ஆத்மன் அப்போ பிரச்சனை பண்ணினது எல்லாம் சரி ....அவர் அங்கை அம்மாவை விரும்ப எல்லாம் இல்லை....வேற ஒருத்தரை காதல் பண்ணின . ...கல்யாணத்துக்கு முன்னால தற்கொலை பண்ண போய் காதலன் காப்பாத்தி கூட்டிட்டு போய்ட்டான் ....இதுல என்ன தப்பு இருக்கு .....
கல்யாணம் நடந்து தற்கொலை பண்ணி இல்லை வேற பிரச்சனை எல்லாம் வந்து இருந்தா ஆத்மன் எப்படி சமாளிச்சு இருப்பர் ..... அவருக்கு கல்யாணம் நடந்தது தானே ..இப்போ மனைவி குழந்தைகள்னு சந்தோஷமா இருக்கார் தானே ..... இவர்களையும் பழி தீர்த்திட்டார் ....இப்போ மறுபடியும் என்ன ....இத்தனை வருஷம் ஆகி இப்போ இப்படி கிளம்பினால் அது தன்னோட மனைவிக்கு செய்யற துரோகம் இல்லையா ....அவங்க மனசு என்ன பாடு படும் .... அந்த பையன் திலகன் சரியான லூசு ...அப்பாவை தட்டி கேட்காம இவனும் சேர்த்து கூட பண்ணுறான் .....பையன்கள் எப்போவும் அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க .....அப்பா கல்யாணம் பண்ண இருந்தவங்க ஓடி போய் இருந்தா இவனுக்கு என்ன .....
அம்மாவை நினைச்சு அப்பாவை கட்டு படுத்தாம இவனும் சேர்ந்துட்டு ...அசிங்கமா இருக்கு .....
ராஜராஜன் குடும்பத்தார் குட்ட குட்ட குனிஞ்சுக்கிட்டே இருந்தா எப்படி ....ரா.ரா ஒருத்தன் மட்டும் தான் கொஞ்சம் யோசிச்சு நிதானமா இருக்கான்..... அங்கை இவளை எப்படி எடுக்கறதுன்னே தெரியலை .....எல்லோரும் இருக்கிறப்போ ஒரு பேச்சு தனியா இருக்கிறப்போ வேற விதம் .....
வீட்டுக்கு துணையா வந்தவனை கணவனா பார்க்க வேண்டாம் ஒரு சகா மனிதனா கூட பார்க்கலை ....
ரா.ரா பிரிந்து இருந்தாலும் அவளுக்கான மரியாதை கொடுக்கிறான்.... ஜூஸ் வாங்கி வைக்குறான் ....
இந்த பொண்ணு ஒரு டீ போடுன்னு சொன்னா ஆயிரத்து எட்டு கேள்வி கேட்குது ...சோ sad