கரிசல் 14:
“பார்த்திங்களாக்கா...! முகிலன் அவளைப் பார்க்கனும்ன்னே அவனையே சுத்தி சுத்தி வரா...!” என்று திலகா சொல்ல..
“உண்மைதான் திலகா..! நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..! ஆனா சரியான கைகாரியா தான் இருப்பா போல..!” என்று அரசி சொல்ல...
“எதுக்கும் மலர் மதினி கிட்ட சொல்லி..கொஞ்சம் கண்டிச்சு வைக்க சொல்லனும்க்கா..!” என்றார் திலகா.
அவர்கள் பேசிக்கொண்டிருக்க..மலரே அவர்களின் அருகில் வர...
“இந்தாருங்க மதினி..! சொல்றமேன்னு கோவத்துக்கு வராதிக..! அந்த மதி கழுதை என்னமோ முகிலனையே சுத்தி சுத்தி வர மாதிரி தெரியுது. நீங்களும் கண்டிக்கிற மாதிரி தெரியலை..!நாளை பின்ன விஷயம் விவகாரமா மாறுச்சுன்னா...இழப்பு என்னம்மோ உங்களுக்கு தான் பார்த்துக்கங்க..!” என்றனர் ஜாடையில்.
“என்ன மதினி சொல்றிங்க..? நம்ம மதி அப்படி எல்லாம் கிடையாது..! அது மட்டுமில்லாம அவ முகிலனைக் கண்டாலே பயப்படுவா...இன்னைக்கு நான் தான் இவனை அனுப்பிச்சு கூட்டிட்டு வர சொன்னேன்..!” என்று மலர் அவளுக்கு பரிந்து கொண்டு வர...அதைக் கேட்ட இருவருக்கும் முகம் கருத்தது.
“என் வீட்லயும்....பொண்ணு இருக்கு மதினி..! அதுவும் உங்களுக்கு நியாபகத்துல இருந்தா சரி..!” என்று திலகா இடக்காக குத்திப் பேச...
“எனக்கு எல்லா அண்ணன்களும் ஒன்னு தான்...மருமகளுகளும் ஒன்னு தான்..எல்லாரு உறவும் தான் எனக்கு வேணும்..! அண்ணன் தம்பி.. இன்னைக்கு அடிச்சுக்குவிக...நாளைக்கு கூடிக்குவிக...அப்பறம் இடப்பட்டு நான் தான் நிக்கணும்..!” என்று மலரும் சொல்ல..
“நல்லா பேச கத்து வச்சிருக்கிக அண்ணி...! என்னமோ மனசுல பட்டதை மறைக்க முடியலை..அதான் உளறிக் கொட்டிட்டேன்..!” என்று அரசியும் பேச்சை முடிக்க பார்க்க..
திலகாவிற்கு என்னமோ..அந்த பேச்சை முடிக்கும் ஆர்வமே இல்லை போல..அவரின் பார்வை தொடர்ந்து மதியை முறைத்துக் கொண்டிருந்தது.
பொங்கல் வைத்து இறக்கி...அதை கோவிலின் முன் கொண்டு வைக்க.. அங்கு அனைவரின் பொங்கல் பானைகளும் வைக்கப் பட்டிருந்தது.
அப்போது அங்கு வந்த கங்காவும்,செல்வியும்..”ஏய் மதி வாடி..! நாம ராட்டினம் ஏறலாம்..!” என்று கூப்பிட...
“ம்கூம்....எங்கம்மா பார்த்தாங்க...அடி பின்னிடுவாங்க...அது மட்டுமில்லை.. என்கிட்டே கைல காசுமில்ல...!” என்று மதி தொங்கிப் போன முகத்துடன் சொல்ல...
அதான் பார்வதி அத்தை இங்க இல்லைல..நீ வாடி..ஒருவாட்டி மட்டும் ஏறி சுத்திட்டு வந்துடலாம்..! என்று ஆசை காட்டினாள் செல்வி.
“நீ போயிட்டு வா மதி..! நான் காசு தரேன்..!” என்று மலர் சொல்ல...
“பரவாயில்லை அத்தை..!” என்று அப்போதும் மறுத்தாள் மதி.ஆனால் கண்கள் மட்டும் ராட்டினத்தை ஏக்கமாகப் பார்க்க...அதைப் பார்த்த முகிலனுக்குள் ஏதோ அவள் ஆசையை அப்போதே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற உணர்வு தலை விரித்தாட...
“கங்கா,செல்வி..வாங்க நானும் ராட்டினம் சுத்த போறேன்..!” என்று முகிலன் அழைக்க...
“இதோ வரோம் அண்ணா..!” என்று சொன்னவர்கள்...”வாடி மதி..! அதான் முகிலன் அண்ணா இருக்காங்கள்ள...! அவங்க பார்த்துப்பாங்க..! மலர் பெரியம்மா சொல்லுங்க இவகிட்ட..!” என்று சொல்ல..
“போ மதி.!” என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தார் மலர்.
அந்த ராட்டினத்தில் ஏறுவதற்கும்...இளசுகள்,வாண்டுகள் என்று சுற்றி நிற்க...முகிலன் ஒரு பெட்டியில் ஏறிக் கொண்டான்.அவனுடன் இன்னொரு வாலிபனும் இருக்க...அவனுக்கு அடுத்து இறங்கிய பெட்டியில் இவர்கள் மூவரும் ஏறிக் கொண்டனர்.மதி தன் பட்டுப்பாவடையை சுருட்டி.. லாவகமாய் ஒரு மூலையில் அமர...அந்த லாவகத்தைக் கண்ட... முகிலனுக்கு கண்ணை எடுக்க முடியவில்லை.
“இன்னைக்கு என்னமோ எனக்கு ஆகிடுச்சு..! முகிலா...மனச அடக்கு மனச அடக்கு..!” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்க...இவர்களுக்கு மேல் இருந்த பெட்டியில் இருந்தான் முத்து.
மதி ஏறுவதைக் கண்டவன்...”மதி..!” என்று மேல் பெட்டியில் இருந்து கையை அசைக்க...அவனின் குரலில் மேலே அண்ணாந்து பார்த்தவள்..”ஏய் முத்து..! நீ எப்ப ஏறுன..?” என்றாள் சத்தமாய்.
“இப்ப தான்...நீங்க தான் கவனிக்கலை..!” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல...அவர்கள் பேசுவதை அங்கிருந்த சிலர் வேடிக்கை பார்க்க.. முகிலனுக்கு அவ்வளவு நேரம் இருந்த நிம்மதி போய்..எரிச்சல் வந்து புகுந்து கொண்டது மனதில்.
முகிலனின் சிடுசிடுத்த முகத்தைப் பார்த்த முத்துவுக்கு அப்படி ஒரு சந்தோசம்...! அவனை இன்னமும் கடுப்பேற்ற எண்ணியவன்...
“நான் கல்லை கீழ வைக்குறேன்..! எங்க நீ எடு பார்ப்போம்..!” என்றான் மதியிடம்.
“கண்டிப்பா...நான் எடுத்துக்காட்டுறேன் பாரு..!” என்றாள் அவளும்.
அப்போதெல்லாம் ராட்டினம் சுற்றும் போது..ஒரு பெட்டியில் இருப்பவர் கல்லையோ,பூவையோ வைத்து விட்டு போக...பின்னால் வரும் பெட்டியில் இருப்பவர்கள் அதை லாவகமாய் எடுக்க வேண்டும்...அதை உற்சாகத்துடன் விளையாடுவர்.மதியும் அதே உற்சாகத்தில் முகிலனை கவனிக்க மறந்தாள்.
ராட்டினம் சுற்ற ஆரம்பிக்க..விசில் சத்தங்களும்..சிரிப்பு சத்தங்களும் அரங்கேற....முத்து கல்லை தரையில் வைத்து விட்டு போக...பின்னால் மதி அதை குனிந்து லாவகமாய் எடுக்க...அத்தனை சந்தோஷமும்,பூரிப்பும் அவள் முகத்தில்.
சுற்றி இருப்பவர்களின் மனதையும்,அதில் ஓடும் வக்கிர எண்ணங்களையும்,முகிலனின் மனதில் இருந்த உரிமை உணர்வையும் அறியாமல்...அந்த வயதிற்கே உரிய விளையாட்டுத் தனத்துடன்...அதை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் மதி.
முதலில் இதை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்த முகிலன் ஒரு நிலைக்கு மேல தாங்காமல்...முத்து வைத்து சென்ற கல்லை அவன் எடுக்க...அதைப் பார்த்து அவனை முறைத்தான் முத்து.
“என்ன முறைப்பு வேண்டி கிடக்கு..! இந்த கல்லை விட்டே எரிஞ்சுடுவேன்...!” என்று சைகையால் முத்துவிடம் சொன்னான் முகிலன்.
“முடுஞ்சா எறி பார்ப்போம்..!” என்று அவனும் பார்வையால் சவால் விட...அப்போது ராட்டினத்தின் வேகம் குறைய...அவர்களின் சண்டையும் ஒரு முடிவுக்கு வந்தது.
“பெட்டி மேல போறப்ப எல்லாம்..அடிவயித்துல என்னமோ பன்னுச்சுல கங்கா..!” என்று செல்வி கேட்க..
“ஆமாடி..! நல்லா இருந்தது...! சாயங்காலமும் வந்து ராட்டினம் சுத்தலாமா..?” என்று கங்கா கேட்க...
“எங்க எங்கம்மா அஞ்சு ரூபா தான் தந்துச்சு...இன்னு கேட்ட அவ்வளவு தான்...!” என்று செல்வி தன் இயலாமையை எதார்த்தமாக சொன்னாள்.
“சரி விடு செல்வி..!” என்று கங்கா தேற்ற....இவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் பஞ்சு மிட்டாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி பார்த்துட்டு இருக்க...?” என்று கேட்க...
“இல்லை பஞ்சுமிட்டாய்...சூப்பரா இருக்கும்ல...!” என்று மதி சொல்லிக் கொண்டிருக்க...அவர்கள் மூவரிடமும் மூன்று பஞ்சுமிட்டாய் கவரை நீட்டினான் முகிலன்.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..!” என்று அவர்கள் இருவரும் வாங்கிக் கொள்ள...மதி மட்டும் வாங்காமல் நின்றாள்.
“இந்தா பிடி..!” என்றான்.
“வேண்டாம்..!” என்றாள்.
“என்ன லந்தா..! ஒழுங்கா பிடி..!” என்று அதட்டல் போட..அந்த அதட்டலில் மிரண்டவள்..பட்டென்று வாங்கிக் கொண்டாள்.
“பார்த்திங்களாக்கா...! முகிலன் அவளைப் பார்க்கனும்ன்னே அவனையே சுத்தி சுத்தி வரா...!” என்று திலகா சொல்ல..
“உண்மைதான் திலகா..! நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..! ஆனா சரியான கைகாரியா தான் இருப்பா போல..!” என்று அரசி சொல்ல...
“எதுக்கும் மலர் மதினி கிட்ட சொல்லி..கொஞ்சம் கண்டிச்சு வைக்க சொல்லனும்க்கா..!” என்றார் திலகா.
அவர்கள் பேசிக்கொண்டிருக்க..மலரே அவர்களின் அருகில் வர...
“இந்தாருங்க மதினி..! சொல்றமேன்னு கோவத்துக்கு வராதிக..! அந்த மதி கழுதை என்னமோ முகிலனையே சுத்தி சுத்தி வர மாதிரி தெரியுது. நீங்களும் கண்டிக்கிற மாதிரி தெரியலை..!நாளை பின்ன விஷயம் விவகாரமா மாறுச்சுன்னா...இழப்பு என்னம்மோ உங்களுக்கு தான் பார்த்துக்கங்க..!” என்றனர் ஜாடையில்.
“என்ன மதினி சொல்றிங்க..? நம்ம மதி அப்படி எல்லாம் கிடையாது..! அது மட்டுமில்லாம அவ முகிலனைக் கண்டாலே பயப்படுவா...இன்னைக்கு நான் தான் இவனை அனுப்பிச்சு கூட்டிட்டு வர சொன்னேன்..!” என்று மலர் அவளுக்கு பரிந்து கொண்டு வர...அதைக் கேட்ட இருவருக்கும் முகம் கருத்தது.
“என் வீட்லயும்....பொண்ணு இருக்கு மதினி..! அதுவும் உங்களுக்கு நியாபகத்துல இருந்தா சரி..!” என்று திலகா இடக்காக குத்திப் பேச...
“எனக்கு எல்லா அண்ணன்களும் ஒன்னு தான்...மருமகளுகளும் ஒன்னு தான்..எல்லாரு உறவும் தான் எனக்கு வேணும்..! அண்ணன் தம்பி.. இன்னைக்கு அடிச்சுக்குவிக...நாளைக்கு கூடிக்குவிக...அப்பறம் இடப்பட்டு நான் தான் நிக்கணும்..!” என்று மலரும் சொல்ல..
“நல்லா பேச கத்து வச்சிருக்கிக அண்ணி...! என்னமோ மனசுல பட்டதை மறைக்க முடியலை..அதான் உளறிக் கொட்டிட்டேன்..!” என்று அரசியும் பேச்சை முடிக்க பார்க்க..
திலகாவிற்கு என்னமோ..அந்த பேச்சை முடிக்கும் ஆர்வமே இல்லை போல..அவரின் பார்வை தொடர்ந்து மதியை முறைத்துக் கொண்டிருந்தது.
பொங்கல் வைத்து இறக்கி...அதை கோவிலின் முன் கொண்டு வைக்க.. அங்கு அனைவரின் பொங்கல் பானைகளும் வைக்கப் பட்டிருந்தது.
அப்போது அங்கு வந்த கங்காவும்,செல்வியும்..”ஏய் மதி வாடி..! நாம ராட்டினம் ஏறலாம்..!” என்று கூப்பிட...
“ம்கூம்....எங்கம்மா பார்த்தாங்க...அடி பின்னிடுவாங்க...அது மட்டுமில்லை.. என்கிட்டே கைல காசுமில்ல...!” என்று மதி தொங்கிப் போன முகத்துடன் சொல்ல...
அதான் பார்வதி அத்தை இங்க இல்லைல..நீ வாடி..ஒருவாட்டி மட்டும் ஏறி சுத்திட்டு வந்துடலாம்..! என்று ஆசை காட்டினாள் செல்வி.
“நீ போயிட்டு வா மதி..! நான் காசு தரேன்..!” என்று மலர் சொல்ல...
“பரவாயில்லை அத்தை..!” என்று அப்போதும் மறுத்தாள் மதி.ஆனால் கண்கள் மட்டும் ராட்டினத்தை ஏக்கமாகப் பார்க்க...அதைப் பார்த்த முகிலனுக்குள் ஏதோ அவள் ஆசையை அப்போதே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற உணர்வு தலை விரித்தாட...
“கங்கா,செல்வி..வாங்க நானும் ராட்டினம் சுத்த போறேன்..!” என்று முகிலன் அழைக்க...
“இதோ வரோம் அண்ணா..!” என்று சொன்னவர்கள்...”வாடி மதி..! அதான் முகிலன் அண்ணா இருக்காங்கள்ள...! அவங்க பார்த்துப்பாங்க..! மலர் பெரியம்மா சொல்லுங்க இவகிட்ட..!” என்று சொல்ல..
“போ மதி.!” என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தார் மலர்.
அந்த ராட்டினத்தில் ஏறுவதற்கும்...இளசுகள்,வாண்டுகள் என்று சுற்றி நிற்க...முகிலன் ஒரு பெட்டியில் ஏறிக் கொண்டான்.அவனுடன் இன்னொரு வாலிபனும் இருக்க...அவனுக்கு அடுத்து இறங்கிய பெட்டியில் இவர்கள் மூவரும் ஏறிக் கொண்டனர்.மதி தன் பட்டுப்பாவடையை சுருட்டி.. லாவகமாய் ஒரு மூலையில் அமர...அந்த லாவகத்தைக் கண்ட... முகிலனுக்கு கண்ணை எடுக்க முடியவில்லை.
“இன்னைக்கு என்னமோ எனக்கு ஆகிடுச்சு..! முகிலா...மனச அடக்கு மனச அடக்கு..!” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டிருக்க...இவர்களுக்கு மேல் இருந்த பெட்டியில் இருந்தான் முத்து.
மதி ஏறுவதைக் கண்டவன்...”மதி..!” என்று மேல் பெட்டியில் இருந்து கையை அசைக்க...அவனின் குரலில் மேலே அண்ணாந்து பார்த்தவள்..”ஏய் முத்து..! நீ எப்ப ஏறுன..?” என்றாள் சத்தமாய்.
“இப்ப தான்...நீங்க தான் கவனிக்கலை..!” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல...அவர்கள் பேசுவதை அங்கிருந்த சிலர் வேடிக்கை பார்க்க.. முகிலனுக்கு அவ்வளவு நேரம் இருந்த நிம்மதி போய்..எரிச்சல் வந்து புகுந்து கொண்டது மனதில்.
முகிலனின் சிடுசிடுத்த முகத்தைப் பார்த்த முத்துவுக்கு அப்படி ஒரு சந்தோசம்...! அவனை இன்னமும் கடுப்பேற்ற எண்ணியவன்...
“நான் கல்லை கீழ வைக்குறேன்..! எங்க நீ எடு பார்ப்போம்..!” என்றான் மதியிடம்.
“கண்டிப்பா...நான் எடுத்துக்காட்டுறேன் பாரு..!” என்றாள் அவளும்.
அப்போதெல்லாம் ராட்டினம் சுற்றும் போது..ஒரு பெட்டியில் இருப்பவர் கல்லையோ,பூவையோ வைத்து விட்டு போக...பின்னால் வரும் பெட்டியில் இருப்பவர்கள் அதை லாவகமாய் எடுக்க வேண்டும்...அதை உற்சாகத்துடன் விளையாடுவர்.மதியும் அதே உற்சாகத்தில் முகிலனை கவனிக்க மறந்தாள்.
ராட்டினம் சுற்ற ஆரம்பிக்க..விசில் சத்தங்களும்..சிரிப்பு சத்தங்களும் அரங்கேற....முத்து கல்லை தரையில் வைத்து விட்டு போக...பின்னால் மதி அதை குனிந்து லாவகமாய் எடுக்க...அத்தனை சந்தோஷமும்,பூரிப்பும் அவள் முகத்தில்.
சுற்றி இருப்பவர்களின் மனதையும்,அதில் ஓடும் வக்கிர எண்ணங்களையும்,முகிலனின் மனதில் இருந்த உரிமை உணர்வையும் அறியாமல்...அந்த வயதிற்கே உரிய விளையாட்டுத் தனத்துடன்...அதை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் மதி.
முதலில் இதை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்த முகிலன் ஒரு நிலைக்கு மேல தாங்காமல்...முத்து வைத்து சென்ற கல்லை அவன் எடுக்க...அதைப் பார்த்து அவனை முறைத்தான் முத்து.
“என்ன முறைப்பு வேண்டி கிடக்கு..! இந்த கல்லை விட்டே எரிஞ்சுடுவேன்...!” என்று சைகையால் முத்துவிடம் சொன்னான் முகிலன்.
“முடுஞ்சா எறி பார்ப்போம்..!” என்று அவனும் பார்வையால் சவால் விட...அப்போது ராட்டினத்தின் வேகம் குறைய...அவர்களின் சண்டையும் ஒரு முடிவுக்கு வந்தது.
“பெட்டி மேல போறப்ப எல்லாம்..அடிவயித்துல என்னமோ பன்னுச்சுல கங்கா..!” என்று செல்வி கேட்க..
“ஆமாடி..! நல்லா இருந்தது...! சாயங்காலமும் வந்து ராட்டினம் சுத்தலாமா..?” என்று கங்கா கேட்க...
“எங்க எங்கம்மா அஞ்சு ரூபா தான் தந்துச்சு...இன்னு கேட்ட அவ்வளவு தான்...!” என்று செல்வி தன் இயலாமையை எதார்த்தமாக சொன்னாள்.
“சரி விடு செல்வி..!” என்று கங்கா தேற்ற....இவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் பஞ்சு மிட்டாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி பார்த்துட்டு இருக்க...?” என்று கேட்க...
“இல்லை பஞ்சுமிட்டாய்...சூப்பரா இருக்கும்ல...!” என்று மதி சொல்லிக் கொண்டிருக்க...அவர்கள் மூவரிடமும் மூன்று பஞ்சுமிட்டாய் கவரை நீட்டினான் முகிலன்.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..!” என்று அவர்கள் இருவரும் வாங்கிக் கொள்ள...மதி மட்டும் வாங்காமல் நின்றாள்.
“இந்தா பிடி..!” என்றான்.
“வேண்டாம்..!” என்றாள்.
“என்ன லந்தா..! ஒழுங்கா பிடி..!” என்று அதட்டல் போட..அந்த அதட்டலில் மிரண்டவள்..பட்டென்று வாங்கிக் கொண்டாள்.