இன்னும் நாலு அத்தியாயங்களோட கதை முடிவுக்கு வரபோது! கதை முடியும்போது படிச்சுக்கலாம்ன்னு யாராவது இருந்தா ஸ்டார்ட் பண்ணுங்க!!!
அத்தியாயம் 20
தன் பெற்றோர் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிய முகத்துடன் அமர்ந்திருந்தான் ரிஷி.
"சாப்பிடாச்சுன்னா போய் படு" என விஷ்வநாதன் கடுமையாய் சொல்லவும் அரை மனதுடன் எழுந்து மாடிக்கு சென்றான்.
அவன் அறைக்கு சென்று உறங்க தோன்றாமல், நேரே சென்று ராமின் அறை கதவை தட்டிவிட்டு காத்திருந்தான் ரிஷி.
கதவை திறந்த மைதிலி, "வா ரிஷி! நானே உன்னை கூப்பிடனும்ன்னு நினைச்சேன்... ராமோட லேப்டாப் பாஸ்வேர்ட் தெரியுமா உனக்கு? எனக்கு மெயில் செக் பண்ணனும்..." என கேட்டாள்.
"ம்ம்ம் ஒரு நிமிஷம் அக்கா... சார்ஜ் போட்டுக்கோங்க, ரொம்ப நாளா அப்டியே இருக்கு!!" என அவள் கேட்டதை செய்து முடித்து அவள் கைகளில் லேப்டாப்பை கொடுத்தான் ரிஷி.
அதை வாங்கி படுக்கையின் மீது வைத்துவிட்டு, "சொல்லு ரிஷி.. என்கிட்ட என்ன சொல்லனும்ன்னு வந்த?" என்றாள்.
"அக்கா? உங்களுக்கு எப்படி?"
"இந்த நேரத்துல, எதுவும் முக்கியமான விஷயம் இல்லாம நீ எதுக்கு வர போற!? என்னனு சொல்லு?"
"எனக்கு என்னனு சரியா தெரியல அக்கா. நீங்க போனதும் அம்மா உங்களை காட்டி அப்பா கிட்ட ஏதோ பதட்டமா சொல்ல வந்தாங்க... அப்பா எனக்கு தெரியும்ன்னு சொல்லி அம்மாவை அடக்கிட்டாரு... "
"இவ்ளோதானா? ஒன்னும் இருக்காது... சும்மா சொல்லிருப்பாங்க.. நீ போய் தூங்கு" என அலட்டிக்கொள்ளாமல் சொன்னாள் மைதிலி.
"அக்கா... அவங்க ரொம்ப கோவமா இருக்காங்க... ஒருவேளை நீங்க இங்க வந்த நோக்கம் தெரிஞ்சுருக்குமோ?"
"தெரிஞ்சா என்ன? பார்த்துக்கலாம்..."
"இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ தைரியம் ஆகாது அக்கா... எதுக்கும் நம்ம எச்சரிக்கையாவே இருப்போம்... குட் நைட் அக்கா..." என சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அவன் நகர்ந்ததும் லேப்டாப்பை கையில் எடுத்தவள் இன்பமாய் அதிர்ந்தாள்.
"ரிஷி? இங்க வாயேன்...!!! குயிக்..." மைதிலியின் குரலில் வேகமாய் வந்தான் ரிஷி.
"என்னாச்சு அக்கா?"
"இங்க பாரு! இது எப்படி?"
லேப்டாபின் திரையை பார்த்த ரிஷிக்குமே அதிர்ச்சியான குழப்பம் தான். ஏனெனில் மடிக்கணினியின் திரையை அலங்கரித்திருந்தது மைதிலியின் கருப்பு வெள்ளை ஓவியம்.
"இது எப்படின்னு தெரியலையே!!!" என குழப்பத்துடன் சொன்னான் ரிஷி அதையே உற்று நோக்கியபடி.
மைதிலியும் தன் கண்ணை திரையில் இருந்து பிரிக்காது அதையே பார்த்தடி நின்றாள்.
"அக்கா? இங்க பாருங்க... ராமோட கையெழுத்து... இதை அவன்தான் வரைஞ்சுருக்கான் போல...." படத்தின் கீழே இருந்த கையெழுத்தை காட்டி ஆச்சரியமாய் சொன்னான்.
"ஐ கான்ட் பிலீவ் திஸ் ரிஷி! என்னை முன்னாடியே ராம்க்கு தெரியுமா? எனக்கு அவனை பார்த்தமாறி நியாபகமே இல்லையே!? நான் அவனை மறந்திருப்பேனோ ரிஷி?" ஆச்சர்யமும் படப்படப்புமாய் கேட்டாள் மைதிலி.
அந்நேரம் குளியல் அறையிலிருந்து ராம் வெளிவர, அவனிடம் ஓடி சென்றவள், "ராம்? என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா? ஹேவ் வி மெட் பிபோர்? நம்ம பேசிருக்கோமா?" என அடுக்கடுக்காய் கேட்டாள்.
"அக்கா? அவனுக்கு இப்போ ஒண்ணுமே தெரியாது... அவன்கிட்ட கேட்டா எப்படி சொல்லுவான்?" என ரிஷி நிதர்சனத்தை சொல்லவும் காற்று போன பலூன் போல ஆனாள் மைதிலி.
"கண்டிப்பா உங்களை அவனுக்கு தெரிஞ்சுருக்கும் அக்கா... எங்கயோ பார்த்துருக்கான். என்கிட்ட கூட சொல்லல பாருங்க...!!!!" என ஆச்சர்யமாய் சொன்னான் ரிஷி.
"என்ன மையு?? என்னாச்சு!!!" என மைதிலியை கேட்டான் ராம்.
"ராம்? இது உன்னோட லேப்டாப். இதுல என் போட்டோ இருக்கு... நீதான் வரைஞ்சுருக்க... உன்னோட சைன் இருக்கு... உனக்கு ஏதும் நியாபகம் வருதா? யோசிடா!!" என மைதிலி சொன்னதும் யோசிப்பதை போல தாடை தட்டியவனை எதிர்பார்ப்புடன் நோக்கினாள் மைதிலி.
"போ மையு.. நியாபகம் வரல..." என சொல்லிவிட்டு மெத்தையில் 'பொத்' என விழுந்து கொண்டான்.
அவனை முறைத்து கொண்டு நின்றவளை பார்த்து, "ஹாஹா... நான் தான் சொன்னேன்ல அக்கா!!! விடுங்க... பையன் உங்களை பார்த்ததும் விழுந்துட்டான் போல... என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டான்... சரி ஆனதும் இருக்கு அவனுக்கு... சரி அக்கா.. நான் கிளம்புறேன்.. குட் நைட் ராம்!!" என சொல்லிக்கொண்டு நகர்ந்தான் ரிஷி.
அவன் சென்றதும் மடிக்கணினி திரையில் ஒளிர்ந்த தன்னையே பார்த்து கொண்டு மெத்தையில் அமர்ந்து இருந்தாள் மைதிலி.
‘நினைவு திரும்பினால் எங்கே தன்னை மறந்துபோவானோ என்ற பயம் அவள் அடிமனதில் கரையானை அரித்துக்கொண்டிருக்க, ஒரே நொடியில் அத்தனையும் சிதறி தூள்தூளானதை போல இருந்தது. ‘என் ராம் என்னை பிரிய மாட்டான்’ என்ற நம்பிக்கை வானளவு உயர்ந்தது.
படுத்திருந்த ராம், மெல்ல எழுந்து அமர்ந்திருந்தவளின் பின்புறமாக நகர்ந்து அவன் கழுத்துவளைவில் முகம் வைத்தான்.
"மையு!!" மோனநிலை கலையாது இருந்தாள்.
"சொல்லு ராம்....!"
"என்னோட கோச்சிங் கிளாஸ் முடிஞ்சுருச்சா?"
"எந்த கிளாஸ்?"
"ம்ச்.. போ மையு.. எப்பபாரு மறந்து போற! கோச்சிங் கிளாஸ் முடிச்சுட்டு தான் என்னை கிஸ் பண்ணனும்னு சொன்ன தானே முன்னாடி?"
"போடா!!!"
"ம்ஹும்.. ம்ஹும்ம்...."
அதற்கு மேல் ஏதும் சொல்லாது ராம் தன்னை எங்கே பார்த்திருக்க கூடும் என்ற எண்ணத்திலேயே இருந்தாள் மைதிலி. அந்த எண்ணமே ஒருவித மயக்கத்தை கொடுத்தது அவளுக்கு.
கழுத்து வளைவில் வைத்திருந்த தன் முகத்தை மெல்ல அசைத்தான் ராம். அவன் சீராக்கப்பட்ட மீசை, அவளுக்கு குறுகுறுப்பு மூட்ட, மெல்ல நெளிந்தாள். கண்களை திரையில் இருந்து விலக்காமலே!
தன் வலது கையால் அவள் இடையையும், இடது கையை அவள் கழுத்தின் கீழும் வைத்து தன்னோடு இறுக்கமாய் சிறைசெய்துகொண்டான் ராம்.
கழுத்திருலிருந்த தன் முகத்தை அவள் மேல் உரசியபடியே நிமிர்த்தியவன், அவன் கூச்சத்தில் நெளிவதையும் பொருட்படுத்தாது, அவளது வலப்புற காது மடலில் ஊதியபடி, தன் கூர்மூக்கால் உரசினான்.
"ரா...ம்....." தன் காதுக்கே கேட்காத அளவுக்கு மெதுவாய் அழைத்தாள் மையு, கண்களை மூடியபடி.
அவளுக்கு பதிலாய் "ம்ம்ம்" என சொன்னபடி தன் இரு கைகளால் அவளை மேலும் இறுக்கினான் ராம்.
மடியில் இருந்த மடிக்கணினி நழுவி கீழே விழுந்தது.
"ரா.....ம்......"
அவள் மேலும் சிணுங்க, அவனுக்கு இடையுறாய் இருந்த அவள் குழலை, நகர்த்தி முன்பக்கம் அனுப்பிவிட்டு, திரை விலக்கிய பளிங்காய் இருந்த அவள் பின்னங்கழுத்தில் அவன் முகம் புதைத்து கொண்டான் ராம்.
அறையின் குளுமையையும் மீறி இருவர் உடலிலும் வெப்பம் தகிக்க, நடுக்கம் தாளாமல் அவன் மீதே சாய தொடங்கினாள் மைதிலி.
மடியில் விழுந்தவளை கையோடு ஏந்தி, முகம் நோக்கியவன், மூடிய அவள் விழிகளில் இதழ் பதித்து நிமிர்ந்தான்.
அவள் கைகள் அவன் கழுத்தோடு மாலையாய் கோர்த்திருக்க, அவள் முகம் அவனுக்கு வெகு அருகில் இருந்து இம்சித்தது.
கண்களை மூடிக்கொண்டு அவனோடு ஒன்றியிருந்தவளை மேலும் இறுக்கிக்கொண்டவன், அவள் கன்னத்தோடு தன் கன்னம் இழைத்தான். இருவர் அணைப்பும் காற்றுக்கும் வழி விடாமல் இறுக தொடங்க, ராம் கண்கள் அவளின் சிவந்த அதரங்களை கண்டுகொண்டது.
அவளின் கீழுதடு, அவனிடம் ஏதோ கதைக்க, அதனிடம் பதில் சொல்ல அருகில் விரைந்தான்.
இருவருக்கும் இடையே நூலளவு இடைவெளி மட்டுமே இருக்க, அதை நிரப்பும் வேகத்தில் அருகே சென்ற நேரம்...!
"படார் ... படார்... படார்......."
கதவின் மீது விழுந்த தொடர்ந்த மூன்று அடி, நிசப்தமாயிருந்த அந்த அறை முழுதும் ஓங்கி ஒலித்தது.
திடீரென கேட்ட அந்த பலத்த சத்தத்தில், இருவருக்குமே தூக்கி வாரி போட்டது. அதுவரை இருந்த மோனநிலை கலைய, தான் இருக்கும் நிலை உணர்ந்து பதறி எழுந்தாள் மையு.
ராமிற்குமே சில நொடி வரை இருந்த ஏகாந்த வலை அறுபட, மனதை சட்டென ஒரு வெற்றிடம் சூழ்ந்து கொண்டதை போல உணர்ந்தான். என்னவென்று அதை சொல்ல தெரியாமல் மெத்தையில் முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
தன் இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்து, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர, காற்றை உதடு குவித்து ஊதி தள்ளினாள்.
மீண்டும் கதவு 'பட பட'வென அடிக்க, 'இதோ வரேன்' என சொல்லிவிட்டு எழுந்து நின்றவளின் கால்கள் பலமின்றி துவள்ந்தது.
அருகில் இருந்த கண்ணாடியில் தன்னை சரிசெய்துகொண்டு திரும்ப, மெத்தையில் ராம் தலையணையோடு முட்டிக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது.
முகத்தில் இருந்த கன்னச்சிவப்பை மறைக்க முயன்றபடி கதவை திறந்தாள் மையு.
வாசலில் யாரும் இல்லாததை கண்டு குழம்பினாள்.
'இடி இடிக்குறமாறி கதவை தட்டிட்டு.....!!! ஒருத்தரும் இல்ல..ஹும்'
அவள் கதவை சாற்ற எத்தனித்தபோது வாயிலின் இடப்பக்கமிருந்து வெளிவந்து 'பேபபப' என மைதிலியிடம் கத்தினான் கௌதம்.
அசராமல் நின்றவளை கண்டு, "அண்ணன் உன்கிட்ட விளையாடுறேன் தங்கச்சி... பயந்துட்டியோ!! பேய் பிசாசை பார்த்த மாறி நிக்குற!?" என்றான் பல்லை காட்டிக்கொண்டு.
கௌதம் அறையின் உள்ளே செல்ல 'ஹும்ம்' என்ற வேக மூச்சுடன் அவனை பின் தொடர்ந்தாள் மையு.
வாசலில் கௌதம் குரல் கேட்டதுமே வெறிகொண்டு எழுந்து அமர்ந்தான் ராம்.
"மச்சான்! செம்ம தூக்கம் போல.. கண்ணு செவந்து இருக்கு...!!"
ராமின் கண்களில் கௌதம் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி போலவே தெரிந்தான். எல்லை கோட்டை தாண்டி அத்துமீறி நுழைந்தவனை மனதிற்குள் ஏகே47 கொண்டு சல்லடையாக்கி கொண்டிருந்தான் ராம்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவனை வெறித்துக்கொண்டிருந்த ராமின் அருகே சென்று அமர்ந்த கௌதம், "அந்த லட்சுமி ஆன்ட்டி இருக்காங்கள்ளடா! எனக்கு பாதாம் பால் கொடுத்தாங்க. செம்ம டேஸ்ட். தங்கச்சிக்கு கொடுத்தீங்கலான்னு கேட்டேன்.. 'அவங்க கதவடச்சுடாங்க, அதனால தொல்லை பண்ணல..'ன்னு சொல்றாங்க.." என்றான்.
ஒன்றும் சொல்லாது அவனையே பார்த்து (முறைத்து) கொண்டிருந்தான் ராம்.
"விடுவேனா நான்? சண்டை போட்டு ரெண்டு கிளாஸ் கொண்டு வந்துட்டேன்ல?! இந்தா மச்சான்... தெம்பா குடி... தங்கச்சி? இது உனக்கு..." இரு டம்பளர்களை அவன் நீட்ட,
"இதுக்கு தான் கதவை உடைக்குற அளவுக்கு தட்டுனீங்களா?" மைதிலிக்கே அவன் மீது கோவம் வந்தபோது ராமை பற்றி சொல்லவே வேண்டாம். கொலைவெறியில் இருந்தான்.
"ஹே என்னடா லேப்டாப்பை கீழ போட்டு வச்சுறுக்கீங்க? ஏதும் சண்டையா?" என சொல்லிக்கொண்டு அதை மேசை மீது எடுத்து வைத்தான் கௌதம்.
"நாங்க குடிச்சுக்குறோம் அண்ணா... நீங்க போய் தூங்குங்க....!!!" என நாசூக்காக அவனை வெளிதள்ள முயன்றாள்.
"பரவால்லம்மா.. தூக்கம் வரல..." என பெரிய மனதுடன் மறுத்தான் கௌதம்.
"எங்களுக்கு தூங்கணும்... இடத்தை காலி பண்ணு.." கௌதமிடம் அடக்கப்பட்ட கோவகுரலில் சொன்னான் ராம்.
"ஓ... சரி மச்சான்... நீங்க தூங்குங்க... நான் கிளம்புறேன்..."
கௌதம் வெளியேறியதும் அந்த அறை முழுதும் பழைய நிசப்தம் நிலவ, முன்பு நிகழ்ந்ததெல்லாம் கண்முன் தோன்றவும், மறைந்திருந்த அவள் கன்னசிவப்பு மெல்ல எட்டிப்பார்த்தது.
புதுவித தயக்கம் அவளை சூழ, ராமை நிமிர்ந்து பார்க்கவே வெட்கம் வந்து தடையிட்டது.
'என்னடா இது தொல்லையா இருக்கு' தனக்கே தன் செய்கை அந்நியமாய் பட, தனக்குள் கேட்டுக்கொண்டாள் மையு. கெளதம் கொடுத்து சென்ற பாதாம் பாலை இருவரும் பருகினர். இயல்பான சூழ்நிலை இருந்திருந்தால் ‘லட்சுமி கொடுத்தனுப்பியது’ என்றதுமே சுதாரித்திருப்பர். இப்போதிருக்கும் ஏகாந்த நிலை எதையும் யோசிக்க விடாமல் செய்துவிட்டது.
மனதை திடப்படுத்தி, ஒருவாறாக நிமிர்ந்து எதிரில் இருந்த ராமை நோக்கினாள் மையு. தன்னையே பார்த்தவாறு அமர்ந்திருக்கும் ராமை கண்டதும், அவள் நுரையீரல் சில நொடி வேலை நிறுத்தம் செய்தது. சட்டென குனிந்து கொண்டாள்.
'ஹோ காட்! திஸ் ஸ் நாட் மி, ஹய்யோ' என சொல்லிக்கொண்டாள் மையு.
ராம் எழுந்து நிற்பது அவளுக்கு தெரிந்தாலும் குனிந்த தலை நிமிராது உதட்டை கடித்து கொண்டு நின்றாள் மையு.
'டெய்லி இவனை தானே பார்க்குறேன்... இன்னைக்கு மட்டும் என்ன ஆச்சு எனக்கு...'
நெருங்கி வந்தவன், "மையு? ஏன் என்னை பார்க்க மாட்டுற? பாரு மையு!" என்றான் ஏக்கத்தோடு.
அப்போதும் நிமிராது நின்றவளின் முகத்தை கையில் ஏந்தி தன்னை பார்க்க செய்தவன் தன் முகத்தருகே கொண்டு வந்து, "கோவமா மையு?" என்றான்.
"ம்ஹும்..." என்றதோடு தன் வெட்கத்தை மறைக்க அவன் நெஞ்சில் சாய்ந்தாள் மைதிலி.
அவளை தானும் அணைத்துக்கொண்டு சிரித்தபடி நின்றுகொண்டான். அந்தநொடி தன் பிரச்சனைகள், கவலைகள், கடமைகள் எல்லாம் மறக்க, தன் கூடு சேர்ந்த பறவை போல நிம்மதியாய் அவனோடு புதைந்துகொண்டாள் மையு.
பூட்டப்படாத அறையின் கதவு குமிழ் திருகி திறக்கப்பட, அந்த சத்தத்தில் சட்டென விலகினாள் மைதிலி. ஏமாற்றத்துடன் ராம் நிற்க, திறந்த கதவின் வழியே,
"மச்சான்... பால் குடிச்சாச்சுன்னா அந்த டம்ளர என்கிட்ட..." என கௌதம் கேட்டு முடிப்பதற்குள் மைதிலி கைகள் வைத்திருந்த, காலி டம்ளரை மின்னல் வேகத்தில் பிடுங்கி, கௌதமை குறி வைத்து வீசினான் ராம்.
"போய் தொலைடா" என ராம் கத்த, பயத்தில் கதவை சாற்றி விட்டு ஓடினான் கௌதம்.
கௌதமின் நிலையை கண்டு குலுங்கி சிரித்தாள் மையு. சிரிக்கும் அவளை பார்த்த ராமிற்கும் கோவம் தளர்ந்து சிரிப்பு வர, அவளுடன் சேர்ந்து சிரித்தபடி அணைத்துக்கொண்டான்.
ராமின் மாற்றத்தை உணர்ந்த மைதிலிக்கு அவன் விரைவில் பூரண குணம் பெறுவான் என்ற நம்பிக்கை அவள் மனதில் வேரூன்றியது.
அத்தியாயம் 20
தன் பெற்றோர் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிய முகத்துடன் அமர்ந்திருந்தான் ரிஷி.
"சாப்பிடாச்சுன்னா போய் படு" என விஷ்வநாதன் கடுமையாய் சொல்லவும் அரை மனதுடன் எழுந்து மாடிக்கு சென்றான்.
அவன் அறைக்கு சென்று உறங்க தோன்றாமல், நேரே சென்று ராமின் அறை கதவை தட்டிவிட்டு காத்திருந்தான் ரிஷி.
கதவை திறந்த மைதிலி, "வா ரிஷி! நானே உன்னை கூப்பிடனும்ன்னு நினைச்சேன்... ராமோட லேப்டாப் பாஸ்வேர்ட் தெரியுமா உனக்கு? எனக்கு மெயில் செக் பண்ணனும்..." என கேட்டாள்.
"ம்ம்ம் ஒரு நிமிஷம் அக்கா... சார்ஜ் போட்டுக்கோங்க, ரொம்ப நாளா அப்டியே இருக்கு!!" என அவள் கேட்டதை செய்து முடித்து அவள் கைகளில் லேப்டாப்பை கொடுத்தான் ரிஷி.
அதை வாங்கி படுக்கையின் மீது வைத்துவிட்டு, "சொல்லு ரிஷி.. என்கிட்ட என்ன சொல்லனும்ன்னு வந்த?" என்றாள்.
"அக்கா? உங்களுக்கு எப்படி?"
"இந்த நேரத்துல, எதுவும் முக்கியமான விஷயம் இல்லாம நீ எதுக்கு வர போற!? என்னனு சொல்லு?"
"எனக்கு என்னனு சரியா தெரியல அக்கா. நீங்க போனதும் அம்மா உங்களை காட்டி அப்பா கிட்ட ஏதோ பதட்டமா சொல்ல வந்தாங்க... அப்பா எனக்கு தெரியும்ன்னு சொல்லி அம்மாவை அடக்கிட்டாரு... "
"இவ்ளோதானா? ஒன்னும் இருக்காது... சும்மா சொல்லிருப்பாங்க.. நீ போய் தூங்கு" என அலட்டிக்கொள்ளாமல் சொன்னாள் மைதிலி.
"அக்கா... அவங்க ரொம்ப கோவமா இருக்காங்க... ஒருவேளை நீங்க இங்க வந்த நோக்கம் தெரிஞ்சுருக்குமோ?"
"தெரிஞ்சா என்ன? பார்த்துக்கலாம்..."
"இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ தைரியம் ஆகாது அக்கா... எதுக்கும் நம்ம எச்சரிக்கையாவே இருப்போம்... குட் நைட் அக்கா..." என சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அவன் நகர்ந்ததும் லேப்டாப்பை கையில் எடுத்தவள் இன்பமாய் அதிர்ந்தாள்.
"ரிஷி? இங்க வாயேன்...!!! குயிக்..." மைதிலியின் குரலில் வேகமாய் வந்தான் ரிஷி.
"என்னாச்சு அக்கா?"
"இங்க பாரு! இது எப்படி?"
லேப்டாபின் திரையை பார்த்த ரிஷிக்குமே அதிர்ச்சியான குழப்பம் தான். ஏனெனில் மடிக்கணினியின் திரையை அலங்கரித்திருந்தது மைதிலியின் கருப்பு வெள்ளை ஓவியம்.
"இது எப்படின்னு தெரியலையே!!!" என குழப்பத்துடன் சொன்னான் ரிஷி அதையே உற்று நோக்கியபடி.
மைதிலியும் தன் கண்ணை திரையில் இருந்து பிரிக்காது அதையே பார்த்தடி நின்றாள்.
"அக்கா? இங்க பாருங்க... ராமோட கையெழுத்து... இதை அவன்தான் வரைஞ்சுருக்கான் போல...." படத்தின் கீழே இருந்த கையெழுத்தை காட்டி ஆச்சரியமாய் சொன்னான்.
"ஐ கான்ட் பிலீவ் திஸ் ரிஷி! என்னை முன்னாடியே ராம்க்கு தெரியுமா? எனக்கு அவனை பார்த்தமாறி நியாபகமே இல்லையே!? நான் அவனை மறந்திருப்பேனோ ரிஷி?" ஆச்சர்யமும் படப்படப்புமாய் கேட்டாள் மைதிலி.
அந்நேரம் குளியல் அறையிலிருந்து ராம் வெளிவர, அவனிடம் ஓடி சென்றவள், "ராம்? என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா? ஹேவ் வி மெட் பிபோர்? நம்ம பேசிருக்கோமா?" என அடுக்கடுக்காய் கேட்டாள்.
"அக்கா? அவனுக்கு இப்போ ஒண்ணுமே தெரியாது... அவன்கிட்ட கேட்டா எப்படி சொல்லுவான்?" என ரிஷி நிதர்சனத்தை சொல்லவும் காற்று போன பலூன் போல ஆனாள் மைதிலி.
"கண்டிப்பா உங்களை அவனுக்கு தெரிஞ்சுருக்கும் அக்கா... எங்கயோ பார்த்துருக்கான். என்கிட்ட கூட சொல்லல பாருங்க...!!!!" என ஆச்சர்யமாய் சொன்னான் ரிஷி.
"என்ன மையு?? என்னாச்சு!!!" என மைதிலியை கேட்டான் ராம்.
"ராம்? இது உன்னோட லேப்டாப். இதுல என் போட்டோ இருக்கு... நீதான் வரைஞ்சுருக்க... உன்னோட சைன் இருக்கு... உனக்கு ஏதும் நியாபகம் வருதா? யோசிடா!!" என மைதிலி சொன்னதும் யோசிப்பதை போல தாடை தட்டியவனை எதிர்பார்ப்புடன் நோக்கினாள் மைதிலி.
"போ மையு.. நியாபகம் வரல..." என சொல்லிவிட்டு மெத்தையில் 'பொத்' என விழுந்து கொண்டான்.
அவனை முறைத்து கொண்டு நின்றவளை பார்த்து, "ஹாஹா... நான் தான் சொன்னேன்ல அக்கா!!! விடுங்க... பையன் உங்களை பார்த்ததும் விழுந்துட்டான் போல... என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டான்... சரி ஆனதும் இருக்கு அவனுக்கு... சரி அக்கா.. நான் கிளம்புறேன்.. குட் நைட் ராம்!!" என சொல்லிக்கொண்டு நகர்ந்தான் ரிஷி.
அவன் சென்றதும் மடிக்கணினி திரையில் ஒளிர்ந்த தன்னையே பார்த்து கொண்டு மெத்தையில் அமர்ந்து இருந்தாள் மைதிலி.
‘நினைவு திரும்பினால் எங்கே தன்னை மறந்துபோவானோ என்ற பயம் அவள் அடிமனதில் கரையானை அரித்துக்கொண்டிருக்க, ஒரே நொடியில் அத்தனையும் சிதறி தூள்தூளானதை போல இருந்தது. ‘என் ராம் என்னை பிரிய மாட்டான்’ என்ற நம்பிக்கை வானளவு உயர்ந்தது.
படுத்திருந்த ராம், மெல்ல எழுந்து அமர்ந்திருந்தவளின் பின்புறமாக நகர்ந்து அவன் கழுத்துவளைவில் முகம் வைத்தான்.
"மையு!!" மோனநிலை கலையாது இருந்தாள்.
"சொல்லு ராம்....!"
"என்னோட கோச்சிங் கிளாஸ் முடிஞ்சுருச்சா?"
"எந்த கிளாஸ்?"
"ம்ச்.. போ மையு.. எப்பபாரு மறந்து போற! கோச்சிங் கிளாஸ் முடிச்சுட்டு தான் என்னை கிஸ் பண்ணனும்னு சொன்ன தானே முன்னாடி?"
"போடா!!!"
"ம்ஹும்.. ம்ஹும்ம்...."
அதற்கு மேல் ஏதும் சொல்லாது ராம் தன்னை எங்கே பார்த்திருக்க கூடும் என்ற எண்ணத்திலேயே இருந்தாள் மைதிலி. அந்த எண்ணமே ஒருவித மயக்கத்தை கொடுத்தது அவளுக்கு.
கழுத்து வளைவில் வைத்திருந்த தன் முகத்தை மெல்ல அசைத்தான் ராம். அவன் சீராக்கப்பட்ட மீசை, அவளுக்கு குறுகுறுப்பு மூட்ட, மெல்ல நெளிந்தாள். கண்களை திரையில் இருந்து விலக்காமலே!
தன் வலது கையால் அவள் இடையையும், இடது கையை அவள் கழுத்தின் கீழும் வைத்து தன்னோடு இறுக்கமாய் சிறைசெய்துகொண்டான் ராம்.
கழுத்திருலிருந்த தன் முகத்தை அவள் மேல் உரசியபடியே நிமிர்த்தியவன், அவன் கூச்சத்தில் நெளிவதையும் பொருட்படுத்தாது, அவளது வலப்புற காது மடலில் ஊதியபடி, தன் கூர்மூக்கால் உரசினான்.
"ரா...ம்....." தன் காதுக்கே கேட்காத அளவுக்கு மெதுவாய் அழைத்தாள் மையு, கண்களை மூடியபடி.
அவளுக்கு பதிலாய் "ம்ம்ம்" என சொன்னபடி தன் இரு கைகளால் அவளை மேலும் இறுக்கினான் ராம்.
மடியில் இருந்த மடிக்கணினி நழுவி கீழே விழுந்தது.
"ரா.....ம்......"
அவள் மேலும் சிணுங்க, அவனுக்கு இடையுறாய் இருந்த அவள் குழலை, நகர்த்தி முன்பக்கம் அனுப்பிவிட்டு, திரை விலக்கிய பளிங்காய் இருந்த அவள் பின்னங்கழுத்தில் அவன் முகம் புதைத்து கொண்டான் ராம்.
அறையின் குளுமையையும் மீறி இருவர் உடலிலும் வெப்பம் தகிக்க, நடுக்கம் தாளாமல் அவன் மீதே சாய தொடங்கினாள் மைதிலி.
மடியில் விழுந்தவளை கையோடு ஏந்தி, முகம் நோக்கியவன், மூடிய அவள் விழிகளில் இதழ் பதித்து நிமிர்ந்தான்.
அவள் கைகள் அவன் கழுத்தோடு மாலையாய் கோர்த்திருக்க, அவள் முகம் அவனுக்கு வெகு அருகில் இருந்து இம்சித்தது.
கண்களை மூடிக்கொண்டு அவனோடு ஒன்றியிருந்தவளை மேலும் இறுக்கிக்கொண்டவன், அவள் கன்னத்தோடு தன் கன்னம் இழைத்தான். இருவர் அணைப்பும் காற்றுக்கும் வழி விடாமல் இறுக தொடங்க, ராம் கண்கள் அவளின் சிவந்த அதரங்களை கண்டுகொண்டது.
அவளின் கீழுதடு, அவனிடம் ஏதோ கதைக்க, அதனிடம் பதில் சொல்ல அருகில் விரைந்தான்.
இருவருக்கும் இடையே நூலளவு இடைவெளி மட்டுமே இருக்க, அதை நிரப்பும் வேகத்தில் அருகே சென்ற நேரம்...!
"படார் ... படார்... படார்......."
கதவின் மீது விழுந்த தொடர்ந்த மூன்று அடி, நிசப்தமாயிருந்த அந்த அறை முழுதும் ஓங்கி ஒலித்தது.
திடீரென கேட்ட அந்த பலத்த சத்தத்தில், இருவருக்குமே தூக்கி வாரி போட்டது. அதுவரை இருந்த மோனநிலை கலைய, தான் இருக்கும் நிலை உணர்ந்து பதறி எழுந்தாள் மையு.
ராமிற்குமே சில நொடி வரை இருந்த ஏகாந்த வலை அறுபட, மனதை சட்டென ஒரு வெற்றிடம் சூழ்ந்து கொண்டதை போல உணர்ந்தான். என்னவென்று அதை சொல்ல தெரியாமல் மெத்தையில் முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
தன் இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்து, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர, காற்றை உதடு குவித்து ஊதி தள்ளினாள்.
மீண்டும் கதவு 'பட பட'வென அடிக்க, 'இதோ வரேன்' என சொல்லிவிட்டு எழுந்து நின்றவளின் கால்கள் பலமின்றி துவள்ந்தது.
அருகில் இருந்த கண்ணாடியில் தன்னை சரிசெய்துகொண்டு திரும்ப, மெத்தையில் ராம் தலையணையோடு முட்டிக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது.
முகத்தில் இருந்த கன்னச்சிவப்பை மறைக்க முயன்றபடி கதவை திறந்தாள் மையு.
வாசலில் யாரும் இல்லாததை கண்டு குழம்பினாள்.
'இடி இடிக்குறமாறி கதவை தட்டிட்டு.....!!! ஒருத்தரும் இல்ல..ஹும்'
அவள் கதவை சாற்ற எத்தனித்தபோது வாயிலின் இடப்பக்கமிருந்து வெளிவந்து 'பேபபப' என மைதிலியிடம் கத்தினான் கௌதம்.
அசராமல் நின்றவளை கண்டு, "அண்ணன் உன்கிட்ட விளையாடுறேன் தங்கச்சி... பயந்துட்டியோ!! பேய் பிசாசை பார்த்த மாறி நிக்குற!?" என்றான் பல்லை காட்டிக்கொண்டு.
கௌதம் அறையின் உள்ளே செல்ல 'ஹும்ம்' என்ற வேக மூச்சுடன் அவனை பின் தொடர்ந்தாள் மையு.
வாசலில் கௌதம் குரல் கேட்டதுமே வெறிகொண்டு எழுந்து அமர்ந்தான் ராம்.
"மச்சான்! செம்ம தூக்கம் போல.. கண்ணு செவந்து இருக்கு...!!"
ராமின் கண்களில் கௌதம் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி போலவே தெரிந்தான். எல்லை கோட்டை தாண்டி அத்துமீறி நுழைந்தவனை மனதிற்குள் ஏகே47 கொண்டு சல்லடையாக்கி கொண்டிருந்தான் ராம்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவனை வெறித்துக்கொண்டிருந்த ராமின் அருகே சென்று அமர்ந்த கௌதம், "அந்த லட்சுமி ஆன்ட்டி இருக்காங்கள்ளடா! எனக்கு பாதாம் பால் கொடுத்தாங்க. செம்ம டேஸ்ட். தங்கச்சிக்கு கொடுத்தீங்கலான்னு கேட்டேன்.. 'அவங்க கதவடச்சுடாங்க, அதனால தொல்லை பண்ணல..'ன்னு சொல்றாங்க.." என்றான்.
ஒன்றும் சொல்லாது அவனையே பார்த்து (முறைத்து) கொண்டிருந்தான் ராம்.
"விடுவேனா நான்? சண்டை போட்டு ரெண்டு கிளாஸ் கொண்டு வந்துட்டேன்ல?! இந்தா மச்சான்... தெம்பா குடி... தங்கச்சி? இது உனக்கு..." இரு டம்பளர்களை அவன் நீட்ட,
"இதுக்கு தான் கதவை உடைக்குற அளவுக்கு தட்டுனீங்களா?" மைதிலிக்கே அவன் மீது கோவம் வந்தபோது ராமை பற்றி சொல்லவே வேண்டாம். கொலைவெறியில் இருந்தான்.
"ஹே என்னடா லேப்டாப்பை கீழ போட்டு வச்சுறுக்கீங்க? ஏதும் சண்டையா?" என சொல்லிக்கொண்டு அதை மேசை மீது எடுத்து வைத்தான் கௌதம்.
"நாங்க குடிச்சுக்குறோம் அண்ணா... நீங்க போய் தூங்குங்க....!!!" என நாசூக்காக அவனை வெளிதள்ள முயன்றாள்.
"பரவால்லம்மா.. தூக்கம் வரல..." என பெரிய மனதுடன் மறுத்தான் கௌதம்.
"எங்களுக்கு தூங்கணும்... இடத்தை காலி பண்ணு.." கௌதமிடம் அடக்கப்பட்ட கோவகுரலில் சொன்னான் ராம்.
"ஓ... சரி மச்சான்... நீங்க தூங்குங்க... நான் கிளம்புறேன்..."
கௌதம் வெளியேறியதும் அந்த அறை முழுதும் பழைய நிசப்தம் நிலவ, முன்பு நிகழ்ந்ததெல்லாம் கண்முன் தோன்றவும், மறைந்திருந்த அவள் கன்னசிவப்பு மெல்ல எட்டிப்பார்த்தது.
புதுவித தயக்கம் அவளை சூழ, ராமை நிமிர்ந்து பார்க்கவே வெட்கம் வந்து தடையிட்டது.
'என்னடா இது தொல்லையா இருக்கு' தனக்கே தன் செய்கை அந்நியமாய் பட, தனக்குள் கேட்டுக்கொண்டாள் மையு. கெளதம் கொடுத்து சென்ற பாதாம் பாலை இருவரும் பருகினர். இயல்பான சூழ்நிலை இருந்திருந்தால் ‘லட்சுமி கொடுத்தனுப்பியது’ என்றதுமே சுதாரித்திருப்பர். இப்போதிருக்கும் ஏகாந்த நிலை எதையும் யோசிக்க விடாமல் செய்துவிட்டது.
மனதை திடப்படுத்தி, ஒருவாறாக நிமிர்ந்து எதிரில் இருந்த ராமை நோக்கினாள் மையு. தன்னையே பார்த்தவாறு அமர்ந்திருக்கும் ராமை கண்டதும், அவள் நுரையீரல் சில நொடி வேலை நிறுத்தம் செய்தது. சட்டென குனிந்து கொண்டாள்.
'ஹோ காட்! திஸ் ஸ் நாட் மி, ஹய்யோ' என சொல்லிக்கொண்டாள் மையு.
ராம் எழுந்து நிற்பது அவளுக்கு தெரிந்தாலும் குனிந்த தலை நிமிராது உதட்டை கடித்து கொண்டு நின்றாள் மையு.
'டெய்லி இவனை தானே பார்க்குறேன்... இன்னைக்கு மட்டும் என்ன ஆச்சு எனக்கு...'
நெருங்கி வந்தவன், "மையு? ஏன் என்னை பார்க்க மாட்டுற? பாரு மையு!" என்றான் ஏக்கத்தோடு.
அப்போதும் நிமிராது நின்றவளின் முகத்தை கையில் ஏந்தி தன்னை பார்க்க செய்தவன் தன் முகத்தருகே கொண்டு வந்து, "கோவமா மையு?" என்றான்.
"ம்ஹும்..." என்றதோடு தன் வெட்கத்தை மறைக்க அவன் நெஞ்சில் சாய்ந்தாள் மைதிலி.
அவளை தானும் அணைத்துக்கொண்டு சிரித்தபடி நின்றுகொண்டான். அந்தநொடி தன் பிரச்சனைகள், கவலைகள், கடமைகள் எல்லாம் மறக்க, தன் கூடு சேர்ந்த பறவை போல நிம்மதியாய் அவனோடு புதைந்துகொண்டாள் மையு.
பூட்டப்படாத அறையின் கதவு குமிழ் திருகி திறக்கப்பட, அந்த சத்தத்தில் சட்டென விலகினாள் மைதிலி. ஏமாற்றத்துடன் ராம் நிற்க, திறந்த கதவின் வழியே,
"மச்சான்... பால் குடிச்சாச்சுன்னா அந்த டம்ளர என்கிட்ட..." என கௌதம் கேட்டு முடிப்பதற்குள் மைதிலி கைகள் வைத்திருந்த, காலி டம்ளரை மின்னல் வேகத்தில் பிடுங்கி, கௌதமை குறி வைத்து வீசினான் ராம்.
"போய் தொலைடா" என ராம் கத்த, பயத்தில் கதவை சாற்றி விட்டு ஓடினான் கௌதம்.
கௌதமின் நிலையை கண்டு குலுங்கி சிரித்தாள் மையு. சிரிக்கும் அவளை பார்த்த ராமிற்கும் கோவம் தளர்ந்து சிரிப்பு வர, அவளுடன் சேர்ந்து சிரித்தபடி அணைத்துக்கொண்டான்.
ராமின் மாற்றத்தை உணர்ந்த மைதிலிக்கு அவன் விரைவில் பூரண குணம் பெறுவான் என்ற நம்பிக்கை அவள் மனதில் வேரூன்றியது.