்டுவந்த புக்ஸா இதெல்லாம்? இப்டி தூக்கி எரியுற? உன் கோவத்தையெல்லாம் வேறெங்காவது வச்சுக்கோ. என் கிட்ட வேண்டாம்...”
என்ன நடக்கிறது என உணரும் முன்னே அவளின் பின்னால் நின்று உறுமிவிட்டு சென்றுவிட்டான். அவளோ அவனின் நெருக்கத்தில் முதலில் நிலைகுலைந்து தெளிந்த நிமிடம் அவன் அங்கிருந்தே சென்றுவிட்டான்.
“கட்டுமரம் தப்பிச்சா ஓடற. நின்னா என் கிட்ட நல்லா வாங்கிகட்டனுமின்னு பயந்தே எஸ்கேப் ஆகிட்டல. வச்சிக்கிறேன் உன்னை...” அவனுக்கு தக்க பதிலடி கொடுக்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பொருமி தள்ளினாள்.
அடுத்த வாரம் முழுவதும் இப்படியே செல்ல வார இறுதி மூன்று நாட்கள் ரிஷி கல்லூரிக்கு வரவில்லை.
“என்னடி கரெஸ் காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? மூணு நாளா வரலையே?...” வனமலர் நேத்ராவிடம் இயம்ப,
“ஏன் உன்னால அவரை பாக்காம இருக்க முடியலையாக்கும்?...” வெடுக்கென கேட்க,
“நேத்ரா, என்ன பேச்சு இது? அவ சும்மா தானே கேட்டா, அதுக்கு ஏன் கடுப்படிக்கிற?...” ரோஷிணி அதட்ட தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு நேத்ரா எழுந்து சென்றுவிட்டாள்.
“ரோஷி, நீ எதுக்கு அவளை திட்டுற? அவ கொஞ்ச நாளா டிஸ்டர்ப்டா இருக்கா...” ராகினி சப்போர்ட் செய்து வர,
“ஆளாளுக்கு இப்படி அவளை தூக்கி வைங்க. யாராச்சும் கண்ட்ரோல்ல அவளை வச்சாதான் உண்டு...” ரோஷிணி கூற,
“அதை நீ சொல்லாத. வா போய் அவளை பாப்போம்...” மலர் இருவரையும் இழுத்துக்கொண்டு நேத்ராவை தேடி சென்றாள். ஹாஸ்டல் ரூமிற்கு செல்ல அங்கே சைந்தவி அழுதுகொண்டிருக்க நேத்ரா சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.
“என்னாச்சு நேத்ரா? ஏன் இவ அழறா?...” ராகினி கேட்க,
“நானும் வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கேன். ஒண்ணுமே சொல்லலை. நீயாச்சும் கேளு...” அங்கிருந்து நகர்ந்து அமர ராகினி சைந்தவியிடம் பேச்சுக்கொடுக்க,
“அக்கா வீட்ல ஆயாவுக்கு உடம்பு சரியில்லை போல. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. எனக்கு உடனே எங்க ஆயாவை பாக்கனும்...” மீண்டும் அழுகை.
“உங்க வீட்ல யாரையாச்சும் வர சொல்லி உன்னை கூட்டிட்டு போக சொல்ல வேண்டியது தானே?. இப்போ காலேஜ் கூட லீவ் தானே?...”
“காலேஜ் லீவ் தான் மலர். ஆனா ஹாஸ்டல் பிள்ளைங்களுக்கு பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டு போகனும். அட்லீஸ்ட் அவங்க போன் பண்ணியாச்சும் பர்மிஷன் கேட்கனும்ல...” ரோஷிணி சொல்ல,
“ஆமாமா இங்கதான் இல்லாத ரூல்ஸ் பேசறாங்களே?...” ராகினி சலித்தாள்.
“இது எல்லா காலேஜ்லயும் உள்ள ரூல்ஸ் தான். இங்க மட்டும் புதுசு இல்லை...” மலர் கூற அவளை நேத்ரா மீண்டும் முறைக்க,
“ஹைய்யோ உங்க ஆர்க்யூமெண்டை அப்பறமா வச்சுக்கோங்க. இப்போ இவளுக்கு என்ன பண்ணலாம்?...” ரோஷிணி அவர்களின் சண்டையை அவசரமாக திசைமாற்ற,
“சந்து உன் வீட்டு நம்பர் சொல்லு...” என நேத்ரா கேட்க,
“வீட்ல யாருமில்லையாம்க்கா...” கரகரவென கண்ணீர் வடிய பேசியவளை பார்க்கவே பரிதாபமாகிற்று நேத்ராவிற்கு. அதன் பின் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய மொபைலை எடுத்து ஆன் செய்தவள் வேகமாக ஹாஸ்டல் வார்டன் அறையில் உள்ள நம்பருக்கு அழைப்பு விடுத்தாள்.
ரிங் போகும் சப்தம் கேட்கவும் மற்றவர்களை பார்த்து வாயில் விரலை வைத்து பேசாமல் இருக்கும் படி சைகை செய்தவள் மறுபுறம் அட்டண்டர் குரல் கேட்டதும்,
“ஹலோ நான் காரைக்குடில இருந்து சௌந்தரம் பேசறேன். என் பொண்ணு சைந்தவி பர்ஸ்ட் இயர் பிசிக்ஸ் படிக்குதுங்க. அதுக்கிட்ட அவசரமா பேசனும். கூட்டியாறீங்களா?...”
தொண்டையை கனைத்துக்கொண்டு கட்டை குரலில் பேசிய நேத்ராவை சைந்தவி ஆவேன வாயை பிளந்து பார்த்தாள்.
சிறிது நேரத்தில் சைந்தவியை அழைக்க ஒரு பெண் வர முகத்தை துடைத்துக்கொண்டு செல்லுமாறு நேத்ரா சைகையில் கூற அவளும் அவ்வாறே சென்றாள்.
சைந்தவி போனை எடுத்ததும், “இந்தா புள்ள சந்து ஓன்னு அழு பாப்போம். அழுதுட்டே அட்டண்டர் குணவதிக்கிட்ட போனை குடு...” நேத்ரா கூறியதை போலவே சைந்தவி செய்ததும்,
“அம்மா என் மாமியாருக்கு ரொம்ப முடியாம இருக்குதுங்க. புள்ளையை பாக்கனும்னு தவியா தவிக்குது. லீவ் இல்லையாமே. நாங்க வந்து கூட்டிட்டு போற அளவுக்கு தோது இல்லைங்க. புள்ளையை கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?...”
மறுபுறம் கூறியதிலும் சைந்தவியின் அழுகையிலும் குணவதிக்கு பரிதாப அலை பொங்கியது.
“சரிங்கம்மா, நான் வார்டன் அம்மாகிட்ட பேசிட்டு அனுப்பிவிடறேன். நீங்க கவலைபடாதீங்க...” என்றவர் அதே போல வார்டன் யசோதையிடமும் பேசி சைந்தவியை அனுப்ப கேட்பாஸ் கொடுத்துவிட்டார்.
வேகமாக அறைக்குள் வந்த சைந்தவி, “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா. என்ன செய்யனு தெரியாம இருந்தேன். சரியா ஹெல்ப் பண்ணினீங்க... என,
“சரி சரி நீ கிளம்பு. போய் உங்க பாட்டியை பாரு. தனியா போய்டுவியா? நாங்க யாராச்சும் துணைக்கு வரட்டுமா?...” என்றதும் சைந்தவிக்கு தூக்கிவாரிப்போட்டது.
“இல்லை இல்லை நானே போய்ப்பேன். ஒன்னும் பிரச்சனை இல்லைக்கா. எனக்காக நீங்க சிரமப்பட்டுக்க வேண்டாம்...” படபடவென பேசியவள் வேகமாக ஒரு பேக்கில் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்ப,
“என்னைக்கு வருவ சந்து?...”
“எல்லோரும் கிளம்பவும் வந்துடுவேன்...” சைந்தவி உளற,
“என்ன எல்லாரும் கிளம்பவுமா?...” மலர் கேட்க,
“ஐயோ ஆயா, எங்க ஆயாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாது அக்கா. என்னால தாங்கவே முடியாது...” அழ ஆரம்பிக்க,
“சரி சரி. அழாத. நீ முதல்ல கிளம்பு...” நேத்ரா சொன்னதும் விட்டால் போதுமென வேகமாக கிளம்பிவிட்டாள் சைந்தவி.
நேத்ராவின் வேண்டுதலை கடவுள் சரியாக நிறைவேற்றினார் போலும். ரிஷியின் கண்களுக்கு தான் மாட்டிவிட கூடாது என்று நினைத்தாளே தவிர தன்னுடைய கண்களுக்கு ரிஷி பட்டுவிட கூடாது என்று வேண்டவில்லையே. இருவரின் வாக்குவாதத்தின் பின் நாள் தவறாமல் ரிஷி இவளின் பார்வை வட்டத்திற்குள் விழுந்துகொண்டே தான் இருந்தான். பார்க்கும் போதெல்லாம் எள்ளும்கொள்ளும் வெடித்தது இவளுள்.
“என்ன இந்த கடவுள் கொஞ்சம் கூட இரக்கமே காட்டலை. கட்டுமரத்தை கண்ணுல காட்டிட்டே இருக்காரே?. இவனை பார்க்கலைன்னு யார் அழுதா?..” கடுப்பாகிவிட்டாள்.
என்னதான் இவள் அலுத்துக்கொண்டாலும் ரிஷி ஒரு பொருட்டாகவே இவளை பார்க்கவில்லை. எதிர்பட்டாலும் கண்டுகொள்ளாத பாவனையை காட்ட அது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல ஆகிவிட்டது நேத்ராவிற்கு.
“இவன் பெரிய இவன். என்னை பார்க்காத மாதிரி போவானாக்கும். எனக்கு தெரியாதா இப்படி போக...” வெட்டிக்கொண்டாள்.
தானும் இரண்டு நாள் அது போலவே போனாலும் ஏனோ அவனை பார்த்து உள்ளுக்குள் இரண்டு வார்த்தை திட்டி சென்றால் தான் மனதே மட்டுப்படும்.
அன்றும் அப்படி லைப்ரேரியில் வைத்து அவனை காண அவனோ இவளை பார்ப்பதும் லைப்ரேரியனிடம் பேசுவதுமாக இருக்க,
“எப்டி பார்க்கறான் பாரு. இவனை பாக்க சொன்னோமா? வேலையை பார்த்துட்டு போக வேண்டியது தானே?...”
திட்டிக்கொண்டே மீண்டும் அவனை பார்க்க இப்பொது அவளை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த லெட்ஜரில் பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தான். வேண்டுமென்றே எடுத்த புத்தகத்தை மேஜை மேல் படாரென போட அந்த சத்தத்தில் ரிஷி மட்டுமின்றி அங்கிருந்த அனைவருமே இவளை ஒரு நிமிடம் திரும்பி பார்த்துதான் விட்டனர்.
“நான் எதை தூக்கி போட்டா இவனுக்கென்ன? ஏன் பார்த்தான்?...” மீண்டும் திட்டிக்கொண்டே எழுந்து சென்று எடுத்த புத்தகத்தை வைத்துவிட்டு வேறு தேட,
“உன் வீட்ல இருந்து கொண்டுவந்த புக்ஸா இதெல்லாம்? இப்டி தூக்கி எரியுற? உன் கோவத்தையெல்லாம் வேறெங்காவது வச்சுக்கோ. என் கிட்ட வேண்டாம்...”
என்ன நடக்கிறது என உணரும் முன்னே அவளின் பின்னால் நின்று உறுமிவிட்டு சென்றுவிட்டான். அவளோ அவனின் நெருக்கத்தில் முதலில் நிலைகுலைந்து தெளிந்த நிமிடம் அவன் அங்கிருந்தே சென்றுவிட்டான்.
“கட்டுமரம் தப்பிச்சா ஓடற. நின்னா என் கிட்ட நல்லா வாங்கிகட்டனுமின்னு பயந்தே எஸ்கேப் ஆகிட்டல. வச்சிக்கிறேன் உன்னை...” அவனுக்கு தக்க பதிலடி கொடுக்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பொருமி தள்ளினாள்.
அடுத்த வாரம் முழுவதும் இப்படியே செல்ல வார இறுதி மூன்று நாட்கள் ரிஷி கல்லூரிக்கு வரவில்லை.
“என்னடி கரெஸ் காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? மூணு நாளா வரலையே?...” வனமலர் நேத்ராவிடம் இயம்ப,
“ஏன் உன்னால அவரை பாக்காம இருக்க முடியலையாக்கும்?...” வெடுக்கென கேட்க,
“நேத்ரா, என்ன பேச்சு இது? அவ சும்மா தானே கேட்டா, அதுக்கு ஏன் கடுப்படிக்கிற?...” ரோஷிணி அதட்ட தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு நேத்ரா எழுந்து சென்றுவிட்டாள்.
“ரோஷி, நீ எதுக்கு அவளை திட்டுற? அவ கொஞ்ச நாளா டிஸ்டர்ப்டா இருக்கா...” ராகினி சப்போர்ட் செய்து வர,
“ஆளாளுக்கு இப்படி அவளை தூக்கி வைங்க. யாராச்சும் கண்ட்ரோல்ல அவளை வச்சாதான் உண்டு...” ரோஷிணி கூற,
“அதை நீ சொல்லாத. வா போய் அவளை பாப்போம்...” மலர் இருவரையும் இழுத்துக்கொண்டு நேத்ராவை தேடி சென்றாள். ஹாஸ்டல் ரூமிற்கு செல்ல அங்கே சைந்தவி அழுதுகொண்டிருக்க நேத்ரா சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.
“என்னாச்சு நேத்ரா? ஏன் இவ அழறா?...” ராகினி கேட்க,
“நானும் வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கேன். ஒண்ணுமே சொல்லலை. நீயாச்சும் கேளு...” அங்கிருந்து நகர்ந்து அமர ராகினி சைந்தவியிடம் பேச்சுக்கொடுக்க,
“அக்கா வீட்ல ஆயாவுக்கு உடம்பு சரியில்லை போல. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. எனக்கு உடனே எங்க ஆயாவை பாக்கனும்...” மீண்டும் அழுகை.
“உங்க வீட்ல யாரையாச்சும் வர சொல்லி உன்னை கூட்டிட்டு போக சொல்ல வேண்டியது தானே?. இப்போ காலேஜ் கூட லீவ் தானே?...”
“காலேஜ் லீவ் தான் மலர். ஆனா ஹாஸ்டல் பிள்ளைங்களுக்கு பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டு போகனும். அட்லீஸ்ட் அவங்க போன் பண்ணியாச்சும் பர்மிஷன் கேட்கனும்ல...” ரோஷிணி சொல்ல,
“ஆமாமா இங்கதான் இல்லாத ரூல்ஸ் பேசறாங்களே?...” ராகினி சலித்தாள்.
“இது எல்லா காலேஜ்லயும் உள்ள ரூல்ஸ் தான். இங்க மட்டும் புதுசு இல்லை...” மலர் கூற அவளை நேத்ரா மீண்டும் முறைக்க,
“ஹைய்யோ உங்க ஆர்க்யூமெண்டை அப்பறமா வச்சுக்கோங்க. இப்போ இவளுக்கு என்ன பண்ணலாம்?...” ரோஷிணி அவர்களின் சண்டையை அவசரமாக திசைமாற்ற,
“சந்து உன் வீட்டு நம்பர் சொல்லு...” என நேத்ரா கேட்க,
“வீட்ல யாருமில்லையாம்க்கா...” கரகரவென கண்ணீர் வடிய பேசியவளை பார்க்கவே பரிதாபமாகிற்று நேத்ராவிற்கு. அதன் பின் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய மொபைலை எடுத்து ஆன் செய்தவள் வேகமாக ஹாஸ்டல் வார்டன் அறையில் உள்ள நம்பருக்கு அழைப்பு விடுத்தாள்.
ரிங் போகும் சப்தம் கேட்கவும் மற்றவர்களை பார்த்து வாயில் விரலை வைத்து பேசாமல் இருக்கும் படி சைகை செய்தவள் மறுபுறம் அட்டண்டர் குரல் கேட்டதும்,
“ஹலோ நான் காரைக்குடில இருந்து சௌந்தரம் பேசறேன். என் பொண்ணு சைந்தவி பர்ஸ்ட் இயர் பிசிக்ஸ் படிக்குதுங்க. அதுக்கிட்ட அவசரமா பேசனும். கூட்டியாறீங்களா?...”
தொண்டையை கனைத்துக்கொண்டு கட்டை குரலில் பேசிய நேத்ராவை சைந்தவி ஆவேன வாயை பிளந்து பார்த்தாள்.
சிறிது நேரத்தில் சைந்தவியை அழைக்க ஒரு பெண் வர முகத்தை துடைத்துக்கொண்டு செல்லுமாறு நேத்ரா சைகையில் கூற அவளும் அவ்வாறே சென்றாள்.
சைந்தவி போனை எடுத்ததும், “இந்தா புள்ள சந்து ஓன்னு அழு பாப்போம். அழுதுட்டே அட்டண்டர் குணவதிக்கிட்ட போனை குடு...” நேத்ரா கூறியதை போலவே சைந்தவி செய்ததும்,
“அம்மா என் மாமியாருக்கு ரொம்ப முடியாம இருக்குதுங்க. புள்ளையை பாக்கனும்னு தவியா தவிக்குது. லீவ் இல்லையாமே. நாங்க வந்து கூட்டிட்டு போற அளவுக்கு தோது இல்லைங்க. புள்ளையை கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?...”
மறுபுறம் கூறியதிலும் சைந்தவியின் அழுகையிலும் குணவதிக்கு பரிதாப அலை பொங்கியது.
“சரிங்கம்மா, நான் வார்டன் அம்மாகிட்ட பேசிட்டு அனுப்பிவிடறேன். நீங்க கவலைபடாதீங்க...” என்றவர் அதே போல வார்டன் யசோதையிடமும் பேசி சைந்தவியை அனுப்ப கேட்பாஸ் கொடுத்துவிட்டார்.
வேகமாக அறைக்குள் வந்த சைந்தவி, “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா. என்ன செய்யனு தெரியாம இருந்தேன். சரியா ஹெல்ப் பண்ணினீங்க... என,
“சரி சரி நீ கிளம்பு. போய் உங்க பாட்டியை பாரு. தனியா போய்டுவியா? நாங்க யாராச்சும் துணைக்கு வரட்டுமா?...” என்றதும் சைந்தவிக்கு தூக்கிவாரிப்போட்டது.
“இல்லை இல்லை நானே போய்ப்பேன். ஒன்னும் பிரச்சனை இல்லைக்கா. எனக்காக நீங்க சிரமப்பட்டுக்க வேண்டாம்...” படபடவென பேசியவள் வேகமாக ஒரு பேக்கில் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்ப,
“என்னைக்கு வருவ சந்து?...”
“எல்லோரும் கிளம்பவும் வந்துடுவேன்...” சைந்தவி உளற,
“என்ன எல்லாரும் கிளம்பவுமா?...” மலர் கேட்க,
“ஐயோ ஆயா, எங்க ஆயாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாது அக்கா. என்னால தாங்கவே முடியாது...” அழ ஆரம்பிக்க,
“சரி சரி. அழாத. நீ முதல்ல கிளம்பு...” நேத்ரா சொன்னதும் விட்டால் போதுமென வேகமாக கிளம்பிவிட்டாள் சைந்தவி.